Skip to main content

முதலமைச்சரின் பொருளாதார ஆலோசனைக் குழு; என்ன செய்திருக்கிறார்கள் இந்த ஐவர்..?

Published on 22/06/2021 | Edited on 22/06/2021

 

 

economic advisory team in tn govt

 

16- வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நேற்று (21/06/2021) காலை 10.00 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கியது. தமிழக ஆளுநர் உரையில் பொருளாதார ஆலோசனை குழு உள்ளிட்ட பல அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தது. 

 

அதில், தமிழக முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனை குழு அமைப்பது குறித்த அறிவிப்பு பலரையும் ஆச்சரியப்படுத்தியது. நோபல் பரிசுப் பெற்ற எஸ்தர் டஃப்லோ, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், நாராயண், பொருளாதார நிபுணர் ஜீன் ட்ரீஸ் உள்ளிட்ட ஐந்து பேர் இந்த பொருளாதார ஆலோசனை குழுவில் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் மூன்று பேர் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். இக்குழுவில் இடம்பெற்றுள்ளவர்களின் பின்னணி குறித்து இத்தொகுப்பில் பார்ப்போம்.

 

ரகுராம் ராஜன்:

தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் ரகுராம் ராஜன். இவர் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் என்ற மிகப்பெரிய பதவியில் இருந்தவர். கடந்த 2008- 2009 ஆம் ஆண்டில் அமெரிக்கப் பொருளாதாரம் பின்னடைவைச் சந்திக்கும் என முன்கூட்டியே கணித்து எச்சரிக்கை மணியை அடித்தவர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் முதன்மை ஆலோசகராக இருந்தவர். மத்திய பா.ஜ.க. அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியவர். பண மதிப்பு நீக்கம், சரியான முறையில் அமல்படுத்தப்படாத ஜி.எஸ்.டி. போன்றவை பொருளாதாரத்தின் வேகத்தைக் குறைத்து விட்டதாக மத்திய அரசைச் சாடியவர்.

 

அரவிந்த் சுப்ரமணியன்: 

தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அரவிந்த் சுப்ரமணியன் உலக வங்கியில் முக்கிய பதவிகளை அலங்கரித்தவர். பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசகர் குழுவில் 2014- ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகள் இடம் பதவி வகித்தார். பண மதிப்பு நீக்கத்தின் போது தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்தார். இவரது பதவிக்காலத்தை நீட்டிக்க மத்திய அரசு முன் வந்த போதும், அதை மறுத்துவிட்டு அமெரிக்கா சென்றார். அங்கிருந்து இந்தியா திரும்பிய பின் ஹரியானா மாநிலத்தில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தில் அவர் பேராசிரியராகப் பணியாற்றினார். 

 

எஸ்தர் டஃப்லோ: 

பிரான்ஸ் நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர் எஸ்தர் டஃப்லோ. இவர் அமெரிக்காவில் உள்ள மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியராக உள்ளார். வறுமை ஒழிப்பு குறித்து இந்தியா மட்டுமின்றி உலகமெங்கும் ஆய்வுகளை நடத்தியுள்ளார். 2019- ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசை கணவர் அபிஜித் பானர்ஜியுடன் இணைந்து பெற்றுள்ளார். ஏழை, எளியோரின் வறுமையைப் போக்குவதற்கான ஆய்வுகளை முன்னிலைப்படுத்தியவர். 2013- ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் கீழ் செயல்பட்ட உலகளாவிய பொருளாதார ஆணையத்தின் ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார். 

 

ஜீன் ட்ரீஸ்:

பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் ஜீன் ட்ரீஸ். இவர் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தைக் கொண்டு கிராமப் புறங்களில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கியவர். இவர் சமூக செயற்பாட்டாளரும் கூட. ஆண், பெண் பாகுபாடின்றி அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை முன்னெடுத்தவர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆட்சிக் காலத்தில், பொருளாதார ஆய்வுக் குழு உறுப்பினராக இருந்துள்ளார். கல்வி, வேலை வாய்ப்பு, குழந்தைப் பராமரிப்பு போன்ற சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். 

 

எஸ்.நாராயண்:

தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட எஸ்.நாராயண் சென்னையைச் சேர்ந்தவர். இவர் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். 1965- ஆம் ஆண்டு முதல் 2004- ஆம் ஆண்டு வரை மாநில அளவிலும், மத்திய அரசிலும் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவர். நிதி, தொழில்,  வர்த்தகம், கப்பல் போக்குவரத்து, எரிபொருள், விவசாயம், சாலை வசதி எனப் பல துறைகளில் தலைமை வகித்தவர். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் ஆலோசகராகவும் இருந்துள்ளார். அதேபோல், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் மத்திய அரசின் நிதிச் செயலாளராக இருந்துள்ளார். பணி ஓய்வுபெற்ற பிறகும், பல தொழில் நிறுவனங்களுக்கு இன்றும் ஆலோசகராக இருந்து வருகிறார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.