Skip to main content

 "என் அப்பா என்னை எதிர்க்கிறார்...சரி நீ போய் எடப்பாடியை ஆதரித்துக் கொள்" அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 12/09/2019 | Edited on 12/09/2019

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வெளிநாடு சுற்றுப்பயண நேரத்தில் கட்சிக்குள் பூகம்பம் கிளம்பலாம் என எதிர்பார்க்கப் பட்டது. அவரது வெளிநாட்டு பயணத்தின் போது அ.தி.மு.க.வில் எந்த அசைவும் இல்லை. அதற்கு காரணம் அ.தி.மு.க.வில் நடந்து கொண்டிருக்கும் ஒருவிதமான பங்கு பிரிப்புதான் என்கிறார்கள் கட்சியின் மேல்மட்டத்தில்.

 

admk



டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் கள்ளக்குறிச்சி பிரபு. இவரது தந்தையார் கள்ளக் குறிச்சியில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளராக பல வருடமாக கோலோச்சி வருகிறார். அ.தி. மு.க. கட்சிப் பதவி, உள்ளாட்சி அமைப்புகளில் பதவி வகித்தார். அந்த செல்வாக்கில் கார், பங்களா என கோடிகளில் புரண்டு வாழ்பவர். அவருக்கு கிடைக்காத எம்.எல்.ஏ. பதவியை பிரபுவுக்கு சசிகலா கொடுத்தார் என்பதால் திவாகரனுக்கும் டி.டி.வி.தினகரனுக்கும் விசுவாசமாக இருந்தார். ரிசர்வ் தொகுதி எம்.எல்.ஏ.வான பிரபுவும் அப்பா போல் செல்வாக்கு சேர்ப்பதில் கவனமானவர்.

 

admk



பிரபுவை எடப்பாடி அணிக்கு கொண்டு வர அவரது தந்தையார் மூலம் முயற்சி செய்தனர். அவர், அப்பா பேச்சை கேட்கவில்லை. அதனால் அந்த பொறுப்பை அமைச்சர் வேலுமணியிடம் ஒப்படைத்தார். வேலுமணியின் சிஷ்யரான தி.நகர் எம்.எல்.ஏ. சத்யா, கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. கே.எஸ்.விஜயகுமார், விருகம்பாக்கம் எம்.எல்.ஏ. ரவி ஆகியோர் வேலுமணியால் களம் இறக்கப்பட்டார்கள். இம்மூவரும் கள்ளக்குறிச்சி பிரபுவுடன் தோள் மேல் கை போட்டுக் கொண்டு சட்டமன்ற கூட்டத்தொடரின் போது நடந்து சென்ற சம்பவம் நக்கீரன் உட்பட பத்திரிகைகளிலும் அதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களிலும் செய்தியானது.

 

admk



அதன்பிறகு டி.டி.வி.தினகரனை சந்தித்த பிரபு, "என் அப்பா என்னை எதிர்க்கிறார். சபாநாயகர் கொடுத்த நோட்டீஸுக்கு எதிராக வழக்கை நடத்த வழக்கறிஞர் கபில்சிபில் லட்சக்கணக்கில் பணம் கேட்கிறார். அதை தர முடியவில்லை' என புலம்ப, "சரி நீ போய் எடப்பாடியை ஆதரித்துக் கொள்' என தினகரன் பெர்மிஷன் தர, எடப்பாடியை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார் பிரபு. தனது அணிக்கு வந்த பிரபுவுக்கு வெயிட்டாக ஒரு நன்கொடை தரவேண்டும் என நினைத்த எடப்பாடி, கொடைக்கானலில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்காக காலனி ஒன்றை உருவாக்கி வருகிறார். அதில் பிரபுவுக்கு ஒரு இடத்தை ஒதுக்கீடு செய்தார். கொடைக்கானல் வட்டம் வில்பட்டி கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட கோவில்பட்டியில் சர்வே எண்: 1751/1-ல் உள்ள ஒரு ஹெக்டேர் 57 ஏர்ஸ் நிலத்தில் 10 ஏர்ஸ் 12.0 ள்வ்ன் ஏர்ஸ் அகலமும், 23.0 ஏர்ஸ் நீளமும் கொண்ட நிலத்தை உழ்..கே.கணேஷ் குமார் என்பவரிடமிருந்து கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபுவுக்கு வாங்கிக் கொடுத்துள்ளார் எடப்பாடி.

 

admk



இதே கணேஷ்குமார் தி.நகர் சத்யா, கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. விஜயகுமார், விருகம்பாக்கம் எம்.எல்.ஏ. விருகை ரவி ஆகியோருக்கும் ஆளுக்கு 25 சென்ட் வீதம் நிலத்தை கொடுத்துள்ளார். பிரபு அந்த பட்டியலில் இடம் பெறும் நான்காவது எம்.எல்.ஏ. என்கிறது அ.தி.மு.க. வட்டாரம். ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி 2019ஆம் ஆண்டு பிரபுவுக்கு இந்த நிலம் விற்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த பல எம்.எல்.ஏ.க்களுக்கு வில்பட்டி எல்லைக் குட்பட்ட கோவில்பட்டியில் ஆளுக்கு 25 சென்ட் என நிலம் எடப்பாடியால் வழங்கப்பட்டுள்ளது. சிரமமான காலத்தில் எடப்பாடிக்கு ஆதரவு அளித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு அ.தி.மு.க. கட்சி நிதியில் இருந்து அங்கு சொகுசு உல்லாச பங்களாக்கள் கட்டித் தர இந்த ஆட்சி முடி வதற்குள் ஏற்பாடு செய்யப்படும் என எடப்பாடி உத்திரவாதம் அளித்துள்ளதாக அ.தி.மு.க. வட்டாரம் தெரிவிக்கின்றது.

 

admk



இந்த வேலைகளை செய்யும் அமைச்சர் வேலுமணியின் தொண்டரான தி.நகர் சத்யா சென்னை நகரம் முழுவதும் சீட்டாட்ட க்ளப்கள், மசாஜ் விடுதிகள் நடத்திக்கொள்ள காவல்துறை உதவியுடன் அமைச்சர் வேலுமணி அனுமதித்துள்ளார். சென்னை கொளத்தூர் அருகே உள்ள சூதாட்ட விடுதியில் ஒரு நபர் அங்கேயே தற்கொலை செய்து கொண்டார். அந்த விவரம் சமூக வலைத்தளங்களில் பரவியது. அதுகுறித்த நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. பிரபல ரவுடியான சி.டி.மணி சத்யாவுக்காக கட்ட பஞ்சாயத்துகள் பேசுகிறார் என தகவல்கள் பரவுகின்றன. ஆனால் சி.டி.மணியை கைது செய்ய போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எல்லாம் அமைச்சர் வேலுமணியும் சத்யாவும் நெருக்கமாக இருப்பது தான் காரணம் என்கிறது அ.தி.மு.க. வட்டாரம்.


இதற்கிடையே சில எம்.எல்.ஏ.க்கள் சென்னைக்கு பக்கத்தில் நிலம் வேண்டுமென்று கேட்க, அவர்களுக்கு தி.நகர் சத்யா கும்மிடிப்பூண்டி ஆரம்பாக்கத்தில் பக்கிங்காம் கால்வாய் கடலோடு சேருமிடத்தில் வைத்துள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர்கள் கொண்ட ரிசார்ட்டில் சொகுசு வீடு கட்ட எடப்பாடி நிலம் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார். எம்.எல்.ஏ.க்கள், சென்னை மாநகராட்சியைச் சேர்ந்த அதிகாரிகள் என பலருக்கும் தனது ரிசார்ட் நிலத்தை விற்று வருகிறார் தி.நகர் சத்யா. மாநகராட்சி அதிகாரிகள் சத்யா சொல்லும் விலையில்தான் நிலத்தை வாங்க வேண்டும் என நிர்பந்தமும் தரப்படுகிறது என நொந்து போயுள்ளனர் என்கிறார்கள் அ.தி.மு.க.வினரும் சென்னை மாநகராட்சியை சேர்ந்தவர்களும்.

இவையெல்லாம் தனியார் நில விற்பனைகள். இதைப் பற்றி வருமான வரித்துறைதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். எம்.எல்.ஏ.க்களுக்காக எடப்பாடி கட்டிக் கொடுக்கும் சொகுசு விடுதிகள் பற்றி வருமானவரித்துறை ஒன்றும் செய்யாது என எம்.எல்.ஏ.க்கள் தெம்பாக இருக்கிறார்கள். ஆனால் இந்த விவரங்கள் லீக் ஆகிவிட்டன. இந்த விவரங்களை வைத்து சமூக ஆர்வலர்கள் "வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தார்கள்' என அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்குப் போடுவார்கள் என்கிற பயம் மட்டும் இருக்கிறது. அப்படி ஒரு வழக்கு வந்தாலும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது வந்த வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்ப்பு வழக்கு உயர்நீதிமன்றத்திலேயே ஆதாரம் இல்லை என தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறையால் புஸ்வாணமாக்கப்பட்டது. அதுபோல செய்யலாம் என அ.தி.மு.க. தலைமை எம்.எல்.ஏ.க்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது என்கிறது அ.தி.மு.க. வட்டாரம்.

இதுபற்றி தி.நகர் சத்யா, கள்ளக்குறிச்சி பிரபு, விருகை ரவி, கும்மிடிப்பூண்டி விஜயகுமார் ஆகியோரை கேட்டோம். "எல்லாம் பொய். எடப்பாடி சொகுசு விடுதிகள் கட்டித் தருகிறேன் என வாக்குறுதி அளிக்கவில்லை. அதற்காக எந்த நிலத்தையும் நாங்கள் வாங்கவில்லை'' என மறுக்கிறார்கள். அ.தி.மு.க. தரப்பிலோ புது கிஃப்ட் உற்சாகம் தெரிகிறது.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.