Skip to main content

'போதும்ப்பா சாமி வொர்க் ஃப்ரம் ஹோம்'! - லாபம் பார்க்கும் நிறுவனங்கள், புலம்பும் ஊழியர்கள்!

Published on 12/10/2020 | Edited on 12/10/2020

 

employees views on work from home

 

கரோனா... உலகின் இயக்கத்தையே மாற்றியமைத்திருக்கும் இந்த வைரஸ் பாதிக்காத துறையே இல்லை. பெரும்பாலானவர்களை எதிர்மறையாகவும் சில துறைகளை சேர்ந்தவர்களை நேர்மறையாகவும் பாதித்திருக்கிறது. கரோனா, ஊரடங்கு, பொருளாதார முடக்கம் என இந்த சங்கிலியால் என்ன செய்வதென்றே தெரியாமல் சில தொழிலதிபர்கள், தொழிலாளிகளின் நிலை இருக்கிறது என்றால் சிலரோ இதை வைத்து இன்னும் கூடுதல் லாபம் ஈட்டுகின்றனர். 

 

கரோனா  ஊரடங்கை  தங்கள் சுயலாபத்திற்காகப் பயன்படுத்தி பல பெரும் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன. இதை நிரூபிக்கிறது 'லிங்க்டுஇன்' (Linkedin) சார்பாக நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள். மார்ச் இறுதியில் கரோனா ஊரடங்கு அமலுக்கு வந்தது. தொடக்கத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பின்னர் தொழில் நடவடிக்கைகள் சில கட்டுப்பாடுகளுடன் தொடங்கின. பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தபடியே வேலைபார்க்க அனுமதித்தன.

 

வீட்டிலிருந்து வேலை பார்த்தால் கரோனாவை  விரட்டலாம்,  குடும்ப உறவினர்களிடம் நாம் அதிக நேரம் செலவழிக்கலாம், மன அழுத்தத்தைப் போக்கலாம் என்ற எண்ணம் ஆரம்பத்தில் ஏற்பட்டது. அந்த எண்ணம் ஒரு பெரும் பிம்பமாக மேலாண்மை அதிகாரிகளால் உருவாக்கப்பட்டது. வீட்டிலிருந்து வேலை பார்ப்பது நல்லது என்று பலரும் நினைத்தனர். வீட்டிலிருந்து பணிபுரிந்தால் தங்கள் குடும்பத்துடன் கூடுதல் நேரம் செலவு செய்ய முடியுமென்று நம்பினர். ஆரம்பத்தில் அது உண்மையாகவும் கூட இருந்தது. ஆனால் போகப்போக நடந்தது என்ன?

 

employees views on work from home

 

'லிங்க்டுஇன்' சார்பாக ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையில் சுமார் 16,000 இந்திய ப்ரொபஷனல் பணியாளர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 60 சதவீதத்தினர் வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதால் தனிமையில் வாடுவதாகத் தெரிவித்துள்ளனர். மேலும்,  41  சதவீதத்தினர் இந்த நடைமுறையால் தங்களது திறன் மற்றும் எதிர்கால முன்னேற்றத்தில் பாதிப்பு ஏற்படும் என்று கூறியுள்ளனர். வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதால் வேலை - குடும்பம் ஆகிய இரண்டும் ஒன்றாகப் பிணைவதால் பிரச்சனைகள் அதிகமாக ஏற்படுவதாக  46 சதவீதத்தினர் கூறியுள்ளனர். அதேபோல, இந்த நடைமுறையால் மன அழுத்தம் அதிகரித்துள்ளதாக  39 சதவீதத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

 

வேலைக்குச்  சென்றுவரும் பயண அலைச்சலை மட்டுமே இந்த 'வொர்க் ஃபிரம் ஹோம்' முறை மிச்சப்படுத்தியுள்ளது. அதற்கு மாறாகப் பல துயரங்களை தினமும் சந்தித்து  வருவதாகக்  கூறுகின்றனர் ஐடி  ஊழியர்கள். இந்நிலையில், வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் பணியாளர்களில் ஐந்தில் ஒருவர் தனிமையை உணருவதாக 'லிங்க்டுஇன்' ஆய்வு கூறுகிறது. இதுகுறித்து  ஐடி ஊழியர்களிடம் விசாரித்த போது, "இது எங்களுக்குச் சோதனை காலம், நாங்கள் அலுவலகத்தில் வேலை பார்க்கும்பொழுது பதவி உயர்வு, சம்பள உயர்வு வேண்டும் என்பதற்காக அதிகமாக வேலை பார்ப்போம். ஆனால் இந்த ஊரடங்கில் எங்கள் வேலையை நிலை நிறுத்திக்கொள்ளவே நாங்கள் அதிக நேரம் வேலை பார்க்க வேண்டியுள்ளது.

 

8 மணி நேரம் வேலை பார்த்த நாங்கள் தற்போது இரவு பகல் பாராது உழைக்கிறோம், அலுவலகத்தில் நாங்கள் தினம் செய்த வேலையை அன்று மாலை எங்கள் உயர் அதிகாரிகளிடம் ஒப்படைப்போம். ஆனால் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் முறையால் ஒவ்வொரு மணி நேரமும் எங்கள் உயர் அதிகாரி தொலைபேசியில் 'என்ன நடக்கிறது, முடிந்ததா வேலை?' என்று எங்களை சோதனை செய்துகொண்டே இருக்கிறார். இதனால் நாங்கள் பயந்து கண்கொத்தி பாம்பைப்  போல கணினியின்  திரையைப் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். திடீர் திடீரென மீட்டிங் போடுவார் எங்கள் உயர் அதிகாரி. அதனால் நாங்கள் சரியான நேரத்தில் உணவு கூட உண்ண முடியவில்லை. அலுவலகத்தில் நாங்கள் வேலை பார்ப்பதை விட வீட்டில் இருமடங்கு வேலையைச் செய்கிறோம்" என்று புலம்புகின்றனர். 

 

employees views on work from home

 

மேலும், "தற்போது எங்கள் குழந்தைகளுக்கு இணைய வழி கல்வியும் நடக்கிறது. எங்கள் குழந்தைகளுக்கு இணையவழி கல்வி குறித்தோ அல்லது கைப்பேசிகளை இயக்கவோ தெரியவில்லை. எனவே நாங்களும் எங்கள் குழந்தைகளோடு இணையவழி கல்வி வகுப்புகளோடு இருக்க வேண்டியுள்ளது. எங்களோடு சேர்ந்து எங்கள் குழந்தைகளும் மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள். வீட்டில்  8 மணி நேரத்திற்கு மேலாக மடிக்கணினியை இயக்குவதால் எங்கள் உடல் மற்றும் வீடும் அதிக வெப்பமடைகிறது. இதைத் தவிர்க்க வீட்டில் குளிர்சாதன கருவி பொறுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். பெரும்பாலான நிறுவனங்களில் வீட்டில் இருந்து வேலை பார்ப்பதற்கான மின்சார கட்டணம், இணைய சேவை கட்டணம் போன்றவற்றை தரும் வழக்கமில்லை.

 

தற்போது அரசாங்கம் தளர்வுகளை அறிவித்தாலும் இன்னும் பல  நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலைபார்க்க உத்தரவிட்டுள்ளார்கள். இதற்குக் காரணம் ஊழியர்கள் மீது வைத்துள்ள அக்கறை என்கின்றனர் தொழில் நிறுவனத்தினர். ஆனால் ஊழியர்கள் வீட்டில் வேலை பார்ப்பதால் அலுவலக கட்டிட வாடகை, மின்சாரம் மற்றும் இணைய சேவை செலவுகள் எல்லாம் நிறுவனத்திற்கு குறைந்துள்ளது. அதே நேரத்தில் லாபமும் பெருகியுள்ளது. ஆனால் எங்களுக்கோ பெரிய பயனெதுவும் இல்லை. இப்படியான சூழலில் எங்கள் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டிய நிலையில், இந்த கஷ்டங்களை எல்லாம் நாங்கள் பொறுத்துக் கொண்டு வேலை பார்த்து வருகிறோம்" என்று வேதனையுடன் கூறுகிறார்கள்.

 

employees views on work from home

 

நிறுவனங்களின் தரப்பில் சில மனித வள மேலாண்மை அதிகாரிகளிடம் பேசியபோது, "அனைத்து ஐடி நிறுவனங்களும் ஏசி கட்டிடங்களில் இயங்குகின்றன. அலுவலகத்துக்கு வந்து செல்வதும் ஏசி வாகனங்களில்தான். இப்படி இருக்கையில் ஒருவருக்கு நோய்த் தொற்று இருந்தாலும் எளிதில் அனைவருக்கும் பரவிவிடும். ஊழியர்களின் பாதுகாப்பில் நாங்கள் ரிஸ்க் எடுக்க முடியாது. இதனால் நிறுவனங்களின் செலவுகள் கணிசமாகக் குறைந்திருப்பதை மறுக்க முடியாது" என்று கூறுகின்றனர்.

 

Ad

 

தற்போது வீட்டிலிருந்து வேலை பார்ப்பதை விட அலுவலகத்துக்குச் சென்று வேலை பார்ப்பதையே பலரும் விரும்புகின்றனர். எவ்வித இடையூறுகளும் இல்லாமல் வேலை பார்ப்பது, முழு மனதுடன் முழு வீச்சுடன் வேலை பார்ப்பது போன்றவை அலுவலகச் சூழலிலேயே ஊழியர்களுக்கு சாத்தியப்படுகின்றன. அவரவர் வீடுகளில் தனித்தனியே வேலை பார்ப்பதால் தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையேயான தகவல் தொடர்பில் இடைவெளி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இப்படி பல காரணங்களால், 'போதும்ப்பா சாமி வொர்க் ஃப்ரம் ஹோம்' என்று பலரும் அலுவலகத்திற்குச் செல்லும் விருப்பத்தோடு காத்திருக்கின்றனர். 

 

-சேகுவேரா

 

 

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; உயரும் பலி எண்ணிக்கை!

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
Increasing Corona Virus; Rising toll

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகையான கொரோனாவான ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில், நேற்று (31-12-23) வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.