Skip to main content

உலகின் முதல் பல்கலைக்கழக பட்டதாரிப் பெண்!

Published on 05/06/2019 | Edited on 05/06/2019

வெனிஸ் குடியரசைச் சேர்ந்தவர் எலினா கோர்னரோ பிஸ்கோபியா. இந்தப் பெயர் வாய்க்குள் நுழையவில்லை என்றால், ஹெலன் கோர்னரோ என்று அழைக்கலாம்.
 

elena piscopia

 

 

1646 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் தேதி பிறந்த இவர், பெற்றோருக்கு மூன்றாவது குழந்தை. இவர் பிறக்கும்போது இவருடைய பெற்றோர் திருமணம் செய்துகொள்ளவில்லை. இவருடைய தாய் ஜனெட்டா போனி நிஜத்தில் ஒரு விவசாயக்கூலி. எனவே, இவர் தந்தையின் குடும்பத்தில் சட்டப்பூர்வ உறுப்பினராக இல்லை.
 

இவருடைய தந்தை ஜியான்பட்டிஸ்டா கோர்னரோ குடும்பத்தைச் சேர்ந்தவர். அது பிரபுக்கள் குடும்பம். அந்தக் குடும்பத்தில் உறுப்பினராக வேண்டும் என்றால், பிரபுக்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இவருடைய தாயோ ஏழை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். எனவே, பெற்றோர் அனுமதித்தாலும் இவர் அந்தக் குடும்பத்தின் சட்டப்பூர்வ உறுப்பினராக முடியாது.
 

ஹெலனாவின் தாய் ஜனெட்டாவின் குடும்பம் பட்டினியால் வெனிஸை விட்டு வெளியேற திட்டமிட்டிருந்தது. அந்தச் சமயத்தில் வெனிஸ் குடியரசின் பிரபுக் குடும்பத்தைச் சேர்ந்தவரான ஜியான்பட்டிஸ்டாவின் அன்பும் ஆதரவும் கிடைத்தது. அவருடன் வாழ்ந்து மூன்று பிள்ளைகளைப் பெற்றார். அதன்பிறகு, 1654 ஆம் ஆண்டுதான் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். ஆனாலும் அவர்களுடைய குழந்தைகளுக்கு பிரபு அந்தஸ்த்து தடை செய்யப்பட்டது.
 

1664 ஆம் ஆண்டு ஹெலனாவின் தந்தை வெனிஸ் குடியரசு அலுவலகத்தின் கருவூல அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இது உயர்ந்த பதவியாகும். வெனிஸ் நகர ஆட்சியருக்கு அடுத்த பொறுப்பாகும் இது. இந்த பொறுப்பை வைத்து, வெனிஸ் குடியரசின் அடையாளமாக கருதப்படும் கடலில் நடைபெறும் திருமண ஏற்பாடுகளில் முக்கியமான நபராக ஹெலனா பலமுறை செயல்பட்டார். இவருக்கும் பலமுறை நிச்சயதார்த்தம் செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், ஹெலனா எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளினார். பொதுவாக, இவர் தொடக்க காலத்திலிருந்தே கன்னியாஸ்திரியாக மாறவே விரும்பினார்.
 

சிறு குழந்தையிலேயே ஹெலனா மேதைமையோடு வளர்ந்தார். குடும்ப நண்பரும் மதபோதகருமான ஜியோவன்னி என்பவரின் யோசனைப்படி ஹெலனாவுக்கு சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு கல்வி கற்பிக்கப்பட்டது. லத்தீன், கிரேக்கம், பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஹீப்ரூ, அராபிக் ஆகிய மொழிகளில் தேர்ந்த அவர், கணிதம், தத்துவம், இறையியல் ஆகியவற்றையும் கற்றுத் தேர்ந்தார். இவை தவிர இசையிலும் சிறந்த பயிற்சி பெற்றிருந்தார்.
 

italy lady

 

 

20 வயதுக்குள் இயற்பியல், வானவியல், மொழியியல் ஆகியவற்றிலும் ஆர்வம் செலுத்தினார். இவருடைய ஆசிரியர் கார்லோ ரினால்டினி எழுதிய தத்துவம் குறித்த புத்தகம், ஹெலனாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
 

1969 ஆம் ஆண்டு ஜியோவன்னி லேன்ஸ்பெர்ஜியோ என்ற மதகுரு ஸ்பானிய மொழியில் ஏசு குறித்து எழுதிய நூல் ஒன்றை இத்தாலிய மொழியில் பெயர்த்து எழுதினார். அந்த நூல் 1969 முதல் 1972க்கு இடைப்பட்ட காலத்தில் 5 பதிப்புகள் வெளியானது. வெனிஸ் அரசாங்கமே இதை வெளியிட்டது. அந்த நூல் ஹெலனாவுக்கு மிகப்பெரிய புகழைப் பெற்றுத்தந்தது. பல கல்வியாளர் மாநாடுகளில் அவர் பேசினார். பசிபிக் பிரதேசத்துக்கான வெனிஸ் மக்கள் சங்கத்தின் தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டார்.
 

ஹெலனாவின் அறிவுக்கூர்மையை எடுத்துச் சொல்லி அவருக்கு படுவா பல்கலைக்கழகம் பட்டம் வழங்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், பெண் என்பதால் இறையியலில் அவருக்கு பட்டம் அளிக்க படுவா பிஷப் மறுத்துவிட்டார். மாறாக, தத்துவத்தில் அவருக்கு பட்டம் வழங்க ஒப்புக்கொண்டார். 1678 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி ஹெலனாவுக்கு நேப்பிள்ஸ், ரோம், பெருஜியா, போலோக்னா உள்ளிட்ட பல நகரங்களின் பல்கலைக்கழக அதிகாரிகளை அழைத்து அவர்கள் முன்னிலையில் பட்டம் வழங்கப்பட்டது.
 

1684 ஆம் ஆண்டு மரணமடைந்த ஹெலனா, படுவா நகரில் உள்ள சாந்தா ஜியுஸ்டினா சர்ச் வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டார். அவருடைய சிலை படுவா பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டது. 

 

Next Story

காதல் முறிவை தாங்காத காதலன்; மாணவியை கொன்று ஏரியில் வீசிய வெறிச்செயல்

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

the boyfriend who lost his ex-girlfriend and dumped her on the lake shore in italy

 

இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் ஹுலியா சியோஷெத்தின் (22). இவர் வினிடோ மாகாணத்தில் உள்ள பட்ஹா பல்கலைக்கழகத்தில் பயோமெடிக்கல் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கும், பிலிப்போ டுரிடோ (22) என்ற இளைஞருக்கும் நட்பு ஏற்பட்டது. இவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறி காதலித்து வந்துள்ளனர். இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஹூலியாவும், பிலிப்போவும் பிரிந்தனர். 

 

இந்த நிலையில், ஹூலியா படித்து வந்த பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறவிருந்தது. இந்த விழாவில் பங்கேற்க புதிய உடை வாங்க ஹூலியா, கடந்த 16ஆம் தேதி வணிக வளாகத்திற்கு செல்வதாக தனது பெற்றோரிடம் கூறி, வீட்டை விட்டு புறப்பட்டுள்ளார். வீட்டை விட்டு வெளியேறிய ஹூலியா வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதில், பதட்டமடைந்த அவரது பெற்றோர் இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்த புகாரின் அடிப்படையில், இத்தாலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

 

அந்த விசாரணையில், ஹூலியா வீட்டின் வெளியே உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், ஹூலியா வீட்டின் அருகே அவரது முன்னாள் காதலர் பிலிப்போவின் கார் வந்துள்ளது. அதன் பின், பிலிப்போ ஹூலியாவை கொடூரமாக தாக்கி அவரது காரில் வைத்து கடத்திச் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, பிலிப்போவை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். நீண்ட தேடலுக்கு பின்பு பிலிப்போவை மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தனர். அதன் பின்னர், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். 

 

அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், தன்னுடனான காதலை ஹூலியா முறித்ததால், ஆத்திரமடைந்த பிலிப்போ ஹூலியாவை ஆள் நடமாட்டமில்லாத ஏரிக்கரைக்கு கடத்திச் சென்றுள்ளார். அங்கு ஹூலியாவை கொடூரமாக தாக்கி, கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். அதன் பின்னர், ஹூலியாவின் உடலை அந்த ஏரிக்கரையில் தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து, போலீசார் அந்த ஏரிக்கரைக்கு விரைந்து சென்று அங்கு பிணமாக கிடந்த ஹுலியாவின் உடலை கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட பிலிப்போவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

Next Story

57 முறை காதலியை குத்திக் கொன்ற இளைஞர்; வினோத தண்டனை அளித்த நீதிமன்றம்

Published on 16/11/2023 | Edited on 16/11/2023

 

The court acquitted him for some strange reason for girlfriend  lost her life in italy

 

இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் டிமிட்ரி ஃப்ரிகானோ. இவரும் அதே நாட்டைச் சேர்ந்த எரிகா ப்ரிட்டி (25) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 2017இல் இவர்கள் இருவரும் தங்களது வீட்டில் உணவு உட்கொண்டிருந்த போது இருவருக்கும் இடையே சிறிய சண்டை ஏற்பட்டது. இந்த சண்டை கையை மீறிய சண்டையாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த டிமிட்ரி தனது காதலியை கத்தியை வைத்து கொடூரமாகக் கொலை செய்துள்ளார். மொத்தம் 57 முறை தனது காதலியைக் குத்தி கொடூரமாகக் கொன்றுள்ளார்.

 

இது குறித்த விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதனை தொடர்ந்து, கடந்த 2019 ஆம் ஆண்டு, அவருக்கு 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இருப்பினும், அவர் தொடுத்த மேல்முறையீடு, கொரோனா உள்ளிட்ட காரணங்களால் அவர் 2022 ஆம் ஆண்டு வரை சிறைக்கு செல்லவில்லை. இதனிடையே, டிமிட்ரியின் உடல் எடை சுமார் 120 கிலோவாக இருந்துள்ளது. இதன் பிறகு சிறைக்கு சென்ற அவருக்கு வழக்கமான உணவு வழங்கப்பட்டுள்ளது. இதில் அவருடைய எடை 200 கிலோ வரை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அவர் நடக்கமுடியவில்லை என்று கூறப்படுகிறது. 

 

இதனை தொடர்ந்து, இது குறித்து சிறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், சிறையில் அவருக்கென தனியாக குறைந்த கலோரி உணவுகளைக் கொடுக்க முடியாது என்று கூறினர். இதனை விசாரித்த நீதிமன்றம்,  ’அதிக எடையால் அவதிப்பட்டு வரும் டிமிட்ரி இப்போது உடல் எடையைக் குறைக்க வேண்டும். இதற்கு அவர் குறைந்த அளவு கலோரி உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், சிறையில் குறைந்த கலோரி உணவிற்கு வாய்ப்பு இல்லை. அவர் சிறையில் தொடர்ந்து இருந்தால் அது அவரது உயிருக்கு ஆபத்தாக முடியும். அதனால், அவர் சிறையில் இருக்க தேவையில்லை. அதற்கு பதிலாக அவர் வீட்டு சிறையில் இருக்கலாம்’ என நீதிமன்றம் உத்தரவிட்டது.