Skip to main content

Exclusive: சி.எம். செக்யூரிட்டியின் மனைவி மிரட்டல் ஆடியோ! -எம்.ஆர்.பியில் தோண்ட தோண்ட மோசடி! கண்டுகொள்ளாத சுகாதாரத்துறை! 

Published on 05/11/2020 | Edited on 05/11/2020
dddd

                                                                    நன்றி தெரிவிக்கும் போஸ்டர் 

 

எம்.ஆர்.பி எனப்படும் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் லஞ்சம் கொடுத்தால் பணி நிரந்தரம், விரும்பிய இடங்களில் போஸ்டிங் - டிரான்ஸ்ஃபர் என நர்சிங் அசோசியேஷனே புரோக்கராக செயல்பட்டதை நக்கீரன் ஆடியோ-ஆவணங்கள் மூலம் அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து, எம்.ஆர்.பியிலுள்ள அதிகாரிகளும் சிக்க இருப்பதால் மருத்துவ வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சி.எம். செக்யூரிட்டியின் மனைவி மிரட்டும் ஆடியோக்களும் வெளியாகி எம்.ஆர்.பி.யில் நடக்கும் ஊழலை அம்பலப்படுத்தியுள்ளது. 

 

தன் புரோக்கரையே சிக்கவைத்த ஐஸ்வர்யா!

 

ஆண் நர்ஸுகளை பணி நிரந்தரம் செய்யப்போவதாகக்கூறி சி.எம் செக்யூரிட்டி ஆஃபிசர் செல்வத்தின் மனைவியும் யுனைட்டட் எம்.ஆர்.பி நர்சஸ் அசோசியேஷனின் செயலாளருமான ஐஸ்வர்யா மற்றும் ஒருங்கிணைப்பாளர் சசிக்குமார் தலா 4 லட்ச ரூபாய் என  8 கோடி ரூபாயை  வசூல் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை பணம் கொடுத்த ஆண் நர்ஸ் முத்துக்குமாரின் ஆடியோ வாக்குமூலம், பணம் வசூலித்த ஸ்டாம்ப் பேப்பர் ஆவணம், வாட்ஸ்-அப் குரூப்பில் வெளியிடப்பட்ட அறிவுப்புகள்-மெசேஜ்கள் உள்ளிட்ட பிரத்யேக ஆதாரங்களுடன் ‘ஆண் நர்ஸுகள் பணி நிரந்தரத்துக்கு 8 கோடி ரூபாய் லஞ்ச வேட்டை! ஆடியோ-ஆவணங்கள் அம்பலம்! அதிர்ச்சியில் அமைச்சர் அலுவலகம்!’ என்ற தலைப்பில் முதன் முதலில்  அம்பலப்படுத்தியது நக்கீரன் இணையதளம். 

 

இதனைத் தொடர்ந்து, விரும்பிய இடத்தில் நர்சிங் போஸ்டிங் வாங்கிக்கொடுப்பதாக  ஐஸ்வர்யாவே லஞ்ச பேரம் பேசும் ஆடியோ வாக்குமூலத்தை   “சி.எம்கிட்ட பேசிட்டார் அமைச்சர். போஸ்டிங் போட 2 லட்ச ரூபாய் லஞ்சம்” - சி.எம் செக்யூரிட்டி ஆஃபிஸர் மனைவியின் ஆடியோ அம்பலம்!’ என்ற தலைப்பில்  Exculusive –ஆக செய்தி வெளியிட்டோம்.  இந்நிலையில்தான், தனக்கு லஞ்சப்பணம் வசூலித்துக்கொடுக்கும்  புரோக்கராக செயல்பட்ட கார்த்திக் என்பவரை சிக்கவைத்துவிட்டு ஐஸ்வர்யா தப்பித்துக்கொள்ள முயற்சித்துவருகிறார் என்று ஆடியோ ஆதாரங்களுடன் தகவல்கள் வெளியாகி  சுகாதாரத்துறை வட்டாரத்தில் மேலும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. 

 

ஆடியோ வாக்குமூலம்- 1 

 

அரசு மருத்துவமனையில் பணிபுரியும்  தற்காலிக பெண் நர்ஸ் என்று கூறிக்கொள்கிறவர்: ஹலோ

புரோக்கர் கார்த்திக்: ஹலோ


 நர்ஸ்: கார்த்திக் சார்ங்களா சார்?


புரோக்கர் கார்த்திக்: ஆமா, சொல்லுங்க. 


 நர்ஸ்: எங்களுக்கு ஒரு ஃபார்வேர்டு மெசேஜ் வந்தது பார்த்தேன். டிரான்ஸ்ஃபருக்கு அரேஞ்ச் பண்ணி தர்றீங்க  ‘கோவிட்’க்குன்னு சொல்லிட்டு


புரோக்கர் கார்த்திக்: ஆமா சிஸ்டர்


 நர்ஸ்: அதுதான் சார். டீடெய்ல் கேட்கலாம்னு பண்ணினேன் சார். 


புரோக்கர் கார்த்திக்: எங்க சிஸ்டர் வேணும் உங்களுக்கு? 


 நர்ஸ்:  எனக்குங்களா சார்? சேலம் சார்


புரோக்கர் கார்த்திக்:  சேலம் மெடிக்கல் காலேஜுங்களா? 


 நர்ஸ்:  ஆமாங் சார்


புரோக்கர் கார்த்திக்:  எய்ட்டி தவுசண்ட் வரும் சிஸ்டர் ( 80,000 ரூபாய்) 


 நர்ஸ்:  எய்ட்டி தவுசண்ட்ங்களா? சரிங்க சார் ஓகே சார். எவ்ளோ நாளுக்குள்ள் வாங்கி தருவீங்க சார்? 


புரோக்கர் கார்த்திக்:  மண்டே ஸ்டார்ட் பண்றாங்க. மண்டே கொடுத்தாத்தான் வெட்னஸ்டே  கிடைச்சுடும்


நர்ஸ்:   வெட்னஸ்-டேக்குள்ள வாங்கிக்கலாமா சார்? 


புரோக்கர் கார்த்திக்:  ம்… 


 நர்ஸ்:  சரி சரி,  ஓகேங்க சார். அதுசான், டீடெய்ல் கேட்கலாம் என்ன ஏதுன்னு. வேற ஏதாவது டாக்குமெண்ட்ஸ் கொடுக்கணுமா சார்?


புரோக்கர் கார்த்திக்:  டாக்குமெண்ட் வந்து உங்க ஆர்டர் காப்பி வேணும். ஃபைவ் தவுசண்ட் அட்வான்ஸ் வேணும். பேலன்ஸ் அமவுண்ட் ஆர்டர் இஷ்யூ பண்ணினதுக்கப்புறம் பே  பண்ணினா (கொடுத்தால்)  போதும். 


நர்ஸ்:   அப்டீங்களா? ஓகே சார் ஓகே சார். அதான், நீங்க எங்க இருக்கீங்க சார்? ஒர்க் பண்றீங்களா? இல்ல வெளியிலதான்… 
 
புரோக்கர் கார்த்திக்:  நான், மேல் நர்ஸுதான் சிஸ்டர். 2016 பேட்ச். ரெகுலரு. கேளம்பாக்கம் இ.எஸ்.ஐ டிஸ்பெஞ்சரியில ஒர்க் பன்றேன். நம்ப வந்து,  தமிழ்நாடு யுனைட்டட் நர்சிங் அசோசியேஷன்னு ஒரு அசோசியேஷன் ரன் பண்ணிக்கிட்டிருக்கோம். அதுல, இந்தமாதிரி நிறைய பண்ணிக்கிட்டிருக்கோம். 


நர்ஸ்:   அப்டீங்களா? சரிங்க சார். ஓகேங்க சார். வெளியில நிறையபேரு சொல்றாங்க அதான் கேட்கிறேன். ஒர்க் பன்றவங்களா இருந்தா பிரச்சனை இல்லையேல்ல.


புரோக்கர் கார்த்திக்:  ம்… 


 நர்ஸ்:   ஓகே சார் தேங்க் யூ சார். 


புரோக்கர் கார்த்திக்:   நீங்க எங்க ஒர்க் பன்றீங்க?


நர்ஸ்:  நான்ங்களா சார். ஸ்டான்லி (அரசு ஸ்டான்லி மருத்துவமனை-சென்னை) சார். 


புரோக்கர் கார்த்திக்:   ஓகே ஓகே தேங்க் யூ


நர்ஸ்:   சாரி சார்.  தேங்க்யூ 


என்று உரையாடல் ஆடியோ  முடிகிறது.  


இந்நிலையில்தான், கார்த்திக்  மன்னிப்பு கேட்டு ஒரு  ஆடியோவை வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவை ஐஸ்வர்யாவும்  நமக்கு  அனுப்பினார்.  அந்த, ஆடியோ வாக்குமூலத்தில்…


கார்த்திக் ஆடியோ!  

 

ddd

 

எல்லாருக்கும் வணக்கம். மன்னிப்பு கேட்கிறதுக்காகத்தான் இந்த ஆடியோவை போடுறேன். இப்ப வெளிவந்த டிராஸ்ஃபர் ஆடியோவுல பேசியிருக்கிற மேல் வாய்ஸ் என்னோடதுதான். ஆனா, அதுல சொல்லியிருக்கிற எந்த விஷயமும் உண்மையில்ல. நான், அரசுத்துறையில வேலை பார்க்கல. அந்த, ஆடியோவுல என்கூட பேசியிருக்கிறவங்க லலிதா. கோவிட் சிக்ஸ் மந்த் நர்ஸு.  ஸ்டான்லி ஹாஸ்பிட்டலில் ஒர்க் பன்றாங்க சென்னையில. 

 

வளர்மதி அக்காதான்  அரசு நர்ஸுகள் சங்க நிர்வாகிகள் பதவிகாலம்  முடியுறதனால அடுத்த தேர்தலில் ஐஸ்வர்யா நிற்கிறதுக்கு  ஜெயிக்கிறதுக்கு வாய்ப்பிருக்கிறதனால,  அதை தடுக்கணும்ங்குறதுக்காக  இந்தமாதிரி  அவுங்களோட  சங்கத்தோட நேம்ல ஆடியோவை ரெடி பண்ணி வெளியிட சொன்னாங்க. அவுங்க,  வேண்டுகோளுக்காகதான் இந்தமாதிரி ஒரு தவறை செஞ்சுட்டேன். எனக்கும் சுகாதாரத்துறைக்கும் எந்த சம்பந்தமுமில்ல. நான், அரசுக்கு எதிரானவனும் இல்ல. 

 

dddd

 

வளர்மதி அக்கா கேட்டுக்கிட்டதாலதான் இதோட விவரம் புரியாம தெரியாம இந்தமாதிரி ஆடியோ போட்டுட்டேன். இதற்காக, மனசார எல்லார்க்கிட்டேயும் மன்னிப்பு கேட்டுக்கிறேன்.  இதோட விளைவு தெரியாம இந்தமாதிரி ஒரு தவறை செஞ்சுட்டேன். இனிமேல், இந்தமாதிரி ஒரு பெண்ணோட சங்கத்தை தவறா சித்தரிக்கிற எந்த செயலிலும் ஈடுபடமாட்டேன். தயவுசெய்து என்னை மன்னிச்சுடுங்க. இதோட, சீரியஸ்னெஸ் தெரியாம இந்தமாதிரி ஆடியோ ரெடிபண்ணி போட்டுட்டேன்.  அதனால, தயவு செஞ்சு என்னை மன்னிச்சுடுங்க. நான், யாருக்கும் எதிரானவன் கிடையாது. நன்றி!’ 

 

-இப்படியாக  முடிகிறது  புரோக்கர்  கார்த்திக்கின்  வாக்குமூல  ஆடியோ.   

 

இதுகுறித்து,  நாம் விசாரித்தபோது சி.எம் செக்யூரிட்டி ஆஃபிசர் செல்வத்தின் மனைவியும் யுனைட்டட் எம்.ஆர்.பி நர்சஸ்  அசோசியேஷனின் செயலாளருமான ஐஸ்வர்யாவிற்கு லஞ்சப்பணம் வசூலித்துக்கொடுக்கும் நபர்தான்  இந்த கார்த்திக்.  இவர்,  ஆடியோவில் குறிப்பிடுவதுபோல் ஆண் நர்ஸாக எங்கும் பணிபுரியவில்லை என்பது உண்மைதான்.  ஆனால், தமிழ்நாடு நர்சஸ் அசோசியேஷன் செயலாளர் வளர்மதிதான் இப்படியொரு ஆடியோவை வெளியிடச்சொன்னார் என்று யுனைட்டட் எம்.ஆர்.பி நர்சஸ் அசோசியேஷன் செயலாளர் ஐஸ்வர்யா,  மிரட்டியதால்தான்  கார்த்திக் இப்படியொரு ஆடியோவை வெளியிட்டார் என்று திடுக்கிடும் தகவலை கூறுகிறார்கள்.  என்று நாம் விசாரித்தபோது  அதற்கான ஆதாரப்பூர்வமான ஆதாரங்கள் கிடைத்தன.  

 

கார்த்திக்கை மிரட்டும் ஐஸ்வர்யா ஆடியோ ஆதாரம்! 

 

ஐஸ்வர்யா: என்னடா நினைச்சுக்கிட்டிருக்க உன் மனசுல?  பெரிய இவன்னு நினைப்பா உனக்கு? நான், கேட்குறேன். என்னைப்பார்த்தா கிறுக்குமாதிரி இருக்கா? கேண மாதிரி இருக்கா?  


கார்த்திக்: ஏன் இப்படி கத்துற? எனக்கு புரியல, ஏன் கத்துற?


ஐஸ்வர்யா: மூடு மொதல்ல வாய. எவ்வளவு ஒரு ஃப்ராடு தனம் உனக்கு?  


கார்த்திக்: என்ன ஃப்ராடுத்தனம் இதுல? இதே,  அசோசியேஷன் பேரை வெச்சுதானே ஜனவரியில டிரான்ஸ்ஃபர் போடச்சொல்லி  நீதானே ….

 

ஐஸ்வர்யா: காசுக்காக நாக்கை தொங்கப்போட்டுக்கிட்டு வருவ. இன்னைக்கு பிரச்சனைய பண்ணி விட்டுட்டு எனக்கென்னன்னு இருப்பியா? என் பேரை சொல்லி மட்டும் பேச தெரிஞ்சதா உனக்கு?


கார்த்திக்: எனக்கு நீ காசு எவ்ளோ கொடுத்த?  


ஐஸ்வர்யா:   எதுக்காக, அசோசியேஷன் பேரைச் சொன்ன? போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைண்ட் பண்ணி உன்ன ஒரு வழி பண்ணிட்டு விடுறவன் பார்த்துக்கோ. என்னை கேணன்னு நினைச்சுக்கிட்டிருக்கியா நீ? 


கார்த்திக்: காசுக்காக காசுக்கான்னு சொல்லாத. எனக்கு எவ்ளோ கொடுத்த டிரான்ஸ்ஃபருக்கு? 


ஐஸ்வர்யா: காசு காசுன்னு அலையுற. காசு மட்டும் தேவை. உங்களுக்கு பிரச்சனை மட்டும் வரக்கூடாது.  எவ்ளோ, தைரியம் உனக்கு? 


கார்த்திக்: காசுக்காக அலையுறது நான் இல்லம்மா. நீதாம்மா. ஏம்மா வெளியில சொல்ற? 


ஐஸ்வர்யா: இவ்ளோ,  ஆடியோ ரெக்கார்டு பண்ணி போட்டதே  வளர்மதிதான். அவுங்களுக்கு எதிர்த்து ஆடியோ போடமுடியாதாம். என்னடா நினைச்சுக்கிட்டிருக்க நீ?  உனக்கு அவ்வளவு தைரியமா? 


கார்த்திக்: ம்மா காசுக்காக வேலைபார்க்கிறது நான் இல்ல. நீதான்? 


ஐஸ்வர்யா: இங்கபாரு.  இன்னைக்கு நான் சொல்றேன் பார்த்துக்கோ. நான், யாருக்கும் இப்படி சொல்லவே மாட்டேன். நீ வாழ்க்கையில ரொம்ப டார்ச்சர் பண்ணிட்ட நீ. இது, உனக்கான கடைசி வார்னிங் நான் சொல்றேன். இவ, என்ன செய்யப்போறான்னு நினைச்சேன்னு வெச்சுக்கயேன் செஞ்சு காம்ச்சிபுடுவேன் பார்த்துக்க. என்னா, நினைச்சுக்கிட்டிருக்க உன் மனசுல? 


நான்னா, அவ்ளோ இளக்காரமா போய்ட்டாங்களோ? 


கார்த்திக்: நான் தாம்மா உனக்கு இளக்காரமா போய்ட்டேன்.


ஐஸ்வர்யா:  நான், தெளிவா சொல்லிடுறேன். இந்த, செண்டிமெண்ட் சொல்லி நடிச்சிருக்கிற கத. அந்தக்கத  இனிமே நடக்கவே நடக்காது. நான், தெளிவா நான் சொல்லிடுறேன். நீ மட்டும் செய்யலன்னு 


கார்த்திக்: நான், செஞ்சிக்கொடுத்த வேலை எல்லாமே 


ஐஸ்வர்யா: அப்புறம், ஏன் ஆடியோ போடமாட்டேங்குற நீ? 


கார்த்திக்: ஒரு நிமிஷம் இரு. பணத்துக்காக பணத்துக்காகன்னு சொல்றீயே என்ன நான் பணத்துக்காக 


ஐஸ்வர்யா: நீயெல்லாம் மனுஷன் தானே? 


கார்த்திக்: ஒன்னமாதிரியே நானும் பேசினா என்னம்மா ஆவுறது?


ஐஸ்வர்யா: நீ வாழ்க்கையில முன்னேறிடுவியா நீ?


கார்த்திக்: ஆங்


ஐஸ்வர்யா:  நீ பேசு. நீ பேசுன்னுதான் சொல்றேன். பேசிதான் பாரேன். 


கார்த்திக்: நீ என்னை பேசவே விடாம, பணத்துக்காக பணத்துக்காகன்ற. நீ என்னத்துக்காக இதையெல்லாம் பண்ணிக்கிட்டிருக்க?


ஐஸ்வர்யா: அப்போ, எதுக்காக பண்ணின நீ?


கார்த்திக்:  நீ என்னத்துக்காக பண்ணனும்னு நினைக்கிற?


ஐஸ்வர்யா: என்னது புரியல புரியல என்னது?


கார்த்திக்: இதையெல்லாம், நீ எதுக்கு பண்ணனும்னு நினைக்கிற?


ஐஸ்வர்யா: நான், எல்லாத்தையும் அசோசியேஷன் பேர்ல பன்றேன். 


கார்த்திக்: இதே அசோசியேஷன் நேம்லதானே, ஜனவரியில இதே நேமை சொல்லித்தானே டிரான்ஸ்ஃபர் போட்டோம். 


ஐஸ்வர்யா:  டேய்,  அதெல்லாம் இருக்கட்டும்டா. இப்போ, நீ என்ன சொல்ற? பண்ணமுடியாதுன்னுதானே சொல்ற? 


கார்த்திக்: ம்மா, இதுல பண்ணினா எனக்கு பிரச்சனைம்மா. இதுல,  பண்ணமுடியாதும்மா. 


ஐஸ்வர்யா: பண்ணலைன்னா, நான் பிரச்சனை பண்ணுவேன். இன்னைக்கு சொல்றேன் நான். எழுதி வெச்சுக்கோ. பிராமிஸ் பண்ணி நான் சொல்றேன் இன்னைக்கு. 


கார்த்திக்: ஆமாம்மா, உன் குணம் தெரிஞ்சி உன் கூட சேர்ந்து உதவி பண்ணினதுக்கு என்னை என்ன வேணாலும் பண்ணு. ஏத்துக்கிட்டுத்தான் ஆகணும்.


ஐஸ்வர்யா: நீ பண்ணினது உதவி, நாங்க பண்ணினது? வேற ஆளே கிடையாது. வேற வழியே இல்லியா?  


கார்த்திக்: இதுவரைக்கும் உன்கிட்ட எத்தனை பேப்பர் போட்டிருக்கேன்? எனக்கு என்ன பண்ணியிருக்க சொல்லு. நீ மனசாட்சியைத் தொட்டு சொல்லு.  


ஐஸ்வர்யா:  உனக்கு ஒண்ணுமே பண்ணினதில்ல?


கார்த்திக்: ஒரு பேப்பருக்கு எவ்ளோ புடிச்சுக்கொடுத்தேன். நீ உள்ள எவ்ளோ பே பண்ணின. எனக்கு எவ்ளோ கொடுத்த? எனக்கு எதுவும் தெரியாதுன்னு  நினைச்சுக்கிட்டிருக்கியா?  


ஐஸ்வர்யா: உனக்கு புடிக்கிற சான்ஸ் கொடுத்தவளே நான் தான். 


கார்த்திக்: அதாம்மா, அப்புறம் நீயே சொல்லிக்கிற. உனக்கு எல்லாமே பண்ணினேன்.  நீ எவ்ளோ  பேப்பருக்கு உள்ள கொடுத்த? 


ஐஸ்வர்யா:  நான் தானே சான்ஸ் கொடுத்தேன்? ஏண்டா, உன் இடத்துல இன்னொருத்தன வைக்க தெரியாதா எனக்கு? உனக்கு சான்ஸ் கொடுத்ததே நான் தான். 

 

கார்த்திக்: ஏம்மா, ரெண்டாயிரத்து ஐநூறு ரூபாயும் ஐய்யாயிரம் ரூபாயும்தான் எனக்கு கொடுத்திருக்க நீயி. 


ஐஸ்வர்யா: இங்கப்பாருடா, இன்னைக்கு நீ பேசுறல்ல. எழுதி வெச்சுக்க. இதுக்காக, நீ வாழ்க்கையில வருத்தப்படல. என் பேரே ஐஸ்வர்யா இல்ல. நான், மாற்றி வெச்சுக்கிறேன். 


கார்த்திக்:  ஆமாம்மா, நீ இவ்ளோ சீப்பா நடந்துக்குவன்னு உங்க அக்கா கல்யாணத்திலிருந்து குளோபல்ல வேலை பார்த்ததிலிருந்து…


ஐஸ்வர்யா:  அய்யய்யோ, உனக்கு எதுவுமே பண்ணல. எல்லாத்திலும் காசி வாங்கியிருக்கடா. என் அக்கா  கல்யாணத்துக்குக்கூட கிஃப்ட் கொடுக்கல. காசு வாங்கிட்டுத்தான் போயிருக்க. நான் சொல்லட்டுமா? நான் சொல்லட்டுமா? டிக்கெட் நான் புக் பண்ணியிருக்கேன். என்னா பேசுற நீ?


கார்த்திக்:  சரி, இரு. எவ்ளோ ஹெல்ப் பண்ணினேன். ஒரு டிக்கெட் புக் பண்ணினதை


ஐஸ்வர்யா:  உன்னால உண்மையா இருக்க முடியுதா உன்னால?


கார்த்திக்: வேற யார்க்கிட்டயாவது பேப்பர் போட்டிருந்தேன், இதையெல்லாம் பேசியிருக்கணும். உண்மையா இல்ல உண்மையா இல்லைன்னு.  எல்லமே  உனக்குதானே  செஞ்சிருக்கேன்?  உண்மையா இல்ல உண்மையா இல்லங்கிற? 


ஐஸ்வர்யா: நான் கேட்டதுக்கு பதில் சொல்லு. இப்போ, உன்னால ஆடியோ போடமுடியுமா? முடியாதா? 


கார்த்திக்: ம்மா, அதனால பிரச்சனை 


ஐஸ்வர்யா:  நான், கேட்குறதுக்கு பதில் சொல்லு. முடியுமா? முடியாதா?


கார்த்திக்: நீ ஏன் அதுலேயே நிற்குற?  ஆடியோ போடு ஆடியோ போடுன்னு. 


ஐஸ்வர்யா: எனக்கு அதுதான் வேணும்டா


கார்த்திக்: ஏற்கனவே, உன்னை தப்பானவன்னு சொல்லி ஆடியோ போடச் சொன்ன. அதையே, போடமுடியாதுன்னேன். நல்லா, ஞாபகம் இருக்கா உனக்கு?


ஐஸ்வர்யா: அதெல்லாம் இருக்கட்டும். இங்கபாரு, உன்னைய மாதிரி ஒரு பாய்சனை நான்,  கூட  வெச்சிருந்தது என்னோட தப்புதான்.  உன் வைஃபு எப்படி ரெகுலராகுறான்னு பாரு. 


கார்த்திக்: என்ன வேணாலும் சொல்லும்மா. ஒத்துக்கிறேம்மா, நான் அப்படித்தாம்மா. யானைக்கும் அடிச்சறுக்கும். உனக்கும் இப்படித்தானே, உன் ரெக்கார்டும் ரிலீஸ் ஆச்சி. 


ஐஸ்வர்யா: பரவாயில்ல, ஆயிட்டுப்போவுது. அதுக்காக, நான் கவலைப்படுற ஆள் கிடையாது. 


கார்த்திக்: உனக்கு ஆனமாதிரிதான் எனக்கும் ஆயிருக்கு


நீ ஒருவாட்டி உன் ரெக்கார்டு மாட்டிச்சு. என்னையும் அப்படி பண்ணிட்டானுங்க. அதை, சொல்றேன் நானு. 


ஐஸ்வர்யா: அதெல்லாம் இருக்கட்டும்டா.  யாருக்கு சருக்கிச்சுன்னாலாம் கேட்கல. உன்னால, இதை செய்யமுடியுமா? முடியாதா? ஓப்பன் சேலஞ்சா கேட்குறேன். முடியுமா?  முடியாதா? 


கார்த்திக்: ம்மா இந்தப்பிரச்சனையை இப்படியே விட்டீன்னா இப்படியே சரி  ஆகிடும். 


ஐஸ்வர்யா:  சரி, என்னவே பன்றேண்டா. எதையுமே விடமாட்டேண்டா.  போடமுடியுமா முடியாதாடா?


என்னோட கேள்வி அதுதான். நீ  போட முடியுமா? முடியாதா?


கார்த்திக்:  என்னைய போயி ஏம்மா இதைப் பண்ண சொல்ற? 


ஐஸ்வர்யா: இப்ப நீ இதைச் செய்யலைன்னு வெச்சுக்கோயன். நான், இன்னைக்கு ப்ராமிஸ் பன்றேன். உன் வைஃப் ரெகுலர் ஆகமாட்டா.  அவ, ஜாப்ல இருக்கமாட்டா. என்ன விரட்டு விரட்டுறேங்கிறதை உன்  கண்ணுமுன்னாடி பார்ப்ப. 


கார்த்திக்: உனக்கு ஏன் இவ்ளோ பயம்?    


ஐஸ்வர்யா: நீ, பண்ணின அத்தனை துரோகத்துக்கும் திருப்பி அடிப்பேண்டா. 


கார்த்திக்:  நான், உனக்கு துரோகம்  பண்ணலையே?


ஐஸ்வர்யா: ஏய், இப்போ நீ ஆடியோ போடமுடியாதில்ல. நீ போனை வெச்சுடு. இதுக்குமேல, உங்கிட்ட பேசுறதுக்கு எதுவுமே கிடையாது. 


உனக்கு,   எவ்வ்வ்வளவு ஒரு துரோகம்… ம்?  

கார்த்திக்: இங்கப்பாரு, இப்படியெல்லாம் பேசாத


ஐஸ்வர்யா: வாழ்க்கையில இவ்ளோ துரோகிய நான் பார்க்கல. இவ்ளோ பெரிய துரோகியா நீ?


கார்த்திக்: அப்படியே, இருந்துட்டுப்போறேன். யார்ட்ட போயி சொன்னாலும்  ஒன்னையதான் தப்பும்பாங்க. என்னை யாரும் துரோகின்னு சொல்லமாட்டாங்க. 


ஐஸ்வர்யா:  இங்கப்பாரு. நீ யார்ட்ட வேணாலும் போயி சொல்லு. என் மனசுக்கு தெரியும். நீ எவ்ளோ வாங்கி திண்ணுருக்கன்னு தெரியும். 


கார்த்திக்: வாங்கித் திண்ணேன், வாங்கித் திண்ணேனன். எவ்ளோமா…  வாங்கித்திண்ணேன் வாங்கித்திண்ணேங்குற?


ஐஸ்வர்யா:  நான், பேசுவேண்டா. இருபதாயிரம் கொடுக்கவேண்டிய காசு கொடுத்தியா நீ? என்னா பேசுற நீ? 


கார்த்திக்: ம்மா… நீ வந்து  ஒரு நிமிசம் கொடுத்தேன் வாங்கித்திண்ணேன், வாங்கித்திண்ணேங்குற. இதுவரைக்கும், உனக்கு எத்தனை பேப்பர் போட்டிருக்கேன். நீ எனக்கு எவ்ளோ கொடுத்திருக்க. நீ எவ்ளோ உள்ளக் கொடுத்த? 

 

ஐஸ்வர்யா: இங்கப்பாரு. நான், பேப்பர் போட்டிருக்கேன். நான், கொடுத்திருக்கேன். கொடுக்கல. என்னைவிட்டு தனியா பேப்பர் போட்றமுடியுமா தனியா? 


கார்த்திக்: எனக்கு அந்தளவுக்கு கெப்பாசிட்டி இருந்தா நான் ஏன் இவ்ளோ கஷ்டப்பட்டுக்கிட்டிருக்கேன்? உன்கிட்ட ஏன் இவ்ளோ அசிங்கப்பட்டிருக்கேன்?  


ஐஸ்வர்யா: எதுக்கு எங்கக்கிட்ட வந்து  நின்னீங்க?


கார்த்திக்: அதான், இவ்ளோ கெப்பாசிட்டி இருந்தா நான் ஏன் உங்கிட்ட அசிங்கப்பட்டிருக்கேன் சொல்லு? 


ஐஸ்வர்யா: எந்த கெப்பாசிட்டியும் இல்லைங்கிறதாலதானே சொல்றத கேட்டுக்கிட்டு செஞ்ச நீ. இல்லாட்டி செஞ்சிருக்கப்போறியா? இன்னைக்கு இவ்வளவு துரோகம் பன்ற நீ, ஒங்கிட்டையெல்லாம் கெப்பாசிட்டி இருந்தா இந்நேரம் என்ன பண்ணியிருப்ப? 

 

கார்த்திக்:  நான் பேசின ஆடியோவுல 1 நிமிஷம் 27 செகண்டுதான். பூரா நீ பேசினதுதான்


ஐஸ்வர்யா: இல்ல இல்ல அதுதான் சொல்றேண்டா. இப்போ, அதுல  நீ என்ன சொல்லவர்ற?  என் மேல தப்பாவே இருக்கட்டும். அதுவந்து, எனக்காக நீ செய்யணும்னா செய்யமாட்ட. அதுதானே, உன்னோட இது? 


கார்த்திக்: எனக்கு வந்து, இது வந்து என்ன சொல்றதுன்னே தெரியல. அவ்ளோ பயமா இருக்கு. இதனால, பெரிய பிரச்சனையாகும்னு


ஐஸ்வர்யா:  அதுதான் சொல்றேன், அப்போ வந்து உனக்கு நீ மட்டும்தான் முக்கியம். பயப்படுறியே அத நான் எப்படி எடுத்துக்குவேன்? எனக்கு எப்படி இருக்கும்?


நான், ஒருத்தனை உள்ள வெச்சு, ஈஸியா வளர்மதி அக்காதான் போட்டதுன்னு சொல்லி போய்க்கிட்டே இருப்பேன். நடுவுல, எவனோ ஒருத்தன் பேசினதாலதான, உனக்கு அந்த ஆடியோ பிராப்ளம் ஆச்சா? இந்த ஆடியோவுல அசோசியேஷன் பேரை வேற சொல்லி நீ, இவ்ளோ பண்ணிப்புட்டு ஆனா, எப்படியே போனாலும் … நீ உருப்பட்டுருவியா?  சத்தியமா நீ உருப்படமாட்ட. நான், இன்னைக்கு நான் சொல்றேன்.  நான், வயிறு எரிஞ்சு உனக்கு சொல்றேன்.  நீ உருப்படவே மாட்ட. நீ நாசமா போகல. நீ நாசமா போன அன்னைக்கு நான் ஃபோன் பண்ணி பேசுவேன் பாரு. 


இவ்வளவு பெரிய துரோகியா நீ?  பச்ச துரோகி, எவ்வளவு பேர விட்டுப்புட்டு நீ உனக்கு ஏதாவது கிடைச்சா பரவாயில்லன்னு நினைச்சு நான் உனக்கு பண்ணினதுக்கு


கார்த்திக்: இப்போ, அந்த டிராஸ்ஃபர் வந்திருந்துச்சுன்னா உங்கிட்டதான  கொண்டுவந்திருப்பேன்?


ஐஸ்வர்யா: நாயி நீ, உனக்கு இவ்வளவு அழுத்தம் இருந்தா எனக்கு எவ்வளவு இருக்கும்? ம்… அதுதாண்டா, செண்டிமெண்டலா  நீங்க ஏமாத்திக்கிட்டிருந்தீங்கள்ல. எல்லாமே சரி சரின்னு இருந்தேன் பார்த்தியா, அதனால நீ இப்படித்தான் பேசுவ. 


கார்த்திக்: நீ பேசுறது எல்லாமே எப்படி தெரியுமா இருக்கு? 


இந்த க்ரூப்புல மெசேஜ் போட்டது. இந்த பிரச்சனை வந்தது  எல்லாம் எதுக்காக? 


ஐஸ்வர்யா: எந்த தப்பு பண்ணாதவன்னா எனக்காக ஒரு ஹெல்ப் கேட்கிறேன். அத நீ செய்யமுடியலைன்னா நீ எதுக்கு?


கார்த்திக்: உனக்காக எவ்ளோ ஹெல்ப் பண்ணிட்டேன். இந்த ஹெல்ப் என்னால பண்ணமுடியாதும்மா அவ்ளோதான். 


ஐஸ்வர்யா: எது ஹெல்ப்பு? ஆதாயம் இல்லாம பண்ணுனியா?


கார்த்திக்: என்னம்மா ஆதாயம்?  ஆயிரம் ரூபாய், ரெண்டாயிரம் ரூபாய்  சரிம்மா, இதுவரைக்கு டிரான்ஸ்ஃபர்ல ஒரு நாற்பதாயிரம் அம்பதாயிரம் சம்பாதிருச்சிருப்பேம்மா அவ்ளோதானம்மா? 

பதினஞ்சு இருவது டிரான்ஸ்ஃபர்.


சரி, இன்னைக்குதானே அசோசியேஷன்ல பெரிய ஆளு. குளோபல்ல இருந்தபோது, உங்கக்கா கல்யாணத்தப்போல்லாம்  நீ பெரிய ஆளா? நான் பெரிய ஆளா? அன்னைக்கெல்லாம் எந்த மூஞ்ச வெச்சுக்கிட்டு இது பண்ணின?

ஐஸ்வர்யா: எதுவுமே செஞ்சதே இல்லையா?


கார்த்திக்:  பஸ்ஸுல டிக்கெட் போட்டு கொடுத்தீங்க


ஐஸ்வர்யா: ஏன், கையிலக்கூட காசு கொடுத்துதானே அனுப்பிச்சேன்?
எனக்கு ஞாபகம் இருக்கு. 


கார்த்திக்: ஞாபகம் இருந்தா ரைட்டு ஓகே. 


ஐஸ்வர்யா: அதுதான் சொல்றேன்.  நீ இல்லைன்னா இன்னொரு ஆளை வெச்சு பார்த்துக்கத்தான் போறேன்.


இங்கப்பாரு, நீ எவ்வளவு பச்ச துரோகிங்கிற நான் புரிஞ்சுக்கிட்டேன். 


கார்த்திக்: உன் வாழ்க்கை நல்லாயிருக்கணும், ஓன் வீட்டுக்காரர்க்கிட்ட பேசினதுக்கு என்னை செருப்பால அடிப்பேங்குற? 


ஐஸ்வர்யா:  சந்தேகப்பட்டுச்சுன்னு  போட்டுக்கொடுத்தியே அதுவா?


கார்த்திக்: என்னது சந்தேகப்பட்டுச்சுன்னு போட்டுக்கொடுத்தேனா நானு? அந்த பொண்ணு வாழ்க்கை போயிடும்னு பயப்படுதுங்கன்னுதான் வீட்டுக்காரர்க்கிட்ட பேசினேன். உங்க வீட்டுக்காரர் உங்கிட்ட டபுள் கேம் ஆடிட்டு, எங்கிட்ட இந்த பேச்சு பேசுற? 


 ஐஸ்வர்யா:  உன் வைஃபை மாற்றிவிடல என் பேரு ஐஸ்வர்யா கிடையாது.


கார்த்திக்: அப்படில்லாம் பண்ணக்கூடாதும்மா


ஐஸ்வர்யா:  உன் வைஃபை அங்கிருந்து தூக்கல. என் பேரு ஐஸ்வர்யா கிடையாது.


கார்த்திக்: அதான், ஐஷும்மா அதெல்லாம் பண்ணக்கூடாது. 


ஐஸ்வர்யா: எழுதி வெச்சுக்க நீ. உன்னைய ஒவ்வொரு நாளும் ஏண்டா அப்படி பண்ணினோம்னு நினைக்க வைக்கல.  என் பேரை நான் மாத்திக்கிறேன். நான், கோவத்துலல்லாம் பேசல.  நிஜமாலுமே நான் செஞ்சு காண்பிக்கிறேன் பாரு.  உனக்கு இவ்ளோ இருந்தா எனக்கு எவ்ளோ இருக்கும்?    


இனிமே  யாரையும் ஏமாத்தணும். பொய் சொல்லணும்ங்குற எண்ணமே உனக்கெல்லாம் வரக்கூடாது. 


கார்த்திக்:  நான் யாரை ஏமாத்தினேன்? யார்க்கிட்ட பொய் சொன்னேன் நானு?


ஐஸ்வர்யா: நீ உருப்படவே மாட்ட. வாழ்க்கையில உருப்படவே மாட்ட


கார்த்திக்:  அத, யாராவது நல்லவங்க சொன்னா நடக்கும். நீ சொன்னால்லாம் நடக்கவே நடக்காது


ஐஸ்வர்யா:  இன்னைக்கு நான்  உனக்கு சாபம் கொடுக்கிறேன். நான், உன்னை நினைச்சதுக்கு  நீ பண்ணிக்கிட்டிருக்கிற பச்ச துரோகத்துக்கு நான் உனக்கு இன்னைக்கு சாபம் கொடுக்கிறேன்.  அது, உண்மையா இருந்தா கண்டிப்பா பலிக்கும். நான், உன்னை விடமாட்டேண்டா. அவ்ளோ சீக்கிரத்துல உன்னை நான் விடமாட்டேன். 


கார்த்திக்: அந்தளவுக்கு பழிவாங்கணும்னு நினைக்கிற அளவுக்கு…. உனக்கு இருக்கிற பவருக்கு இதை நீ எப்படி வேணாலும் சமாளிக்கலாம். ஆனா, என்னைய 


ஐஸ்வர்யா:  அதெல்லாம் இருந்துட்டு போகட்டும்டா. ஒன்னால, ஒரு ஆடியோ போடமுடியாதா? இவ்ளோ நீ பேசுறீயே  உன்னால ஒரு ஆடியோ போடமுடியாதா?


பேசி சமாளிக்கலாம்னு நினைக்கிற.  ஆனா இதுக்கான,  பதிலை நீ அனுபவிக்க வைக்கல. என் பேரு ஐஸ்வர்யா கிடையாது. நான், சொல்லவைக்கிறேன் பாரு. உன் வைஃபை சுத்தி சுத்தி சுத்தி  நான் அடிக்கல. என் பேரு ஐஸ்வர்யா இல்ல. ரெகுலர் எப்படி ஆகுதுங்குறத நான் பார்க்கிறேன் என்னைய மீறி. 


நான், சஸ்பென்சன் கொடுக்கவைக்கல. இன்னைக்கு எழுதி வெச்சுக்கோ. அதே, ஸ்டேஷன்லிருந்து தூக்கி  வேற ஸ்டேஷன்ல போட்டு சஸ்பென்ஷன் கொடுக்க வெச்சு,  ரெகுலர் ஆகவிடாம பண்ணல. என் பேரு ஐஸ்வர்யா இல்ல. என் மேல நீ எங்க வேணாலும் போடா. எங்க வேணாலும் போ. உனக்கு இந்த ஏ.டி.எம்.கே பீரியட் முடிக்கிறதுக்குள்ள  அத செஞ்சு, ரெக்கார்டு பண்ணி உள்ள வரமுடியாத அளவுக்கு பண்ணல.


கார்த்திக்: ஏம்மா, என்னைய பழிவாங்கும்மா,  சம்பந்தமே இல்லாம ஏம்மா அவளை பழிவாங்குவேங்குற?


ஐஸ்வர்யா: நீ துரோகம் பண்ணும்போது,  நீ எங்க அடிச்சா உனக்கு வலிக்குமோ அங்கதானே நான் அடிக்கணும். 


கார்த்திக்: சரி, ஐஷு நீயே இவ்ளோ இதா பேசும்போது நான் எதுவுமே பண்ணாம இருக்கணும்னு அவசியமில்ல.   உன்கிட்ட இப்போ சொல்றேன் கேளு.  ஜனவரியிலிருந்து இல்ல பிப்ரவரி மார்ச்சிலிருந்து இதுநாள் வரைக்கும் மேல் நர்ஸ் மேட்டர் எல்லா மேட்டரும்  ரெக்கார்டு பண்ணித்தான் வெச்சிருக்கேன். நான், அதை எங்க எடுத்துட்டுப்போகணுமோ போறேன். 

 

ஐஸ்வர்யா: இங்கப்பாரு, நீ மட்டுமில்ல. சுபின்லேர்ந்து என்னப்பண்ணனுமோ ரெக்கார்டு பண்ணிமுடிச்சிருக்காங்க. பண்ணிட்டு ஒண்ணும் பண்ண முடியாதுன்னுதான் நொட்டிக்கிட்டிருக்காங்க. 


 நீ என்ன வேணாலும் பண்ணு.  நூறு கம்ப்ளைண்டு கொடு. ஆயிரம் போயி சி.பி.ஐக்கோ எங்க வேணாலும் கப்ளைண்டு பண்ணிக்கோ என்ன? நான், இன்னைக்கு சவால் போடுறேன். ஏன், மலர்விழி ரெக்கார்டு இருக்கு பண்ணமுடியாமலா இருக்கு. டேய், நான்லாம் இதைவிட எவ்வளவோ பார்த்துட்டேன்


கார்த்திக்: ஏம்மா இவ்வளவு சைக்யாட்ரி மாதிரி பேசுற?


ஐஸ்வர்யா:  ஆமாடா, நான் சைக்யாட்ரிக் தான். நான், சைக்யாட்ரிக்தான் 


கார்த்திக்: நீ எவ்வளவு ஒரு நல்லப்பொண்ணா  படிக்கும்போது இருந்த, வேலை பார்க்கும்போது இருந்த 


ஐஸ்வர்யா: நீ மட்டும் ரிலீஸ் பண்ணு ராஜா, ரிலீஸ் பண்ணுங்க என்ன பண்ணணும்னு எனக்கு தெரியும் ராஜா. நான், என்னன்னு காண்பிக்கிறேன்.  


கார்த்திக்: படிக்கும்போது எப்படியிருந்த? வேலை பார்க்கும்போது எப்படியிருந்த? ரெகுலர் ஆனதுக்கப்புறம் ஏன் இப்படியொரு வெறி? எங்கிருந்து வந்துச்சு?


ஐஸ்வர்யா: நீ ஆரம்பத்துலயிருந்து ஃப்ராடாதான் இருக்க. ஆனா,  நீ திருந்தியிருப்பன்னு நினைச்சேன். நீ திருந்தவே இல்ல. இன்னமும் அதே ஃப்ராடாதான் இருப்பன்னு நிரூபிச்சிருக்க. அதுக்காக நான் பதிலடி கொடுத்தே ஆகணும். 


சைக்யாட்ரின்னு வை பைத்தியம்னு வை என்னவேணாலும் வை. 

 

கார்த்திக்: ம்மா,  இப்படில்லாம் இருக்கக்கூடாதும்மா. இது, நல்லதுல்ல. 


ஐஸ்வர்யா: இருந்துட்டுப்போறேன். அதனால, என்ன ஆனாலும் பரவாயில்லண்ணா. உன்னோட அட்வைஸுக்கு ரொம்ப ரொம்ப நன்றியண்ணா. அதுக்காக, நான் ரொம்ப தேங்ஸ் சொல்லிக்கிறேன் உங்க அட்வைஸுக்கு.  ரொம்ப தேங்க்ஸு. நான், அப்படி இருக்கக்கூடாதுன்னு நீ நினைக்கிற. நான், நல்லா இருக்கணும்னு நினைக்கிற. உன்னோட அக்கறைக்கு ரொம்ப ரொம்ப நன்றி. ஆனா, என்னோட அக்கறைய  காண்பிக்கணும்.  


நீ எங்கப்போற? நீ என்ன பன்றங்கிறதை என் கண்ணு முன்னாடி பார்ப்ப. உனக்கு இவ்ளோ இருந்தா, பத்துநாள் போகட்டும்  இந்த கோவம் போய்ரும். நாம, அதுக்கப்புறம், எப்படியாவது சமாளிக்கலாம்னு நீ உன் மனசுல திட்டம் போட்டு வெச்சிருக்க பார்த்தியா? மூணே நாள்ல பாரு. உன் வைஃபை என்ன பன்றேன் பாரு. அவ்வளவு இனாவா போயிட்டோமா நாங்க. 


ரெக்கார்டு பண்ணி வெளிய விடுவேங்குற. விட்டுத்தான் பாரேன். ஒலகம் ஃபுல்லா டிரான்ஸ்ஃபருக்கு ரெக்கார்டு போட்டதே ஒண்ணும் நடக்கல.  நீ பெரிய தெளிவுன்னு நினைச்சுக்கிட்டிருக்கியா?


கார்த்திக்: சரிம்மா நீ ரொம்ப தெளிவு.  நீதான் ரொம்ப பெரிய ஆளு. உன்னால என்ன பண்ணமுடியுமோ பண்ணு. 


ஐஸ்வர்யா:  ஏய்… அதுதாங்குறேன். பண்ணி காண்பிக்கிறேன் பாரு. நான், பண்ணி காண்பிப்பேண்டா. பண்ணி காண்பிக்கிறேன் நான். எங்க நீ காசு கொடுத்து எப்படி  நீ டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டு வர்றன்னு நான் பார்க்கிறேன். 


நான், பண்ணி காண்பிக்கிறேன் பாரு. 


கார்த்திக்: என்னை மன்னிச்சு விடணும்னு உனக்கு தோணவே இல்லல்ல? 


ஐஸ்வர்யா: தோணவே தோணாதுண்ணா. உன்னைய மன்னிக்க எனக்கு தோணவே தோணாது. ஏன், உனக்கு செய்யணும்னு தோணுதா? தோணலைல்ல? இவ்ளோ தூரம் இது கத்துதே. இதுக்காக, செஞ்சு விட்டுருவோம்னு உனக்கு தோணுச்சா?  தோணைலைல்ல? அப்போ, எனக்கு மட்டும்  ஏன் தோணணும்? பேசி பேசி  கெஞ்சி எத்தனை நாளைக்கு ஏமாத்துவ? 


அதெல்லாம், நிறைய ஹஸ்பண்டு ஏமாத்திட்டான். அதனால, நிறைய தெளிவா இருக்கேன் இப்போ. என்ன? ரெக்கார்டு பண்ணி வெச்சிருக்கல்ல. அதையெல்லாம் வெளியில விடு போ. இல்லைன்னா இத கூட ரெக்கார்டு பண்ணி வெளியில விடு போ. 


கார்த்திக்: ஒன்னமாதிரியே நானும் நடந்துக்கிட்டா உனக்கும் எனக்கும் வித்தியாசமே கிடையாது. 
ஐஸ்வர்யா:  ஆமாமாம்… நான் வந்து ரொம்ப ஒர்ஸ்ட்டு. நீ ரொம்ப பெஸ்ட்டு. இருந்துட்டுப்போறேன். 


கார்த்திக்: ஒரு சாதாரண அசோசியேஷன் பேரை சொல்லிட்டேன். இதைவிட, பெரிய இதுவா வந்து, எல்லாருக்குமே டப்புனு ஒரு அடி விழத்தான் செய்யும்.  அந்த அடியிலிருந்து வெளியில வந்துட்டு
ஐஸ்வர்யா: இங்கப்பாரு, அடி விழுந்தது நீ பேரைச் சொன்னங்குறது கொஸ்டீன் இல்ல. இன்னைக்கு நான் ஒண்ணு செய்யச் சொன்னதை நீ செய்யமுடியாதுன்னு சொல்றல்ல. 


கார்த்திக்: உன்னை பத்தி தப்பா பேச சொன்ன. அதையும்தானே, செய்யமுடியாதுன்னு சொன்னேன். 


ஐஸ்வர்யா: வளர்மதிதானே?  வளர்மதிதான் ஸ்டான்லியில சொல்லி காளியம்மாக்கிட்ட சொல்லி  சிக்ஸ்மந்த் கோவிட் நர்ஸை வெச்சு ரெக்கார்டு பண்ணியிருக்கு. அது, ஆதாரப்பூர்வமா  தெரிஞ்சிடுச்சு. அப்போ, அதே வளர்மதிக்கு செஞ்ச விஷயத்தை  ஆடியோ போடமுடியாதுன்னா என்னது இது? நான், கேட்கிறேன். 


வேற யாராவது பண்ணியிருந்து,  இல்ல தற்செயலா நடந்திருந்தா பரவாயில்ல. இதே வளர்மதி சொல்லித்தான் வேணும்னே செந்தில்நாதன் செஞ்சான். ஆமா, இதேமாதிரி வளர்மதி சொல்லித்தான் செஞ்சேன்னு சொல்லிட்டா. சரியா?   

 

கார்த்திக்: செந்தில்நாதன் மாதிரியே அந்தம்மா சொல்லி செஞ்சிருந்தா அடுத்த நிமிஷமே ஆடியோ போட்டிருப்பேன். இவுங்க சொல்லித்தான் செஞ்சேன்னு. இது, நானால்ல, அவசரப்பட்டு முந்திரிக்கொட்டமாதிரி செஞ்சுட்டேன். 


ஐஸ்வர்யா: அண்ணே, நான் சொல்றேன். ஏற்கனவே, இருக்கிற காசு போக நீ  எனக்கு கொடுக்கவேண்டிய இருபதாயிரம் சேர்த்து எனக்கு காசு வந்துடணும். எப்போ, நீ கொடுக்கிறேங்கிறதை இப்பவே சொல்லிட்டு வெச்சுடு நீ.


கார்த்திக்: எனக்கு ஏதாவது அக்கவுண்ட் நம்பர் இருந்தா அனுப்பிடும்மா. நாளைக்கே போட்டுவிடுறேன் எல்லாத்தையும். 


ஐஸ்வர்யா: இருபதாயிரத்தைச் சேர்த்து  எல்லா காசையும் போட்டு விட்டுடு. நான், உன் வைஃபை மாற்றத்தான் செய்வேன். நான், இன்னைக்கு சொல்றேன். நான், மாற்றித்தான் விடுவேன். 


கார்த்திக்: ம்மா, இதை இப்படியே விட்டுடு. தயவு செஞ்சு மன்னிச்சு விட்டுடு. 


ஐஸ்வர்யா: நான் விடமுடியாதுண்ணா நான் விடமுடியாது. நான், விடமாட்டேண்ணா. நான், ஒருவாரத்துல செல்ஃப் சேஷன் மாற்றிடுவேன்.    


கார்த்திக்: ஏம்மா இப்படி ப்ளாக் மெயில் பன்ற? என்னம்மா பண்ணினேன்? 


ஐஸ்வர்யா: நான்,  ஒண்ணும் ப்ளாக்மெயில் பண்ணலைண்ணா ப்ளாக்மெயில்னு நினைச்சின்னா அது உன்னோட அறியாமையாதான் இருக்கும். 


கார்த்திக்: இவ்ளோ நாளு உனக்காக பண்ணினதுக்காகவது ஒருவாட்டி மன்னிச்சு விடேன். 


ஐஸ்வர்யா: மன்னிச்சுல்லாம் விடுறதில்ல. மன்னிச்சு விடுற நிலைமையில நான் இல்ல.


கார்த்திக்: அந்த ஆடியோதான் போட்டாதான் விடுவியா?


ஐஸ்வர்யா: உன்னால ஆடியோ போடமுடியாதுன்னா நான் எதுக்கு  மன்னிச்சு விடணும்? நான், கேட்குறேன். உன்னால, ஆடியோ போடமுடியாதுங்குறல்ல நான்  எதுக்கு மன்னிச்சு விடணும்? நான், கேட்குறேன். இவர்னால, ஆடியோ போடமுடியாதாம். ஆனா, நாங்க மன்னிச்சு விட்டுடணுமாம். 


டேய், நல்லாயிருக்குடா உன்னோட நாடகம்…ம்.  


அதுதான், சொல்றேன். செண்டிமெண்டலா பேசி  இத்தனை நாளும் ஏமாத்திக்கிட்டிருந்துருக்கல்ல. இனிமே, அது நடக்காது. நான், சொல்றேன்.


எதிரியைக்கூட மன்னிக்கலாம். ஆனா, துரோகியை மன்னிக்கக்கூடாது.  நீ அந்த கேட்டகிரி. உன்னை நான் முடிவே பண்ணிட்டேன். 


நான் தெளிவா சொல்றேன்.  நான், தெளிவாதான் பேசுறேன். நீ என்ன வேணாலும் பேரு வெச்சுக்கோ. 


நீ செஞ்சாலும் சமாளிக்கிற அளவுக்கு என்னால முடியும். எனக்கு கட்ஸு இருக்குடா. 


கார்த்திக்: அந்தமாதிரி பண்ணி ஏதாவது சமாளிக்கலாமில்லம்மா, ஏம்மா…


ஐஸ்வர்யா: முடியாதுண்ணே. நீ போடலைன்னா நான் செய்வேன். ப்ளாக்மெயில்லாம் பண்ணல. ஒரு தடவையாவது அனுபவிங்க. ஒருத்தவங்க நாம நல்லதுன்னு நினைச்சி ஒருத்தங்க  திருப்பி ரிப்பீட் அடிச்சா அதோட வலி எப்படியிருக்கும்ங்குறதை நீங்களும் அனுபவிக்கணும்னுமில்ல. 


கார்த்திக்: அந்தளவுக்கு நான் என்ன பண்ணிட்டேன்? ஒரு டிரான்ஸ்ஃபர் வந்தா அதையும் உங்கிட்டதான கொடுக்கப்போறேன். 


ஐஸ்வர்யா: பரவாயில்லண்ணா நான் போயிட்டு போறேன். நீ எங்கிட்ட கொடுக்கவேணாம். உங்கிட்ட வந்துச்சுன்னா  ரவிசீதாராமன்கிட்ட கொடு அவன் செஞ்சு கொடுப்பான். அதப்பற்றி ஒண்ணும் கிடையாது. எவ்ளோ வேணாலும் நீ வெச்சுக்கோ.  எனக்கு அதைப்பற்றியெல்லாம் ஒண்ணும் கிடையாது. 


கார்த்திக்: ம்மா, அந்த க்ரூப்பை ஸ்டார்ட் பண்ணினதிலிருந்து உங்கிட்டதாம்மா


ஐஸ்வர்யா: நீ என்ன வேணாலும் செஞ்சிரு. பேசினதெல்லாம் நன்றி. உனக்கு சொல்றது அவ்ளோதான். நான், மன்னிச்சு விடுவேன்னு நினைச்சன்னு வெச்சுக்கோயன். அது, உன்னோட முட்டாள்தனம். நான், ப்ளாக்மெயில் பன்றேன்னு நினைச்சீன்னா அது உன்னோட அறியாமை. என் ஹஸ்பண்ட் மூலமா ஏதாவது பண்ணணும்னு நினைச்சீன்னா  கண்டிப்பா நீ தோத்து போயிடுவ. இப்போ, என் ஹஸ்பண்டே ஒண்ணும் பண்ணமுடியாமதான்  வெளிய நிற்குறாரு.  வீட்டுக்கு வந்தே ரெண்டு மாசம் ஆச்சு. 


கார்த்திக்:  எம்மா அந்தளவுக்கெல்லாம் நான் போகலம்மா


ஏம்மா நீ? 


ஐஸ்வர்யா:  அதெல்லாம், ரெக்கார்டு பண்ணி வெச்சிருக்கிறதையெல்லாம் வெளிய விட்டு  ரிவேஞ்சுக்கு ஏதாவது செய்ய முடிஞ்சா செஞ்சுக்கோங்க. அதை பற்றி ஒண்ணுமே சொல்லல. தாராளமா செஞ்சுக்க.

 

கார்த்திக்:  நான், ரெக்கார்டு பண்ணி வெச்சிருக்கேங்கிறதை நம்புற. என்னை நீ பயமுறுத்துறமாதிரி உன்னை நான் பயமுறுத்தலாம்னு நினைச்சேன். 


ஐஸ்வர்யா: நீ ரெக்கார்டு பண்ணி என்ன வேணாலும் பயமுறுத்து


கார்த்திக்: ரெக்கார்டு பண்ணி வெச்சிருந்தா இந்த நியூஸு இந்நேரம் உன் காதுக்கு வராமலா போயிருக்கும் ரெக்கார்டு பண்ணியிருந்தன்னா?


ஐஸ்வர்யா: அது, என்ன வேணாலும் இருந்துட்டு போகுதுடா.  எனக்கு அதப்பற்றி கவலை கிடையாது. 


கார்த்திக்: அந்தளவுக்கு மூளை இருந்தா நான் ஏம்மா இந்தளவுக்கு 


ஐஸ்வர்யா: என்னோட ரிக்வெஸ்ட்டெல்லாம் சொல்லல. என்னோட ஆர்டராவே சொல்றேன்.  நீ அதை பண்ணணும்ங்கிறதை.  நீ அதை பண்ண முடியலைன்னா  திருப்பி நான் மன்னிப்பேன்னு எதிர்பார்க்கமுடியாது.  நீ செய்யலைன்னா நானும் செய்யமாட்டேன்.  நான், ப்ளாக்மெயில் பன்றேன்னு நீ நினைச்சேன்னா  திரும்ப திரும்ப சொல்றேன். அது, உன்னோட முட்டாள்தனம்.  அதனால, ரொம்ப அனுபவிப்ப. ஏண்டா பண்ணினோம்ங்குற அளவுக்கு அனுபவிக்க வைப்பேன்.  சரிம்மா, ஒரு விஷயத்தை நல்லாவே தெரிஞ்சுக்கிறேன். இனிமே ஃபோன்லாம் பண்ணமாட்டேன். ஆனா, கண்டிப்பா நான் செய்வேண்ணே.  இதை, நான் ரொம்ப தெளிவா சொல்றேன். 


கார்த்திக்: நீ எதுவுமே செய்யவேணாம். ரெண்டு நிமிஷத்துல உனக்கு அந்த ரெக்கார்டு வரும். 


ஐஸ்வர்யா: நான்தான்,  தெளிவா சொல்றேனேன். ரெக்கார்டு இல்லைன்னா தூக்குவேண்டா உன் வைஃபை. கண்டிப்பா தூக்குவேன். 


உடனே, ரிலிவிங் ஆர்டர் கொடுக்கவைப்பேன்.  ரிலீவும் ஆக சொல்லுவேன். 


பார்த்துக்கிட்டே இரு. 


ஒனக்கு இவ்ளோ இருந்துச்சுன்னா எனக்கு எவ்ளோ இருக்கும்? ம்…


என்னைய பார்த்தா உனக்கு கிறுக்கா தெரியுது ம்? 


கார்த்திக்: என்னையைப் பார்த்தாதாம்மா உனக்கு அப்படி தெரியுது.


ஐஸ்வர்யா: சேர்ரி சேர்ரி சேர்ரி  ஆமாம்


கார்த்திக்: இவ்ளோ பேச்சு பேசுற. இவ்ளோ பன்ற. ஆனா, நான் என்னா நிலைமையில இருக்கேன். ஏன், இப்படில்லாம் பண்ணினன்னு ஒரு நிமிஷம்கூட யோசிச்சுப்பார்க்கமாட்டேங்குற. 


ஐஸ்வர்யா: போதுண்ணே. இதுவரைக்கும் நீ பேசி நான் கன்வின்ஸ் ஆகி அட்வைஸ் பண்ணினதும் போதும். நீ எனக்கு அட்வைஸ் பண்ணினதும் போதும். நான். நல்லாயிருக்கணும்னு அட்வைஸ் பன்ற பார்த்தியா அதுவும் போதும். நான், நிறைய கேட்டாச்சு  நிறைய பார்த்தாச்சு. 


கார்த்திக்: அந்தமாதிரி ட்ரை பண்ணலாமில்லையாம்மா? 


ஐஸ்வர்யா: ரொம்ப நன்றி அண்ணா. நான் தான், அட்வைஸுக்கு தேங்க்ஸுன்னு சொல்லிட்டேன். உன்னோட, அட்வைஸுக்கு ரொம்ப நன்றி.  நீ ஆடியோ எதுவும் பண்ணலைன்னா நானும்  பண்ணமாட்டேன். நீ பண்ணமாட்ட, ஆனா நான் உன்னை மன்னிச்சு விட்டுடணும். 


டேய் போடா. நான்லாம், நிறைய பார்த்து பார்த்து எனக்குல்லாம் புளிச்சுப்போச்சு. என்ன… டயலாக்லாம் நிறைய கேட்டுட்டேன்.  நிறைய பார்த்துட்டேன். போதும், இந்த செண்டிமெண்டல்ல லாக் ஆகுற சிஸ்டமே எங்கிட்ட இப்போ கிடையாது.  அப்படியும் பழக்கத்துக்காக 


கார்த்திக்:  அதாம்மா சொல்றேன். அந்த பழக்கத்துக்காக


ஐஸ்வர்யா: நான், என் மனசுல ஒரு துளிகூட கிடையாது. அதை, என்கிட்ட எக்ஸ்பெட் பண்ணாத. பழக்கத்துக்காக விடுவேன்னு நினைச்சேன்னா , எக்ஸ்பெட் பண்ணாத. நான் பேசும்போதே தெரிஞ்சுருக்கும். என்னடா … உன்னை தொடர்ந்து இதைத்தான் சொல்லிக்கிட்டிருக்கேன். 


அது, உனக்கு புரியல. நான், ஒண்ணு பண்ணச்சொல்றேன். பண்ணமுடியாதுங்குற.  நீ என்னைய மன்னிக்கச்சொல்ற. நானும் ஒண்ணும் பண்ணமுடியாதுன்னு சொல்றேன். நீயும் பண்ணல. அதனால, நானும் பண்ணல. அவ்ளோதான் முடிச்சிட்டேன். 


அதுக்குமேல உன்…. பிரியம்.  நீ பண்ணிக்க. நான், நிஜம்மா சொல்றேன்.  நான் விடமாட்டேண்ண. 
நான் விடவேமாட்டேன். 


பார்க்கலாம். நான் என்ன பன்றேங்குறதை நீ பார்ப்ப.


கார்த்திக்: ஏம்மா இது, ஒரு சின்ன விஷயம் இத உன்னால சமாளிக்கமுடியாதா? 


ஐஸ்வர்யா: பரவால்லண்ணா, போய்ட்டுப் போகுதுண்ணா. நான் அதான் சொல்றேன்ல. இருந்துட்டு போகுது. நான், உங்கிட்ட ஒரு விஷயத்தை சொல்றேன். அப்போ, நீ பன்றியா பண்ணலையாங்கிறதுதான் விஷயமே.  நீ எவ்ளோதூரம் காலை வார்ற. என்னெல்லாம் பன்றங்கிற  எல்லா….. பார்க்குறேன். பார்க்கத்தானே போறேன்?  நீ வையி போனை.  வெச்சுட்டு நீ பார்ப்ப. ஐஸ்வர்யா ரொம்ப விக்ரெஸா ரிவேஞ்ச் எடுத்தத பார்த்ததில்லைல்ல? பாரு இந்த தடவை


கார்த்திக்: அதான், இந்தளவுக்கு என் மேல விக்ரெஸா  ரிவேஞ்ச் எடுக்கணுமாம்மா நீ? 


ஐஸ்வர்யா: ரொம்ப நன்றி அண்ணா. உன்மேலதான் ரிவேஞ்ச் எடுப்பேன் நான். ஏன்னா, அந்தளவுக்கு கடுப்புல இருக்கேன் நான். சும்மா, அசோசியேஷன்ல சும்மா வந்துட்டுப்போறவங்களுக்கூட கோபம் வராது. செண்டிமெண்டலா பேசி கவுக்கணும்னு நினைக்கிறவங்க மேல இருக்கிற ஆத்திரம் 


கார்த்திக்: நான் என்னம்மா செஞ்சு கவுத்தேன்? அதையே ஏம்மா சொல்லிக்கிட்டிருக்க? 


ஐஸ்வர்யா: ஏகப்பட்ட ஆத்திரத்துல இருக்கேன்.  மேற்கொண்டு நீ கிளப்பி விட்டன்ன்னு வெச்சிக்கோ பார்ப்போம் தீர்ப்போம்னு பேச ஆரம்பிச்சேன். இன்னும் ரொம்ப விக்ரெஸ்ஸா ஆகிடுவேன் நானு.  வெச்சிடு ஃபோனை நீ. 


நீ ஆடியோ     செண்ட் பண்ணலைன்னா நீ செத்த.  அவ்ளோதான் நான் சொல்லுவேன். 


என்று கார்த்திக்கை ஐஸ்வர்யா மிரட்டுவதோடு ஒரு உரையாடல் ஆடியோ முடிகிறது. பிறகு,  மீண்டும் இன்னொரு உரையாடலில், 

 

கார்த்திக்: எனக்கு ஒரேயொரு விஷயம் புரியல 


ஐஸ்வர்யா: இப்போ, என்ன ஆடியோ ரெடி பண்ணமாட்ட. அப்படியா? 


கார்த்திக்: ரொம்ப பயமா இருக்குமா


ஐஸ்வர்யா:  இல்ல… என்னை இப்போ என்ன பண்ண சொல்ற? இது, இப்படியே போச்சின்னு வை,   உன் வைஃபுக்கு வேலைக்கு ரொம்ப ரொம்ப பிராப்ளம்.  திரும்ப திரும்ப நான் சொல்லிட்டேன். புரிஞ்சுக்கோங்க.


என்னோட ஆடியோ நூறு வந்தாலும் சமாளிக்க என்னால முடியும்.  ஆனா, உன்னோடது வந்துச்சுன்னா பிரச்சனை வேற மாதிரி போகுது. 


கார்த்திக்: இதுல வந்து நான் தானேமே பேசியிருக்கேன் இதுல… 


ஐஸ்வர்யா:  நீ சொல்றதை சொல்லு.  இப்போ, என்ன சொல்ல வர்ற நீ? ஆடியோ போடமாட்ட அப்படிதானே? குடைச்சல் கொடுத்தேன்னா இந்தமாதிரி  ஓடிப்போவ. அதானே, சொல்லவர்ற? என்ன நினைச்சுக்கிட்டிருக்கிற உன் மனசுல?


இன்னைக்கு நீ இத பண்ணிட்டு நீ பாட்டுக்கு போயிடுவ. உன் வைஃப் ரெகுலர் ஆகிடுமா? நான், பண்ண விட்டுடுவேன்னு நினைக்கிறியா நீ? 


கார்த்திக்: ஏன், இப்படில்லாம் பழிவாங்கணும்னு நினைக்கிற?


ஐஸ்வர்யா: அப்போ, நீ என்னை பழிவாங்கணும்னு நினைக்கிற? உன்னைய நம்பி என் பக்கத்துல விட்டா  நீ எனக்கு பிராப்ளத்தை உண்டாக்கி விடுவ.  அதுக்கு, ரிட்டிஃபை பண்ணணும்னா  நாளைக்கு பிரச்சனையாகிடும் இதை பண்ணுன்னு ஒரு இன்ஸ்ட்ரக்ஷன் சொன்னா  நீ திருப்பி ஏ எப்படி  உன்னை சேவ் பண்ணலாம்னு நினைக்கிற. நான், என்னை சேவ் பண்ணமாட்டனா?  


எனக்கும் உனக்கும் சம்பந்தமில்லைன்னு சொல்றதுக்கு எவ்ளோ நேரம் ஆகப்போகுது?


நீ செய்யலைன்னு வெச்சுக்கோயேன். நான்,  திருப்பி உன் வைஃபை காலி பண்ணி விட்டுடுவேன்.  நான் சும்மா இருக்கமாட்டேன். உனக்கு எவ்ளோ இருந்துச்சுன்னா எனக்கு எவ்ளோ இருக்கும்? ம்… அவ்ளோ கேணையா நானு? 


நீ செண்டிமெண்டலா பேசி பேசி எத்தனை நாளைக்கு ஏமாத்துவீங்க என்னையெல்லாம்? 


கார்த்திக்: இதுல, ஏமாத்துறதுக்கு என்ன இருக்கு?


ஐஸ்வர்யா: அப்படியெல்லாம் கிடையாது. உன்னால போட முடியுமா முடியாதா? 


கார்த்திக்:  நான் வந்து


ஐஸ்வர்யா:  ஏன் பயப்படுற? காசை அடிச்சுவிட்டு ரெகுலர் பண்ணவிடாம போய்ட்டே இருப்பேன். நான் தான் சொல்றேனே. ரெகுலர் அசோசியேஷனுக்கு பேப்பர்  பண்ண போறது நான் தான்.  நூறு சதவீதம் அஸ்ஸூரன்ஸ் நான் கொடுக்கிறேன். நான், உள்ள விடவே மாட்டேன். 


கார்த்திக்: ம்மா என்னம்மா இப்படில்லாம் பேசுற நீ?


ஐஸ்வர்யா: அதுதான், உண்மை அண்ணா.  நீ ஒண்ணு செய்யி. இல்லையா இதைத்தான் பண்ணுவேன்.  நான் க்ளியரா சொல்றேன். நூறு சதவீதம்.  நீ எங்க போயி வேணாலும் நில்லு.  என்ன வேணாலும் பண்ணு.  பண்ணமுடிஞ்சுதுன்னா பண்ணு. 


கார்த்திக்: என்னால எதுவும் பண்ணமுடியாதுன்னுதானே ஐஸு இப்படில்லாம் பேசுற? ஏதோ தெரியாம போயி மாட்டிக்கிட்டேன். 


ஐஸ்வர்யா: இல்லல்ல பிரச்சனைன்னு வந்தா தப்பிச்சுப் போயிடணும்தானே நீ பன்ற? 

 

கார்த்திக்: தப்பிச்சு போயிடணும்னு நான் நினைக்கல. 


ஐஸ்வர்யா: நான், உனக்கு தெளிவா சொல்லிட்டேண்ணே. பண்ணலைன்னா நான் கண்டிப்பா  திருப்பி பண்ணுவேன்.  நான் அவ்ளோதான் சொல்லுவேன். 


பிரச்சனை ஆரம்பிச்சது உன்னாலதான். 

 

DDD

 

கார்த்திக்: இல்லம்மா… டிசம்பர் ஜனவரியில  இந்தமாதிரி குரூப்பை ஸ்டார்ட் பண்ணி  நீதானமா அவ்ளோ டிரான்ஸ்ஃபரும் 


ஐஸ்வர்யா: ஒரு நிமிஷம் அமைதியா இரு. ஆடியோ போடுறது  அவ்ளோ பெரிய பிரச்சனையா?  நான், கேட்குறேன்.  அப்போ, வளர்மதிக்காக நீங்க அவ்ளோ ஃபேவர் பண்ணுவீங்களா?

 
கார்த்திக்:  ஃபேவர்லாம் பண்ணனும்னு நினைக்கல. அந்தம்மா…


ஐஸ்வர்யா: இப்போ, நீ ஆடியோ போடமாட்டேன்னுதானே சொல்ல வர்ற? 
நான், இன்னைக்கு சொல்றேண்ணா. சத்தியம் பண்ணி சொல்றேன்.  நீ இதை பண்ணலனாட்டியும் இந்த பிரச்சனையை சமாளிப்பேன். ஆனா, உன் வைஃபை ரெகுலராக விடமாட்டேண்ணே. 

கார்த்திக்: அதாம்மா, அப்படி ஏதாவது சமாளிச்சு காப்பாத்தி விடும்மா. என்னம்மா

ஐஸ்வர்யா: உன் வைஃப் ரெகுலர் ஆகவும் விடமாட்டேன். தூக்கி டிரான்ஸ்ஃபர்தான் அடிப்பேன். நீ பார்த்துக்கிட்டே இரு. என்னைய செண்டிமெண்டல்லாம் எத்தனை நாளைக்கு ஏமாத்துவீங்க நீங்கல்லாம்? 


கார்த்திக்: நானாம்மா உன்னைய ஏமாத்திக்கிட்டிருக்கேன்? 


ஐஸ்வர்யா: ஆமா, அப்போ ஏன் உன்னால ஆடியோ போடமுடியல? ஏன், எனக்காக செய்யவேண்டிதானே? 


பிரச்சனைன்னு வந்தா காப்பாத்துறதுக்கு நான் நிற்கிறேன்னு சொல்றேன்.  நீ வளர்மதிக்கு போயி நிற்குற? வளர்மதியைவிட இன்னைக்கு ரெகுலர் அசோசியேஷன் பேப்பர் போடுற இடத்துல நான் நிற்குறேன் மினிஸ்டர் ஆஃபிஸுல. நான், எனக்காக செய்யின்னு சொல்றேன். 


கார்த்திக்: இல்லம்மா போடமாட்டேன்னு சொல்லல.  நான், வந்து என்ன சொல்றேன். 


ஐஸ்வர்யா: எனக்கு அதெல்லாம் கிடையாது. முதல்ல, அந்த ஆடியோவை பேசி அனுப்பிட்டு எங்கிட்ட பேசு. என்ன நினைச்சுக்கிட்டிருக்க என்னை முட்டாள்னு நினைச்சியா? நான், முட்டாள் கிடையாதுப்பா. நல்லா, ஞாபகம் வெச்சுக்கோ. நான், முட்டாள் கிடையாது. 

 

கார்த்திக்: இதுக்கு வேற வழியே இல்லையாமா?


ஐஸ்வர்யா: அதுதான் சொல்றேன்.   நீ எந்த பிரச்சனையும் உனக்கு வராம …. அப்படில்லாம் பண்ணமுடியாது. கண்டிப்பா பண்ணமுடியாது. நான் தான் தெளிவா சொல்றேனே. நான், உனக்கு ஆப்போசிட்டா திரும்புவேன். கண்டிப்பா திரும்புவேன். நான், அதான் இன்னமும் சொல்றேன்.  ரெகுலர் அசோசியேஷனை நான் தான் டேக் அவர் பன்றேன். இன்னைக்கு இல்ல. என்னைக்கும் உள்ள நுழைய விடமாட்டேன்.  அதுதான், நான் சொல்றேன். நூறு சதவீதம் நான் நிற்பேன். 


கார்த்திக்: என்னம்மா இவ்ளோ நாளும் உனக்கு பண்ணினதுக்கு  நீ நல்லா எனக்கு


ஐஸ்வர்யா: அதுதான் சொல்றேன். நான் வந்து உனக்கு ஒண்ணுமே பண்ணல. அப்போ, நீ மட்டும்தான் எனக்கு பண்ணுனியா?  நீ இல்லைன்னா வேற ஆளு அந்த வேலையை  செஞ்சிருக்கமாட்டாங்களா?


நீ எனக்கு பண்ணுனியா? நான் உனக்கு பண்ணுனேனா?


இப்போ, சொல்லு திருப்பி. நீ எனக்கு பண்ணுனியா?  நான், உனக்கு பண்ணினேனா?


கார்த்திக்: ட்ரான்ஸ்ஃபர் போட்டோம். அதுல, கொடுத்து அமவுண்டை நான் வாங்கிக்கிட்டேன். 


ஐஸ்வர்யா: அதெல்லாம் இருக்கட்டும்.  உன்னால ஆடியோ போடமுடியுமா? முடியாதா?


கார்த்திக்: நீ இப்படில்லாம் பேசுறது வந்து… அவ்வளவு உனக்கு  என்னவாம் கோவமாம் கேட்கிறேன்


ஐஸ்வர்யா: ஆடியோ போடுறதுக்கு காலையில என்ன சொல்லிட்டு வெச்ச? செண்டன்ஸ் அனுப்பிச்சிவிடு பேசுறேன்னு சொல்லிட்டு வெச்சல்ல? 


கார்த்திக்: யோசிச்சேன். எனக்கு  வந்து  பெரிய பிரச்சனையாகிடும். இப்படியே, விட்டா இந்த பிரச்சனை முடிஞ்சுடாதா?


ஐஸ்வர்யா: இதிலிருந்து எப்படி எஸ்கேப் ஆகி போறது எப்படின்னு யோசிச்சிக்கிட்டிருக்க அப்படிதானே?


கார்த்திக்: முன்னாடி செந்தில்நாதன் எவ்வளவோ ஆடியோ போட்டிருக்கான். அதெல்லாம், அப்படியே போயிடுச்சுல்ல.


ஐஸ்வர்யா: செந்தில்நாதனையே மினிஸ்டர் ஆஃபிஸுல பேசவெச்சேன்.  வளர்மதி சொல்லிச்சு அதனாலதான் பண்ணினேன்னு சொல்லிட்டான். அப்போ, இன்னைக்கு ஃபோன் பண்ணி கான்ஃபரன்ஸ் போடவா என்ன சொல்றான்னு  கேட்கிறியா நீ?


வளர்மதி சொல்லிச்சி. அதனாலதான், இப்படி பண்ணிட்டேன். என்னைய மன்னிச்சுடுங்கன்னு போட்ட ஆடியோ எங்கிட்ட இருக்கு.  நான், தரவா? 


கார்த்திக்: அதாம்மா, வளர்மதிக்கு வந்து அவனை யாருன்னே தெரியாது.  என்னையும் யாருன்னே தெரியாது. 


ஐஸ்வர்யா: நீ நினைச்சுக்கிட்டிருக்காத, ஒன்னையத்தான் யாருன்னு தெரியல. அவனை தெரியும்.  நான் தான் திரும்ப திரும்ப சொல்றேனே  நீதான் புத்திசாலின்னு நினைச்சு எஸ்கேப் ஆகலணும்னு நினைச்சே ,  கண்டிப்பா ரிவேஞ்ச் எடுக்காம விடவமாட்டேன் உன்னைய.


இவ்ளோதூரம் உனக்கு நல்லது செய்யணும்னு நினைச்சு பண்ணுவேணாம்.  இவரு பிரச்சனைன்னு வந்தததுக்கப்புறம் எஸ்கேப் ஆகி ஓடுவாராம் எங்கள மாட்டிவிட்டுட்டு,  நாங்க பார்த்துக்கிட்டு அப்படியே வேடிக்கை பார்த்துக்கிட்டிருப்பேனா?

 

கார்த்திக்: அந்த லலிதாங்குற பொண்ணு… 


பன்றேம்மா பன்றேன்.  செய்யலைன்னு சொல்லல. இப்போவரைக்கும்  என் வாயில  செய்யமுடியாதுன்னு வந்துச்சா? 


ஐஸ்வர்யா: ஏன்… பயமா இருக்குன்னுதான் சொல்ற?


கார்த்திக்:  பயமா இருக்குன்னுதான் சொல்லிக்கிட்டிருக்கேன். அதுக்காக,  எனக்கு என் பயத்தை போக்குறமாதிரி  நீ ஏதாவது பேசுறியா? இன்னும் என்னை பயமுறுத்துற? 


ஐஸ்வர்யா: அப்போ, வந்து என் மேல உனக்கு நம்பிக்கையில்ல


கார்த்திக்: நீ வந்து இன்னும் என்னைய பயமுறுத்துற உன் வைஃப் தூக்கியடிச்சிடுவேன். 


ஐஸ்வர்யா: அதுதான் சொல்றேன்ல. உன்மேல நம்பிக்கையில்ல


 நான், வந்து என்னன்னாலும் பார்த்துப்பேன்  நம்பிக்கை கிடையாது உனக்கு.  


கார்த்திக்: என்மேல என்னம்மா நம்பிக்கையில்ல? 


ஐஸ்வர்யா: அப்படித்தான நீ பேசுற?  என் மேல சொல்றேன். 


கார்த்திக்: இப்போவரைக்கும் உனக்கு வந்து அதை செய்யமுடியாதுன்னு சொல்லல.  வளர்மதிக்கு என்னை யாருன்னே தெரியாது.  


ஐஸ்வர்யா:  உன்னோட ஆக்டிவிட்டிஸ் எஸ்கேப் ஆகுறமாதிரிதான் இருக்கு. 


கார்த்திக்: எஸ்கேப் ஆகுற மாதிரியே சொல்ற.  ரைட்டு நீ சொல்ற.  ஆனா, எனக்கு என்னன்னா, அத வந்து அது பேர்ல ஒரு ஆடியோ போட்டோம்னா உன்னைய விட பெரிய போஸ்டிங்குல இருக்கா இப்போ? அதனால, எனக்கு பயம். 


ஐஸ்வர்யா:  அது, இருக்குன்னு உனக்கு தெரியுமா?  அதெப்படி நீ சொல்வ நீ?  அப்போ, பெரிய பொசிஷன்ல இருந்தா அவங்களுக்காக மாறி ஓடிப்போயிடுவ?  எங்கள மாட்டிவிட்டு


கார்த்திக்: மாறி ஓடிப்போயிடுவன்னு சொல்லலையேம்மா


மறுபடியும் பாரேன். நீயா ஒரு அசெம்ஷன் பண்ணிக்கிற.


 நான் அப்படி சொல்லல. 


ஐஸ்வர்யா: அப்படில்லாம் சொல்லல. அண்ணே, எதுக்கு இந்த ஆர்கியுமெண்ட்டு?  நீ ஆடியோ போட ரெடிதானே? 


கார்த்திக்: ரெடிதான்


ஐஸ்வர்யா: நீ ஆடியோவை ரெடி பண்ணிட்டு போட்டுட்டு அதுக்கப்புறம்  எனக்கு ஃபோன் பண்ணு. 


 கார்த்திக்:  எனக்கு வந்து  அந்த பயத்தை போக்குறமாதிரி பேச வேணாமா?


ஐஸ்வர்யா: உனக்கு அஸ்ஸூரன்ஸ் தர்றேன்னு ஃபர்ஸ்ட் வார்த்தையே சொல்லிட்டேன். அந்த ஆடியோவை போட்டாலும் வளர்மதி என்னையத்தான் டைரக்டா பிரச்சனை பண்ணும்.  பிரச்சனையை நான் பார்த்துக்கிறேன்.  ஃபர்ஸ்ட் வார்த்தையே நான் சொல்லிட்டேன்.  சும்மா அஸ்ஸூரன்ஸ் தரல  அது தரலை இது தரலைன்னு சொல்ற வேலையெல்லாம் பேசாத. 


கார்த்திக்: பண்ணித்தரலைன்னு சொல்லலமா. எனக்கு  நான் தான் சொல்றேன்ல. ரொம்ப பயமா இருக்கு.  எனக்கு அந்த பயத்தை போக்குறமாதிரி பேசு. 


ஐஸ்வர்யா: என்ன சொல்லணும் பயத்தைப்போக்கிறதுக்கு? இல்லல்ல நான் இருக்கேன்.  பிரச்சனையை நான் பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டேன். இதுக்குமேல, உனக்கு என்ன சொல்லணும்? 


என்ன சொல்லணும் சொல்லு?


கார்த்திக்: ம்… நான், இப்போவரைக்கும்  ரெக்கார்டு பண்ணமுடியாது. அனுப்பமுடியாதுன்னு சொன்னனா உங்கிட்ட சொல்லு. வைஃபை தூக்குவேன் அது இதுன்னு சொல்ற.


ஐஸ்வர்யா: நீ சொல்லுவண்ணா சொல்லுவ.  கண்டிப்பா செய்வேண்ணா. இப்பவும் சொல்றேன். கண்டிப்பா செய்வேன். அது, வளர்மதியால செய்யமுடியுதோ இல்லையோ நான் செய்வேன். கண்டிப்பா செய்வேன்.  


கார்த்திக்: பண்ணமாட்டேன்னா சொன்னேன்


ஐஸ்வர்யா: எவ்ளோ தூரம் பிரச்சனையில என்னைய மாட்டிவிட்டுட்டு   இருக்குற வம்பு, எலக்ஷன் டைம்ல  ஊருபட்ட வம்பு ஆக்கிவிட்டுப்புட்டு  நீ என்ன ட்ராமா பண்ணிக்கிட்டிருக்கியா? 


கார்த்திக்: ம்மா ட்ராமால்லாம் நான் பண்ணல. 


ஐஸ்வர்யா:  அப்போ, வேற என்ன?


கார்த்திக்:  நான், வந்து என்ன கேட்கிறேன். இந்தமாதிரி அந்த பேரை யூஸ் பண்ணினா  இன்னும் பிரச்சனை பெரிசாகும்


ஐஸ்வர்யா: அப்போ, வளர்மதிக்குதான் பயம். எங்க பேரை ஏன் யூஸ் பண்ணின நீ?


 என்னை இவ்ளோ பிரச்சனை வரும்னு நினைக்கிற நீ ஓடிப்போயிருக்க வேண்டிதானே? 


எதுக்காக என் பேரை மட்டும் யூஸ் பண்ணின நீ?


எதுக்காக எங்க அசோசியேஷன் பேரை யூஸ் பன்ற?


இதை வெச்சி நான் கம்ப்ளைண்ட் கொடுக்கவா?  எனக்கு இவனுக்கு சம்பந்தமுமில்ல. அசோசியேஷன் பேரை  யூஸ் பண்ணி  பேசிக்கிட்டிருக்கான்னு சொல்லிட்டு. 


நான் கேட்கவா? அப்படி ஒருவார்த்தைய போட்டா நான் எஸ்கேப் ஆகிடலாமில்ல?


 எனக்கும் இதுக்கும் சம்பந்தமுமில்ல. இவன் பாருங்க, இங்க இருக்கான். இவன் தான் போட்டிருக்கான். இவன், எப்படி பேசலாம்னு நான் கம்ப்ளைண்ட் கொடுக்கவா?  டிபார்ட்மெண்ட் வைஸ் நான் ஆக்ஷன் எடுக்கவா? அப்பன்னா, நான் எஸ்கேப் ஆகிடலாம். அதை, நீ அக்செப்ட் பன்றியா? என்னம்மோ ஒனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி பேசுற? 


கார்த்திக்: என்னம்மா சம்பந்தமே இல்லங்குற


ஐஸ்வர்யா:  அய்யோ அண்ணா, ஏற்கனவே உங்கிட்ட  எக்ஸ்பெட் பண்ணினேன். ஆனா, இந்தளவுக்கு உங்களை எஸ்பெக்ட் பண்ணலடா. அண்ணா நான் சொல்றேன். இதுல, எஸ்கேப் ஆகணும்னு நினைச்சீன்னா ஹண்ட்ரட் பர்சண்டேஜ் அவளோ சீக்கிரத்துல விடமாட்டேன். நூறு சதவீதம்  விடமாட்டேன். 


அதைமட்டும் ஞாபத்துல வெச்சுக்கோ. இப்போ, செஞ்சுக்கோ கொடுக்காம போ.   ஆனா, நீ செய்யலைன்னா  கண்டிப்பா உனக்கு எதிரா நிற்குற ஆளு நானாதான் இருப்பேன். இன்னைக்கு ஞாபகம் வெச்சுக்கோ. 


கார்த்திக்: அப்படியே விட்டா இந்த பிரச்சனை சால்வ் ஆகாதாம்மா?


ஐஸ்வர்யா: எப்படி விட்டா சால்வ் ஆகும்? எப்படி சால்வ் ஆகும்? ம்? நீ எப்படி எஸ்கேப் ஆகணும்னு பார்க்குற இல்ல


கார்த்திக்: எஸ்கேப் ஆகணும்னு பார்க்கல். 


ஐஸ்வர்யா: ம் வேற… சொல்லு


கார்த்திக்: இல்ல, இப்போ ஏற்கனவே பல ஆடியோக்கள் வந்திருக்கு. அதெல்லாம் அப்படியே வந்து  சைலண்ட் ஆகியிருக்கு.  அதுமாதிரி, இது ஆகாதா?  


ஐஸ்வர்யா: அது, அப்படியே ஏன் சைலண்ட் ஆச்சு? என்னன்னு உனக்கு தெரியுமா?


 நீ என் ஆடியோ வந்தப்போ ஒரு வாரத்துக்கு ஓடிப்போய்ட்ட. 


கார்த்திக்: எம்மா, நான் வர்றதுக்கு முன்னாடியே நடந்துச்சு நீ போட்ட ஆடியோல்லாம்


ஐஸ்வர்யா: வர்றதுக்கு முன்னாடியெல்லாம் கிடையாது.  நீயும்தான் அப்போ இருந்த. அப்போ,  நியூ எம்.ஆர்.பி க்ரூப் ஸ்டார் பண்ணிரிந்தோம்.  அதுல, நீயும்தான் இருந்த.


கார்த்திக்: வாய்ப்பே இல்ல 


ஐஸ்வர்யா: எப்போ, வந்தது? எப்போ அந்த ஆடியோ ரிலீஸ் ஆனது  அப்போ நீ என்ன பண்ணின. எல்லாமே என்கிட்ட மைண்ட்ல இருக்குது. 


கார்த்திக்: நல்லா யோசிச்சு பாரும்மா, இந்த ஆடியோல்லாம் நான் வர்றதுக்கு முந்தியே நடந்ததும்மா  


ஐஸ்வர்யா: நிறைய வேலை இருக்குது.  வேலை வெட்டி இல்லாம இல்ல.  ரொம்ப நிறைய எனக்கு வேலை இருக்குது.  நீ ஆடியோ ரெக்கார்டு பண்ணி கொடுக்கமுடியுமா? முடிஞ்சா குடு. குடுக்கமாட்டேன்னு சொன்னா போ.  இதுக்குமேல, உங்கிட்ட ரிக்வெஸ்ட் பண்ணணவும் மாட்டேன். கேட்கவும் மாட்டேன். அவ்ளோதான், நான் சொல்றேன். இப்போ, உனக்கு என்ன பிரச்சனை? ஆடியோ நீ போட்டா என்ன ஆயிடும் உனக்கு பெரிசா? எதுக்காக நீ கொடுக்கமாட்டேங்குற ஆடியோ?  எதுக்கு உனக்கு பயமா இருக்குது? நான் கேட்கிறேன். எதுக்கு பயமா இருக்குது? 


கார்த்திக்: அதான், அவங்கள்லாம் பெரிய டீம் வேற. அதான், யோசிக்கிறேன்.


ஐஸ்வர்யா: அதுதான் சொல்ல வர்றேன். அவங்கல்லாம் பெரிய டீமு. நாங்க ஒங்களுக்கு புள்ளப்பூச்சியா? எங்களையெல்லாம் பார்த்தா அவ்ளோ நக்கலா இருக்கா ஒனக்கு? 


 என்ன நினைச்சுக்கிட்டிருக்க?  அவங்கள்லாம் பெரிய டீமு, பெரிய நெட் ஒர்க்கு.  நாங்கள்லாம் என்ன சப்பையா? 


கார்த்திக்: நான், அப்படி சொல்லலம்மா அந்தம்மா


ஐஸ்வர்யா: வேற என்ன சொல்ல வர்ற நீ? அதோட எலக்ஷன் பீரியடே முடிஞ்சுப்போச்சு. அது போஸ்டிங்கிலேயே இல்ல. மினிஸ்டர் ஆஃபிஸுலருந்து வெளியே இருக்கு. உள்ளக்கூட வரமுடியாது.  அவுங்க பெரிய ஆளுன்னா நாங்க  யாரு?

 

கார்த்திக்: சரிம்மா நான் போடுறேன் இப்போ. போட்டுட்டு உனக்கு அனுப்புறேம்மா.  நீ வந்து என்னைய


ஐஸ்வர்யா: ஆனா, நீ இப்படி  பேசுவன்னு நான்  எதிர்பார்க்கவே இல்லடா.  அய்யோ சாமி. 


கார்த்திக்: நான் என்னா கேட்டேன் உங்கிட்ட?  இதனால என்ன பிரச்சனை வரும்னு கேட்டேன். 


ஐஸ்வர்யா: நீ பெரிய ஆளுன்னு நினைச்சுக்கிட்டிருக்கவங்க பெரிய ஆளா இருப்பாங்க விடு விடு. ஒண்ணும் கிடையாது. ஆடியோ ரெடி பண்ணி போடமுடிஞ்சா போடு. அவ்ளோதான், நான் சொல்லுவேன். 

 

கார்த்திக்:  அப்புறம் ஏன் கோவமா பேசுற? நான் போடுறேங்கிறேனே?


ஐஸ்வர்யா: கோவத்துலையெல்லாம் பேசலைண்ணே,  நான் நிஜமாலுமே சொல்றேன். 


கார்த்திக்: அதனாலதான், நானும் வந்து   எனக்கு  இப்போ வரைக்கும் பயத்துலதான்  உங்கிட்ட பேசிக்கிட்டிருக்கேன். 


 இந்த பிரச்சனை எங்கப்போயி முடியும்னு தெரியாம குழப்பத்துலதான்   பேசிக்கிட்டிருக்கேன்.  அந்த குழப்ப்பதை எனக்கு தீர்க்காம   நான் பேசுறதையெல்லாம்


ஐஸ்வர்யா: என்னா கொழப்பம் ஒனக்கு? நான், சொல்றதை நீ செய்யுன்னு  சொல்லிட்டேன். ஆரம்பத்துல உன்னை உள்ள சேர்க்கும்போது நான் என்ன சொல்றேனோ அதை செய்யுங்குறதுதான்.  ஒனக்கு பிரச்சனை வராம நான் பார்த்துப்பேன்னு சொல்லித்தான். அப்போ, கொழப்பம்ல இருக்கேன். அப்படியிருக்கேன், இப்படியிருக்கேன்னா?  அப்போ, எங்களுக்கு எவ்வளவு கொழப்பமா இருக்கும்?  எனக்கு எவ்வளவு பிரஷர் வந்திருக்கும்? சோஷியல் மீடியா அது இதுன்னு, எலக்ஷன் டைம்ல நிற்கவெச்சு,  மினிஸ்டர் ஆஃபிஸு,  செகரட்டரியேட்டுன்னு அலஞ்சிக்கிட்டு திரிஞ்சேனே  காலையிலிருந்து  எனக்கு எவ்வளவு பிரஷர் இருக்கும்? 


என்னமோ ஒண்ணுமே தெரியாத மாதிரி பேசிக்கிட்டிருக்க


கார்த்திக்: இல்லம்மா ஒனக்கு பிரஷர் அதிகமாத்தான் இருக்கும். எனக்கு தெரியும்.  நான், என்ன சொல்றேன்னா எனக்கு வந்து நீ


ஐஸ்வர்யா: நீ எனக்கு நம்பிக்கையாவும் நடந்துக்கல. என்னையவும் நம்பல.  அவ்ளோதான், வேற விஷயமே இல்ல.  இதுல வேற என்ன சொல்லணும்னு நினைக்கிற? 


கார்த்திக்: ஏம்மா நீயா ஒரு அசெம்ஷன் பண்ணிக்கிற


ஐஸ்வர்யா: இங்கப்பாருண்ணா, நான் சொன்னேன்னு எட்டு கோடியை கலெக்ட் பண்ணி கொடுத்துட்டு கம்முனு இருக்காண்ணே.  ஒரு வருஷம் ஆர்டர் இன்னும் கொடுக்காம.  மேல் நர்ஸுல. 


அவன் வந்து அவண்ட்ட இருக்கிற நம்பிக்கை யாரோ ஒருத்தன் தான் அவன்.  என்ன இப்படி இருக்கீங்க? இவ்ளோ செல்ஃபிஷ்ஷா நீங்கள்லாம்? 


கார்த்திக்: அய்யோ இப்போவரைக்கும்…


ஐஸ்வர்யா: நல்லது செய்யணும். நல்லா கொண்டு வரணும்னு நான் நினைச்சுக்கிட்டிருக்கேன். 


கார்த்திக்: இப்போவரைக்கு ஆடியோ போடணும்னு  வெச்சிருக்கேன். போடமாட்டேன்னு சொல்லவே இல்ல.


ஐஸ்வர்யா: சொல்லலல்ல ஆடியோ போட்டுட்டு.  என்கிட்ட பேசு.  ஆடியோ ரெடி பண்ணி கொடுத்து ஃபோன் பண்ணு. அதுக்கப்புறம் நான் பேசுறேன். 


கார்த்திக்: கண்டிப்பா உனக்கு நான் போடுறேன்.  நீ எழுதிக்கொடுத்தமாதிரியே போடுறேன். 


ஐஸ்வர்யா: நீ ஆடியோவை போட்டுட்டு பேசு. 


கார்த்திக்: சரி நான் போட்டுட்டு கால் பன்றேன்.

 

என்று முடிகிறது கார்த்திக்-ஐஸ்வர்யாவின் இரண்டாவது உரையாடல் ஆடியோ.  இதற்குப்பிறகுதான், மன்னிப்பு ஆடியோவை வெளியிட்டார் கார்த்திக். அதில்தான், ஐஸ்வர்யா மிரட்டி எழுதி கொடுத்ததுபோல்  தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர்  வளர்மதி மீது குற்றஞ்சாட்டி ஆடியோவை வெளியிட்டுள்ளார் கார்த்திக் என்பது மேற்கண்ட  ஆடியோ  உரையாடல்கள் மூலம் தெள்ள தெளிவாக தெரிகிறது. 


மேலும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் டி.எம்.எஸ் இயக்குனரும்  முறையான விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததன் விளைவுதான்,  முதல்வர் செக்யூரிட்டி ஆஃபிசரின் மனைவி செல்வத்தின் மனைவியும்  தமிழ்நாடு யுனைட்டட் எம்.ஆர்.பி நர்சஸ் அசோசியேஷன் செயலாளருமான ஐஸ்வர்யாவின்  தொடர் மிரட்டல்களுக்கு காரணம். 


நக்கீரனில்  இவ்வளவு ஆதாரப்பூர்வமான ஆடியோக்கள், ஆவணங்கள் வெளியிட்ட பிறகும்கூட  சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், எம்.ஆர்.பி எனப்படும் மருத்துவ பணியாளர் தேர்வு வாரிய அதிகாரிகள்  யார் யாரெல்லாம் இவர்களிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு செயல்படுகிறார்கள் என்ற விசாரணையை நடத்தினால்தான் எம்.ஆர்.பியில் லஞ்சம் விளையாடுவது தடுத்து நிறுத்தப்பட்டு  அரசு மருத்துவமனைகளில் ஏழை எளிய மக்களுக்கு சரியான சிகிச்சை சேவைகள் கிடைக்கும். 

 

 

 

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.