Skip to main content

பி.எஃப் வட்டிவிகிதம் 0.10% உயர்வு... புள்ளிவிவரம் சொல்லுவது என்ன...?

Published on 22/02/2019 | Edited on 22/02/2019

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 2018-2019 நிதியாண்டிற்கு 8.65 சதவிகிதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

EPF

 

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் வட்டிவிகிதம் 2017-2018-ம் நிதியாண்டில் 8.55 சதவிகிதம் விதிக்கப்பட்டு நடைமுறையில் இருந்துவந்தது. இந்நிலையில், தற்போது அதில் 0.10 சதவிகிதம் உயர்த்தி 2018-2019 நிதியாண்டிற்கு 8.65 சதவிகிதமாக அதிகரித்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது. 
 

கடந்த மூன்று நிதியாண்டுகளாக உயர்த்தப்படாத தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் வட்டிவிகிதம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

மேலும், இந்த 8.65 சதவிகிதம், 2018-2019 நிதியாண்டுக் கணக்கிலிருந்து அதிகரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி விகித அதிகரிப்பு வாயிலாக சுமார் 6 கோடி பேர் பயனடைவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஐந்து நிதியாண்டுகளாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் வட்டிவிகிதம் எப்படி இருந்தது என்பதன் புள்ளிவிவரம்,
 

2012-2013 நிதியாண்டில் - 8.50%

2013-2014 நிதியாண்டில் - 8.75%

2014-2015 நிதியாண்டில் - 8.75%

2015-2016 நிதியாண்டில் - 8.80%

2016-2017 நிதியாண்டில் - 8.65%

2017-2018 நிதியாண்டில் - 8.55%

2018-2019 நிதியாண்டில் - 8.65%