Skip to main content

தமிழக அரசின் தோல்வியே சிறுமி ஜெயஸ்ரீ மரணத்திற்கு காரணம் - எவிடென்ஸ் கதிர் பேச்சு!

Published on 12/05/2020 | Edited on 12/05/2020
s



நேற்று விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சிறுமியை இரண்டு நபர்கள் கை, கால்களை கட்டி தீவைத்து எரித்துள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்துள்ள நிலையில், கைது செய்யப்பட்ட அவர்களை அதிமுகவின் பொறுப்புகளில் இருந்து கட்சி தலைமை நீக்கியுள்ளது. இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக எவிடென்ஸ் கதிர் ஆவேசமாக கருத்துகளை பதிவு செய்துள்ளார். அவை வருமாறு, “விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணை நல்லூரில் சிறுமி ஜெயஸ்ரீ கொடூரமான நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார். 15 வயது சிறுமியை எவ்வித இரக்கமும் இல்லாமல் எரித்துக் கொன்றுள்ளார்கள். அந்த சிறுமியை யாரும் எதிர்பாராத வண்ணம் பெட்ரோல் ஊற்றி அதிமுகவை சேர்ந்த இருவர் அந்த சிறுமியை கொன்றுள்ளார்கள் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது.


அந்த சிறுமி கொளுத்தப்பட்ட நிலையில் அவர் பேசிய காணொளியை நாம் அனைவரும் பார்த்தோம். மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. வேதனையாக இருந்தது. இரண்டு அதிமுகவை சேர்ந்த நபர்கள் ஏதோ அவர்களின் குடும்பத்தின் மீது இருந்த முன்பகை காரணமாக தேவையில்லாமல் இந்த சிறுமியை எரித்துள்ளார்கள். இத்தகைய கொலைகளுக்கு மிக முக்கிய காரணம் தமிழக அரசும், முக்கியமாக எடப்பாடி பழனிசாமி அவர்களும்தான். அவரின் நிர்வாகம் மிகவும் கேவலமாகவும், சீட்கெட்டு போயும் இருக்கின்றது. 2018ம் ஆண்டு ராஜலெக்ஷி என்ற சிறுமி ஆத்தூரில் கழுத்து துண்டாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள். இன்னமும் விசாரணை நடைபெற்று வருகின்றது. தீர்ப்பு வழங்கப்படவில்லை. 

 

 


இது எதற்காகவும் போராடாத எடப்பாடி பழனிசாமி டாஸ்மாக் விவகாரத்திற்காக உச்சநீதிமன்றம் செல்கிறார். இந்தமாதிரி பெண்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் குற்றம் நடந்த இரண்டே மாதங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற விதி இருக்கின்றது. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட இரண்டே மாதங்களில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று விதி இருக்கின்றது. ஆனால் எடப்பாடி அரசு, குழந்தைகள் விஷயத்தில் மிக மெத்தனமாக இருக்கின்றது. கடந்த மூன்று நாட்களில் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சிலர் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்கள், சிலர் ஹானர் கில்லிங் செய்யப்பட்டுள்ளார்கள்.

 


இதில் சில செய்திகள் பத்திரிகைகளிலேயே வரவில்லை. நெல்லை உள்ளிட்ட மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் 15 வயதிற்கும் குறைவான மூன்று பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்கள்.  இது கடந்த மூன்று நாட்களில் மட்டும் நடைபெற்ற சம்பவம். இன்னும் வெளி உலகத்திற்கு தெரியாத சம்பவங்கள் ஏராளமாக நடைபெற்று வருகின்றது. 2012ம்  ஆண்டு ஓடும் பேருந்தில் நிர்பயா கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட போது நீதிபதி வர்மா தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்தார்கள். அவர்கள் இந்தமாதிரியான வழங்குகள் விரைந்து நடைபெற வேண்டும் என்று தன்னுடைய பரிந்துரையில் கூறியிருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தின் உடைய லட்சணம் ரொம்ப கேவலமாக இருக்கின்றது. இதற்கு இங்கு ஆள்பவர்களே மிக முக்கிய காரணமாக இருக்கிறார்கள்" என்றார்.

 

 


 

Next Story

பதான்கோட் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் சுட்டுக் கொலை!

Published on 11/10/2023 | Edited on 11/10/2023

 

Pathankot incident mastermind person passed away

 

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள இந்திய விமானப் படைத் தளத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டில் பயங்கரவாதிகள் ஊடுருவித் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு முதன்மை பயங்கரவாதியாகச் செயல்பட்ட ஜெய்ஷ்- ஏ- முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஷாஹித் லதீஃப் இன்று பாகிஸ்தானில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். 

 

பஞ்சாப் மாநிலம், பதான்கோட் பகுதியில் இந்திய விமானப் படைத் தளம் ஒன்று அமைந்துள்ளது. இந்த நிலையில் தான், கடந்த 2016 ஆம் ஆண்டு பயங்கரவாதிகள் விமானப் படைத்தளத்தில் ஊடுருவித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, அங்கு வந்த இந்திய ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த மோதலில் 4 பயங்கரவாதிகள் பலியானார்கள். அதுமட்டுமல்லாமல், இந்த மோதலில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 7 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் அப்போது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

 

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், இந்த கொடூர தாக்குதலை ஜெய்ஷ் - ஏ - முகமது என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது. மேலும், இந்த அமைப்பில் உள்ள ஷாஹித் லதீஃப் என்பவர் தான் இந்த தாக்குதலுக்கு முதன்மையாகச் செயல்பட்டவர் என்பதும் தெரியவந்தது. ஷாஹித் லதீஃப் கடந்த 1994 ஆம் ஆண்டில், சட்டவிரோத நடவடிக்கை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த பிறகு, பாகிஸ்தானுக்கு 2010 ஆம் ஆண்டு நாடு கடத்தப்பட்டார். இவர் மீது இந்தியாவில் பல்வேறு சட்டவிரோத வழக்குகள் நிலுவையில் இருப்பதால் இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். 

 

இந்நிலையில் தான், பாகிஸ்தானின் சியோல்கோட்டில் பயங்கரவாதி ஷாஹித் லதீஃப் இன்று அடையாளம் தெரியாத சில மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது குறித்து உள்நாட்டுச் செய்திகளில், பயங்கரவாதி ஷாஹித் லதீஃப்பை சுட்டுக் கொன்றவர்கள் உள்ளூர் கிளர்ச்சியாளர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

 

 

Next Story

மருத்துவமனையில் கொடூரம்; இளம்பெண் கழுத்தை அறுத்துக் கொலை

Published on 02/09/2023 | Edited on 02/09/2023

 

 young girl incident at Hospital

 

திருப்பூர் மாவட்டம், அவினாசி பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவருடைய மகள் சத்தியஸ்ரீ (21). இவர் திருப்பூர் 60 அடி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வரவேற்பாளராக பணியாற்றி வந்தார். இவரும், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்த நரேந்திரன் (21) என்பவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், சத்தியஸ்ரீ வழக்கம்போல் தான் பணியாற்றி வந்த மருத்துவமனைக்கு வந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த நரேந்திரன், சத்தியஸ்ரீயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இவர்களுக்குள் வாக்குவாதம் முற்றிப்போகவே ஆத்திரமடைந்த நரேந்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து சத்தியஸ்ரீயின் வயிற்றில் குத்தியுள்ளார். மேலும், அவர் சத்தியஸ்ரீயின் கழுத்தையும் அறுத்துள்ளார். இதில் சத்தியஸ்ரீ படுகாயமடைந்து மயங்கிய நிலையில் கீழே விழுந்துள்ளார். அதன் பின்னர், நரேந்திரன் அந்த கத்தியை வைத்து தன்னுடைய கழுத்தையும் அறுத்துக்கொண்டு  தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால், அங்கு பதட்டம் ஏற்பட்டது.

 

இதுகுறித்து, மருத்துவமனை ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் கொடுத்த அந்த தகவலின் பேரில் திருப்பூர் வடக்கு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும், அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இருவரையும் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சத்தியஸ்ரீயை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். மேலும், நரேந்திரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

அதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், சத்தியஸ்ரீக்கும், நரேந்திரனுக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு இவர்களுக்குள் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், பேச்சு வார்த்தை நடத்துவதற்காக நரேந்திரன், சத்தியஸ்ரீ பணிபுரியும் மருத்துவமனைக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் பிறகு, தான் வைத்திருந்த கத்தியை வைத்து சத்தியஸ்ரீயை குத்தி விட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்று காவல்துறையினருக்கு தெரியவந்தது.