Skip to main content

அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் சொத்து பற்றி உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்! பயத்தில் அதிமுகவினர்!

Published on 19/08/2019 | Edited on 19/08/2019

அமைச்சரவையிலிருந்து மணிகண்டன் நீக்கப்பட்டதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மிரட்சியாகத்தான் பார்க்கிறார் கள் ஜூனியர் அமைச்சர்கள். அதேசமயம், "அமைச்சரவையை மாற்றியமைத்து புதியவர் களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்' என்கிற அழுத்தத்தை கொடுக்கத் துவங்கியுள்ள சீனியர் எம்.எல்.ஏ.க்கள், முதல்வரின் வெளிநாட்டு டூருக்கு முன்பாக இதனை எதிர்பார்க்கிறார்கள். அமெரிக்கா மற்றும் பிரிட்டன் பயணத்தை மிக முக்கியமாக கருதும் எடப்பாடி, வெளிநாட்டி லிருந்து தமிழகம் திரும்பும்வரை தனது பொறுப்பு களை ஒப்படைப்பது குறித்துதான் இறுதி முடிவை எடுக்க முடியாமல் தவித்தபடி இருக்கிறாராம்.
 

admk



நம்மிடம் பேசிய சீனியர் அ.தி.மு.க.வினர், "தமிழகத்தை விட்டு 7 நாட்களுக்கு அதிகமாக முதல்வர் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டால் அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் சீனியர் அமைச்சர்களில் ஒருவரிடமோ பலரிடமோ முதல்வரின் பொறுப்புகள் பகிர்ந்தளிக் கப்படுவது மரபு. அதற்கேற்ப சில ஏற்பாடுகளை முதல்வர் செய்துவிட்டு பயணத்தை மேற்கொள்வார். அந்த வகையில், எடப்பாடிக்கு அடுத்த நிலையில் துணை முதல்வர் அந் தஸ்தில் இருக்கும் ஓ.பி.எஸ்.சிடம் பொறுப்புகளை கொடுப்பதுதான் இயல்பானது. அப்பல் லோவில் அட்மிட்டாகி செயல்படாமல் ஜெய லலிதா இருந்த போது, அவர் கவனித்து வந்த பொறுப்புகள் ஓ.பி.எஸ்.சுக்கு ஒரு கட்டத்தில் மாற்றப்பட்டன. இதற்கான உத்தரவை அன்றைய கவர்னர் வித்யாசாகர் பிறப்பித்தார்.

 

admk



இப்போதோ "ஓ.பி.எஸ்.சிடம் பொறுப்புகளை கொடுத்துவிட்டுச் செல்லுங்கள்' என பா.ஜ.க. தலைமை அழுத்தம் கொடுத்த நிலையிலும் அதற்கு உடன்பட மறுத்த எடப்பாடி, "வெளிநாடுகளில் இருந்தபடியே என்னால் நிர்வாகத்தை கவனிக்க முடியும். நேரில் நான் செல்ல வேண்டிய இடங்களுக்கு ஓ.பி.எஸ். உள்ளிட்ட சீனியர் அமைச்சர்களில் யாரேனும் ஒருவர் செல்லட்டும். மற்றபடி இந்த இரண்டு வாரங்களில் எந்த ஒரு கொள்கை முடிவும் எடுக்கப்பட வேண்டிய நிலை வரப்போவதில்லை. ஒரு வேளை அவசர முடிவு எடுக்க வேண்டிய சம்பவம் ஏதேனும் நிகழ்ந்தால் என்னிடம் கலந்தாலோசித்து முடிவெடுக்கலாமே!


இன்றைய டெக்னாலஜியில் எங்கிருந்து வேண்டுமானாலும் நிர்வாகத்தை கவனிக்க முடியும். அதனால் பொறுப்புகளை மாற்றி யமைக்க தேவையில்லையே என பிடிவாதம் பிடிக்கிறார். மரபுப்படி பொறுப்புகளை ஒப்ப டைக்க வேண்டுமெனில் ஓ.பி.எஸ்.சிடம் கொடுக்க தற்போது வரை தயாரில்லை. ஆனால், டெல்லியிலிருந்து வரும் கட்டளை யின் அழுத்தம் அதிகரித்திருப்பதால் முடிவெடுக்க முடியாமல் தடுமாறு கிறார். இந்த நிலையில்தான், "எங்களது இலாகாவை மாற்றிக் கொடுங்கள்' என அமைச்சர்கள் சிலரும், "எங்களுக்கு அமைச்சர் பதவி கொடுங்கள்' என எம்.எல்.ஏ.க்கள் சிலரும் எடப்பாடியிடம் கொடி பிடிக்கிறார்கள். அதற்கு எடப்பாடி தந்த பதில் அவர்களை மிரள வைத்துவிட்டது''‘என்கின்றனர்.

இதுகுறித்து மேலும் நாம் விசாரித்தபோது, சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில் 15 சதவீதம் பேர்தான் அமைச்சரவையில் இடம் பெற முடியும். அந்த வகையில் தமிழக அமைச்சரவையின் எண்ணிக்கை அதிகபட்சம் 35 தான். தற்போது எடப்பாடியின் கேபினெட்டில் 31 பேர் அமைச்சர்களாக இருப்பதால் இன்னும் 4 பேர் அமைச்சராக வாய்ப்பு உண்டு. இதனை நினைத்துதான் வன்னியர், நாடார், தலித் சமூக எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர் பதவி கேட்டு எடப்பாடியை அணுகியுள்ளனர். அதேபோல, ஜூனியர் அமைச்சர்கள் 5 பேர், பெண் அமைச்சர்கள் 2 பேர் தங்களது இலாகாவை மாற்றிக்கொடுங்கள் என வலியுறுத்தியுள்ளனர்.

அதற்கு எடப்பாடி, "உங்களில் ஓரிருவரைத் தவிர மற்ற அமைச்சர்களைப் பற்றியும் , அனைத்து எம்.எல்.ஏ.க்களைப் பற்றியும் பல்வேறு தகவல்களை சேகரித்து வைத்திருக்கிறேன். ஒவ்வொரு துறையிலும் எத்தனை கோடிகளுக்கு டெண்டர் விடப்படுகிறது? அதில் அமைச்சர்கள் தொடங்கி எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் வரை யார், யாருக்கு எவ்வளவு பங்கு பிரிக்கப்படுகிறது? அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவரின் சொத்து விபரங்கள் என்ன? பினாமிகள் யார்? என்பதெல்லாம் எனக்கு தெரியும். ஒவ்வொருவருக்கும் தனி ரெக்கார்ட் போடுமளவுக்கு தகவல்கள் இருக்கின்றன. அதனால், அமைச்சர் பதவி கேட்டு தொல்லை கொடுக்கவோ, துறையை மாத்திக் கொடுக்கச்சொல்லி நச்சரிப்பதோ கூடாது. எல்லோரும் செல்வச் செழிப்புடன்தான் இருக்கிறீர்கள். அப்புறம் எதற்கு அமைச்சர் பதவி ? அமைச்சரவையை எப்போ மாத்தணும்ங்கிறது எனக்கு தெரியும்' என சொல்லியிருக்கிறார். அவருடைய இந்த பேச்சு அவர்களை மிரள வைத்துவிட்டது.

அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை பற்றிய ஊழல்கள், சொத்துக்கள், க்ரைம்கள், பினாமிகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் உளவுத்துறை மூலம் ஜெயலலிதா எப்படி சேகரித்து அவர்களுக்கு எதிரான நடவடிக்கையை எடுப்பாரோ, அதே போல ஒவ்வொருத்தரைப் பற்றியும் நெகடிவ் தகவல்களை சேகரித்து வைத்துள்ளார் எடப்பாடி. உளவுத்துறை மட்டுமல்லாது எடப்பாடிக்கு நெருக்கமான அதிகாரிகள் சிலரும் தகவல்கள் சேகரிப்பதில் உதவி புரிந்துள்ளனர். அதனால், ஆட்சி அதிகாரத்தில் எடப்பாடியை அமைச்சர்களோ, எம்.எல்.ஏ.க்களோ மிரட்டி பணியவைக்க முடியாது என்கிறார்கள் அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்கள்.

இதற்கிடையே, அமைச்சர் பதவியிலிருந்து தூக்கியடிக்கப்பட்ட மணிகண்டன், எடப்பாடியை சந்திக்க முயற்சிகளை எடுத்திருக்கிறார். ஆனால், அவரை சந்திக்க எடப்பாடி மறுத்து வருவதால் அவர் மீது ஏக கடுப்பில் இருக்கும் மணிகண்டன், "எடப்பாடிக்கு எதிரான சீக்ரெட்டுகளை டெல்லிக்கு அனுப்பி வைப்பேன்' என தனது நட்பில் இருக்கும் அமைச்சர்களிடம் சொல்லியிருப்பதும் எடப்பாடிக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க.வில் ஒவ்வொருவரின் குடுமியும் இன்னொருவர் கையில்.
 

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

“எடப்பாடி செய்த சதியை முறியடிக்கத் தயாராக இருக்கிறேன்” - ஓ.பி.எஸ்.ஸின் பிரத்யேக பேட்டி

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
ready to defeat tready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPShe conspiracy of EPS says Exclusive interview with OPS

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.

ad
ஓபிஎஸ் உடன் நமது நிருபர்

அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.

உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPS

அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.