TRASH

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

உலகிலேயே மிக உயரமான சிகரம் எவரெஸ்ட் சிகரம். இது 8,848 மீட்டர் நீளமுடையது. மனிதர்கள் ஒரு இடத்திற்கு அதிகமாகசென்றால் அந்த இடத்திற்கு நிச்சயம் ஒரு சேதாரம் ஏற்படும். அந்தவகையில் ஒரு இடத்திற்கு மிக அதிகம் சேதாரம் ஏற்படுவது குப்பைகளால்தான். இதற்கு எவரெஸ்ட்டும் விதிவிலக்கில்லாமல் போனது. ஆம், எவரெஸ்டிலும் குப்பைகள் அதிகமாகிவிட்டன. மலையேற்றத்திற்காக எவரெஸ்ட் சிகரத்திற்கு வரும் நூற்றுக்காணக்கான வீரர்கள் தாங்கள் கொண்டுவரும் கூடாரம், உணவுப்பொருட்கள், குடிநீர் பாட்டில்கள், காலி கேஸ் சிலிண்டர்கள் போன்றவைகளையும், மனிதக் கழிவுகளையும் அங்கேயே விட்டுசென்றுவிடுகின்றனர். இதனால் எவரெஸ்ட் சிகரம் குப்பைக் கூழமாக மாறியுள்ளது. மலையேற்றவீரர்கள் கீழே இறங்கும்போது 8 கிலோ கழிவுகளை கொண்டுவந்தால் மலையேற்ற கட்டணம் திரும்பத்தரப்படும். என்று நேபாள அரசு அறிவித்து ஐந்தாண்டுகள் ஆகின்றன. கடந்த 2017வரை மலையேற்ற வீரர்கள் கிட்டதட்ட 25டன் குப்பைகளையும், 15 டன் மனிதக் கழிவுகளையும் கொண்டுவந்துள்ளனர். என சாகர்மாதா மாசு கட்டுப்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

புவியின் மிகப்பெரிய பகுதி கடல். ஆனால் இன்று மிகப்பெரிய குப்பைக்கூழமாக மாறியிருப்பதும் கடல்தான். கடல்வாழ் உயிரினங்களின் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பது, பாட்டில்களில் மாட்டிக்கொள்வது, எண்ணெய் கழிவுகளால் இறப்பது இவ்வாறு பல ஆபத்தான செய்திகளை நாம் அவ்வப்போது பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். நாம் இன்று எவ்வளவுதான் வளர்ச்சி, வளர்ச்சி என்று கத்தினாலும், சுற்றுச்சூழலை பொறுத்தவரை சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டபோதே அழிவு ஆரம்பித்துவிட்டது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">