Skip to main content

''கதவு வச்ச வீடும், டிகிரி படிக்கவும் உதவுனா போதும் அண்ணா... மனநலம் பாதிச்ச அம்மாவை காப்பாத்திடுவேன்'' -பள்ளி வயதில் பாரம் சுமக்கும் சிறுமி!!

Published on 03/09/2020 | Edited on 03/09/2020

 

'' Even if the door is house ;me to study for a degree, I will save my mentally ill mother '' - a girl who carries the burden of school age !!

 

கதவு வச்ச ஒரு சின்ன வீடும், நான் டிகிரி படிக்க உதவியும் செய்தால் மனநலம் பாதிக்கப்பட்ட அம்மாவை பாதுகாப்பாக வைத்துக் காப்பாற்றுவேன் என்று சொல்கிறார் பள்ளி பருவத்திலேயே குடும்ப சுமையைத் தலையில் சுமந்து விவசாய வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றும் மண் குடிசையில் வசிக்கும் சிறுமி சத்தியா..

'மக்கள் பாதை' தோழர்கள் மூலம் தகவல் அறிந்து அந்த மனதிடமிக்க சிறுமியைக் காண புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி, கந்தர்வகோட்டை தாலுகா, பெருங்களூர் ஊராட்சி, போராம் கிராமத்திற்கு நண்பருடன் சென்றோம்..

நாம் சென்ற நேரத்தில் சிறுமி சத்தியா வீட்டில் இல்லை. ஒரு கிலோமீட்டருக்கு அப்பால் ஒரு தோட்டத்தில் கடலை பறித்துக் கொண்டிருப்பதாக தகவல் அறிந்து சிறுமியை வீட்டிற்கு வரச் சொன்னோம். செடி கொடிகள் அடர்ந்த ஒத்தையடிப் பாதையில் சென்றால் 10 அடி நீளம், 7 அடி அகலத்தில் ஒரு மண்குடிசை. பல வருடங்களுக்கு முன்பு சீரமைக்கப்பட்ட தென்னங்கீற்று, சூரியன் அந்த வீட்டுக்குள் நேரடியாக ஆட்சி செய்தது.

 

'' Even if the door is house ;me to study for a degree, I will save my mentally ill mother '' - a girl who carries the burden of school age !!


வாங்கண்ணா.. என்று அழைத்த சகோதரி, சொன்ன அடுத்த வார்த்தை நம்மை ரொம்பவே பாதித்தது.. வந்தவங்களை வீட்ல உக்கார வச்சு தண்ணி கொடுத்து அப்பறம் தான் பேசத் தொடங்கனும். ஆனால் எங்க வீட்ல உக்கார இடமில்லை அண்ணா என்று கண்கள் கலங்கியபடியே சொல்லும் போது நம்மை ரொம்பவே பாதித்தது. மரத்தடியில் நிற்கிறோம் என்று சொல்லிவிட்டோம்.

இது தான் எங்க வீடு என்று சொன்ன போது அந்த வீட்டுக்குள் சென்றால் சாப்பாட்டு பாத்திரங்கள், தண்ணீர் குடங்கள் முழுமையாக வீட்டை நிரப்பி இருந்தது. சில குச்சிகளை அடுக்கி செல்ஃபாக வைத்து அதன் மேல் கரையான் தின்ற அவரது புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. ஒற்றை மின் விளக்கு இருந்தது. இது தான் சத்தியாவின் மாளிகை..

தொடர்ந்து சத்தியாவிடம் பேசினோம்.. ''எங்க அப்பா ராமையா கஜா புயல் முடிந்து சில மாதங்களில் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துட்டார். அம்மா செல்வமணி மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார். நான்தான் குடும்பத்தை சுமக்கிறேன். இருக்கிற இந்த குடிசைக்கும் பட்டா இல்லை. ஒற்றை விளக்கு மட்டும் இருக்கிறது. பல வருடமாக இங்கேதான் இருக்கிறோம். சுற்றி உள்ளவர்கள் எங்கள் உறவுகள் தான். இந்த வீட்டில் இருந்துதான் படித்து 10 ஆம் வகுப்பில் 500 க்கு 403 மார்க் வாங்கினேன். அப்பா இறந்த பிறகு அம்மாவையும் பார்த்துக் கொண்டு லீவு நாட்களில் விவசாய கூலி வேலைக்கு போய் அதில் கிடைக்கும் சம்பளத்தில் வீட்டுச் செலவுகளையும், என் படிப்புச் செலவுகளையும் பார்த்துக் கொண்டேன். இப்படி விடுமுறை நாட்களி்ல வேலைக்கு போறதால படிக்க நேரம் கிடைப்பதில்லை அதனால ப்ளஸ்-2 வில் 323 மார்க் வாங்கினேன்.

 

'' Even if the door is house ;me to study for a degree, I will save my mentally ill mother '' - a girl who carries the burden of school age !!


மேலும் படிக்க ஆசையாக உள்ளது. புதுக்கோட்டை, தஞ்சாவூர் அரசு கல்லூரிகளுக்கு விண்ணப்பம் கொடுத்துவிட்டு காத்திருக்கிறேன். எங்கே படிக்க போனாலும் மாலை வீட்டுக்கு வந்தால்தான் அம்மாவை பார்த்துக் கொள்ள முடியும். அம்மா சிகிச்சைக்கு போகலாம் என்று அழைத்தாலும் வர மறுக்குறாங்க. அதனால அவங்கள தனியா விட்டுட்டு போக முடியாது.

 

Ad

 


வீட்டில் கதவு இல்லை. அதனால எனக்கும் எங்க அம்மாவுக்கும் பாதுகாப்பு இல்லை. இரவில் நானும் எங்க அம்மாவும் பக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் படுத்துக் கொள்வோம். எங்களுக்கு கதவு வச்ச ஒரு சின்ன வீடும், டிகிரி படிக்கவும் உதவுனா போதும் அண்ணா''  என்று கண் கலங்கி சொன்னவர் ''அண்ணா வேலை செய்ற இடத்துல தேடுவாங்க நான் கிளம்புறேன்'' என்று சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றார்.

 

 

'' Even if the door is house ;me to study for a degree, I will save my mentally ill mother '' - a girl who carries the burden of school age !!

 

அப்போது அங்கு வந்த மக்கள்பாதை பெருங்களூர் பகுதி பொறுப்பாளர் ராஜேஷ்கண்ணன் நம்மிடம்.. ''இந்தப் பக்கம் ஒரு வீடு இருப்பதை கரோனா ஊரடங்கு நிவாரணம் கொடுக்க வந்த போதுதான் பார்த்தோம். அப்பதான் இந்த சகோதரியிடம் விசாரித்த போது அவரது நிலைமையைச் சொன்னார். ரொம்ப கஷ்டமாக இருந்தது. எப்படியாவது ஒரு வீடுகட்டிக் கொடுத்துவிட்டு படிக்கவும் உதவி செய்தால் போதும். அதன்பிறகு அவரது தாயையும் தன் வாழ்க்கையையும் பார்த்துக் கொள்வார். ஏனென்றால் சத்தியா மனதிடம் உள்ளவராக இருக்கிறார். 13 வயது முதல் மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு தாயை வைத்துக் கொண்டு கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தை வழிநடத்திக் கொண்டு படித்திருக்கிறார். சத்தியாவிற்காக தாராளமனம் படைத்தவர்களிடம் மக்கள் பாதை மூலம் உதவிக்கரம் நீட்டியிருக்கிறோம் விருப்பமும், உதவி செய்யும் மனமும் கொண்டவர்கள் தாராளமாக உதவலாம். உங்கள் உதவி ஒரு குடும்பத்தை உயர்த்தும்'' என்றார்.

 

'' Even if the door is house ;me to study for a degree, I will save my mentally ill mother '' - a girl who carries the burden of school age !!


நாம் பார்த்து அறிந்த தகவல்களை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி கவனத்திற்கு கொண்டு சென்றோம்.தகவல்களை கவனமாக கேட்டுக் கொண்டவர் உடனடியாக நடவடிக்கை எடுத்து சத்தியாவிற்கான உதவிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான பணிகள் நாளையே தொடங்கும் என்றார் நம்பிக்கையாக.

உதவிகள் செய்ய மனமுள்ளவர்கள் சிறுமி சத்தியா 9751356576, மக்கள்பாதை புதுக்கோட்டை 6369696715 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு உதவிகள் செய்யலாம்.

 

 

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.