Skip to main content

"காவல்துறைக்குப் பயந்து தலைமறைவானவர் அமித்ஷா; பாஜக போல திமுக சவார்க்கர் பரம்பரை இல்லை..." - இள. புகழேந்தி பேட்டி

Published on 15/11/2022 | Edited on 16/11/2022

 

கதர

 

 

தமிழகத்திற்கு சில தினங்களுக்கு முன்பு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கமலாலயம் சென்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், " தமிழகத்தில் கலைஞர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அரசியல் வெற்றிடம் நிலவுகிறது. அதனை பாஜக பயன்படுத்தி வரும் தேர்தலில் வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும்" என்ற தொனியில் பேசியதாகத் தகவல் வெளியானது.

 

இதுகுறித்து திமுகவின் இள.புகழேந்தியிடம் நாம் கேள்வி எழுப்பினோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில் வருமாறு, " அமித்ஷாவுக்குத் தமிழ்நாடே புதுசு. அவருக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. இப்போது அவர்களுக்கு ஒரு நப்பாசை வந்துள்ளது. அமித்ஷா எப்போதும் அரசுக்காக இருப்பதில்லை. தனியாருக்காகவே வேலை செய்பவர்.  

 

மோடி, அமித்ஷா இருவருடைய சிந்தனைகள் என்பது அரதப்பழசானது. சனாதனம், வர்ணாசிரமம் இதை மட்டுமே கொள்கையாக வைத்திருப்பவர்கள். இதைத் தாண்டி அவர்களுக்கு எதுவும் தெரியாது. தெரிந்துகொள்ளவும் அவர்கள் விரும்பமாட்டார்கள். இவர்களுக்குத் தமிழ்நாட்டின் மீது ஒரு காதல் பிறந்துள்ளது. அதனால் வரும்போது எல்லாம் சட்டத்திற்குப் புறம்பாகப் பேசுகிறார்கள்.

 

அமித்ஷாவைப் போன்றவர்கள், மத வெறி ஆசை கொண்டவர்கள் இதுவரை இருந்ததில்லை என்ற வெற்றிடம் தமிழகத்திலிருந்து வந்துள்ளது. குஜராத்தில் உத்தரப்பிரதேசத்தில் அந்த மக்களை ஏமாற்றியதைப் போல் இங்கே அவர்கள் செய்ய நினைக்கிறார்கள். அதற்காகத் தமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது என்ற கதையை அவர்களால் ஆன முடியச் சொல்லிப் பார்க்கிறார்கள்.

 

தமிழகத்தில் ஸ்டாலினின் ஆட்சியைப் பார்த்து இந்திய ஒன்றியத்தில் உள்ள முதல்வர்கள் எல்லாம் பாராட்டுகிறார்கள். மிகச் சிறப்பான ஆட்சியை இந்தியாவில் யாரும் கொடுக்காத வகையில் வழங்கி வருகிறார். நீங்கள் இத்தனை வருடங்களாகக் குஜராத்தில் ஆட்சியிலிருந்தீர்களே என்ன செய்துள்ளீர்கள், எத்தனை மருத்துவக் கல்லூரியைக் கொண்டு வந்துள்ளீர்கள், பொறியியல் கல்லூரி எத்தனை அமைக்கப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் உள்ளதில் பாதியாவது வைத்துள்ளீர்களா? அப்புறம் எந்த நம்பிக்கையில் தமிழகத்தில் ஆட்சி சரியில்லை, நிர்வாகம் சரியில்லை என்று கதை அளந்து விடுகிறீர்கள். தமிழக அரசைப் பற்றிப் பேச உங்களுக்கு கூச்சமாகவல்லவா இருக்க வேண்டும். இத்தனை ஆண்டுகள் ஆண்ட மாநிலத்தில் கூட நீங்கள், நாங்கள் செய்ததில் பாதி அளவு கூடச் செய்யவில்லை. அப்புறம் எந்த நம்பிக்கையில் எங்களுடன் போட்டிப்போட நினைக்கிறீர்கள்.

 

மேலும் அந்தக் கூட்டத்தில் தமிழக அரசியல் தொடர்பாகப் பேசிய அமித்ஷா திமுகவில் வாரிசு அரசியல் நடந்துகொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். அதிமுகவிலும் தலைமை இல்லாத தன்மை நிலவுவதால் அதனை நாம் பயன்படுத்தி பாஜகவை வெற்றிபெற வைக்க வேண்டும் என்று கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு நான் ஒன்றைத் தெளிவுபடுத்தக் கடமைப்பட்டுள்ளேன், தகுதியும் திறமையும் இருக்கும் யாரையும் கட்சி வரவேற்கும், மக்களுக்கு அவர்கள் தொண்டாற்றுவார்கள். அதை நாம் எப்படித் தடுக்க முடியும். பாஜகவில் பதவியில் இருப்பவர்கள் குடும்பத்தினர் எல்லாம் அரசியலுக்கு வருவதில்லையா? உங்கள் மகனை கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக்கி கோடிகோடியாக பணத்தை வைத்துள்ளீர்கள். 

 

அரசு வேலைகளை எல்லாம் தனியாருக்குக் கொடுத்து அதன் மூலம் அவரின் மகன் வருமானம் பார்த்து வருகிறார். மக்களுக்கு இதுவரை உழைத்துள்ளார்களா என்றால் ஒரு துரும்பைக் கூட இதுவரை அவர்கள் போட்டிருக்கமாட்டார்கள். திமுக அழிந்து போக வேண்டும், நல்லா இருக்கக்கூடாது என்று நினைக்கக்கூடிய நபராக நீங்கள் இருக்கிறீர்கள். அப்படி இருக்கையில் எங்கள் குடும்பத்தைப் பற்றிப் பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கும்.

 

எமர்ஜென்சி காலகட்டத்தில் கையெழுத்துப்போட்டுவிட்டு போங்கள் என்று சிறையில் கூறினாலும் நாங்கள் அப்படி வளரவில்லை சிறைச்சாலையில் தொடர்ந்து இருக்கிறோம் என்று ஓராண்டுக்கு மேல் சிறையிலிருந்தவர் எங்கள் தளபதி. உங்களைப் போல் காவல்துறைக்குப் பயந்து ஒளிந்து வாழவில்லை. எங்களைப் பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு எந்தத் தகுதியும் இல்லை" என்றார். 

 

 

 

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.