Skip to main content

எடப்பாடி பழனிசாமி மட்டுமல்ல அதிமுகவில் உள்ள யாருக்கும்... எஸ்.ஜோயல் பதிலடி

Published on 15/10/2019 | Edited on 16/10/2019

 

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ரூபி மனோகரன் போட்டியிடுகிறார். கூட்டணிக் கட்சியான திமுக அங்கு தீவிரப் பணியாற்றி வருகிறது. நாங்குநேரி களம் எப்படி உள்ளது என திமுக மாநில இளைஞரணி துணைச்செயலாளர் எஸ்.ஜோயலை தொடர்பு கொண்டோம்.

 

நாங்குநேரி வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
 

நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 
 

காங்கிரஸ் வேட்பாளர் வெளியூர்காரர் என எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்கிறாரே?
 

அதுபோன்ற எண்ணம் பொதுமக்களிடையே இல்லை. ஆளும் கட்சி மீது பொதுமக்களுக்கு கடும் அதிருப்தி உள்ளது. அதனை மறைக்க எடப்பாடி பழனிசாமி இதுபோன்று பேசி வருகிறார். காங்கிரஸ் கட்சிக்கும், திமுகவுக்கும் செல்வாக்கான தொகுதி நாங்குநேரி. திமுக தலைமையிலான கூட்டணியினர் ஒன்றிணைந்து பணியாற்றுவதால் ரூபி மனோகரனுக்கு செல்வாக்கு கூடியுள்ளது. 
 

joel



 

 

மு.க.ஸ்டாலினுக்கு தேர்தல் என்றாலே திண்ணை பிரசாரம் தான் ஞாபகத்துக்கு வருகிறது என்று எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் பேசுகிறாரே?
 

தேர்தலுக்காக வருபவர் இல்லை ஸ்டாலின். இளைஞரணித் தலைவராக அவர் இருந்தபோது தமிழ்நாட்டில் அவர் செல்லாத ஊர்களே கிடையாது. இளைஞரணியினர் அழைப்பை ஏற்று தமிழ்நாடு முழுவதும் சென்று திமுக கொடியை ஏற்றி வைத்துள்ளார். பட்டித் தொட்டி, கிராமங்கள் என எல்லா ஊர்களுக்கும் சென்ற இப்போதுள்ள ஒரே தலைவர் ஸ்டாலின்தான். எளிமையாக எல்லோருடனும் பேசுகிறார், பழகுகிறார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் இப்படி பேசுகிறார்கள். 
 

திண்ணைப் பிரச்சாரம் எடப்பாடி பழனிசாமியால் பண்ண முடியாது. ஏனென்றால் அங்கு குறைகளை சொல்லுவார்கள். அதற்கு பதில் சொல்ல வேண்டும். அதற்கு எடப்பாடி பழனிசாமியால் பதில் சொல்ல முடியாது. திண்ணைப் பிரச்சாரம் செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி கிடையாது. திண்ணைப் பிரச்சாரத்திற்கு அவர் வந்தால் மக்களே விரட்டிவிடுவார்கள்.
 

திண்ணைப் பிரச்சாரம் செய்வதற்கு ஸ்டாலினுக்கு முழு தகுதி உள்ளது. அங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கவும், திமுக ஆட்சியில் என்ன செய்தோம், இனி என்ன செய்வோம் என்று சொல்லக்கூடிய தகுதி எங்கள் தலைவருக்குத்தான் உள்ளது. எடப்பாடி பழனிசாமி மட்டுமல்ல அதிமுகவில் உள்ள யாருக்கும் திண்ணைப் பிரச்சாரம் செய்யக்கூடிய தகுதி இல்லை. 


 

 

17315 வாக்குகள் வித்தியாசத்தில் கடந்த தேர்தலில் வசந்தகுமார் வெற்றி பெற்றார். ரூபி மனோகரன் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்?

 

குறைந்தபட்சம் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
 

திமுக இளைஞரணி பிரச்சாரம் எப்படி உள்ளது?
 

இளைஞரணியினர் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர். உதயநிதி ஸ்டாலின் 17 மற்றும் 18ஆம் தேதி பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். அவர் வருவது திமுகவினருக்கு மேலும் உற்சாகத்தை கொடுக்கும்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது