Skip to main content

பேசுவது இந்துத்வா! கடத்துவது கடவுள் சிலை! -சிக்கிய பா.ஜ.க. பிரமுகர் + கோவில் குருக்கள்! 

Published on 23/01/2020 | Edited on 23/01/2020

 

தமிழக கோவில்களில் அற்புதமான சிலைகள் கடத்தப்படுவது காலங் காலமாக நடப்பதுதான். ஆனால், இந்தச் சிலைக்கடத்தலில் இதுவரை ஊராட்சி -வெளிநாட்டு கடத்தல் காரர்கள் தொடங்கி அறநிலையத்து றையினர் வரை கைதாகி அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறார்களே தவிர, சம்பந்தப்பட்ட கோவில் குருக்கள் யாருமே கைதானதில்லை. சமீப காலத்தில் இது மிகப்பெரிய கேள்வி யாக உருவெடுத்திருந்தது. 
 

கோவில் குருக்களின் உதவி யில்லாமல் அல்லது அவருக்கு தெரியாமல் சிலைக்கடத்தல் நடக்க வாய்ப்பே இல்லை என்று வாதாடு கிறவர்கள் உண்டு. அவர்களுக்கு பலம் சேர்க்கும் வகையில் நாகை மாவட்டத்தில் பலகோடி ரூபாய் மதிப்பிலான சிலைக் கடத்தல் வழக்கில் பா.ஜ.க. ஒன்றிய செயலாளர் ஒருவரும், கோவில் குருக்கள் ஒருவரும் கைதாகியிருப்பது ஆன்மிக வட் டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  

 

Statue


 

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் ஒன்னாம்சேத்தி வடக்கு குத்தகையை சேர்ந்தவர் செல்வம். 42 வயதான இவர் தற்போது பா.ஜ.க.வின் வேதாரண்யம் மேற்கு ஒன்றிய செயலாளராக பொறுப்பு வகிக்கிறார். இவரது நண்பர் பைரவசுந்தரம். 70 வயதான இவர் வேதாரண்யம் பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கோவில்களில் குருக்களாக பணி செய்கிறார். ஆன்மிக வட்டாரத்தில் இவர்கள் இருவருக்கும் நெருக்கம் உண்டு. அந்த நெருக்கத்தை பயன்படுத்திக்கொண்டு, இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக மறைமுகமாக சிலைகளை கடத்தி வந்திருக்கிறார்கள்.  
 

இதையறிந்த சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் இருவரையும் ரகசியமாக கண்காணித்து வந்தனர். இதில் அவர்கள் சிலையைக் கடத்துவது உறுதியானதும் இருவரையும் போலீஸார் கைதுசெய்தனர்.  அவர்களிடமிருந்து ஒன்றரை அடி உயரமுள்ள அம்மன் சிலையையும் பறிமுதல் செய்           தனர். அந்தச் சிலையின் மதிப்பு 1 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகம் என மதிப் பிடப்பட்டுள்ளது.  

 

Statue


 

இதையடுத்து அவர்களிடம் சோதனை நடத்தியதில், வள்ளி-தெய்வானை, பெருமாள், ஆனந்தநடராஜர் என 9 சிலைகள் மறைத்து வைக் கப்பட்டிருப்பதையும் கண்டுபிடித்து அவற்றையும் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட மற்ற சிலைகளின் மதிப்பு பலகோடி ரூபாய் இருக்கும் என       சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கூறுகின்றனர். சிலைக் கடத்தல் தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.  

 

Statue


இதுகுறித்து சென்னை கிண்டியில் உள்ள சிலைக் கடத் தல் தடுப்புப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அபய் குமார் சிங் கூறுகை யில், ""வேதாரண் யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் பகுதியைச் சேர்ந்த கோவில் குருக்கள்  பைரவசுந்தரமும், அவரது நண்பர் செல்வமும் ஒன்றரை அடி உயரமுள்ள அம்மன் சிலையை 1.20 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்போவது தொடர்பாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. சிலையை விற்பதற்கு பேரம் பேசியதை ரகசியமாக கண்காணித்தோம். அதைத்தொடர்ந்து செல்வத்தின் வீட்டை சோதனை செய்ததில் ஒன்றரை அடி உயர உலோக அம்மன் சிலை, வள்ளி-தெய்வானை சிலைகள், வராக அவதாரம் கொண்ட பெருமாள் சிலை உள்ளிட்ட 9 சிலைகள் மீட்கப்பட்டன. அதில் ஒரு சிலை வேதாரண்யம் பகுதியை சேர்ந்தது என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மீதமுள்ள சிலைகள் குறித்தான விவரம், புகைப்படங்களை இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு அனுப்பியுள்ளோம். அதோடு சிலைகள் காணாமல் போனதாக ஏதாவது புகார் இருக்கிறதா என்றும் விசாரித்து வருகிறோம்.  சிலைக்கடத்தலில் ஈடுபட்ட குருக்கள் பைரவசுந்தரம் மற்றும் செல்வம் ஆகியோர்மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.
 

இதுகுறித்து ஆயக்காரன்புலம் பகுதி யைச்சேர்ந்த சிலரிடம் விசாரித்தோம். “""பா.ஜ.க. ஒன்றியச் செயலாளராக இருக்கும் செல்வம் சமீபகாலம் வரை சாதாரண ஆளாகத்தான் இருந்தார்.  வாய்மேட்டில் உள்ள அரசியல் பிரமுகர் ஒருவரோடு நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு, அவருடைய பேமிலி ஃபிரண்ட் என்கிற போர்வையில் மூன்று கார்களை சொந்தமாக வாங்கி வாடகைக்கு விட்டிருக்கிறார். அதோடு அங்கு ஒரு கடையை வாடகைக்கு எடுத்து, காரைக்காலில் இருந்து மது வகைகளை கடத்திவந்து ஆள் போட்டு விற்றார். 


 

 

அந்தச் சமயத்தில்தான் அதே பகுதியில் உள்ள பன்னாள் கிராமத்தைச் சேர்ந்த குருக்கள் பைரவசுந்தரத்தோடு நெருக்கம் ஏற்பட்டது, அவரது வழிகாட்டலின்படியே அந்த அரசியல் பிரமுக ரிடமிருந்து விலகி வேதாரண்யம் எக்ஸ் எம்.எல்.ஏ. வேதரத்தினத்தின் ஆசியோடு, முத்துப்பேட்டையைச் சேர்ந்த கருப்பு முருகானந்தம் வழியாக பா.ஜ.க.வில் இணைந்தார். தற்போது வேதாரண்யம் மேற்கு ஒன்றிய செயலாளராக பொறுப்பில் இருக்கிறார். பா.ஜ.க.வைச் சேர்ந்த எஸ்.கே.வேதரத்தினத்தின் தீவிர ஆதரவாளராக தன்னைக் காட்டிக்கொண்டு அரசியலில் செல்வாக்கை வளர்த்துக் கொண்டிருக் கிறார்.   கடந்த 2011 உள்ளாட்சித் தேர்தலில் தேர்த லில் சுயேச்சையாக போட்டியிட்ட செல்வம், சமீபத் திய உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி யின் சார்பில் போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக பா.ஜ.க. பிர முகரான வேதரத்தினம், வீடு, வீடாக  சென்று வாக்கு சேகரித்தார். 
 

அதேபோல் பிராமணர் சமூகத்தை சேர்ந்த பைரவசுந்தரத்தின் சொந்த ஊர் பன்னாள். ஆனால் வேதாரண்யத்தில் குடியிருக்கிறார். அங்கிருந்தபடியே அந்த பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு குருக்களாக பணி செய்கிறார். 70 வயதைத் தாண்டியவராக  இருந்தாலும் இளைஞரைப்போல  தினம் ஒரு பைக்கில் மின்னல் வேகத்தில் பறந்து செல்வார். பைரவசுந்தரத்தின் அப்பா உமாபதி குருக்கள், ஆயக்காரன்புலம் நாளாம்சேத்தி கோவில் குளத்தில் உள்ள கோவிலில் குருக்களாக இருந்துகொண்டு மாந்திரீகம் செய்வது, கயிறு கட்டுவது, பேய்ஓட்டுவது என்று வசிய வேலைகளை செய்து வந்தார். அவரது வேலைகளை அப்படியே செய்து வருகிறார் பைரவசுந்தரம். அதன்மூலம் நிறைய வி.ஐ.பி.க்களின் தொடர்பில் இருக்கிறார்.
 

ஆயக்காரன்புலம் நாளாம்சேத்திக்கும், பஞ்சநதிக்குளம் நடுசேத்திக்கும் இடையே உள்ள ஒரு இடத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரும் வேலை நடந்தது. அப்போது ராமர், சீதாதேவி, பூமாதேவி, பைரவர்னு நிறைய சிலைகள் கிடைத்தன. அந்த சமயத்தில் பைரவசுந்தரத்தின் பெயர் அடிபட்டது. இந்த சிலை புதையலுக்கு பின்னணியில் அவரது கைவரிசை இருக்கிறது என பேசப்பட்டது. அதேபோல சில வருடங்களுக்கு முன்பு அவர் குருக்களாக இருக்கும் ஒரு கோவிலில் ஒரு சிலை காணாமல் போனது. பிறகு சிலநாள் கழித்து அது குளத்தில் கண்டெடுக்கப்பட்டது. அந்தச் சிலையை தூக்கி தண்ணீரில் போட்டதும் இவர்தான் என அப்போது பேசப்பட்டது.  


 

 

சிலையை கடத்திச் சென்று விற்க ஒரு ஆள்தேவை என்பதால் செல்வத்தை இணைத்துக் கொண்டு சிலைக் கடத்தலில் ஈடு பட்டிருக்கிறார் குருக்கள். ஆரம்பத்தில் செல்வத்தின் வேலை கடத்திக்கொண்டு வரப்பட்ட சிலைகளை மாதம் மூன்று லட்சம் ரூபாய் கூலி வாங்கிக் கொண்டு பாதுகாத்து வைப்பது, பாதுகாத்த சிலையை சேர்க்கவேண்டிய இடத்தில் சேர்ப்பதற்கு தனி ரேட் என்று பேரம் பேசி இந்த வேலையை செய்துள்ளார். செல்வமும், குருக்களும் சிலைக்கடத்தலில் செல்வச் செழிப்போடுதான் இருக்கிறார் கள்'' என்றார்கள்.
 

இதுகுறித்து சிலைக்கடத் தல் தடுப்புப் பிரிவு அதிகாரி ஒருவரிடம் விசாரித்தோம், “""இது இன்று நேற்று நடந்ததல்ல, இருபது ஆண்டுகளாக நடந்து வருகிறது. பொன்.மாணிக்கவேல் பொறுப்பில் இருக்கும்போது கைது செய்யப்பட்ட சர்வதேச சிலைக்கடத்தல் தரகர்களிடம் விசாரித்து சேகரிக்கப்பட்ட லிஸ்ட் ஒன்று சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் இருக்கிறது. அதன்படியே ஒவ்வொருவராக கைது செய்துவருகிறோம். இவர் கள் இருவருக்கும் பின்னணியில் கடற்கரையோரம் உள்ள அர சியல் கட்சி பிரமுகரின் கை வரிசை இருப்பது விசாரணையில் தெரிகிறது, விரைவில் ஆதாரத் தோடு கைது செய்வோம்'' என்கிறார்.
 

நாகை மாவட்ட பா.ஜ.க.வினரோ, செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியதோடு அடிப்படை உறுப்பினர் பொறுப் பில் இருந்தும் நீக்கிவிட்டதாக கூறுகிறார்கள். திடீர் பா.ஜ.க. காரருக்கு அவசர அவசரமாக பொறுப்பு கொடுக்கப்பட்டதும், அவரது பின்னணி தெரிந்து நீக்கப்பட்டிருப்பதும் மேலிடம் வரை சர்ச்சையாகியுள்ளது. இந்துத்வா கொள்கை பேசு பவர்களே இந்து கடவுள் சிலைக் கடத்தலில் தொடர்புடையவர் களாக இருப்பது பல மட்டங் களிலும் அதிர்ச்சியை உண்டாக்கி யுள்ளது.
 

Next Story

பேருந்து நிலையத்தில் உள்ள சிலைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு!

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
court order to remove idols from bus stand

பேருந்து நிலையத்தில் உள்ள தலைவர்களின் சிலைகளை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் வெள்ளலூர் பேருந்து நிலையத்திற்கு அருகே வைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலையை அகற்றக்கோரி தி.மு.க.வை சேர்ந்த நிர்வாகி  ஒருவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஜெயலலிதாவின் சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகத் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் இந்த மனு இன்று (13.03.2024) விசாரணைககு வந்தது.  அப்போது, “வெள்ளலூர் பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியார், காமராஜர், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். உள்ளிட்ட அனைத்து தலைவர்களின் சிலைகளையும் அகற்ற வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிடப்படுகிறது” என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

1,200 ஆண்டுகள் பழமையான திருமால், வைஷ்ணவி சிற்பங்கள் கண்டெடுப்பு!

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
1,200-year-old Tirumal, Vaishnavite sculptures discovered in virudunagar

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகில் அம்மாபட்டி ஊராட்சி, களத்தூரில் 1,200 ஆண்டுகள் பழமையான முற்காலப் பாண்டியர் கலைப்பாணியில் உள்ள திருமால், வைஷ்ணவி, லிங்கம், நந்தி, காளி சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. களத்தூர் அர்ச்சுனா ஆற்றின் கரையில், பழமையான திருமால் சிற்பம் இருப்பதாக அம்மாபட்டி வீரையா கொடுத்த தகவலின் பேரில், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, நூர்சாகிபுரம் சிவகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். 

இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, நூர்சாகிபுரம் சிவகுமார் ஆகியோர் கூறியதாவது, “திருமால், மாயோன் என தொல்காப்பியத்திலும், நெடுமால், நெடியோன், நெடுமுடி என பிற இலக்கியங்களிலும் குறிப்பிடப்படுகிறார். இங்கு பீடத்தின் மீது அமர்ந்த நிலையில், நான்கு கைகளுடன், கர்த்தரி முக முத்திரையில், பின்னிரு கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தி, முன்னிரு கைகளை தொடையில் வைத்து, கிரீட மகுடத்துடனும், காதுகளில் மகர குண்டலங்களுடனும் திருமால் காட்சியளிக்கிறார். முகம் தேய்ந்துள்ளது. சக்கரம் பக்கவாட்டில் திரும்பி பிரயோகச் சக்கரமாக உள்ளது. இடது காலை மடக்கி, வலது காலைத் தொங்கவிட்டு சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். வலது மார்பில் ஸ்ரீவத்ஸமும், கிரீடமகுடத்தின் பின்பக்கம் சிரச்சக்கரமும் உள்ளன. கைகளின் மேற்பகுதியின் நடுவில் தோள்வளை அணிந்துள்ளார். சிற்பம் 109 செ.மீ உயரமுள்ளது.

இதன் அருகில் 82 செ.மீ உயரமும், 46 செ.மீ அகலமும் உள்ள பலகைக் கல்லில் திருமாலின் பெண் சக்தியான வைஷ்ணவியின் புடைப்புச் சிற்பம் உள்ளது. சப்தகன்னியரில் ஒருவரான இவர், பின்னிரு கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தி, முன்னிரு கைகளை தொடையில் வைத்திருக்கிறார். சிற்பம் சேதமடைந்துள்ளது. இதன் வடக்கில் நந்தியும், ஆவுடை இல்லாத லிங்கமும் உள்ளன. இங்கிருந்து 300மீ தூரத்தில் 2½ அடி உயரமுள்ள எட்டுக்கை காளி சிற்பம் உள்ளது. திருமால் கையிலுள்ள பிரயோகச் சக்கர அமைப்பு மூலம், இச்சிற்பங்கள் கி.பி.9-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதலாம். அக்காலகட்டத்தில் இவ்வூரில் அருகருகே சிவன், திருமால், காளி கோயில்கள் இருந்துள்ளதை அறிய முடிகிறது. கி.பி.9-ம் நூற்றாண்டு வரை வைணவக் கோயில்களில் சப்தமாதர் வழிபாடு இருந்துள்ளது. 

1,200-year-old Tirumal, Vaishnavi sculptures discovered in virudunagar

அருகிலுள்ள மேட்டில் பெரிய கருங்கற்கள் உள்ளன. இவை இரும்புக்காலத்தைச் சேர்ந்த கல்வட்டம், கல்திட்டையின் கற்களாக இருக்கலாம். இதில் இருந்த கற்களை எடுத்து லிங்கத்தைச் சுற்றி வைத்துள்ளனர். மேலும் நுண்கற்காலக் கருவி, செங்கற்கள், சிவப்பு பானை ஓடுகள், இரும்புத் தாதுக்கள், இரும்புக்கசடுகள், சுடுமண் ஓடுகள் போன்றவையும் அங்கு சிதறிக் கிடக்கின்றன. ஒரு செங்கலின் அளவு, நீளம் 33 செ.மீ, அகலம் 16.5 செ.மீ, உயரம் 7 செ.மீ. ஆகும். இதன் மூலம் இவ்வூரில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய இரும்புக் காலத்தில் இரும்பு உருக்கு உலையும், மக்கள் குடியிருப்பும் இருந்துள்ளது எனலாம்.  

1,200-year-old Tirumal, Vaishnavi sculptures discovered in virudunagar

இவ்வூருக்கு அருகிலுள்ள நத்தம்பட்டி, மங்கலத்துக்கும் வைணவம், சைவம் சார்ந்த தொடர்புகள் உள்ளன. மங்கலம் சிவன் கோயில் கல்வெட்டில் களத்தூர் குளத்தின் ராஜேந்திர சோழன் மடை குறிப்பிடப்படுகிறது. நத்தம்பட்டியில் 8-ம் நூற்றாண்டு திருமால் சிற்பம் ஏற்கெனவே கண்டெடுக்கப்பட்டுள்ளது. அருகருகே உள்ள இம்மூன்று ஊர்களிலும் இரும்புக் காலத்திலும், வரலாற்றின் இடைக்காலத்திலும் மக்கள் வாழ்ந்துள்ளனர். இவ்வூர்கள் சேரநாட்டிலிருந்து மதுரை செல்லும் வணிகப் பெருவழியில் உள்ளன. எனவே வரலாற்றுச் சிறப்புமிக்க இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் இடங்களாக அறிவித்து தமிழ்நாடு அரசு பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்” என அவர்கள் தெரிவித்தனர்.