Skip to main content

அம்பேத்கர் பிறந்த தினத்தில் அவர் வாழ்ந்த வீட்டில் பறந்த கருப்புக்கொடி - காரணம் குறித்து எவிடன்ஸ் கதிர் பேச்சு!

Published on 16/04/2020 | Edited on 16/04/2020


அம்பேத்கருடைய பிறந்த தினமான நேற்று முன்தினம்  அவர் வாழ்ந்த வீட்டில் கருப்பு கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எவிடன்ஸ் கதிர் பேசும்போது, "இந்திய அரசியல் சாசனத்தை இயற்றிய மாமேதை அண்ணல் அம்பேத்கருடைய பிறந்ததினம் ஏப்ரல் 14. நேற்று முன்தினம் உலகமே அம்பேத்கருடைய பிறந்த தினத்தை கொண்டாடிக் கொண்டிருந்தது. ஆனால் அம்பேத்கர் வாழ்ந்த அவருடைய வீட்டில் கருப்பு கொடி ஏற்றப்பட்டிருந்தது. அதற்கு காரணம் அம்பேத்கரின் பேத்தியைத் திருமணம் செய்துகொண்டுள்ள சிந்தனையாளர் ஆனந்த் தேவ்தும்டே கைது செய்யப்பட்டுள்ளார். அவரோடு சமூக ஆர்வலர் கவுதம் நல்லாகான் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். எதற்காக இந்தக் கைது என்று பார்க்க வேண்டும்.
 

b



1818-ம் ஆண்டு பிரிட்டிஷ் படைக்கும், பேஷ்வா படைக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் ஆங்கில படை வெற்றிபெற்றது. பேஷ்வா படையில் உயர்ஜாதி என்று சொல்லக்கூடியவர்கள் எல்லாம் இருந்தார்கள். ஆங்கில படையில் தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளிட்ட அனைவரும் இருந்தார்கள். இதில் ஆங்கிலேயர் படை வெற்றி பெற்றதை ஆண்டுதோறும் கொண்டாடும் விதமாக விழா நடைபெறும். கடந்த 2018-ம் ஆண்டும் மராட்டியத்தில் இதே போன்ற ஒரு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் லட்சக்கணக்கான மக்கள் பங்கெடுக்கும் வாய்ப்பும் ஏற்பட்டது. மராட்டியத்தில் அதற்கு முன்பு அப்படி ஒரு கூட்டம் கூடியதில்லை என்று சொல்லுமளவுக்கு மக்கள் வெள்ளம் அணி திரண்டது. இதில் தாழ்த்தப்பட்ட மக்களை தவிர அனைத்து ஜாதி மக்களும் அணிதிரண்டு வந்திருந்தார்கள். 
 

இந்த எழுச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாத மதவாத அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் அந்த விழாவை ஏற்பாடு செய்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். பதிலுக்கு அவர்களும் தாக்குதல் நடத்தினார்கள். ஒருவர் கொல்லப்பட்டார். மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் சேதமாயின. இந்தக் கலவரம் காரணமாக, இதில் ஏதோ பெரிய சதித்திட்டம் தீட்டியதைப் போல ஒரு 11 பேர் மீது வழக்கு போட்டார்கள். அதில் ஒன்பது பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மீதியிருந்த இவர்கள் இருவரும் உயர்நீதிமன்றம் அணுகி தங்களுக்கான ஜாமீனைப் பெற்றுவந்தார்கள்.
 

http://onelink.to/nknapp


உச்சநீதிமன்றம் தற்போது அவர்களுக்கான பெயிலை மறுத்த நிலையில் அவர்கள் நேற்று காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்கள். அவர்கள் தனக்கும் இந்தக் கலவரத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று தொடர்ந்து கூறிவந்தார்கள். எழுதியும் வந்துள்ளார்கள். ஆனால் அவர்களின் பேச்சை ஏற்காமல் பலவிதமான தொல்லைகளை அவர்களுக்கு அதிகார வர்க்கம் தொடர்ந்து கொடுத்து வந்தது. அப்போதுதான் இந்த 'அர்பன் நக்சல்' என்ற வார்த்தையைக் கூட சொல்ல ஆரம்பித்தார்கள். இந்த வழக்கிற்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பு ஒரு துரும்பைக் கூட இதுவரை ஆதாரமாகக் கண்டுபிடிக்கவில்லை. அவர்கள் இந்து பழமைவாத அமைப்புக்களுக்கு எதிராகத் தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்தார் என்பதே இதற்கு மிக முக்கியக் காரணம் ஆகும். இது சமூக நீதிக்கு எதிரானது" என்றார்.

 

Next Story

தாய் கண்முன்னே மகனுக்கு நேர்ந்த துயரம்; நொடிப் பொழுதில் நடந்த சம்பவம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Son passed away in front of mother eyes

கோவை மாவட்டம், சாய்பாபா காலனி அருகே அமைந்துள்ளது கருப்புசாமி வீதி. இப்பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். இவரது மகன் ஆனந்த். இளைஞரான இவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். அதனால், மிகுந்த கவனமுடன் குடும்பத்தினர் ஆனந்தை அரவணைப்புடன் வளர்த்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், ஆனந்திற்கு உயர் ரத்த அழுத்த பிரச்சனை  ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் அவருக்கு மருத்துவ மனையில் சிகிச்சை பெற முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, கடந்த 21ஆம் தேதி இரவு ஆனந்தின் தாய் லட்சுமி மற்றும் பாட்டி சியாமளா இணைந்து ஆனந்தை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். முன்னதாக பேருந்துக்காக கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி கங்கா மருத்துவமனை பேருந்து நிறுத்தத்திற்கு அருகே சாலையின் ஓரத்தில் நடந்துச் சென்றுள்ளனர். அப்போது, ஆனந்த் தாய் மற்றும் பாட்டியின் கையை விட்டு நடந்து சென்றுள்ளார். குடும்பத்தினரும் ஆனந்த் சரியாக நடந்துச் செல்வார் என்ற நம்பிக்கையுடன் கூடவே நடந்துச் சென்ற நிலையில், திடீரென ஆனந்த் அவ்வழியே வந்த துடியலூரில் இருந்து போத்தனூர் நோக்கி சென்ற பேருந்தின் முன்பாக பாய்ந்துள்ளார்.

நொடிப் பொழிதில், ஆனந்த் பேருந்து முன் பாய தாய் மற்றும் பாட்டியின் கண் முன்னே  தனியார் பேருந்தின் முன் பகுதியில் சிக்கியுள்ளார். இதில், பேருந்தின் முன் சக்கரம் தலையில் ஏறியதில் ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மகன் தடுமாறி விழுந்து கண்முன்னே உயிரிழந்ததைப் பார்த்த தாய்  லட்சுமி நடுரோட்டில் கதறி அழுதது காண்போரை கண் கலங்க செய்தது.

இதையடுத்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.  தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கோவை மேற்கு சரக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்தில் உயிரழந்தவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் கோவை மேற்கு சரக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, விபத்து நடந்த அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், உடல் நிலை சரியில்லாத ஆனந்தை அவரது தாய் மற்றும் பாட்டி சாலையின் ஓரத்தில் நடந்து கூட்டிச் செல்கின்றனர். அப்போது, திடீரென் அவ்வழியாக தனியார் பேருந்து வந்துள்ளது. அதில், திடீரென ஆனந்த் பாய்கிறது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஆனால், தனியார் பேருந்து ஓட்டுநர் சுதாரித்துக் கொண்டு வண்டியை திருப்பி பிரேக் அடித்துள்ளார். ஆனாலும், யாரும் எதிர்பாராத வகையில் தனியார் பேருந்தின் முன் சக்கரம் ஏறியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவிற்கு சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்யும் நெட்டிசன்கள் மகனை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் உடல் நிலை சரியில்லாத இளைஞர் ஒருவர் தனியார் பேருந்து முன்பு பாய்ந்து விபத்தில் சிக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தாயின் கண்முன்னே விபத்தில் சிக்கி மகன் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.