Skip to main content

மூன்று பேரை காதலிக்கிறாரா கவின்? - ரகசியத்தை உடைத்த பாத்திமா பாபு!

Published on 10/07/2019 | Edited on 10/07/2019

பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்கு முதல் போட்டியாளராக சென்றவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் பிரபல செய்தி வாசிப்பாளரான பாத்திமா பாபு. அதே போன்று அந்த நிகழ்ச்சியில் இருந்து முதலில் வெளியேற்றப்பட்ட நபரும் அவர்தான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் பல விடைதெரியாத கேள்விக்கு அவரிடம் விடை கிடைக்கிறதா என்று பார்ப்போம்.

 

fathima babu



பிக் பாஸ் நிகழச்சியில் உங்களை தினமும் தொலைக்காட்சியில் பார்த்து தமிழ்நாட்டு மக்களுக்கு நீங்க அம்மா மாதிரி மாறிபோய்விட்டீர்கள். ஆனால், உங்களிடம் எங்களுக்கு கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய இருக்கிறது. உங்களை நாமினேட் செய்த ஆட்களில் மோகன் வைத்தியா முக்கியமானவர். ஆனா, நீங்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியே போனபோது அதிகம் கண்ணீர்விட்டவர் அவர்தான். எப்படி அந்த முரண், புரியவில்லையே?

ஒருவர் தொடர்ந்து கோபமாகவே இருக்க வேண்டும் என்று, எந்த அவசியமும் இல்லையே. நாங்க இருவரும் பகையாளிகள் இல்லை. ஜெர்மன் நாட்டில் இரண்டு நாடுகளுக்கு இடையே இருந்த சுவரையே உடைத்துள்ளார்கள். ஆகையால், அந்த நேரத்தில் என்மேல் அவர் கோபமா இருந்திருப்பார், வெளியே வரும் போது வருத்தப்பட்டுள்ளார், அவ்வளவுதான். இது வாழ்க்கையில் எல்லா மனதர்களுக்குள்ளும் சாதாரணமாக ஏற்படும் நிகழ்வுதான்.

நீங்கள் வெளியே வந்த பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருகிறீர்களா? 

இதுவரை மூன்று எபிஸோடுகளை பார்த்துள்ளேன். இப்பதானே வந்துள்ளேன், இனிதான் தொடர்ந்து எல்லா நாட்களையும் பார்க்க வேண்டும். 


நீங்க மூன்று நாட்கள் பார்த்து இருக்கீங்க, உள்ளே நடப்பதற்கும் டிவி-யில் வருவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். 24 மணி நேரமும் நீங்கள் உள்ளே இருப்பீங்க. ஆனால், நிகழ்ச்சியை ஒரு மணி நேரம் மட்டுமே காட்டுவாங்க, இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஒரே நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே நம்மால் இருக்க முடியும், எல்லா இடங்களிலும் யார் என்ன பேசுகிறார்கள் என்று நமக்கு தெரியாது. பிக் பாஸ் நிகழ்ச்சியை கிரிக்கெட் போல, டிவி-யில் பார்க்கும்போது தான் நல்லா இருக்கும். எல்லாருடைய பக்கத்தையும் நம்மால் பார்க்க முடியும். எதுவும் நமக்கு தெரியாமல் போகாது. பிக் பாஸ் பார்க்க டிவி தான் பெஸ்ட் ஆப்ஷன்.

பிக் பாஸ் 3 ஆரம்பித்த முதல் நாளிலேயே உங்கல் குரல் ஒரு எதிர் குரலா இருந்தது. மீட்டர் பொருத்தியதை அனைவரும் கைத்தட்டி வரவேற்றாலும், நீங்கள் மட்டும் தான் அதை அவல நிலை என்று கூறினீர்கள். படிப்படியா அந்த குரல் குறைந்ததாக தெரிகிறதே?

என்னை பற்றி ஏதாவது சொல்லியிருந்தால் நான் பேசலாம். அப்படி யாரும் எதுவும் சொல்லவில்லை. எல்லாரும் என்னிடம் ஒரு மரியாதையை கடைப்பிடித்தார்கள். அதுவும் இல்லாமல், அடுத்தவர்களை யாராவது மட்டம்தட்டி பேசினால் அவர்களுடைய பேச்சுக்களை நான் கேட்பதில்லை. அதனால் எனக்கு பிரச்சனைகள் அதிகம் வருவதில்லை. கேட்க காது இருந்தால் தான், அடுத்தவர்களின் வாய் பேசும். அதனால் தான் தேவையில்லாவர்களின் பேச்சுக்களை நான் கேட்பதில்லை.

முதலில் பிக் பாஸ் வீட்டுக்கு போனதும் நீங்கதான், வீட்டில் இருந்து வெளியே வந்ததும் நீங்க தான், அந்த மனநிலை எப்படி இருக்கு?

பிக் பாஸ் வீட்டுக்கு போகும் போது குடும்பத்தை எல்லாம் விட்டுட்டு போனதால ரொம்ப கஷ்டமா இருந்தது. ஒவ்வொரு கேமரா முன்னாடியும் நின்று வீட்டில் உள்ளவர்களிடம் மன்னிப்பு கேட்டேன். அது எல்லாம் டெலிகாஸ்ட் ஆகலை. வீட்டை விட்டு வெளியே வரும் போது என் குடும்ப உறுப்பினர்கள் எல்லாம் மனநிறைவா அந்த அரங்கத்தில் இருந்து என்ன வீட்டிற்கு அழைத்து வந்தார்கள். அது ரொம்ப சந்தோஷமா இருந்தது. ஆக மொத்தம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போகும் போது கஷ்டமா இருந்தது, பிக் பாஸில் இருந்து வரும் போது சந்தோஷமா இருந்தது.

கவின் மூன்று பேரை லவ் பண்றதா ஒரு பேச்சு அதிகம் பேசப்படுகிறது. அது உண்மையா, நீங்க பிக் பாஸ் வீட்டில் இருந்ததால் நேரில் பார்த்து இருப்பீர்களே?

அவன் யாரையும் காதலிக்கவில்லை, மூன்று பேரை லவ் பண்ணினா மூன்று பேருமே அவனை செருப்பால் அடிப்பாங்க. எல்லோரிடமும் அவன் நல்லா பேசிகிட்டுதான் இருந்தான். கடைசியா சாக்ஷிகிட்ட ஒதுங்கிட்டான். எல்லா விஷயத்தையும்தான் பிக் பாஸ் அவனிடம் கேட்டுவிட்டாரே.

பிக்பாஸ் வீட்டில் புகைப்பிடிப்பதற்காக தனியா ஒரு ரூம் இருக்கு, பல பிரச்சனை அங்குதான் ஆரம்பித்துள்ளது, சில பிரச்சனை அங்கேயே முடிந்து விடுகிறது, யாரெல்லாம் அங்கு செல்கிறார்கள்? 

60 கேமரா இருக்கிற பிக் பாஸ் வீட்டில் அங்கே யார் போகிறார்கள் என்று கண்டுப்பிடிக்க முடியாதா? பிக் பாஸ் சொல்லாத போது அதைபற்றி நான் சொல்லக் கூடாது.

வனிதா அவர்கள் யாரையும் பேச விடவில்லை, யார் சொல்வதையும் கேட்கவும் மாட்டேங்கிறார், அவருக்கு போட்டியா இப்போது இருப்பவர்களில் யாராவது வருவார்களா?

ஒயில்டு கார்டு ரவுண்டில் நிச்சயம் யாராவது வருவார்கள். சேரன் வனிதாவை எதிர்த்து கேட்கலாம், ஆனால் அவர் அமைதியா இருக்கார். ஏன் இப்படி அவர் இருக்கார் என்று இதுவரையில் தெரியவில்லை. சூட்டிங் ஸ்பாட்டில் அவர் இப்படி இருக்கமாட்டாரே. ஆனால், பிக் பாஸ்ஸில் இப்படி இருக்க வேண்டிய அவசியம் என்ன? அவர் வனிதைவை எதிர்த்து குரல் கொடுக்கலாம்.

 

 

Next Story

“ஒரு ஆண் என்னிடம் பேசினால் மற்ற ஆண்கள்...”- சர்ச்சையாகும் மீராமிதுனின் வீடியோ

Published on 15/10/2019 | Edited on 15/10/2019

பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்ட போட்டியாளர் மீராமிதுன். ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கியுள்ள நிலையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள வீடியோ புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  
 

meera mithun

 

 

அதில் , “ஏன் 'வீ ஆர் தி பாஸ்' என்ற நிகழ்ச்சியை பண்ணினார்கள் எனத் தெரியவில்லை. பிபி ஹவுஸில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவருமே இருந்தோம். ஆண்களை வைத்துத் தான் இந்த ஷோவே நடந்தது போல் காட்டியுள்ளார்கள். மும்பையில் ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதால், நான் அந்த நிகழ்ச்சியைப் பார்க்கவில்லை. ஆனால், ட்விட்டர் பக்கத்தில் அந்நிகழ்ச்சியில் என்னைக் கிண்டல் செய்ததாகக் என்னுடைய ரசிகர்களும், நண்பர்களும் கூறினார்கள்.

தமிழ்நாட்டில் சிலர் என்னை இழிவாகப் பேசித் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சிலர் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் இந்த 4 ஆண்களும் இணைந்திருப்பது எனக்குப் பெரிய விஷயமாகத் தெரியவில்லை. அந்த நால்வருமே என் பின்னால் தான் வீட்டிற்குள் சுத்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் யாருக்குமே தில் கிடையாது. வீட்டிற்குள்ளேயே என்னை அப்படிப் பார்ப்பார்கள். அவர்கள் கோழைகள். என்னிடம் பேசுவதற்குக் கூட மற்ற பெண்களுக்குத் தெரியாமல் பயந்து பயந்து பேசுவார்கள். என்னுடன் ஒரு நாள் பேசுவார்கள், அதற்குமேல் பேசினால் அவர்களுக்கு பெண்களின் ஓட்டு கிடைக்காது என்பதால் இப்படி செய்வார்கள். ஒரு ஆண் என்னிடம் பேசினால் மற்ற ஆண்களுக்கு பொறாமை வரும் அப்படி இருந்தார்கள். அந்த வீட்டிற்குள் நடைப்பதை நன்கு கவனித்தவர்களுக்கு நான் சொல்வது புரியும்.

உங்கள் யாருக்குமே என்னைப் பற்றிப் பேசவில்லை என்றால் புகழே கிடையாது. நான் தான் மிகவும் புகழ் வாய்ந்தவள். அந்த 4 ஆண்களுக்குமே எனது புகழைப் பற்றித் தெரியும். ஆகையால் தான் நால்வரும் எனக்காக அடித்துக் கொண்டார்கள். 

சமூக வலைதளத்தில் என்னை திருநங்கை என்று கிண்டல் செய்வது, பீர் அடிக்கிறேன்,என்னை கருப்பு என்று கேலி பேசுவது எல்லாம் எந்த கூட்டம் செய்கிறது என்பது எனக்கு தெரியும். நீங்கள் அதையே தொடர்ந்து செய்யுங்கள். தமிழ்நாட்டில் எனக்கு என்ன புகழ் இருக்கிறது என்பது எனக்கு தெரியும். இனி நான் தினசரி ஒரு வீடியோ போட்டு அடிச்சிட்டே இருப்பேன். எனக்கு என்ன புகழ் இருக்கிறது என்றா கேள்வி எழுப்புகிறீர்கள். தமிழ்நாட்டில் இருக்கின்ற ஹீரோ, ஹீரோயின்களைவிட எனக்கு நேஷனல் மற்றும் இண்டர்நேஷனல் லெவலுக்கு புகழ் இருக்கிறது. இதை நான் எங்குவேண்டுமானாலும் எழுதி தருகிறேன். அவங்களெல்லாம் தமிழ்நாடு தாண்டினா யாருக்குமே தெரியாது. அவங்க என்ன மிஞ்சிபோனா படம்தான நடிக்கிறாங்க, ஆனால் எனக்கு நேஷனல், இண்டர்நேஷனல் லெவல் புகழ் இருக்கிறது. என்னுடைய பெருமையை நானே பீற்றிக்கொள்ளக்கூடாது என இருந்தேன். இந்த ஆறு வருடம் நான் பாசிடிவ் பப்ளிசிட்டியில் இருந்தேன். அதை உடைக்க வேண்டும் என்றே சிலர் என்னுடைய பெயரை முழுதாக டேமேஜ் செய்திருக்கிறார்கள். எல்லாத்துக்கும் அடி கொடுத்துட்டே இருப்பேன்” என்று கூறியுள்ளார். 

 

 

Next Story

சாண்டியை தூக்கிவைத்து கொஞ்சிய சிம்பு... வைரலாகும் வீடியோ

Published on 08/10/2019 | Edited on 08/10/2019

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி நூறு நாட்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முடிவடைந்துவிட்டது. மலேசியாவை சேர்ந்த தமிழரான முகின் இந்த மூன்றாம் சீசனின் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்களிடம் பிரபலமடைந்த சாண்டி இரண்டாவது இடத்தை பிடித்தார்.
 

simbu


இந்த மூன்றாம் சீசன் பிக்பாஸ் போட்டி தொடங்கியதில் இருந்து மக்களிடம் பேராதர்வை பெற்று வந்தவர் டான்ஸ் மாஸ்டர் சாண்டி. அவரும் கவினும் சேர்ந்து பாடு பாடல்கள் எல்லாம் வெளியே செம வைரலானது. அவர் பிக்பாஸை குருநாதா என்று கூப்பிடுவது வைரலாகி, டீசர்ட்டாக சேல் ஆனது. சாண்டியின் புகழால் அவருடைய மகளுக்கு வெளியே லாலா ஆர்மி கூட உருவாக்கப்பட்டது. அந்தளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமானவர்.
 

ff


சாண்டி மாஸ்டர் சிம்புவின் நெருங்கிய நண்பர். சினிமாவில் டான்ஸ் மாஸ்டராக தனக்கு முதலில் வாய்ப்பு கொடுத்தவரும் சிம்புதான் என்று சிம்பு போலவே பேசி அசத்தினார். இந்நிலையில் சிம்புவை நேரில் சந்தித்துள்ளார் சாண்டி மாஸ்டார். அப்போது தன்னுடன் சக போட்டியாளராக பங்குபெற்ற தர்ஷனையும் உடன் அழைத்து சென்றிருந்தார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் தன்னை பார்க்க வந்த இருவருக்கும் ஒரு புத்தகத்தை பரிசாக கொடுத்துள்ளார்.
 

dfgzsgd


இதுவரை சிம்புவின் நெருங்கிய நண்பர்களான ஹரிஷ் கல்யாண், மகத் உள்ளிட்டவர்கள் கடந்த இரண்டு பிக்பாஸில் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.