Skip to main content

ஸ்டாலின் முதல்வரானால் என்ன பண்றது... அதிமுகவை விட்டு பாமக போகக் கூடாது... திமுகவிற்கு எதிராக எடப்பாடியின் திட்டம்!

Published on 27/02/2020 | Edited on 27/02/2020

அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து பா.ம.க. வெளியேறிவிடாமல் பாதுகாப்பதில் கவனமாக இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதக் கூட்டம் கடந்த வாரம் முடிந்த நிலையில் மூத்த அமைச்சர்கள் ஓ.பி.எஸ்., செங்கோட்டையன், ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, உதயக்குமார், செல்லூர் ராஜு உள்ளிட்டவர்களிடம் இயல்பாக பேசிக்கொண்டிருந்தார் எடப்பாடி. பட்ஜெட் விவாதங்களில் தி.மு.க. முன்வைத்த சிலபல விசயங்கள் குறித்த கமெண்ட் அங்கே எதிரொலித்திருக்கிறது.

 

dmk



குறிப்பாக, குடியுரிமை சட்டத்தால் யாருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது? என சட்டமன்றத்தில் அண்ணன் எடப்பாடி எழுப்பிய கேள்விகளுக்கு மறுநாள் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்தால் அதனை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து நிறைய பாயிண்டுகளை தயாரித்து வந்தோம். ஆனால், அதற்கான சந்தர்ப்பத்தை நமக்கு ஸ்டாலின் கொடுக்கவே இல்லை'' என அமைச்சர்கள் சொல்ல, அதனை ஆமோதித்துள்ளார் எடப்பாடி.

துறை ரீதியிலான மானியக்கோரிக்கைகளை நிறைவேற்ற மார்ச்-15 முதல் மீண்டும் சட்ட மன்றத்தை கூட்டுவது பற்றியும் விவாதித்தனர். இதனையடுத்து அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகளை குறித்தும், ராஜ்யசபா தேர்தல் குறித்தும் பேசப்பட்டிருக்கின்றது.

இது குறித்து அ.தி.மு.க. மேலிட தொடர்பாளர்களிடம் விசாரித்தபோது, ராஜ்யசபா தேர்தலில் 3 இடங்களை நம்மால் ஜெயிக்க முடியும். ஆனால், முந்தைய தேர்தலில் பா.ம.க.வுக்கு கொடுத்தது போல தற்போது ஒரு இடத்தை கேட்டு பா.ஜ.க.வும் தே.மு.தி.க.வும் நெருக்கடி கொடுக்கும். அதற்கு ஒப்புக்கொள்ளக் கூடாது. மூன்று இடங்களிலும் அ.தி.மு.க.தான் போட்டியிட வேண்டும். லோக்சபாவில் நமக்கு ஒரே ஒரு எம்.பி. இருக்கும் நிலையில் ராஜ்யசபாவில் அ.தி.மு.க.வுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை தோழமைக் கட்சிகளுக்கு தாரை வார்த்தால் கட்சிக்குள் மனக்கசப்புகள் உருவாகும் என அமைச்சர்கள் சொன்னதை ஏற்றுக்கொண்டிருக்கிறார் எடப்பாடி.

 

pmk



அப்போது, அ.தி.மு.க. கூட்டணியை விட்டு பா.ம.க. விலகிவிடக் கூடாது என்பதற்காகத்தான் போன முறை பா.ம.க.வுக்கு ஒரு ராஜ்ய சபா சீட்டை ஒதுக்கினோம். அதேசமயம், சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வலிமையாக உள்ள வட தமிழகத்தில் அதனை நாம் எதிர்கொள்ள நம் கூட்டணியில் பா.ம.க. இருப்பது அவசியம். சட்டமன்றத் தேர்தலின் போது நேரடி அரசியலில் ரஜினி இறங்கினால் அப்போது கூட்டணி கணக்குகள் தாறுமாறாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ரஜினி பின்னால் பா.ம.க.வும் பா.ஜ.க.வும் போவதற்கும் வாய்ப்பு உண்டு. பா.ம.க. அப்படி ஒரு நிலையை எடுத்தால் வட தமிழகத்தில் நமக்கு சிக்கல்தான் என சொல்லியிருக்கிறார் எடப்பாடி'' என்கிறார்கள்.

இதற்கிடையே, ரஜினியுடன் பா.ம.க. நட்பை வளர்த்து வருவதையறிந்து அவ்வப்போது டாக்டர் ராமதாசிடம் நலம் விசாரித்து வருகிறார் எடப்பாடி. அதேசமயம், அ.தி.மு.க.வை விட்டு பா.ம.க. விலகி ரஜினியை ஆதரித்து விடக்கூடாது என்பது மூத்த அமைச்சர்கள் இருவர் மூலம் ராமதாசிடம் சொல்லப்பட்டு வருகிறது. இதனால் பா.ம.க.வின் கிச்சன் கேபினெட்டில் சட்டமன்றத் தேர்தல் பற்றி அடிக்கடி விவாதங்களும் நடக்கின்றன.

 

admk



பா.ம.க.வின் உள்வட்டங்களிடம் பேசியபோது, சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை தி.மு.க. கைப்பற்ற விட்டு விடக் கூடாது என டாக்டர் ராமதாசும் அன்புமணி ராமதாசும் அழுத்தமாக இருக்கிறார்கள். ஸ்டாலின் முதல்வராகி விட்டால் அன்புமணியின் முதல்வர் கனவு நிறைவேறாது. அதாவது, 2026 தேர்தலில் அன்புமணியை முதல்வராக்க 2021 தேர்தலிருந்தே அதற்கான அரசியலைத் துவக்க வேண்டும் என்பது பா.ம.க.வின் அஜெண்டா! ஆனால், 2021-ல் ஸ்டாலின் முதல்வராகி விட்டால் அதன் பிறகு தி.மு.க. அசைக்க முடியாத அரசியல் சக்தியாக மாறும்.


அதனால், தி.மு.க.வை ஆட்சிக்கு வராமல் 2021-ல் தடுத்துவிட்டால் அடுத்த ஐந்தாண்டுகளில் ஸ்டாலின் அரசியல் ரீதியாக பலகீனமாகிவிடுவார் என டாக்டர் ராமதாசும் அன்புமணியும் கணக்குப் போட்டுள்ளனர். அதற்காக பா.ம.க.வின் அரசியல் நிலைப்பாடுகளை அ.தி.மு.க., பா.ஜ.க., ரஜினி என்கிற மூன்று வட்டங்களை மையப்படுத்தியே அடிக்கடி ஆலோசிக்கிறார்கள். மத்தியில் அன்புமணிக்கு அமைச்சர் பதவி கிடைத்தால் சட்டமன்றத் தேர்தலின் போது பா.ஜ.க.வையும் மனதில் வைத்தே கூட்டணி அமைப்பது. அமைச்சர் பதவி கிடைக்கவில்லை எனில் பா.ம.க.வை மட்டுமே முன்னிறுத்தி கூட்டணி பேசுவது என்கிற நிலைப்பாட்டுக்கும் வந்திருக்கிறார்கள்.


அந்த வகையில், ரஜினி கட்சி ஆரம்பிக்கிற நிலையில், அவருடன் கூட்டணி வைப்பது பா.ம.க.வுக்கு பலம் என திட்டமிடுகிறார் அன்புமணி. ஆனால், ராமதாசோ, அ.தி. மு.க.வா? ரஜினியா? என்கிற போது அ.தி.மு.க. கூட்டணி தான் சரியாக இருக்கும் என கருதுகிறார். காரணம், ரஜினி இன்னும் அரசியல் ரீதியாக தன்னை நிரூபிக்கவில்லை என்பதுதான். டாக்டரின் இந்த மனநிலையை அறிந்து, ரஜினியுடனான கூட்டணிதான் சரியாக இருக்கும் என தேவைப்படுகிற போதெல்லாம் அவரிடம் வலியுறுத்தி வருகிறது பா.ம.க. கிச்சன் கேபினெட்! பா.ம.க.வின் இப்படிப்பட்ட அரசியலை உள்வாங்கியிருப்பதால்தான் பா.ம.க.வை கெட்டியாகப் பிடித்துக் கொள்ள டாக்டரோடு அழுத்தமான தொடர்பில் இருக்கிறது அ.தி.மு.க. தலைமை! என விவரிக்கின்றனர்.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.