Advertisment

பி.எஃப் வட்டிவிகிதம் 0.10% உயர்வு... புள்ளிவிவரம் சொல்லுவது என்ன...?

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 2018-2019 நிதியாண்டிற்கு 8.65 சதவிகிதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

EPF

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் வட்டிவிகிதம் 2017-2018-ம் நிதியாண்டில் 8.55 சதவிகிதம் விதிக்கப்பட்டு நடைமுறையில் இருந்துவந்தது. இந்நிலையில், தற்போது அதில் 0.10 சதவிகிதம் உயர்த்தி 2018-2019 நிதியாண்டிற்கு 8.65 சதவிகிதமாக அதிகரித்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது.

கடந்த மூன்று நிதியாண்டுகளாக உயர்த்தப்படாத தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் வட்டிவிகிதம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

மேலும், இந்த 8.65 சதவிகிதம், 2018-2019 நிதியாண்டுக் கணக்கிலிருந்து அதிகரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி விகித அதிகரிப்பு வாயிலாக சுமார் 6 கோடி பேர் பயனடைவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து நிதியாண்டுகளாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் வட்டிவிகிதம் எப்படி இருந்தது என்பதன் புள்ளிவிவரம்,

2012-2013 நிதியாண்டில் - 8.50%

2013-2014 நிதியாண்டில் - 8.75%

2014-2015 நிதியாண்டில் - 8.75%

2015-2016 நிதியாண்டில் - 8.80%

2016-2017 நிதியாண்டில் - 8.65%

2017-2018 நிதியாண்டில் - 8.55%

2018-2019 நிதியாண்டில் - 8.65%

EPF PF
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe