Skip to main content

முதல்வர் இ.பி.எஸ்.க்கு யோகம்..! இப்போது எடப்பாடியார் நகர்..! அடுத்து எடப்பாடி பெயரில் பேரவை!!!

Published on 14/07/2020 | Edited on 14/07/2020
Edappadi nagar - perundurai - Thoppu VENKATACHALAM mla aiadmk -

 

அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதற்கு உதாரணம் கூற வேண்டுமென்றால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சொல்லலாம். மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிருடன் உள்ள வரை வாய்பேசாத அமைச்சரவை கூட்டத்தில் இவரும் ஒருவர் அவ்வளவுதான். "ஜெ" இறப்புக்கு பிறகு அதிர்ஷ்டம் போல் சசிகலாவால் முதல்வராக்கப்பட்டார். அந்த நாற்காலிக்கு எந்த ஆபத்தும் வராமல் மூன்றாண்டுகளாக சாதித்தும் வருகிறார் எடப்பாடி.

 

ஆட்சியில் மட்டுமல்ல கட்சிக்குள்ளும் தனது தனிப்பட்ட பவரை அதிகரித்து வருவதால்தான் அவரது கொங்கு மண்டலம் மட்டுமல்லாது தென் மாவட்டத்திலும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகளை தனது விசுவாசிகளாகவும் மாற்றம் பெற வைத்து வருகிறார். ஆரம்பத்தில் போட்டியாளராக இருந்த ஓ.பி.எஸ். அணியையும் பெரும்பாலும் தனக்கு சாதகமாக்கி ஓ.பி.எஸ்.ஐ டம்மி லெவலுக்கு கொண்டு போய்விட்டார் இ.பி.எஸ். என ர.ர.க்கள் பேசுமளவுக்கு வந்து விட்டது. ர.ர.க்களும் புது புது பட்டங்களை எடப்பாடிக்கு வழங்கி வருகிறார்கள். 

 

அந்த வரிசையில் பெரியார் நகர், காமராஜர் நகர், அண்ணா நகர், கலைஞர் கருணாநிதி நகர், எம்.ஜி.ஆர் நகர், ஜெயலலிதா பெயரில் "ஜெ. ஜெ" நகர் வைத்ததை பார்த்துள்ளோம். இப்போது இ.பி.எஸ். பெயரிலும் எடப்பாடியார் நகர் என்ற பெயரும் வைக்கப்பட்டு தலைவர்கள் வரிசையில் இணைக்கப்பட்டிருக்கிறார் முதல்வர் இ.பி.எஸ். ஆச்சரியம்தான் ஆனால் உண்மை. இப்படி பெயர் வைத்ததும் ஒரு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.தான்.

 

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வான முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாஜலம், கட்சிக்குள் உள்ளடி வேலை செய்து இவரது அமைச்சர் பதவியை, பவானி K.C. கருப்பனன் பெற்றார் என்பது தனி கதை. அமைச்சர் பதவி கிடைக்காவிட்டாலும் அ.தி.மு.க.வில் கட்சி விசுவாசியாக தொடர்ந்து செயல்படுகிறார் தோப்பு வெங்கடாஜலம்.

 

அப்படிப்பட்ட தோப்புவின் தொகுதிக்குட்பட்ட பெருந்துறை பேருராட்சியில் 10வது வாட்டில் பெருந்துறை ரயில் நிலைய சாலையில் புதிதாக அமைந்துள்ளது ஒரு குடியிருப்பு பகுதி. அதற்குத்தான் "எடப்பாடியார் நகர்" என்று பெயர் சூட்டி அந்த பெயர் பலகையையும் திறப்பு விழா செய்துள்ளார் எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாஜலம். 

 

இது பற்றி தோப்பு நம்மிடம், "பெருந்துறை தொகுதியின் நீண்ட கால கோரிக்கையான அவினாசி-அத்திக்கடவு திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார் முதல்வர். அதேபோல் சுகாதாரமான குடிநீர் வேண்டும் என்று கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த மறைந்த முதல்வர் அம்மாவிடம் கோரிக்கை வைத்தேன், அவரும் செயல்படுத்துவதாக அறிவித்தார். அவர் இறப்புக்கு பிறகு இந்த குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற விடாமல் பல தடைகள் வந்தது, அவற்றை முறியடித்து குடிநீர் திட்டத்தையும் நிறைவேற்றி கொடுத்துள்ளார் முதல்வர். அந்த குடிநீர்தான் இந்த பகுதிக்கும் வருகிறது. தொகுதியில் உள்ள இரண்டு லட்சம் மக்களுக்கு சுத்தமான குடிநீர் கொடுக்க காரணம் முதல்வர் இ.பி.எஸ் தானே, அதற்கு நன்றி பாராட்டும் விதமாகத்தான் இந்த பகுதியை எடப்பாடியார் நகர் என்று பெயரிட்டோம்" என்றார்.

 

இப்படியே போனால் எங்க கொங்கு மண்ணை சேர்ந்த எடப்பாடியார் பெயரில் விரைவில் பேரவை உருவானாலும் ஆச்சரியப்படாதீங்க... என உற்சாகமாக கூறுகிறார்கள் கொங்கு ர.ர.க்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Notice that Vikravandi constituency is vacant

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (06.04.2024) புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று முன்தினம் (06.04.2024) விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். இதனையடுத்து புகழேந்தியின் உடல் நேற்று (07.04.2024) முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அதாவது போலீசார் வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டு அரசு மரியாதை அளித்தனர். இதனையடுத்து சொந்த ஊரான அத்தியூர் திருவாதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையில் புகழேந்தி உடல் தகனம் செய்யப்பட்டது. 

Notice that Vikravandi constituency is vacant

இந்நிலையில், புகழேந்தி காலமானதை அடுத்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக உள்ளதாக தமிழக சட்டப் பேரவை செயலகம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் வரும் 19 ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் இடைத்தேர்தல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே தேதியில் (19.04.2024) இடைத் தேர்தல் நடத்த வாய்ப்பு குறைவாகவே உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

எம்.எல்.ஏ புகழேந்தி மறைவு; தமிழக முதல்வர் இரங்கல்

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Condolence of Tamil Nadu Chief Minister MLA Pugazhendi passed away

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். திமுக எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மறைந்த புகழேந்திக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘விழுப்புரம் தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான அன்புச் சகோதரர் புகழேந்தி எதிர்பாராத வகையில் மறைவுற்ற நிகழ்வு, மிகவும், அதிர்ச்சியும் வேதனை தருகிறது. கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றியிருந்த அவர், தன் உடல்நலன் பற்றியெல்லாம் சிந்திக்காமல் கழகத்தின் வெற்றிக்காகத் தேர்தல் பணிகளை ஆற்றி வந்தார். 

நேற்றைய என்னுடைய பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த அவர், சற்றே மயக்கம் வர, மருத்துவமனைக்குச் சென்றார். உடனடியாக நானும் மருத்துவர்களைத் தொடர்புகொண்டு, அவரது உடல்நலனைக் கவனித்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டிருந்தேன். நலன் பெற்று மீண்டு வருவார் என்று நம்பியிருந்த நிலையில், அவர் நம்மைவிட்டு பிரிந்த செய்தி வந்து நம்மைத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

1973-இல் கழகத்தின் கிளைச் செயலாளராகத் தமது அரசியல் வாழ்வைத் தொடங்கிய புகழேந்தி, தமது அயரா உழைப்பாலும், மக்கள் பணியாலும் படிப்படியாக வளர்ந்து, கழகத்தின் மாவட்டச் செயலாளராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் உயர்ந்தார். 1996-இல் ஒன்றியத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பான பணிகளை மேற்கொண்டவர். விக்கிரவாண்டி தொகுதி மக்களோடு, மக்களாக இருந்து அவர்களுக்கான அனைத்துப் பணிகளையும் அக்கறையுடன் மேற்கொண்டு வந்த புகழேந்தியை சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுத்து அந்த மக்கள் அனுப்பி வைத்தனர். 

எப்போது என்னைச் சந்திக்க வந்தாலும், தொகுதி மக்களுக்கான கோரிக்கைகளுடன்தான் வருவார். அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுச் செல்வார். கழகத் துணைப் பொதுச் செயலாளர் க.பொன்முடிக்கு உற்ற துணையாக விளங்கி மக்களோடு மக்களாக வாழ்ந்த புகழேந்தியின் மறைவு, விக்கிரவாண்டி தொகுதிக்கும், விழுப்புரம் மாவட்டத்திற்கும் மட்டுமின்றி, கழகத்திற்கும் பேரிழப்பாகும். ஈடுசெய்ய முடியாத அவரது பேரிழப்பால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் மற்றும் கழகத் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.