Skip to main content

I.P.L. போராட்டத்திற்கு தமிழிசை வந்திருக்க வேண்டும்... தனியரசு பேட்டி

Published on 13/04/2018 | Edited on 13/04/2018


 

tamilisai soundararajan h.raja


ஐ.பி.எல். போட்டிக்கு எதிரான போராட்டத்திற்கு தமிழிசை சவுந்திரராஜன் வந்திருக்க வேண்டும். 'Go back Modi' என்ற முழக்கத்தை தமிழக பாஜக முன்னெடுத்திருக்க வேண்டும் என்று தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவரும், காங்கேயம் தொகுதி எம்எல்ஏவுமான தனியரசு கூறியுள்ளார்.
 

பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திற்கு பேட்டி அளித்தார் தனியரசு. 
 

ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவிப்பது, பிரதமர் வருகைக்கு கருப்பு கொடி காட்டுவது சிறுபிள்ளைத்தனமானது. தமிழகத்தில் நடப்பவை போராட்டம் அல்ல. தேச விரோத செயல்கள். இவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா. 
 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத வரை ஐ.பி.எல். போட்டியை தமிழகத்தில் நடத்தக் கூடாது என்பது ஒட்டுமொத்த கட்சிகளின் விருப்பம், பாஜகவை தவிர. 7 கோடி மக்களின் கோரிக்கையை நிராகரித்துவிட்டு ஐபிஎல் போட்டியை நடத்த வேண்டும் என்பதுதான் பாஜகவின் விருப்பம் என்பது இவரது பேச்சில் தெரிகிறது. பாஜகவை மக்கள் நிராகரிப்பார்கள். 
 

தமிழ்நாட்டில் ராணுவத் தளவாடங்களை நிறுவக் கூடாது. அண்டை நாடுகள் போர் காலத்தில் எதிரிகளின் இலக்காக இருக்கக்கூடிய ஆயுத தொழிற்சாலைகள், உற்பத்தி பொருட்களைத்தான் தாக்குவார்கள். அப்படி தாக்கும்போது தமிழகத்தில் இருக்கக்கூடிய ஆயுத தொழிற்சாலை மீது அபாயகரமான தாக்குதல்களை வானில் இருந்து நடத்தலாம். அதில் தமிழ்நாட்டு மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள். இந்த தொழிற்சாலை லட்சக்கணக்கான பேருக்கு வேலைவாய்ப்பு தரும் என்பதை ஏற்க முடியாது. ஏற்கனவே இயங்கிக்கொண்டிருந்த பெல் நிறுவனம், சேலம் உருக்காலையை மூட மத்திய அரசு முயற்சி செய்தது. நெய்வேலி அனல்மின் நிலையத்தை தனியார் மயமாக்க மத்திய அரசு முயச்சி செய்தது. ஆயிரக்கணக்கானவர்களின் வேலையை பறிக்க நினைக்கும் அரசு எப்படி லட்சக்கணக்கானவர்களுக்கு வேலையை வழங்கும்.
 

உச்சநீதிமன்ற தீர்ப்பையே நடைமுறைப்படுத்தாத, நடுவர் மன்ற தீர்ப்பை மதித்து அதனை செயல்படுத்தாத, 7 கோடி தமிழர்களுக்கு மதிப்பளிக்காத, சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மதிக்காத, முதல்வர் தலைமையில், எதிர்க்கட்சித் தலைவர் முன்னிலையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தின் தீர்மானத்திற்கு மதிப்பளிக்காத பிரதமரை எப்படி தமிழக மக்கள் வரவேற்பார்கள். மத்திய அரசு மதிக்கவில்லை என்றுதான் பொதுமக்கள் தானாக முன்வந்து கருப்புக்கொடி போராட்டத்தில் பங்கேற்றனர்.

 

thaniyarasu


 

நேற்று நடந்த கருப்புக்கொடி போராட்டத்தில் பொதுமக்களின் பங்களிப்பு இல்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளாரே?
 

அப்படியென்றால் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களா? ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களா?. தமிழக மக்களின் நலன்களுக்காக போராடுகின்ற அறவழி போராட்டக்காரர்களை, ஜனநாயக வழியில் போராட்டம் நடத்தியவர்களை கேவலப்படுத்துவது, இழிவுப்படுத்துவது, தேச விரோதிகள் என்று அடையாளப்படுத்த முயற்சிப்பது அரசியல் பண்புக்கு எதிரானது. எச். ராஜா, தமிழிசை ஆகியோர் இதுபோன்ற கருத்துக்களை பரப்ப வேண்டாம். வெகுஜன மக்களின் கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டு, காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். 
 

ஐபிஎல் போட்டியை தடுத்து நிறுத்தும் போராட்டத்தில் பங்கேற்க பாஜக வந்திருக்க வேண்டும். தமிழிசை அவர்கள் வந்திருக்க வேண்டும். மோடி தமிழகத்திற்கு வரக்கூடாது என்று 'Go back Modi' என்ற முழக்கத்தை பாஜக முன்னெடுத்திருக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்களின் விருப்பத்திற்கு, தமிழக பாஜகவின் கோரிக்கைக்கு மதிப்பளிக்காத மோடியை வரவேற்க விருப்பவில்லை என்று தமிழக பாஜகவே எதிர்த்திருக்க வேண்டும். அப்படி எதிர்ப்பை காட்டியிருந்தால் தமிழக பாஜகவை பொதுமக்கள் நம்புவார்கள். தமிழ்நாட்டு மக்களெல்லாம் ஓரணியாக இருக்கிறார்கள். தமிழக பாஜக தனியாக இருக்கிறது என்பது புலப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் குறைந்த பட்ச செல்வாக்கையும் பாஜக தற்போது இழந்துள்ளது. ஆகையால் இவர்களின் கருத்துக்களை பொருட்படுத்த வேண்டாம். இவ்வாறு கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமலாக்கத்துறை சம்மனுக்கு அவகாசம் கேட்ட தமன்னா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
tamanna asked for time to summon the enforcement department regards ipl

கடந்த 2023ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியது. அதன்படி அந்நிறுவனத்தின் செயலியான ஜியோ சினிமா செயலியில் இலவசமாக ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பி வந்தது. 2023 முதல் அடுத்த ஐந்தாண்டிற்கு ஐபில் தொடரின் டிஜிட்டல் உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஃபேர்பிளே என்கிற சூதாட்ட செயலியில் சட்டவிரோதமாக ஐபிஎல் போட்டிகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டதாக கூறி வியாகாம் நிறுவனம் மகாராஷ்ட்ரா சைபர் கிரைமில் புகார் அளித்தது. அந்த புகாரில், ஃபேர்பிளே செயலில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்பட்டதால் தங்கள் நிறுவனத்துக்கு ரூ.100 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக குறிப்பிட்டிருந்தது. இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், ஃபேர்பிளே செயலியின் ஊழியர் ஒருவரை கைது செய்தனர். மேலும் அச்செயலியை விளம்பரப்படுத்திய பிரபலங்களை விசாரணை செய்ய முடிவெடுத்தனர். அந்த வகையில் பாலிவுட் நட்சத்திரங்கள் பாட்ஷா, சஞ்சய் தத், ஜாக்குலின் பெர்னாண்டஸ், தமன்னா உள்ளிட்ட பலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.  

கடந்த 23 ஆம் தேதி சஞ்சய் தத்துக்கு சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். ஆனால், தான் இந்தியாவில் இல்லாத காரணத்தால் தன்னால் ஆஜராக முடியவில்லை என சஞ்சய் தத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமன்னாவிற்கு இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியது. 

இந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராக தமன்னா அனுமதி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர், மும்பையில் தற்போது இல்லை என சைபர் கிரைம் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாகவும் பின்னர் வேறொரு நாளில் ஆஜராகவுள்ளதாக கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.