Skip to main content

பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளிந்தால் வெட்டுக்கிளிகள் படையெடுப்பைக் கட்டுப்படுத்த முடியமா..? - ஜியோ.டாமின் பதில்!

Published on 04/06/2020 | Edited on 04/06/2020

 

k


சில வருடங்களுக்கு முன்பு நடிகர் சூர்யா நடித்த 'காப்பான்' திரைப்படம் வெளிவந்து பரபரப்பைக் கிளப்பியது. அந்தப் படத்தில் எதிரிகள் விவசாய நிலங்களில் வெட்டுக்கிளிகளைப் பரப்பி நிலங்களில் உள்ள பயிர்கள் முழுவதும் அழிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கும். சினிமாவில் இடம்பெற்ற அந்தக் காட்சிகளைப் போலவே தற்போது வட மாநிலங்களில் நேரடியாக நடந்து வரும் சம்பவங்கள் வியப்பை ஏற்படுத்தியுள்ளன.
 


கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐக்கிய நாடுகள் சபை பயிர்களைச் சேதப்படுத்தும் வெட்டுக்கிளிகள் இந்தியாவிற்கு வர வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுத்திருந்தது. ஏற்கனவே ஆப்பிரிக்க நாடுகளான சோமாலியா, கென்யா நாடுகளைப் பாதித்த அந்த வெட்டுக்கிளிகள் பாகிஸ்தான் வழியாகத் தற்போது இந்தியா வந்துள்ளன. இந்நிலையில் இந்த வெட்டுக்கிளிகள் ஏன் கூட்டம் கூட்டமாக வருகின்றது, எதிர்காலத்தில் அதன் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற நம்முடைய கேள்விக்குப் பதிலளிக்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த ஜியோ. டாமின். 

வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இந்தியாவில் ஆரம்பமாகியுள்ளது. இந்தியாவில் இதற்கு முன்பு ராஜஸ்தான் பகுதிகளில் இது நடந்திருப்பதாகவும் கூறுகிறார்கள். ஆப்பிரிக்க நாடுகளில் ஆரம்பித்து பாகிஸ்தான் வழியாகத் தற்போது இந்தியாவில் வெட்டுக்கிளிகள் புகுந்துள்ளன. வட மாநிலங்களில் குறிப்பாக ராஜஸ்தான், உத்திர பிரதேசம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் அதன் தாக்கம் அதிகம் இருப்பதாகவும் கூறுகிறார்கள். இந்த வெட்டுகிளிகளின் திடீர் படையெடுப்புக்கு என்ன காரணம், எதனால் இது ஏற்படுகின்றது? 
 

 


வெட்டுக்கிளிகளின் பூர்விகம் என்று பார்த்தால் வட கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் அரேபிய நாடுகளைச் சொல்லலாம். இந்த வெட்டுக்கிளிகள் எல்லாம் நம்முடைய விளை நிலங்களில் எப்படி நான்கு ஐந்து வெட்டுக்கிளிகள் நிலத்தைச் சேதப்படுத்துமோ அந்த வகையான வெட்டுக்கிளிகள் தான் இவை. இது அனைத்தும் எப்போது அதிரடியாக ஒன்று கூடுகிறது என்றால் கடுமையான வறட்சி ஏற்படுகின்ற போது பசுமையான பகுதிகளை நோக்கி தனிதனியாக இருக்கும் அந்த வெட்டுக்கிளிகள் ஒன்று சேர்கின்றன. இதனால் அவைகள் கூட்டம் கூட்டமாக நமக்குத் தெரிகின்றன. அப்படி அவைகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து தாவரங்களைச் சேதப்படுத்துகின்ற போது 'செரட்டோனின்' என்ற வேதிப்பொருள் வெட்டுக்கிளிகளில் உற்பத்தி ஆகின்றது. 

அந்த வேதிப்பொருட்கள்தான் இந்த வெட்டுக்கிளிகளின் மாற்றத்திற்கு காரணமாக இருக்கின்றது. இந்த வேதிப்பொருட்கள் எப்போது உற்பத்தி ஆகின்றதோ அப்போதிலிருந்து அந்த வெட்டுகிளிகளின் நடை, உணவுப் பழக்க வழங்கங்கள், வேகம் உள்ளிட்ட அனைத்தும் மாறிப்போகின்றது. இந்த வெட்டுக்கிளிகள் பொதுவாகவே 100-க்கும் மேற்பட்ட முட்டைகளைப் போடக்கூடியவை. ஒரு வறட்சி காலத்தில் இருக்கும் போது, அந்த வெட்டுக்கிளிகளுக்கு ஒரு மழைக்கான சிக்னல் கிடைக்கின்ற போது, நாம் இந்த இடத்தில் பல்கிப்பெருகலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்திக் கொள்கின்றது.

இந்த வெட்டுக்கிழிகளை அழிப்பதற்காகச் சத்தம்போடுதல், பூச்சிக்கொல்லி அடித்தல் முதலியன செய்யப்படுகின்றது. இவையெல்லாம் பயன் தருமா? 
 

http://onelink.to/nknapp


எவ்வளவுக்கு இது பலன் தரும் என்பது தான் தற்போது இருக்கின்ற மிக முக்கியக் கேள்வியாக இருக்கின்றது. உலகம் முழுவதும் ட்ரோன்கள் மூலம் பூச்சிக்கொல்லி தெளிப்பதுதான் நடைமுறையாக இருந்து வருகின்றது. நச்சுப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும் போது அதனை ஒரளவு கட்டுப்படுத்தலாம் என்று கூறுகிறார்கள். ஆனால் இது முழுமையான ஒரு தீர்வாக நிச்சயம் இருக்காது. ஏனென்றால் இந்த வெட்டுக்கிளிகள் எல்லாம் மண்ணுக்கு அடியில் தான் முட்டைகளை இடும். நீங்கள் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி மேலே உள்ள வெட்டுக்கிளிகளை அழித்தால் கூட முட்டைகளில் இருந்து மீண்டும் வெட்டுக்கிளிகள் வர ஆரம்பிக்கும். அதையும் தாண்டி இவை பத்து பதினைந்து சதுர கிலோ மீட்டரில் இருக்கக் கூடியவை. அதே முறையில் இடப்பெயர்ச்சி அடையக்கூடியவை. இவ்வளவு பெரிய பரப்பளவில் நாம் கவனித்துப் பூச்சிக் கொல்லி மருந்து அடித்து வெட்டுக்கிளிகளை அழிப்பது என்பது சாத்தியம் குறைந்த ஒன்று. 

காட்டுப்பகுதிகள், மலைப்பகுதிகள், மனிதர்கள் செல்ல முடியாத இடங்களில் கூட இதன் பரவல் இருக்கலாம். இதெல்லாம் பூச்சிக்கொல்லிகள் தெளிப்பதில் உள்ள சிக்கல்களாக இருக்கின்றது. பெரும்பாலும் இந்த வெட்டுக்கிளிகளை விரட்ட மாலத்தியான் பூச்சிக் கொல்லிகளைத்தான் அரசும் பரிந்துரை செய்துள்ளது. இதில் மற்றும் ஒரு சிக்கல் இருக்கின்றது. இந்த மாலத்தியான் என்னவென்று பார்த்தால் அவைகள் பூச்சிகளின் நரம்பு மண்டலத்தைத் தாக்கி அவைகளை அழிக்கக் கூடியவை. இந்த கெமிக்கலை நீண்ட காலம் பயன்படுத்தினால் அவை நன்மை செய்கின்ற பூச்சிகளையும் அவித்துவிடுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கின்றது. அவ்வாறு நடந்தால் அது பெரும் ஆபத்தாக முடியும். பெரிய பூச்சிகளான வெட்டுக்கிளிகளே இதில் அழிக்கப்படும் என்றால் விவசாயிகளுக்கு நன்மை தரும் பல்வேறு பூச்சிகளும் இதில் அழிந்துபோக வாய்ப்பு இருக்கின்றது. எனவே பூச்சிக்கொல்லி மருந்துகளில் அதிக கவனம் வைக்க வேண்டும். 


 

 

Next Story

திருநங்கைகளை ‘சாதி’யாக வகைப்படுத்திய அரசு; சர்ச்சையைக் கிளப்பிய சாதிவாரி கணக்கெடுப்பு

Published on 08/04/2023 | Edited on 08/04/2023

 

Bihar government classified third genders as caste code  census

 

இந்தியாவில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சில காரணங்களுக்காக நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், பீகாரில் முதல்முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. கடந்த ஜூலை மாதம் பீகாரில் இதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்கப்பட்ட நிலையில், முதல்வர் நிதிஷ்குமார் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு உத்தரவிட்டிருந்தார். 

 

இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள இந்த கணக்கெடுப்பு முதற்கட்ட பணி ஏற்கனவே முடிவடைந்த நிலையில், அதன் இரண்டாம் கட்ட பணிகள் இந்த மாதம் 15 ஆம் தேதி தொடங்கி அடுத்த(மே) மாதம் 15 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.  அதன்படி ஒவ்வொரு சாதிக்கும் ஒரு குறிப்பிட்ட எண் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் உட்பிரிவுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. அதனால் சாதியில் எத்தனை உட்பிரிவு இருந்தாலும், அவர்கள் அனைவரும் அந்த சாதிக்கு ஒதுக்கப்பட்ட எண்ணில்தான் கணக்கிடப்படுகிறார்கள். 

 

இந்த நிலையில் மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகளை சாதிவாரி கணக்கெடுப்பில் ஒரு சாதி என்று வகைப்படுத்தியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த கணக்கெடுப்பில் அவர்களுக்கு 22 என்ற எண்ணானது ஒதுக்கப்பட்டு அதற்குள் அவர்களை உள்ளடக்கியுள்ளனர். இதற்கு பீகாரில் உள்ள சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

 

 

Next Story

பழைய பென்சன் திட்டம்: பரவும் போலிச் செய்தியும் அறியப்பட்ட உண்மையும்

Published on 28/02/2023 | Edited on 28/02/2023

 

The Old Benson Project: Spreading Fake News and Known Truth

 

பழைய பென்சன் திட்டத்தில் சேர விரும்புபவர்களின் பட்டியலை நிதித்துறை சேகரிப்பதாகவும் அதற்கான சர்க்குலர் பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு தகவல் பரபரப்பாக பரவி வருகிறது. ஆனால் நிதித்துறையின் அந்த சர்க்குலர் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. 

 

பழைய ஓய்வூதிய திட்டத்தில் தற்காலிகப் பணியாளராக அரசுப் பணியில் சேர்ந்தவர்கள் ஒரு கட்டத்தில் அவர்கள் நிரந்தரப்படுத்தப்பட்டனர். அப்படி நிரந்தரப்படுத்தப்படும்போது புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டது. அந்த வகையில் நிரந்தரப்படுத்தப்பட்ட ஊழியர்கள் பலர் ஓய்வு பெறுகிறார்கள். அப்போது அவர்கள், "பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருக்கும்போதே நாங்கள் பணியில் சேர்ந்துவிட்டோம். அதனால் எங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தின் படிதான் பென்சன் வழங்க வேண்டும்" என நீதிமன்றத்தை அணுகினர். 

 

நீதிமன்றமும் இவர்களுக்கு சாதகமாக உத்தரவு பிறப்பித்தது. அதன்படி பலருக்கும் பழைய பென்சன் திட்டத்தில் பென்சன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாதிரி பலரின் வழக்குகள் நிலுவையிலும் இருந்து வருகிறது. இதன் டேட்டாக்களைத் தான் துறை வாரியாக அனுப்பி வைக்கும்படி நிதித்துறை சர்க்குலர் அனுப்பியுள்ளது. மற்றபடி பழைய பென்சன் திட்டத்தில் சேர்பவர்களின் விருப்பப் பட்டியலை நிதித்துறை திரட்டவில்லை.