Skip to main content

எல்லோராலும் பாராட்டப்பட வேண்டியவர்கள் அவர்கள்தான்... - கஜா பாதிப்பு களத்தில் இருந்து சிவசங்கர் -4-

Published on 22/12/2018 | Edited on 22/12/2018
gaja eb staff





நாகப்பட்டிணம் ஊருக்குள் நுழைந்ததும் ஒரு திருமண மண்டபம் கண்ணில் பட்டது. மிகவும் பரபரப்பாக இருந்தது. லாரிகளிலும், வேன்களிலும் ஆட்கள் வந்து இறங்கிக் கொண்டு இருந்தார்கள். அது கல்யாணத்துக்கு வந்தவர்கள் கூட்டம் அல்ல. கூர்ந்து கவனித்தபோது தான் தெரிந்தது, அவர்கள் தமிழ்நாடு மின்வாரியப் பணியாளர்கள்.



 

gaja eb staff




இது நாகப்பட்டிணத்தில் மாத்திரம் அல்ல. அருகில் இருந்த காரைக்கால் உள்ளிட்ட கஜா புயலால் பாதிக்கப்படாத நகரங்களிலும் இதே காட்சி தான். அதே போல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதியிலும் பல இடங்களில் மின்வாரிய ஊழியர்கள் தற்காலிகமாக தங்கி இருந்தார்கள். அந்த அளவிற்கு தமிழகம் முழுதும் இருந்து மின்வாரிய ஊழியர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் வந்து குவிந்திருந்தார்கள்.

 

gaja eb staff

 

குவிந்திருந்தது மாத்திரமல்ல, அளப்பரிய பணியை செய்தார்கள், செய்து கொண்டிருக்கிறார்கள். நேரம், காலம் பார்க்காமல், எந்தவித வசதிகளுமின்றி பணி செய்தார்கள். தமிழ்நாடு அரசின் துறைகளில், புயல் பாதித்த பகுதியில் எல்லோராலும் பாரட்டப்படும் அளவிற்கு பணியாற்றியவர்கள் மின்வாரிய பணியாளர்கள் தான்.

 

gaja eb staff


 

எந்த ஊருக்குள் நுழைந்தாலும் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த தமிழக அரசின் துறை மின்வாரியம் தான். அந்த அளவிற்கு பாதிக்கப்பட்ட துறையும் மின்வாரியம் தான்.


 

gaja eb staff

 


சிறு நகரங்கள், முக்கிய சாலைகளில் உள்ள கிராமங்கள் தான் இன்றைய தேதிக்கும் மின்சாரம் பெற்றுள்ளது. அதுவும் தமிழகம் முழுதிலுமிருந்து பணியாளர்கள் வந்து பணியாற்றியதால். உள் கிராமங்கள் உட்பட எல்லா இடங்களுக்கும் மின்சாரம் கிடைக்க இன்னும் சில மாதங்கள் ஆகலாம். இதுவே இப்படி என்றால், வயல்வெளிகள் வழியே புதுக் கம்பங்கள் அமைத்து, விவசாயத்திற்கு மின்சாரம் எப்போது கிடைக்கும் என்பது கேள்விக் குறி.

 

gaja eb staff


 

ஒரு கட்டத்திற்கு மேல் மற்ற மாவட்டங்களில் இருந்து வந்து பணிபுரிபவர்கள் ஊர் திரும்ப வேண்டிய சூழல் வரலாம். அதற்கு பிறகு உள்ளூரில் இருக்கும் பணியாளர்களைக் கொண்டு தான் சீரமைப்பு பணிகளை மின்வாரியம் செய்யும் சூழல் ஏற்படும். அது மிகப் பெரிய நெருககடியை ஏற்படுத்தி விடும்.
 

 

gaja eb staff



 

எனவே வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்கி மின்வெட்டை தவிர்ப்பது போல், தனியார் ஊழியர்கள் மூலம் கஜா பாதித்த பகுதியில் பணி மேற்க் கொள்ள வேண்டும். அப்போது தான், அந்தப் பகுதிகளில் மின்சாரம் கிடைத்து, பாதித்த விவசாயிகள் மறுவாழ்வு பெற முடியும்.

 

gaja eb staff


 

எது எப்படியாகினும், புயலால் பாதித்த பகுதியை சேர்ந்த மக்கள் மின்வாரிய ஊழியர்களை பாராட்டினார்கள். எல்லோராலும் மனமார பாராட்டுகின்ற அளவிற்கு அவர்கள் பணி இருந்ததும் உண்மை. 
 

இதில் கொடுமை என்னவென்றால் இதற்கான பாராட்டை பெற மின்துறை அமைச்சர் தங்கமணியும், தமிழக அரசும் துடிப்பது தான்.



 

gaja eb staff




கஜா புயல் பாதிப்புக்கு பிறகு, இன்றைய தேதி வரை நிவாரணம் கிடைக்கவில்லை என்று தமிழக அரசை எதிர்த்து, பொதுமக்கள் ஆர்ப்பாட்டம், சாலைமறியல் என்று தினம்தினம் போராடி வருகிறார்கள். இது தமிழக அரசு சரியாக செயல்படவில்லை என்பதற்கு சான்று. 
 

இன்னும் வலுவான சான்று வேண்டுமென்றால், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சொந்த தொகுதியில் விரட்டப்பட்டு சுவர் ஏறிக் குதித்து தப்பித்த சம்பவம் தான்.


 

gaja os manian



 

எனவே மின்துறை பணிகளுக்கான முழு பாராட்டும், அந்தத் துறையின் அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்குமே சேர வேண்டியது.
 

தந்தை இல்லா குடும்பத்தில் பிள்ளைகள் பொறுப்பாக பணியாற்றுவது போல, மின்வாரிய ஊழியர்கள் பொறுப்பாக சீரமைப்பு பணியை செய்துள்ளனர்.
 

gaja eb staff


 

மின் துறையை போலவே, விவசாயத் துறை நீண்டகால திட்டத்தோடு இந்தப் பகுதியில் பணியாற்ற வேண்டும். தென்னை போன்ற நீண்ட கால பயிர்களை இழந்தவர்களுக்கு, அடுத்த கட்டம் வாழ்க்கையை நகர்த்த அரசு தான் உதவிகளை செய்ய வேண்டும்.

 

வீடுகளை இழந்தவர்களுக்கு, உள்ளாட்சித் துறை முழு வீச்சில் செயல்பட்டு வீடுகளை கட்டித்தர வேண்டும். பணம் அளித்தால் கூட அவர்களால் கட்டுமானப் பொருட்களை சேகரிக்க முடியாது. அதனால் அரசு தான் இதை செய்ய வேண்டும்.

 

gaja eb staff

 

தென்னை, மா மரங்கள் மட்டுமின்றி, எல்லா மரங்களும் விழுந்திருக்கின்றன. இது எதிர்காலத்தில், சுற்றுசூழலில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதை கருத்தில் கொண்டு, வனத்துறை மூலம் இந்த மாவட்டங்களில் மரக்கன்றுகள் நடும் பணியை செய்ய வேண்டும்.

 

ஒவ்வொரு குடும்பத்தின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு அரசு நீண்ட கால திட்டம் தீட்டி, மத்திய அரசின் நிவாரண நிதியை உடனே பெற வேண்டும்.

 

பேரிடர் பாதிப்பு மீட்பு நடவடிக்கைகள் என்பது அரசின் மற்ற பணிகள் போல் அல்லாமல் கூடுதல் கவனம் செலுத்தி செய்ய வேண்டிய பணி என்பதை அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.
 

அப்போது தான், கஜா புயல் பாதித்த பகுதி மக்களுக்கு மறுவாழ்வு கிடைக்கும்.

 

S. S. Sivasankar

 


 

 


 


 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வேட்புமனு தாக்கல்; நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் செயலால் பரபரப்பு

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Nagapattinam is in a frenzy due to the action of Naam Tamilar Party candidate

மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாகை நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கார்த்திகா தனது கட்சியினருடன் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய வருகை தந்தார்.

அப்போது தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஜானி டாம் வர்கீஸிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அதன் பின்னர் ஆட்சியர் வழங்கிய உறுதிமொழி படிவத்தை வாங்கிப் பார்த்த வேட்பாளர் கார்த்திகா, பிறகு அதனைப் படிக்கத் துவங்கினார்.

அப்போது நாம் தமிழர் கட்சி வேட்பாளர், ‘கார்த்திகா எனும் நான். மக்களவையில் காலியாக உள்ள இட ஒதுக்கீட்டை நிரப்புவதற்கு வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நான், சட்ட விதிகளுக்கு இணங்க நிறுவப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பு அமைப்பின்பால் உண்மையான கட்டுப்பாடும், உண்மையான நம்பிக்கையும் கொண்டிருப்பேன் என்றும் இந்திய நாட்டின் முழு முதல் ஆட்சியையும் ஒருமைப்பாட்டையும் நிலை நிறுத்துவேன் என்றும் எனக் கூறிய அவர், ஒரு கணம் நிறுத்தி, தலைவர் பிரபாகரன் மீது சூளுரைத்து உளமார உறுதி கூறுகிறேன் என ஆட்சியருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

Nagapattinam is in a frenzy due to the action of Naam Tamilar Party candidate

அதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, ‘இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு இயக்க தலைவரின் பெயரை கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டது சரியா என கேள்வி எழுப்பினர். உறுதிமொழி படிவத்தில் ஆண்டவர் என எழுதி இருந்தது. அதனைத் தவிர்த்து 13 கோடி தமிழர்களின் இறைவன் தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன் என உறுதிமொழி எடுத்துக் கொண்டேன்’ என விளக்கம் கூறிய அவர், நாகை நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்று மக்களவைக்கு சென்று அங்கு தேசியத் தலைவர் பிரபாகரன் மீது உறுதிமொழி எடுக்கும் மெயின் பிக்சர் காட்சி அங்குதான் உள்ளது என ஆவேசத்துடன் கூறினார்.

இந்திய அரசியலமைப்பு சாசனப்படி வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள், அதனை முறையாகப் பின்பற்றாமல் தங்களுக்கு ஏற்றவாறு அதனை மாற்றிக் கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொள்வதால் இவர்களுக்கான வேட்புமனு ஏற்கப்படுமா? அல்லது நிராகரிக்கப்படுமா? என்கிற பேச்சு நாகை நாடாளுமன்றத் தொகுதி வாக்காளர்களிடையே எழுந்துள்ளது.

Next Story

மீன்வளப் பல்கலைக்கழகம்; ஜெயலலிதாவின் பெயரை நிராகரித்த குடியரசுத்தலைவர்

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
President rejects Jayalalitha name for Fisheries University

நாகை மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டார்.

நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வளப் பல்கலைக்கழகம் கடந்த 2012 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சியின் போது நாகப்பட்டினத்தில் துவங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த பிறகு நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வள பல்கலைக்கழகத்திற்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்று  சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஓப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் 4 ஆண்டுக்கும் மேல் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் வைத்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு கிடப்பில் போடப்பட்ட 10 மசோதாக்களுடன் ஜெயலலிதா பெயர்மாற்றம் தொடர்பான மசோதவையும் திருப்பி அனுப்பியிருந்தார். இதையடுத்து தமிழக அரசு மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதாவின் பெயர் வைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இந்த மசோதாவை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இந்த நிலையில் நாகப்பட்டினம் மீன்வளப் பல்கலைகழகத்திற்கு ஜெயலலிதா பெயர் மாற்றம் தொடர்பான பரிந்துரையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நிராகரிப்பதாக அறிவித்துள்ளார்.