Skip to main content

எடப்பாடி அ.தி.மு.க.வை சீரழித்துவிட்டாரா?

Published on 06/05/2019 | Edited on 06/05/2019

"மே 23-க்குப் பிறகு என்ன நடக்கும்?' என இந்தியா முழுவதும் வாக்காளர்கள் காத்திருக்கின்றனர். அவர்களைவிட பதற்றத்துடன், என்ன நடக்கப்போகிறதோ என்ற கவலையுடன் காத்திருக்கின்றனர் அ.தி.மு.க. தொண்டர்கள்.  அதற்குக் காரணம், அ.தி.மு.க.வில் உட்கட்சிப் பூசல் உச்சகட்டத்தை அடைந்துள்ளதுதான்.  திருப்பூர் மாவட்ட மந்திரி உடுமலை ராதாகிருஷ்ணனிடமிருந்து மாவட்டச் செயலாளர் பதவியை சில மாதங்களுக்கு முன்பு பறித்து, அதனை பொள்ளாச்சி ஜெயராமனிடம் அளித்தார் எடப்பாடி. ஆல் பவர்புல் மந்திரியான எஸ்.பி.வேலுமணியின் சிபாரிசால் நடைபெற்ற இந்த மா.செ.க் கள் மாற்றத்திற்குப் பிறகுதான் பொள்ளாச்சி  ஜெயராமனின் மகன் பிரவீன் சம்பந்தப்பட்ட காமக்கொடூரக் கதைகள் வெளிவந்தன. அந்தக் கதைகள் வெளியே தெரிந்ததற்குக் காரணம் உடுமலைதான். 

 

eps



அதுமட்டுமல்ல... "பொள்ளாச்சி பாராளுமன்றத் தொகுதி தேர்தல் வேலைகளிலும் உடுமலை பங்கெடுக்கவில்லை' என தேர்தல் முடிந்ததும் எஸ்.பி.வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன் மீது ஒரு பெரிய புகார் கடிதமே வாசித்தார். இதனால் கடுப்பான எடப்பாடி, உடுமலையைக் கூப்பிட்டு கண்டித்தார். இதனால் மூடு அவுட்டான உடுமலை, சூலூர் தொகுதி இடைத்தேர்தல் வேலைகளில் ஆர்வம் காட்டவில்லை. டெல்லிக்குப் போன எஸ்.பி.வேலுமணி அங்கிருந்து பறந்துவந்து சூலூர் தொகுதி அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கெடுத்தார். பக்கத்தில் உள்ள உடுமலையில் தங்கியிருந்த ராதாகிருஷ்ணன் சூலூர் கூட்டத்தில் தலைகாட்டவில்லை. 

 

velumani



உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு என அமைச்சரவையில் ஒரு நட்பு வட்டாரம் உண்டு. அந்த அமைச்சர்களெல்லாம் அவருடன் மாலை முதல் நள்ளிரவு வரை அவரது அரசாங்க வீட்டில் நடக்கும் கொண்டாட்டங்களில் பங்கேற்பார்கள். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுற்றுச்சூழல் கே.சி.கருப்பணன், வேலூர் மாவட்ட மந்திரி கே.சி.வீரமணி ஆகியோர்தான் நெருக்கமான தோஸ்துகள். எடப்பாடி, உடுமலையைக் கடிந்துகொண்டதால் இந்த நட்புவட்டாரமும் எடப்பாடியின் தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விட்டது.  எல்லோரும் தங்களுக்குள் பேசிக்கொள்வதெல்லாம்  "மே 23 முடியட்டும், அதற்குப் பிறகு எடப்பாடியை ஒருகை பார்க்கலாம்' என்பது தானாம். இந்த அமைச்சர்களுக்கு நெருக்கமான வட்டாரத்தைச் சேர்ந்தவர்களே இதைச் சொல்கிறார்கள்.

இவர்கள்தான் இப்படியென்றால் உடுமலை ராதாகிருஷ்ணனை, எடப்பாடியிடம் போட்டுக் கொடுத்த எஸ்.பி.வேலுமணி, ஒரு சூப்பரான நகர்வை மேற்கொண்டிருக்கிறார். வேலுமணியின் தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட ஏரியாவில் ஆசிரமம் வைத்திருப்பவர்தான் ஜக்கி வாசுதேவ். அவரிடம் ஒரு சீக்ரெட் சிட்டிங் மீட்டிங் ஒன்றை நடத்தியிருக்கிறார் எஸ்.பி.வேலுமணி. "எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாடுகளில் அ.தி.மு.க.வினர் அதிருப்தியடைந்துள்ளார்கள். இந்தத் தேர்தலில் ஓட்டுக்காக கொடுக்கப்பட்ட பணத்தில் பாதிக்கு மேல் அ.தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு கொடுக்கவில்லை. அந்தப் பணம் அ.தி.மு.க. ஆட்சியைப் பயன்படுத்தி சம்பாதிக்கப்பட்ட ஊழல் பணம். இந்தப் பணத்தை வாக்காளர்களுக்குக் கொடுத்தாலும் யாரும் அ.தி.மு.க.விற்கு வாக்களிக்கமாட்டார்கள் என கட்சிக்காரர்களே தங்கள் பையில் நிரப்பிக்கொண்டார்கள். அந்தப் பணத்தை தொகுதி எம்.எல்.ஏக்கள், போட்டியிட்ட எம்.பி. வேட் பாளர்கள் என யாராலும் தட்டிக்கேட்க முடிய வில்லை. அமைச்சர்கள் பொறுப்பில் வழங்கப்பட்ட அந்தப் பணம் சரியாக விநியோகம் ஆனதா என எடப்பாடியும் கேட்க முடியவில்லை. அந்த அளவிற்கு அ.தி.மு.க.வை எடப்பாடி சீரழித்து விட்டார். இனி அவரை நம்பி அரசியல் செய்ய முடியாது, எனவே உங்கள் டெல்லி செல்வாக்கின் மூலம் என்னை தமிழக முதல்வராக்குங்கள். நான் அனைத்தையும் சரிசெய்கிறேன்' என எஸ்.பி. வேலுமணி போட்ட டீலை ஜக்கி வாசுதேவும் ஆமோதித்துள்ளார்'' என்கிறார்கள் கொங்கு மண்டல அ.தி.மு.க.வினர்.

"அதுமட்டுமல்ல... ஜூனியர் அமைச்சர்களான பெஞ்சமின், மாஃபா பாண்டியராஜன் தொடங்கி... செல்வாக்குமிக்க சி.வி.சண்முகம், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, சீனியர் தலைவர்களான வைத்திலிங்கம், நத்தம் விசுவநாதன், போக்குவரத்து விஜயபாஸ்கர், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன் உட்பட தேர்தலில் சரியாக வேலை செய்யவில்லை என்ற புகாருக்குள்ளாகாத அமைச்சர்களே இல்லை. அவர்களை ஒன்றும் செய்ய முடியாமல் எடப்பாடி தவித்து வருகிறார். 
 

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.