Skip to main content

திமுக அமைச்சரவையில் எட்டு முன்னாள் அதிமுக பிரமுகர்கள்...

Published on 06/05/2021 | Edited on 06/05/2021

 

ex admk members in dmk cabinet

 

நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றிபெற்றது. இதில் திமுக 133 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து, நேற்று (05/05/2021) மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் ஆட்சிமன்றக் குழு தலைவராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். 

 

அதன் தொடர்ச்சியாக, நாளை (07/05/2021) காலை 09.00 மணியளவில் ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடைபெறும் பதவியேற்பு விழாவில், தமிழகத்தின் முதலமைச்சராக முதன்முறையாக மு.க. ஸ்டாலின் பதவியேற்கிறார். இந்நிலையில் திமுக அமைச்சரவை பட்டியலைத் தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. 

 

அதன்படி, முதல்வராகப் பொறுப்பேற்கும் ஸ்டாலின் தலைமையில் கீழ்- பொது, இந்திய ஆட்சிப்பணி, காவல்பணி, பொதுநிர்வாகம், உள்துறை, மாற்றுத்திறனாளிகள் நலன், சிறப்புத் திட்டச் செயலாக்கம், மாவட்ட வருவாய் அலுவலர்கள் இலாகா, 

நீர்பாசனத்துறை - துரைமுருகன்,

நிதித்துறை - பழனிவேல் தியாகராஜன்,

உள்ளாட்சித்துறை - கே.என்.நேரு,

மின்சாரத்துறை - செந்தில் பாலாஜி.

சுகாதாரத்துறை - மா.சுப்ரமணியன்,

பொதுப்பணித்துறை - ஏ.வ.வேலு,

பள்ளிக்கல்வித்துறை - அன்பில் மகேஷ் பொய்யாமொழி,

கூட்டுறவுத்துறை - ஐ.பெரியசாமி,

உயர்கல்வித்துறை - பொன்முடி,

வீட்டுவசதித்துறை - முத்துசாமி,

சட்டத்துறை - ரகுபதி,

ஊரகத் தொழில்துறை - தா .மோ.அன்பரசன்,

செய்தி,விளம்பரத்துறை - மு.பெ.சாமிநாதன்,

மீன்வளத்துறை - அனிதா ராதாகிருஷ்ணன்,

போக்குவரத்துத்துறை - ராஜகண்ணப்பன்,

வனத்துறை - க.ராமச்சந்திரன்,

உணவுத்துறை - சக்ரபாணி,

தகவல் தொழில்நுட்பத்துறை - மனோ தங்கராஜன்,

சுற்றுலாத் துறை - மதிவேந்தன்,

ஆதிதிராவிடர் நலத்துறை - கயல்விழி செல்வராஜ்,

வருவாய்த்துறை - கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்,

சுற்றுச்சூழல் துறை - வி.மெய்யநாதன்,

பால்வளம் - சா.மு.நாசர்,

அறநிலையத்துறை - சேகர்பாபு,

தொழில்துறை-தங்கம் தென்னரசு,

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை - எஸ்.எஸ். சிவசங்கர்

வேளாண்துறை - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,

ஊரகவளர்ச்சித்துறை - கே.ஆர்.பெரியகருப்பன்,

சமூக நலத்துறை - கீதாஜீவன்,

கைத்தறித்துறை - ஆர்.காந்தி,

வணிகவரித்துறை - பி.மூர்த்தி,

சிறுபான்மை நலத்துறை - கே.எஸ்.மஸ்தான்,

தொழிலாளர் நலத்துறை - சி.வி.கணேசன்.


இதில் எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், எஸ்.ரகுபதி, முத்துசாமி, அனிதா ராதாகிருஷ்ணன், ராஜகண்ணப்பன், செந்தில் பாலாஜி, சேகர் பாபு ஆகியோர் இதற்கு முன்பு அதிமுகவை இருந்து பல்வேறு காலகட்டங்களில் திமுகவிற்கு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.