Skip to main content

அதிமுகவை வழிநடத்தப்போவது சசிகலாதான்! மிகப்பெரிய அரசியல் சரிவில் EPS விழப்போகிறார்! -நாஞ்சில் சம்பத் கடும் தாக்கு!

Published on 19/01/2021 | Edited on 27/01/2021
dddd

 

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (18.01.2021) டெல்லி சென்றார். மாலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். இன்று காலை மோடியை சந்தித்துப் பேசினார்.

 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா உடனான சந்திப்பில் அரசியல் எதுவும் பேசப்படவில்லை. தமிழகத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளேன் என தெரிவித்துள்ளார். 

 

இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திற்கு கருத்து தெரிவித்துள்ள அரசியல் விமர்சகர் நாஞ்சில் சம்பத், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்தில் அவர் நினைத்தது நடக்கவில்லை என்றே நான் கருதுகிறேன். அரசியல் ரீதியாக எதையும் விவாதிக்கவில்லை, பேசவில்லை என்று அவர் சொல்லியிருப்பது அண்டப் புழுகு, ஆகாசப் புழுகு.

 

பாஜக என்கிற கட்சி தன்னுடைய கட்டுப்பாட்டில் அதிமுகவை வைத்திருக்க வேண்டும் என்று கருதுகிறது. எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக பாஜக ஏற்கவில்லை. இவர்தான் முதலமைச்சர் என்று எடப்பாடி பழனிசாமியை அதிமுக வழிமொழிந்ததற்குப் பிறகு பாஜக அதனை வழிமொழியவில்லை. 

 

தமிழ்நாட்டின் முதலமைச்சர் வேட்பாளரை டெல்லி தலைமை அறிவிக்கும் என்று அடுத்த நிமிடத்திலேயே அறிக்கை விட்டார் தமிழக பாஜக தலைவர். ஆனால் இன்றைக்கு அதைப்பற்றி எதுவும் பேசவில்லை, அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது அண்டப் புழுகு என நான் சொல்வதற்கு காரணம், தேர்தல் தேதி அறிவிக்கிற நாள் நெருங்கி வருகிற காலக்கட்டத்தில் திட்டங்கள் குறித்து விவாதிப்பதற்கும், கோரிக்கைகளை வைப்பதற்கும் டெல்லி சென்றேன் என்று சொல்வதை ஏற்க முடியாது. திட்டங்களை நிறைவேற்றவும், கோரிக்கைகளை வைப்பதற்கும் இது உகந்த நேரமல்ல. 

 

ஆட்சியில் அந்திசாயும் நேரத்தில் இருக்கிற எடப்பாடி பழனிசாமி இனிமேல் தமிழ்நாட்டில் திட்டங்களைத் தொடங்கவும், அதனை நிறைவேற்றவும் காலம் வாய்ப்பு கொடுக்காது. பாஜகவும் அதை இவரிடத்தில் எதிர்பார்க்காது. ஆகவே இவர் என்ன நினைத்து அங்கு சென்றாரோ, நினைத்தது நடக்கவில்லை என்றே நான் கருதுகிறேன். திட்டமிட்டே முதலமைச்சர் ஒரு உண்மையை மூடி மறைத்திருக்கிறார். 

 

தமிழ்நாட்டிற்கு திட்டங்கள் குறித்துதான் பேசியிருந்தால் எந்த திட்டங்கள் குறித்துப் பேசினார். இன்று காலை பத்திரிகை செய்தி, தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிலுவைத் தொகை ரூபாய் 19 ஆயிரம் கோடி என்று தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மத்திய நிதி அமைச்சர் கூட்டத்தில் பேசியிருப்பதாக வந்திருக்கிறது. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய அந்த நிலுவைத் தொகை பற்றி எடப்பாடி பேசியிருக்கிறாரா? 

 

dddd

 

சசிகலா வெளியே வந்தாலும் அதிமுகவில் எந்த பாதிப்பும் ஏற்படாது என கூறியிருக்கிறாரே? 

 

சசிகலா வந்தால் அதிமுகவில் எந்த மாற்றமும் இருக்காது என்று சொல்வது, இவர் தப்பிப்பதற்காக சொல்லக்கூடிய வார்த்தைதான். சசிகலா வந்தால் அதிமுகவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். ஒரு மிகப்பெரிய அரசியல் சரிவில் இவர் விழப்போகிறார். முதலமைச்சர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு ஆபத்து வரப்போகிறது. நன்றி கொன்ற மகற்கு உரிய தண்டனையை இவர் அனுபவிக்கப்போகிறார். அதனால் சசிகலாவை ஏற்க மனமில்லாத அருவடைய நிலையை அவர் தெளிவுப்படுத்தியிருக்கிறாரேயொழிய வேறொன்றும் இல்லை. 

 

சசிகலா சிறையில் இருந்து திரும்ப வந்ததற்குப் பிறகு அந்தக் கட்சியை வழிநடத்தப்போவது அவர்தான். அது நடக்கப்போகிறது. ஓ.பி.எஸ். என்று சொல்லக்கூடிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் அதற்கான வேலைகளில்தான் இப்போது கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமியினுடைய அரசியல் அஸ்தமனமாகப் போகிறது. பொறுத்திருந்து பாருங்கள். 

 

சசிகலா அதிமுகவில் இணைய 100 சதவிகிதம் வாய்ப்பே இல்லை என தெரிவித்திருக்கிறாரே? 

 

ஜெயலலிதா இருந்தபோதே அவர் அதிமுகவில் இருந்தாரா இல்லையா என்பது இப்போது கேள்வி அல்ல. சசிகலாதான் கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்களை அழைத்து கலந்தாலோசித்து இவரை முதலமைச்சராக்கியவர். ஆனால் அதிமுக எம்எல்ஏக்கள்தான் தன்னை தேர்ந்தெடுத்தார்கள், சசிகலாவுக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்று சொன்ன அந்த நிமிடத்திலேயே இவர் நன்றி கொன்றிருக்கிறார் என்பதைவிட, நாளை நடக்கப்போவதை அனுமானிப்பதற்கான ஆற்றலும் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. 

 

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.