Skip to main content

'ஜெ'டப்பாடி! முதல்வர் விசிட்டில் என்ன நடக்கிறது?

Published on 04/09/2020 | Edited on 04/09/2020

 

eps

 

'எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்' எனச் சுற்றித் திரிகிறார் எடப்பாடி என்கிறார்கள் தமிழக அரசு அதிகாரிகள். நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த அ.தி.மு.க., உள்ளாட்சித் தேர்தலில் அதிகார பலம், போலீஸ் பலம் என அனைத்தும் இருந்தும் தி.மு.க.விடம் தோல்வி அடைந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக தி.மு.க ஆதரவில் வெற்றி பெற்றவர்களை விலைக்கு வாங்கி உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றதைப்போல ஒரு படத்தை காட்டுவதற்குள் எடப்பாடி திக்குமுக்காடிப்போனார்.

 

இதுதவிர ஓ.பி.எஸ். மூன்று முறை முதலமைச்சராகி ஜெயலலிதாவின் சாய்ஸ் நான் என மக்கள் மத்தியில் சுற்றி வருகிறார். போதாக் குறைக்கு சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தி தனக்கென ஒரு ஆதரவு தளத்தை தமிழகம் முழுவதும் உருவாக்கியிருக்கிறார். ஆனால் எடப்பாடி சசிகலா ஆதரவு பிரதிநிதியாக, அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மூலமாக முதல்வராகி ஆட்சியைத் தொடர்கிறார். அடுத்து வரக்கூடிய சட்டமன்றத் தேர்தல் பற்றிய பயம் அவருக்குள் தொற்றிவிட்டது. கரோனா காலத்தில் எதிர்க்கட்சிகள் யாரும் கூட்டம் போட முடியாது. பொதுமக்களைச் சந்திக்க முடியாது. ஆனால் முதலமைச்சர் என்கிற போர்வையில் கரோனா பாதிப்புகளை ஆய்வு செய்கிறேன் என எடப்பாடி கிளம்பிவிட்டார். கோவை, மதுரை, திருச்சி, தர்மபுரி, வேலூர், கடலூர், திருநெல்வேலி, நாகப்பட்டிணம், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சுற்றி வந்துவிட்டார்.

 

ஒவ்வொரு மாவட்ட பயணம் குறித்தும் தலைமைச் செயலாளர் மற்றும் முதலமைச்சரின் செயலாளரான செந்தில்குமார், கிரிராஜன், விஜயகுமார், தளவாய் சுந்தரம் என முதல்வர் அலுவலகத்தில் ஒரு டீமே முதலமைச்சரின் சுற்றுப் பயணத்தைக் கச்சிதமாகத் திட்டமிடுகிறது. அந்த மாவட்டங்களுக்கு முதலில் சுகாதாரத்துறை சார்பாக ஒரு மருத்துவர் குழு, நடமாடும் நவீன கரோனா டெஸ்டிங் லேபுடன் அனுப்பி வைக்கப்படுகிறது. அவர்கள் முதலமைச்சர் கலந்து கொள்ளக்கூடிய கூட்டம்-சந்திப்புகளில் பங்கேற்பவர்களுக்கு சோதனை செய்கிறார்கள். ரிசல்ட் அறிந்தபிறகே, முதலமைச்சர் அந்த மாவட்டத்திற்கு பயணம் செய்கிறார். பொதுக்கூட்டம் முடிந்து வீடு திரும்பியவுடன் முதலமைச்சருக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

 

ஜெ. முதலமைச்சராக இருந்த காலங்களில் மக்களையும் பத்திரிகையாளர்களையும் நேரில் சந்திப்பது அரிதினும் அரிது. அதுபற்றி விமர்சனங்கள் வரும்போது, தனது சுற்றுப்பயணத்தில் திடீரென ரோட்டோரம் காரை நிறுத்தி, மக்களைச் சந்தித்து பரபரப்பை ஏற்படுத்துவார். அதுபோல எடப்பாடியின் திருவாரூர், தஞ்சை மாவட்ட ஆய்வுப் பயணத்தின்போது வயலில் களை பறித்துக்கொண்டிருந்த விவசாயிகளை திடீரென முதல்வர் சந்தித்தார். அவர்களுக்கு முகக் கவசம் வழங்கினார் என்பதற்கான புகைப்படம், பயணம் செய்யும் செய்தி மக்கள் தொடர்பு துறையால் வெளியிடப்பட்டது.

 

eps

 

களைபறித்துக் கொண்டிருந்த பெண் விவசாயத் தொழிலாளர்கள் முகக் கவசம் அணிந்திருக்கும் புகைப்படமும் வெளியிடப்பட்டது. "இது திடீர் நிகழ்வல்ல. அந்த விவசாயத் தொழிலாளர்களுக்கு முதலமைச்சரின் வருகை முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கும் கரோனா டெஸ்ட் மேற்கொள்ளப்பட்டது. அதன் ரிசல்ட் தெரிந்தபிறகே விவசாயிகளை எடப்பாடி சந்தித்தார்'' என்கிறார்கள் முதலமைச்சருடன் பயணம் செய்யும் அதிகாரிகள்.

 

தர்மபுரியில் முதலமைச்சருடன் விழாவில் கலந்துகொள்ள சென்ற தி.மு.க எம்.பி. செந்தில்குமார் அனுமதிக்கப்படவில்லை. அதற்கு பதில் சொன்ன எடப்பாடி, கரோனா டெஸ்ட் செய்யாமல் யாரையும் அனுமதிக்க முடியாது என்றார். அப்படியிருக்கும்போது, வயலில் வேலை செய்பவர்களை டெஸ்ட் எடுக்காமல் முதல்வர் சந்திப்பாரா என்றும் கேட்டனர்.

 

Ad

 

முதல்வரின் விசிட் குறித்து அ.தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தோம். "இந்தப் பயணம் கட்சி ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் எந்தப் பலனையும் தரவில்லை. கரோனா காரணம், அவரிடம் எங்களது குறைகளைச் சொல்வதற்கு நாங்கள் முயற்சி செய்தும் சந்திக்க மறுக்கிறார். எங்களது கோரிக்கைகளையெல்லாம் ஒரு மனுவாக எழுதி கொடுங்கள் என அதிகாரிகள் சொல்கிறார்கள்.

 

எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சிகள் போகமுடியாத இடங்களுக்கெல்லாம் முதலமைச்சர் செல்கிறார். பேசுகிறார் என்பதைத் தவிர முதல்வர் விசிட்டில் பெரிதாக ஒன்றும் இல்லை.

 

எடப்பாடி ஆய்வு செய்யும் மாவட்டங்களில் கரோனா நிலவரம் எப்படி உள்ளது, நிறைவேற்றப்படும் திட்டங்கள் என்ன என்பதைப் பற்றிய புள்ளி விவரங்களுடன் முதல்வர் அலுவலகம் தயாரித்து தரும் பேச்சைப் படிக்கிறார். அது நேரலையாக ஒளிபரப்பாகிறது. எழுதிய பேச்சை, பச்சை நிறப் பின்னணியில் வரிக்கு வரி படிப்பதால், ஜெ'வாகிவிட முடியும் என நினைத்து நேரத்தை செலவு செய்கிறார். மக்களோ கட்சிக்காரர்களோ இதை ரசிப்பதில்லை.

 

கட்சி ரீதியாக ஒவ்வொரு மாவட்ட நிர்வாகியிடமும், ஓ.பி.எஸ் செல்வாக்கு எப்படி இருக்கிறது என விசாரிக்கிறார். அவருடன் வரும் உளவுத்துறையைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் சசிகலா வந்தால் என்ன நடக்கும் என முதல்வர் போகும் மாவட்டங்களில் உள்ள கட்சிக்காரர்களிடம் விசாரிக்கிறார்கள்.

 

அரசு சார்ந்த ஆய்வுப் பணிக்காக அவர் வரும்போது கட்சிக்காரர்களைத் திரட்டி வந்து வரவேற்பளிப்பதில் தொடங்கி, கார் டயரில் விழுகிற செயல் வரை அப்படியே ‘ஜெ'டப்பாடியாக இருக்கிறார் எடப்பாடி.

 

Nakkheeran

 

மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் ஆக்டிவாக செயல்பட முடியாதபடி கரோனா கட்டுப்பாடுகளை விதித்துவிட்டு, ஆளில்லாத மைதானத்தில் ஆக்டிவாக கத்தி வீசிக்கொண்டிருக்கிறார்.

 

 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.