Skip to main content

எங்கே... எவ்வளவு? -எடப்பாடியின் ஃபாரின் கணக்கு!

Published on 26/08/2019 | Edited on 26/08/2019

அன்னிய மூலதனத்தை இந்தியா வுக்கு கொண்டு வந்ததில் ஏற்பட்ட புகார்கள் தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த ப.சி.யை கைது செய்த செய்தி எதிரொலித்தபோது, சென்னை கோட்டையில் தனது வெளிநாட்டு விசிட் சம்பந்தமாக ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்திக் கொண்டி ருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

 

eps



28-ம் தேதி வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் எடப்பாடி, 22-ம் தேதி அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தூதரக அதிகாரிகளை கோட்டைக்கு அழைத்தார். எடப்பாடியுடன் வெளிநாடு செல்லும் டீமில் இடம் பெற்றிருக்கும் அவரது ஆல் இன் ஆல் பி.ஏ. கிரிதரன் மற்றும் செயலாளர் விஜயகுமாருடன் சேர்ந்து இருநாட்டு தூதரக அதிகாரிகளிடம் வெளிநாட்டு பயணம் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார். அந்த ஆலோசனையை தொடர்ந்து அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, எம்.சி.சம்பத், விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகளுடன் வெளிநாட்டு விசிட் சம்பந்தமாக விவாதித்தார். சுகாதாரம், தொழில்துறை, எரிசக்தி, கல்வி, பால்வளம் ஆகியவை முதல்வரின் வெளிநாட்டு பயணத்தில் இடம் பெறப்போகும் துறைகள்.


சுகாதாரத்தை பொறுத்தவரை ஏர் ஆம்புலன்ஸ் திட்டத்தை தமிழகத்திற்கு கொண்டு வருவது, கல்வித்துறையில் டிஜிட்டல்மய மான கல்விமுறையை கொண்டு வருவது, எரிசக்தி துறையில் சூரிய ஒளி மின்சார திட்டங்கள், தொழில்துறையில் தொழில் முதலீட்டாளர்கள் ஊக்குவிப்பு, பால்வளத்தில் பண்ணைகளை வளர்க்கும் விதம் ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டது என அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் தொழில்துறையில் அன்னிய முதலீட்டை கொண்டு வருவது என்பது தொடர்ந்து செய்யப்பட வேண்டிய முயற்சி' என தலைமைச் செயலாளர் சண்முகம், முதல்வரின் ஃபாரின் விசிட் பற்றிய துறை வாரியான கூட்டங் களில் சொல்லி வருகிறார். ஆனால் எடப்பாடி தனது ஃபாரின் விசிட் பற்றி யாரிடமும் பேசுவதில்லை. அவரது அசைவுகள் மிகவும் ரகசியமானதாக இருக்கின்றன. பிரதமர், உள்துறை அமைச்சர் இவர்களிடம் மட்டுமே வெளிப்படையாக பேசியுள்ளார். இதற்கு ஒரு ரகசிய காரணம் இருக்கிறது.

பா.ஜ.க.வுக்கு நெருக்கமான தொழிலதிபர் அதானி இலங்கையில் துறைமுகத் துறையில் ஒரு பெரிய கட்டுமானத்தை செய்ய இருக்கிறார். அதில் அதானியுடன் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பங்குபெற இருக்கிறார்கள். அதுபற்றிய பேச்சுகள் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த காலத்தில் இருந்தே அமெரிக்காவுக்கும் அ.தி.மு.க.விற்கும் ஒரு தொடர்பு இருந்து வருகிறது. எம்.ஜி.ஆருக்கு அமெரிக்காவில் உதவியாக இருந்த தொழிலதிபர் தற்பொழுது எடப்பாடிக்கும் உதவியாக இருக்கும்படி பா.ஜ.க. கேட்டுக் கொண்டிருக்கிறது. இலங்கையில் மட்டுமல்ல, அமெரிக்கா-இங்கிலாந்து அரசுகளும் பாதுகாப்பு தவிர மற்ற அனைத்துத் துறைகளிலும் முதலீட்டை வரவேற்கின்றன. இஸ்ரேலும் தற்பொழுது சிவப்புக் கம்பளம் நீட்டி வரவேற்கிறது. அங்கு முதலீடு செய்வது தொடர்பாக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் இஸ்ரேல் நாட்டுக்கு போய் வந்து விட்டார். எடப்பாடியும் "நான் இஸ்ரேல் நாட்டுக்கு செல்வேன்' என சேலத்தில் பேசியிருக்கிறார்'' என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.