Skip to main content

ஆட்சியை தக்கவைக்க எடப்பாடி எல்லை மீறுகிறாரா? 

Published on 09/05/2019 | Edited on 09/05/2019

தினகரன் ஆதரவு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் களான கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு ஆகிய மூவரையும் கட்சித்தாவல் தடைச் சட்டத்தின்படி தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என சபாநாயகரிடம் ஏப்ரல் 30-ந்தேதி கடிதம் கொடுத்தார் அரசு கொறடா ராஜேந்திரன். இதனையேற்று, 7 நாட்களுக்குள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட மூவருக்கும் நோட்டீஸ் அனுப்பியிருந்தார் சபாநாயகர். "இது ஜனநாயகப் படுகொலை' என விமர்சித்த எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மூவரின் பதவிப் பறிப்பை தடுக்கும் முகமாக, தனபால் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கான கடிதத்தை பேரவை செயலாளர் சீனிவாசனிடம் தாக்கல் செய்தார். இந்த நிலையில் கலைச்செல்வனும் ரத்தினசபாபதி யும், தனபாலின் நோட்டீஸுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதனை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோஹாய் தலைமையிலான அமர்வு தனபாலின் நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதித்ததுடன் விளக்கமளிக்க வும் உத்தரவிட்டது. 

 

mla



உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அறிந்ததும் அதிர்ச்சியடைந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சபாநாயகர் தனபாலிடமும் மூத்த அமைச்சர் ஜெயக்குமாரிடமும் நீண்ட நேரம் விவாதித்திருக்கிறார். அது குறித்து அ.தி.மு.க. சீனியர்களிடம் விசாரித்த போது, "எடப்பாடியிடம், "இடைக் காலத் தடைதானே தரப்பட்டிருக்கிறது. தீர்ப்பளிக்கவில்லையே. அதனால் பதட்டமடையத் தேவையில்லை' என சொல்லியிருக்கிறார் ஜெயக்குமார். சபாநாயகர் தனபாலோ, நீதி மன்றம் அனுப்பியுள்ள நோட்டீஸில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என ஆராய்வோம். பதிலளிக்கலாமா? வேண்டாமா? என அதன் பிறகு முடிவு செய்யலாம். என்னுடைய செயல்களுக்கு தடை விதிக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு கிடையாது. கோர்ட் நோட்டீசை வாங்காமல் திருப்பி அனுப்பவும் என்னால் முடியும் என தெரிவித்திருக்கிறார். அதனால் அதிகார மோதல் பூதாகரமாகலாம்'' என்கின்றனர். மேல்முறையீடு செய்யலாம் என்பதே அரசு வழக்கறிஞர்கள் தந்துள்ள ஆலோசனை. "சட்டமன்றமா நீதிமன்றமா என்ற நெடுங்கால சட்டப்போராட்டத்தின் அடிப்படையில் அதிகாரச் சண்டைக்கு சபாநாயகரைப் பயன்படுத்த ரெடியாகிறது அ.தி.மு.க. அரசு'' என்கிறார்கள் கோட்டையில் உள்ளவர்கள். 

 

ministers



அதேநேரத்தில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவு சம்மந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்களிடமும் தி.மு.க. உள்ளிட்ட அதன் தோழமை கட்சிகளிடமும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.  இதுகுறித்து தி.மு.க.வின் அமைப்புச் செயலாளரும் மூத்த வழக்கறிஞருமான ஆர்.எஸ்.பாரதியிடம் கேட்டபோது, "சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்து அதன் மூலம் பெரும்பான்மையை நிரூபிக்கும் தந்திரத்தை கையாளத் துடித்தார் எடப்பாடி பழனிச்சாமி. அவருக்கு ஆதரவாக நின்றார் சபாநாயகர் தனபால். இடைக்கால தடையின் மூலம் இவர்களுக்கு கொட்டு வைத்துள்ளது உச்சநீதிமன்றம். சபாநாயகரின் வானளாவிய அதிகாரத்தில் தலையிட முடியும் என சொல்லாமல் சொல்லியுள்ளார் தலைமை நீதிபதி. சட்டத்திற்கும் மேலானவர்கள் யாரும் இருக்க முடியாது. அது சபாநாயகருக்கும் பொருந்தும்.  கடந்த 2017 ஆகஸ்டில் குட்கா ஊழல் விவகாரத்தை சட்டமன்றத்தில் அம்பலப்படுத்திய பிரச்சனையில் ஸ்டாலின் உட்பட 21 தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்கும் நோக்கத்தில் அவர்கள் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உரிமைக் குழுவுக்கு பரிந்துரைத்தார் சபாநாயகர். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. தொடர்ந்த வழக்கில் சபா நாயகரின் நடவடிக்கைக்கு ஸ்டே வாங்கியிருக்கிறோம். அதனால், சபாநாயகரின் உத்தரவில் நீதிமன்றம் தலையிட அதிகாரம் இருக்கிறது. ஜனநாயகத்துக்கு விரோதமான தனது ஆட்சியை பாதுகாக்க எடப்பாடி போடும் திட்டங்களை சட்டத்தின் உதவியுடன் உடைத்தெறிவோம்'' என்கிறார் அழுத்தமாக.   

 

speaker



இடைத்தேர்தலில் தோல்வி ஏற்பட்டு தனது ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டால், அதனை தடுத்து நிறுத்தி, சபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 3 எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிப்பதுடன், குட்கா ஊழல் பிரச்சனையில் ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட 21 தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான உரிமை மீறல் விவகாரத்தில் சபாநாயகரின் உத்தரவுக்கு கொடுத்துள்ள தடையை உடைத்து அவர்களை 100 நாள் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் எனவும் திட்ட மிட்டிருந்தார் எடப்பாடி பழனிச்சாமி. அதற்கான சட்ட ரீதியிலான முயற்சிகளை அமைச்சர் சி.வி.சண்முகம் ரகசியமாக எடுத்து வந்த நிலையில்தான், மூவரின் பதவிப் பறிப்புக்கு தடை கொடுத்து எடப்பாடி அண்ட் கோவிற்கு அதிர்ச்சியை தந்திருக்கிறார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி. 

எடப்பாடியின் பிடியில் இருக்கும் அ.தி.மு.க.வை மீட்க வேண்டும் என தலைமைத் தேர்தல் ஆணையத்திலும் நீதிமன்றத்திலும் போராடி வரும் அ.தி.மு.க. வின் முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமியிடம் கேட்ட போது, "சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் இருப்பது நூறு சதவீதம் உண்மை. அரசியல் சாசனத்தின்படி லோக்சபாவிலும் சட்டசபையிலும் இதற்கான விதிமுறைகள் தெளிவாக உள்ளன. நீதிமன்றத்தில் வாதியாகவோ, பிரதிவாதியாகவோ சபாநாயகர் பதிலளிக்க வேண்டிய அவசியம் கிடையாது. நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஒரு பிரச்சனையில் இப்படி தெரிவித்த சம்பவம் உண்டு. அதனால், நீதிமன்றத்தின் தற்போதைய நோட்டீஸை சபாநாயகர் நினைத்தால் புறக்கணிக்க முடியும். சபாநாயகரின் ஒவ்வொரு செயலிலும் தலையிட நீதிமன்றங்களுக்கு அதிகாரம் கிடையாது. தற்போதைய பிரச்சனையில் மூன்று எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் கொடுத்திருக்கிறார் சபாநாயகர். அவ்வளவுதான். தீர்ப்பளித்து விடவில்லை. அதனால், தடை கொடுத்திருப்பது நீதிமன்றம் தனது வரம்பை மீறுவதாகும்''’என்கிறார். 
 

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.