Skip to main content

ஓபிஎஸ்ஸிற்கு தெரியாமல் பதவி பறித்த இபிஎஸ்! பயத்தில் ஜூனியர் அமைச்சர்கள்!   

Published on 12/08/2019 | Edited on 12/08/2019

தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டனின் பதவி பறிக்கப்பட்டதில் முதல்வர் எடப்பாடியை கலவரமாக பார்க்கத் துவங்கியுள்ளனர் ஜூனியர் அமைச்சர்கள். தமிழக அரசியல் களமும் இந்த நடவடிக்கையை அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் பார்க்கிறது. சீனியர் அமைச்சர்களுக்கு நெருக்கமான அ.தி.மு.க.வினரிடம் விசாரித்தபோது, "தகவல் தொழில்நுட்பத் துறையின் அமைச்சரான மணிகண்டன், ஜூனியர் அமைச்சர் என்பதால் துறையின் உயரதி காரிகள் இவரை மதிப்பதே இல்லை. துறையின் டெண்டர்களில் குறைந்தபட்ச தொகை மட்டுமே மணிகண்டனுக்கு தரப்பட்டு, பெருந்தொகை அதிகாரிகளால் பிரித்துக் கொள்ளப்படும். தோதான அதிகாரிகள் வேண்டுமென எடப்பாடியிடம் மணிகண்டன் புலம்பியும் நடக்கவில்லை.

 

admk



இந்த நிலையில்தான், தனது துறையின் கட்டுப்பாட்டி லுள்ள அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேசனின் சேர்மன் பதவியில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதா கிருஷ்ணனை நியமித்தார் எடப்பாடி. அதுவரையில் அந்த பதவி மணிகண்டனின் துறைச் செயலாளர் சந்தோஷ்பாபுவிடம் இருந்தது. தன்னிடம் கலந்தா லோசிக்காமல் தனது கட்டுப் பாட்டிலுள்ள ஒரு நிறுவனத்துக்கு மற்றொரு அமைச்சரை தலைவராக நியமிப்பதா? என எடப்பாடி மீது கோபப்பட்டார் மணிகண்டன். அதற்கேற்ப அவரது உதவியாளர்களும் தூண்டிவிட்டனர்.

 

admk



சேர்மன் பதவியில் உடுமலை ராதாகிருஷ்ணன் நிய மிக்கப்பட்டபிறகு, எடப்பாடியை சந்தித்த மணிகண்டன் இது குறித்து முறையிட்டுள்ளார். "அரசு ஆபரேட்டர்கள் பலரும் அரசின் இலவச செட்டாப் பாக்ஸ்களை வாங்கி வைத்துக் கொண்டு தனியார் சேனல்களின் வர்த்தகத்துக்குத்தான் உதவியாக இருக்கிறார்கள். அரசுக்கு இதனால் நட்டம். அதனால் நிறுவனத்தை ஒழுங்குபடுத்த வேண்டியிருக்கிறது. ஏற்கனவே இந்த நிறுவனத்துக்கு சேர்மனாக இருந்த உடுமலைக்கு அனுபவம் இருப்பதால் அவரை நியமிக்க வேண்டியிருந்தது' என தெளிவு படுத்தியிருக்கிறார் எடப்பாடி. அப்போது, குரலை உயர்த்திப் பேசிய மணிகண்டன், சில தடித்த வார்த்தைகளை முணுமுணுத்துக் கொண்டே கோபத்துடன் வெளியேறினார். இதன் பிறகு, "கேபிள் விவகாரம் குறித்து என்னிடம் மட்டுமே விவாதிக்க வேண்டும், அமைச்சர் மணி கண்டனிடம் விவாதம் நடத்தக் கூடாது' என்றும், "கேபிள் கார்ப்பரேசனை பொறுத்தவரை நான்தான் அமைச்சர்' என தகவல் தொழில்நுட்ப அதிகாரி களை எச்சரித்திருக்கிறார் உடுமலை ராதாகிருஷ்ணன். தனது துறைக்கு அமைச்சர் மணிகண்டன் என்றபோதும், அவரிடம் எதையும் விவாதிக்க வில்லை. உடுமலை சொல் வதையே ஏற்கிறார் எடப்பாடி.


  admk



பெண் அமைச்சர்கள் உள்பட செயல்படாத ஜூனியர் அமைச்சர்கள் சிலரை நீக்க வேண்டும் என திட்டமிட்டு அவர்களுக்கு எதிரான பல விசயங்களை சேகரித்து வைத்திருக்கிறார் எடப்பாடி. அதில் மணிகண்டனுக்கு எதிரான பல விசயங்கள் அவரிடம் இருக்கிறது. இவை குறித்து, மணிகண்டனிடம் கடுமையாக கோபம் காட்டிய எடப்பாடி, "இப்படியே போனால் அமைச்சர் பதவியிலிருந்து தூக்கிடுவேன்' என எச்சரித்துள்ளார். எடப்பாடியின் அந்த கோபத்தை மணிகண்டன் எதிர்பார்க்கவில்லை. இதற்கெல்லாம் உடுமலைதான் காரணம் என நினைத்து ஆத்திரத்தை தேக்கி வைத்திருந்த மணிகண்டன், தேசிய கைத்தறி விழாவில் கலந்துகொண்டுவிட்டு வெளியே வந்தபோது பத்திரிகையாளர்கள் கேபிள் குறித்து கேள்விகள் கேட்க, எடப்பாடியையும் உடுமலையையும் குற்றம்சாட்டி வெளிப்படையாக பேட்டி தர, அது பரபரப்பாகிவிட்டது. அதே சமயம், எடப்பாடியிடம் வருத்தப்பட்டு கடுமையாக பேசியிருக்கிறார் உடுமலை. இதன் பின்னணியிலேயே முதல் விக்கெட்டாக அவரது பதவி பறிக்கப்பட்டது' என விரிவாக சுட்டிக்காட்டினார்கள்.


"மணிகண்டனிடம் பறிக்கப்பட்ட இலாகா, வருவாய்த் துறை அமைச்சர் உதய குமாரிடம் கூடுதலாக கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த பதவி பறிப்பு விவகாரத்தை துணை முதல்வர் ஓ.பி. எஸ். உள்பட மூத்த அமைச்சர்கள் யாரிடமும் விவாதிக்காமலே தன்னிச்சையாக எடுத்துள்ளார் எடப்பாடி. இதனால் ஜூனியர் அமைச்சர்களிடம் பதட்டம் இருக்கிறது. அதேசமயம், ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளைக் கொண்டுள்ளவர்களும் 8 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் உள்ளவர்களும் அமைச்சராக நீடிக்கும் நிலையில், இளம் அமைச்சரின் பதவியைப் பறித்து, அதை இன்னொரு அமைச்ச ரிடம் கூடுதலாகக் கொடுத்தது எடப்பாடிக்கு எதிரானதாகவும் மாற வாய்ப்புள்ளது'' என்கிறார்கள்.


 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.