Skip to main content

"கோயில்ல சட்டையை கழட்டச் சொல்வதே நூலைப் பார்க்கத்தான்; இதை இல்லன்னு சொல்லச் சொல்லுங்க பார்ப்போம்..." - காந்தராஜ் தடாலடி

Published on 26/11/2022 | Edited on 26/11/2022

 

 

nm,

 

சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர், திருமாவளவன் மனுஸ்மிருதி அச்சடித்துக் கொடுப்பதைப் பற்றி பேச்சு வந்தபோது அவருக்குத்தான் வேலை இல்லை. அவர் இவ்வாறு செய்து கொண்டுள்ளார் என்று அண்ணாமலை கூறியதாக ஒரு செய்தி வெளியானது. இது தொடர்பாக மூத்த அரசியல் விமர்சகர் காந்தராஜ் அவர்களிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, "அதான் இவருக்கு நிறைய வேலை இருக்குல்ல, அதைச் செய்ய வேண்டியதுதானே? அண்ணாமலைக்கு ஒரு வேலையும் இல்லை என்பதால்தான் திருமாவளவன் என்ன செய்துகொண்டுள்ளார் என்பதைப் பார்த்துக்கொண்டுள்ளார். எனவே வேலை இல்லாதவர் இவர் தானே ஒழிய திருமா இல்லை. 

 

உங்களுக்கும் இந்தப் புத்தகத்துக்கும் தான் சம்பந்தம் இல்லை என்று சொல்கிறீர்களே, அப்புறம் என்ன கவலை;  வெள்ளைக்காரன் மொழிபெயர்த்த இந்தப் புத்தகத்தை யாருக்கோ திருமாவளவன் கொடுத்துவிட்டுப் போகிறார். நீங்கள் ஏன் லபோ திபோ என்று கத்துகிறீர்கள். உங்களுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்றால் உங்களுக்கு ஏன் இவ்வளவு பதற்றம் வர வேண்டும். அதிலிருந்தே நீங்கள் பொய் சொல்லுவதை எளிதாகக் கண்டறிந்துவிடலாம். உங்களுக்குச் சம்பந்தம் இல்லை என்று தொடர்ந்து கூறிவரும் நீங்கள் அவரை எதற்குக் கடுமையாக விமர்சனம் செய்ய வேண்டும்.

 

இந்தக் கருத்து மக்களுக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்துப் பிரதியெடுத்து மக்களிடம் சேர்க்கிறார். அதில் உங்களுக்கு ஏன் வயிறு எரிய வேண்டும். அண்ணாமலைதான் தெளிவாகக் கூறிவிட்டாரே எங்களுக்கும் மனுஸ்மிருதிக்கும் சம்பந்தமில்லை என்று, அதனால் அண்ணாமலை மத்திய அரசிடம் தெளிவாகக் கூற வேண்டும். அதன்படி இனி வரும் காலங்களில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த மக்களைக் கோயில்களில் அர்ச்சகராகவும், அனைவரையும் கோயில் கருவறை வரை செல்ல மத்திய அரசு ஆணையிட வேண்டும். அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று கடுமையாகச் சொல்ல வேண்டும். அண்ணாமலை இதைச் சொல்லத் தயாரா இருக்கிறாரா என்று கேளுங்கள். சொல்லிவிட்டு அவர் எங்கே போக முடியும். அதையும் பார்க்க வேண்டியுள்ளது.

 

அப்படி என்றால் அடுத்தவர்களை இவர் தேவையின்றி விமர்சிப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். திருமா அவர் ஒரு கருத்தை மக்களிடம் கொண்டு செல்கிறார். நீங்கள் எங்களுக்கும் அந்தக் கருத்துக்கும் சம்பந்தமில்லை என்று கூறிவிட்டீர்கள். அப்புறம் அவர் என்ன செய்தால் உங்களுக்கு என்ன, அவரை எதற்காக அட்டாக் செய்ய வேண்டும். தரமில்லாமல் பேச வேண்டும். அப்புறம் பூணூல் போடுவதைத் தடை செய்ய வேண்டும். நாங்கள் உங்களை விட உயர்ந்தவர் என்று காட்டுவதற்காகத் தானே இந்தப் பூணூலை அணிகிறார்கள். 

 

நாங்கள் பிரம்மாவின் தலையிலிருந்து பிறந்தவர்கள் என்றுதானே இவர்கள் கூறுகிறார்கள். அதை முதலில் தடுத்து நிறுத்த வேண்டும். கருவறையில் கற்பழிப்பு வரையில் செய்யலாம்; ஆனால் தாழ்த்தப்பட்டவன் போகக்கூடாது. இதுதான் மனுஸ்மிருதியில் கூறப்பட்டுள்ளது. கோயில்களில் சட்டையைக் கழட்டச் சொல்லுவதே பூணூல் இருக்கா இல்லையா என்பதைப் பார்ப்பதற்குத்தான். இருந்தால் உள்ளே செல்லலாம்; இல்லை என்றால் வெளியே என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு. இதை அண்ணாமலையை ஒழிக்கச் சொல்லுங்கள். அப்புறம் அடுத்தவரைத் திட்டலாம்." என்றார். 


 

Next Story

தாமரை வடிவில் அலங்காரம்; புகாரில் சிக்கிய வாக்குச்சாவடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Decoration in the shape of a lotus at the polling station

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாகூர் வாக்குச்சாவடியில் நுழைவு வாயிலில் தாமரை வடிவிலான அலங்காரம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், தற்பொழுது அவை நீக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் பாகூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் 11/23 என்ற எண் கொண்ட வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. அந்த வாக்குச்சாவடியின் நுழைவு வாயிலில் பேப்பரால் செய்யப்பட்ட தாமரைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. உடனடியாக இதுகுறித்து திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டிருந்த தாமரை வடிவிலான பேப்பர் பூக்களை அகற்றினர்.

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.