Skip to main content

 "என் அப்பா என்னை எதிர்க்கிறார்...சரி நீ போய் எடப்பாடியை ஆதரித்துக் கொள்" அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 12/09/2019 | Edited on 12/09/2019

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வெளிநாடு சுற்றுப்பயண நேரத்தில் கட்சிக்குள் பூகம்பம் கிளம்பலாம் என எதிர்பார்க்கப் பட்டது. அவரது வெளிநாட்டு பயணத்தின் போது அ.தி.மு.க.வில் எந்த அசைவும் இல்லை. அதற்கு காரணம் அ.தி.மு.க.வில் நடந்து கொண்டிருக்கும் ஒருவிதமான பங்கு பிரிப்புதான் என்கிறார்கள் கட்சியின் மேல்மட்டத்தில்.

 

admk



டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் கள்ளக்குறிச்சி பிரபு. இவரது தந்தையார் கள்ளக் குறிச்சியில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளராக பல வருடமாக கோலோச்சி வருகிறார். அ.தி. மு.க. கட்சிப் பதவி, உள்ளாட்சி அமைப்புகளில் பதவி வகித்தார். அந்த செல்வாக்கில் கார், பங்களா என கோடிகளில் புரண்டு வாழ்பவர். அவருக்கு கிடைக்காத எம்.எல்.ஏ. பதவியை பிரபுவுக்கு சசிகலா கொடுத்தார் என்பதால் திவாகரனுக்கும் டி.டி.வி.தினகரனுக்கும் விசுவாசமாக இருந்தார். ரிசர்வ் தொகுதி எம்.எல்.ஏ.வான பிரபுவும் அப்பா போல் செல்வாக்கு சேர்ப்பதில் கவனமானவர்.

 

admk



பிரபுவை எடப்பாடி அணிக்கு கொண்டு வர அவரது தந்தையார் மூலம் முயற்சி செய்தனர். அவர், அப்பா பேச்சை கேட்கவில்லை. அதனால் அந்த பொறுப்பை அமைச்சர் வேலுமணியிடம் ஒப்படைத்தார். வேலுமணியின் சிஷ்யரான தி.நகர் எம்.எல்.ஏ. சத்யா, கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. கே.எஸ்.விஜயகுமார், விருகம்பாக்கம் எம்.எல்.ஏ. ரவி ஆகியோர் வேலுமணியால் களம் இறக்கப்பட்டார்கள். இம்மூவரும் கள்ளக்குறிச்சி பிரபுவுடன் தோள் மேல் கை போட்டுக் கொண்டு சட்டமன்ற கூட்டத்தொடரின் போது நடந்து சென்ற சம்பவம் நக்கீரன் உட்பட பத்திரிகைகளிலும் அதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களிலும் செய்தியானது.

 

admk



அதன்பிறகு டி.டி.வி.தினகரனை சந்தித்த பிரபு, "என் அப்பா என்னை எதிர்க்கிறார். சபாநாயகர் கொடுத்த நோட்டீஸுக்கு எதிராக வழக்கை நடத்த வழக்கறிஞர் கபில்சிபில் லட்சக்கணக்கில் பணம் கேட்கிறார். அதை தர முடியவில்லை' என புலம்ப, "சரி நீ போய் எடப்பாடியை ஆதரித்துக் கொள்' என தினகரன் பெர்மிஷன் தர, எடப்பாடியை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார் பிரபு. தனது அணிக்கு வந்த பிரபுவுக்கு வெயிட்டாக ஒரு நன்கொடை தரவேண்டும் என நினைத்த எடப்பாடி, கொடைக்கானலில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்காக காலனி ஒன்றை உருவாக்கி வருகிறார். அதில் பிரபுவுக்கு ஒரு இடத்தை ஒதுக்கீடு செய்தார். கொடைக்கானல் வட்டம் வில்பட்டி கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட கோவில்பட்டியில் சர்வே எண்: 1751/1-ல் உள்ள ஒரு ஹெக்டேர் 57 ஏர்ஸ் நிலத்தில் 10 ஏர்ஸ் 12.0 ள்வ்ன் ஏர்ஸ் அகலமும், 23.0 ஏர்ஸ் நீளமும் கொண்ட நிலத்தை உழ்..கே.கணேஷ் குமார் என்பவரிடமிருந்து கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபுவுக்கு வாங்கிக் கொடுத்துள்ளார் எடப்பாடி.

 

admk



இதே கணேஷ்குமார் தி.நகர் சத்யா, கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. விஜயகுமார், விருகம்பாக்கம் எம்.எல்.ஏ. விருகை ரவி ஆகியோருக்கும் ஆளுக்கு 25 சென்ட் வீதம் நிலத்தை கொடுத்துள்ளார். பிரபு அந்த பட்டியலில் இடம் பெறும் நான்காவது எம்.எல்.ஏ. என்கிறது அ.தி.மு.க. வட்டாரம். ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி 2019ஆம் ஆண்டு பிரபுவுக்கு இந்த நிலம் விற்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த பல எம்.எல்.ஏ.க்களுக்கு வில்பட்டி எல்லைக் குட்பட்ட கோவில்பட்டியில் ஆளுக்கு 25 சென்ட் என நிலம் எடப்பாடியால் வழங்கப்பட்டுள்ளது. சிரமமான காலத்தில் எடப்பாடிக்கு ஆதரவு அளித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு அ.தி.மு.க. கட்சி நிதியில் இருந்து அங்கு சொகுசு உல்லாச பங்களாக்கள் கட்டித் தர இந்த ஆட்சி முடி வதற்குள் ஏற்பாடு செய்யப்படும் என எடப்பாடி உத்திரவாதம் அளித்துள்ளதாக அ.தி.மு.க. வட்டாரம் தெரிவிக்கின்றது.

 

admk



இந்த வேலைகளை செய்யும் அமைச்சர் வேலுமணியின் தொண்டரான தி.நகர் சத்யா சென்னை நகரம் முழுவதும் சீட்டாட்ட க்ளப்கள், மசாஜ் விடுதிகள் நடத்திக்கொள்ள காவல்துறை உதவியுடன் அமைச்சர் வேலுமணி அனுமதித்துள்ளார். சென்னை கொளத்தூர் அருகே உள்ள சூதாட்ட விடுதியில் ஒரு நபர் அங்கேயே தற்கொலை செய்து கொண்டார். அந்த விவரம் சமூக வலைத்தளங்களில் பரவியது. அதுகுறித்த நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. பிரபல ரவுடியான சி.டி.மணி சத்யாவுக்காக கட்ட பஞ்சாயத்துகள் பேசுகிறார் என தகவல்கள் பரவுகின்றன. ஆனால் சி.டி.மணியை கைது செய்ய போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எல்லாம் அமைச்சர் வேலுமணியும் சத்யாவும் நெருக்கமாக இருப்பது தான் காரணம் என்கிறது அ.தி.மு.க. வட்டாரம்.


இதற்கிடையே சில எம்.எல்.ஏ.க்கள் சென்னைக்கு பக்கத்தில் நிலம் வேண்டுமென்று கேட்க, அவர்களுக்கு தி.நகர் சத்யா கும்மிடிப்பூண்டி ஆரம்பாக்கத்தில் பக்கிங்காம் கால்வாய் கடலோடு சேருமிடத்தில் வைத்துள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர்கள் கொண்ட ரிசார்ட்டில் சொகுசு வீடு கட்ட எடப்பாடி நிலம் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார். எம்.எல்.ஏ.க்கள், சென்னை மாநகராட்சியைச் சேர்ந்த அதிகாரிகள் என பலருக்கும் தனது ரிசார்ட் நிலத்தை விற்று வருகிறார் தி.நகர் சத்யா. மாநகராட்சி அதிகாரிகள் சத்யா சொல்லும் விலையில்தான் நிலத்தை வாங்க வேண்டும் என நிர்பந்தமும் தரப்படுகிறது என நொந்து போயுள்ளனர் என்கிறார்கள் அ.தி.மு.க.வினரும் சென்னை மாநகராட்சியை சேர்ந்தவர்களும்.

இவையெல்லாம் தனியார் நில விற்பனைகள். இதைப் பற்றி வருமான வரித்துறைதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். எம்.எல்.ஏ.க்களுக்காக எடப்பாடி கட்டிக் கொடுக்கும் சொகுசு விடுதிகள் பற்றி வருமானவரித்துறை ஒன்றும் செய்யாது என எம்.எல்.ஏ.க்கள் தெம்பாக இருக்கிறார்கள். ஆனால் இந்த விவரங்கள் லீக் ஆகிவிட்டன. இந்த விவரங்களை வைத்து சமூக ஆர்வலர்கள் "வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தார்கள்' என அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்குப் போடுவார்கள் என்கிற பயம் மட்டும் இருக்கிறது. அப்படி ஒரு வழக்கு வந்தாலும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது வந்த வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்ப்பு வழக்கு உயர்நீதிமன்றத்திலேயே ஆதாரம் இல்லை என தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறையால் புஸ்வாணமாக்கப்பட்டது. அதுபோல செய்யலாம் என அ.தி.மு.க. தலைமை எம்.எல்.ஏ.க்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது என்கிறது அ.தி.மு.க. வட்டாரம்.

இதுபற்றி தி.நகர் சத்யா, கள்ளக்குறிச்சி பிரபு, விருகை ரவி, கும்மிடிப்பூண்டி விஜயகுமார் ஆகியோரை கேட்டோம். "எல்லாம் பொய். எடப்பாடி சொகுசு விடுதிகள் கட்டித் தருகிறேன் என வாக்குறுதி அளிக்கவில்லை. அதற்காக எந்த நிலத்தையும் நாங்கள் வாங்கவில்லை'' என மறுக்கிறார்கள். அ.தி.மு.க. தரப்பிலோ புது கிஃப்ட் உற்சாகம் தெரிகிறது.

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

டி.டி.வி. தினகரனின் வேட்புமனு ஒரு மணி நேரம் நிறுத்திவைப்பு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TTV Dhinakaran nomination is on hold for an hour

தேனி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை குறித்த கூட்டம் தேனி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தலைமையில் அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டு நடைபெற்றது.

தேனி நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 43 பேர் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இதில் 33வது எண்ணில் வந்த டி.டி.வி. தினகரனின் வேட்பு மனுவிற்கு திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் ஆணையம் இணையதளத்தில் காலை 11.30 மணி வரை டிடிவி தினகரனின் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படாததால் அதில் உள்ள விவரங்கள் சரி பார்க்க முடியாததால் அவரின் வேட்புமனுவை நிறுத்தி வைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். இதனால் அமமுக கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று டிடிவி தினகரன் வேட்பு மனு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதனை சரிபார்க்க எதிர்க்கட்சிகளுக்கு ஒரு மணி நேரம் கால அவகாசம் கொடுக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ஷஜீவனா தெரிவித்தார். இதனால் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பு இருந்து வருகிறது.