Skip to main content

நீட் விவகாரத்தில் நாங்கள் செய்ததைத்தானே திமுகவும் செய்கிறார்கள் - எடப்பாடி பழனிசாமி கேள்வி!

Published on 13/09/2021 | Edited on 13/09/2021

 

ரகத

 

 

தமிழக சட்டப்பேரவையில் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்துள்ளது. இதில் பல்வேறு துறைகளைச் சார்ந்த நூற்றுக்கணக்கான அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதி நாளான இன்று நீட் விலக்கு கேட்டு மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. பாஜகவைத் தவிரப் பெருவாரியான கட்சிகளின் ஆதரவோடு இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக பேரவை வாயிலில் பேட்டியளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று அவையில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாகப் பேசினார், அதில், "  இன்று காலை அவை தொடங்கியதும் அவசர முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு பிரச்சனைகள் பற்றி அவையின் கவனத்துக்குக் கொண்டு வந்தேன். முதலாவதாக வாணியம்பாடி அருகே வாசீம் என்ற நாற்பது வயதுடைய இளைஞர் கஞ்சா விற்பதை தட்டிக்கேட்டதற்காகக் கொலை செய்யப்பட்டுள்ளார். தன் மகனுடன் மசூதிக்கு வந்து தொழுகை செய்துவிட்டுச்  செல்லும்போது மர்ம நபர்கள் அவரை படுகொலை செய்துள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே அவர் பலியாகியுள்ளார். பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், அந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்குத் தகுதியின் அடிப்படையில் வேலை வழங்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தினேன். 

 

அடுத்து இன்றைக்கு நீட் தேர்வு காரணமாக ஒரு உயிர் போய் உள்ளது. அதற்குத் தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையிலேயே நாங்கள் ஆட்சிக்கு வந்தால்  நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறியிருக்கிறது. ஆனால் அவர்கள் அதற்கான முயற்சிகள் ஏதும் செய்யவில்லை. இதனால் மாணவர்கள் மனம் வெதும்பி இருக்கிறார்கள். மாணவர்களின் பயத்தினை போக்கும் வகையிலான எந்த முயற்சியையும் இதுவரை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. மாணவர்களின் உயிரோடு விளையாடுவது போன்று அரசின் செயல்பாடு இருந்து வருகிறது. இது மிகவும் ஆபத்தான ஒரு விளையாட்டு. இதைத் தமிழக அரசு ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்திருக்க வேண்டும்.  

 

அவ்வாறு செய்யாமல் விட்டதன் விளைவு தற்போது வரை அது எதிரொளித்து வருகிறது. தற்போது மற்ற மாநிலங்கள் அனைத்திலும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தமிழகம் மட்டும் தான் தொடர்ந்து நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு வருகிறது. எனவே நாம் விலக்கு பெறுவதைக் காட்டிலும், நாம் அடுத்த கட்டத்திற்கு மாணவர்களை அழைத்த செல்ல வேண்டும். கடந்த காலங்களில் அதிமுக அரசு நீட் தேர்வு தொடர்பாக விலக்கு வேண்டி பேரவையில் மசோதா தாக்கல் செய்த நிலையில், அதனை திமுகவைத் சேர்ந்த ஆ. ராசா கடுமையாக விமர்சனம் செய்தார். தற்போது இவர்கள் மீண்டும் நாங்கள் மசோதா தாக்கல் செய்து உள்ளார்கள். நாங்களும் இதனை அதனை ஆதரிக்கிறோம். ஆனால் திமுகவினர் இதில் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள்" என்றார்.

 

 

Next Story

குழப்பத்தில் சிக்கிய அதிமுக தேர்தல் அறிக்கை!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 AIADMK election report in confusion

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி தொகுதிப் பங்கீட்டை முடித்த கையோடு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதோடு தேர்தல் அறிக்கையும் வெளியிட்டது. திமுக இரண்டு தினங்களுக்கு முன்பு தேர்தல் அறிக்கை கொடுத்திருந்த நிலையில் அதிமுக நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருந்தது.

அறிக்கையில் சிறப்பு அம்சங்களாக ஆளுநர் பதவி நியமனத்திற்கு கருத்து கேட்க வேண்டும்; நீட் தேர்வுக்கு மாற்றாக மாற்றுத் தேர்வு முறை கொண்டு கொண்டு வரப்படும்; பெண்களுக்கு மாதம் 3000 ரூபாய் உரிமை தொகை; சென்னையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தை நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்; முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்; புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்; சமையல் எரிவாயு விலை கட்டுப்படுத்தப்படும்; சீம கருவேல மரங்கள் அகற்றும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்; தமிழகத்தில் புதிய நகரங்களில் மெட்ரோ திட்டங்கள் கொண்டுவரப்படும் என்பவை இடம்பெற்றுள்ளது.

இதில் மகளிர் உரிமைத் தொகை 3000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு திமுகவை பின் தொடர்ந்து கொடுக்கப்பட்ட அறிவிப்பா? என எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், 'இதில் கொடுத்துள்ள அனைத்து வாக்குறுதிகளும் மத்திய அரசிடம் மாநில அரசு வலியுறுத்தி பெற இருப்பது. மத்திய அரசும் மாதம் தோறும் மகளிருக்கு உரிமை தொகை  வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துவோம்' எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியா கூட்டணியில் உள்ள திமுக உள்ளிட்ட கட்சிகள் ஒருவரை பிரதமராக முன்னிறுத்தும் பட்சத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மோடியையே மீண்டும் பிரதமர் முகமாக கொண்டு வர இருக்கிறது. இந்தநிலையில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் மகளிர் உரிமைத் தொகை 3000 ரூபாய் மத்திய அரசிடம் இருந்து வலியுறுத்தி பெற்றுத் தருவோம் மற்றும் சென்னையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை நடத்துவோம் உள்ளிட்ட வாக்குறுதிகள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு பின் பாஜகவை அதிமுக ஆதரிக்குமா அல்லது இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் உருவாகும் மத்திய அரசிடம் வலியுறுத்துமா? என அரசியல் வியூகர்களாலும், சமூக வலைதளங்களிலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

Next Story

'ஒரு இடத்தில்கூட எடப்பாடி வெற்றி பெற முடியாது'- ஓபிஎஸ் பேட்டி

Published on 28/01/2024 | Edited on 28/01/2024
'Edappadi cannot win even in one place' - OPS interview

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று திண்டுக்கல்லில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். வேடசந்தூர் முன்னாள் ஒன்றிய செயலாளர், மாவட்டச் செயலாளருமான சுப்பிரமணி முன்னிலை வைத்தார்.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்கள் மத்தியில் ஓபிஎஸ் பேசுகையில், 'நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி அணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது. தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைக்கப்பட்ட குழு எந்த குழுவாக இருந்தாலும் அந்த குழு டம்மி குழு. அவர்கள் எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியாது.  இந்தியா கூட்டணி  ஆண்டிகளின் மடம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கூட்டணியில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர். கடந்த பத்தாண்டு காலம் இந்தியாவை மிக வலிமையோடு பிரதமர் மோடி வழி நடத்தி வருகிறார். இந்தியாவை வலிமையாக உருவாக்க அத்தனை நிலைகளிலிருந்தும் பாடு பட்டுக் கொண்டிருக்கிறார் .

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய நாட்டை யார் ஆள வேண்டும் முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலை.  இந்த தேர்தலில் பத்தாண்டு காலமாக சிறப்பாக ஆட்சி செய்த பிரதமராக வரவேண்டும் என்ற நல்ல கருத்து இந்தியா முழுவதும் வலுப் பெற்று இருக்கிறது ஆகவே பாஜக தலைமையிலான கூட்டணி தான் வெற்றி பெறும். இந்தியா கூட்டணி இந்தியாவை ஆள முடியாது. ஒருங்கிணைக்க கூடிய சக்தி அவர்களிடம் இல்லை. அது நிரூபிக்கப்பட்டுள்ளது. . எங்களுடன் யார் கூட்டணி என்பதை பொறுத்திருந்து பாருங்கள். எங்கள் கூட்டணியின் தலைமை  பாஜக தான் அந்தக் கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம். இன்னும் நிறைய கட்சிகள் அந்த கூட்டணியில் இணைய தயாராக உள்ளது'' என்றார்.