Skip to main content

இந்தி திணிப்பு... குரங்குகள் கூட அதனை ஏற்றுக்கொள்ளாது - மருத்துவர் ஷாலினி

Published on 18/09/2019 | Edited on 18/09/2019


கடந்த வாரம் உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தி மொழி நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியாக இருக்க வேண்டும் என்றும், அவ்வாறு இருந்தால் நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

பல நாடுகள் ஒரு மொழியை வைத்துக்கொண்டு இதுதான் எங்கள் தேசிய மொழி என்று சொல்லவில்லை. சிங்கப்பூர் அப்படி சொல்லவில்லை. நியூசிலாந்தில் ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருந்தால் கூட, மயோரி என்ற அந்த நாட்டின் பழங்குடி மொழியும் ஆட்சி மொழியாக உள்ளது. இப்போது நீங்கள் அமெரிக்கா சென்றால் கூட உங்களுக்கு ஆங்கிலத்தோடு ஸ்பானிஸ் மொழியும் தெரிந்திருக்க வேண்டும். அங்கே இருக்கின்ற பூர்வகுடி மக்களுக்கு ஸ்பானிஷ்தான் தெரியும். அதனால் பூர்வகுடி மொழிகளுக்கும் அங்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நீங்கள் மொழி சம்பந்தமான எந்த ஒரு ஆய்வை எடுத்துக்கொண்டாலும் இங்கே பூர்வகுடி மொழிகளாக தமிழ், தெலுங்கு, மலையாளம், துளு முதலிய திராவிட மொழிகள்தான் இருந்தது. அப்படி என்றால் இந்த மொழிகளில் ஒன்றைத்தானே தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும். அல்லது இந்த மொழிகளை கலந்து புதிய மொழியை தானே கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் திணித்து எந்த மொழியையும் பேச வைக்க முடியாது. உங்கள் மொழி உயர்வானது, எல்லா மக்களுக்கும் அது எளிதாக புரியும் என்றால் அதனை அனைவரும் விரும்பி கற்றுக்கொள்ள போகிறார்கள்.

 

xdf


அப்புறம் எதற்காக அதனை கட்டாயப்படுத்தி திணிக்க முயற்சி செய்கிறீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் திணித்து செயல்படுத்தலாம் என்றால் அதில் தோல்விதான் ஏற்படும். ஒரு மிருக காட்சி சாலையில் உள்ள இரண்டு குரங்களில் ஒரு குரங்குக்கு கேரட்டும், மற்றொரு குரங்குக்கு திராட்சையும் கொடுத்து பாருங்கள். கேரட் கொடுத்த குரங்கு அதனை ஏற்றுக்கொள்ளாது. குரங்கே இந்த அளவுக்கு சுயமரியாதையோடு இருக்கும்போது மனிதனிடம் அதை எதிர்பார்க்காது இருக்க முடியுமா? அனைத்து மொழிகளையும் விருப்பத்தின் பேரில் கற்றுக்கொள்ளலாம். ஆனால், கட்டாயப்படுத்தினால் அந்த மொழியின் மீது வெறுப்புத்தான் வருமே தவிர, வார்த்தைகள் வராது. இந்தி படித்தால் எத்தனை நாட்டுக்கு நம்மால் செல்ல முடியும். தமிழ் படித்தாலாவது நான்கைந்து நாடுகளுக்கு நம்மால் செல்ல முடியும். பெரிய கதவு நமக்கு திறந்திருக்கும்போது, குட்டி கதவு இந்தியை நாம் ஏன் படிக்க வேண்டும். ஆங்கிலம் படித்தால்தான் நாம் உலகத்தோடு தொடர்பு கொள்ள முடியுமே? அப்புறம் எதற்கு இந்த திணிப்பு வேலை. ஒரு மொழியை அழித்துவிட்டு மற்றொரு மொழியை வளர்ப்பது என்பது இயலாத காரியம்.
 

Next Story

இந்தி மொழி பற்றிய கேள்வி; கோபமாய் பதிலளித்த விஜய் சேதுபதி

Published on 08/01/2024 | Edited on 08/01/2024
vijay sethupathy about hindi imposition

விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடிப்பில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மெரி கிறிஸ்துமஸ்’. இப்படம் இந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் படமாக்கப்பட்டு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது. டிப்ஸ் மற்றும் மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் தமிழ்ப் பதிப்பில் ராதிகா சரத்குமார், சண்முக ராஜா, கவின் ஜெ பாபு மற்றும் ராஜேஷ் வில்லியம்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ராதிகா ஆப்தே மற்றும் அஸ்வின் கலாசேகர் ஆகியோர் இரண்டு பதிப்புகளிலும் நடித்துள்ளார்கள்.

ரிலீஸூக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ப்ரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் மும்பையைத் தொடர்ந்து சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு. இதில் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப், ஸ்ரீராம் ராகவன் உள்ளிட்டோர் பதிலளித்தனர்.

அப்போது விஜய் சேதுபதியிடம், ‘75 வருடமாக இங்கு இந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். இந்தி படிக்க வேண்டுமா வேண்டாமா..’ என்ற கேள்வியை ஒருவர் முன்வைத்தார். அதற்குப் பதிலளித்த விஜய் சேதுபதி, “இது மாதிரியான கேள்வியை அமீர்கான் வந்தபோதும் கேட்டீர்கள். எல்லா சமயத்திலும் கேட்கிறீர்கள். எதற்கு அந்த கேள்வி. என்னை போன்ற ஆட்களிடம் இந்த கேள்வி கேட்டு என்னவாகப் போகுது. இந்தி படிக்க வேண்டாம் என்று நாம் சொல்லவில்லை. திணிக்க வேண்டாம் என்றுதான் சொல்கிறோம். இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கு. கேள்வியே தப்பாக இருக்கிறது. இந்த இடத்தில் அது தேவையில்லாத கேள்வி. இந்தியை யாரும் இங்க தடுக்கவில்லை. எல்லாரும் படித்துக்கொண்டு தான் வருகிறார்கள். அதற்கான விளக்கம் பி.டி.ஆர் ஒரு இடத்தில் கொடுத்திருப்பார். அதை பார்த்தால் உங்களுக்கு தெளிவாக புரியும்” என சற்று கோபமாகச் சொன்னார்.

Next Story

'கோவாவில் தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த அவமானம்' - தமிழக முதல்வர் கண்டனம்

Published on 14/12/2023 | Edited on 26/12/2023
 'Hindi is the official language and not the national language'; Chief minister condemns player for insulting Tamil woman

கோவா விமான நிலையத்தில் தமிழ் பெண்ணுக்கு இந்தி தெரியவில்லை என்பதற்காக சிஐஎஸ்எப் பாதுகாப்பு வீரர் ஒருவரால் மிரட்டப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இது குறித்து வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், 'இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியை கற்கவேண்டும் என பாதுகாப்பு படைவீரர் பாடம் எடுத்துள்ளது கண்டனத்திற்குரியது' என தெரிவித்துள்ளார்.  

சென்னைக்கு பயணிப்பதற்காக கோவா விமான நிலையத்திற்கு வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் பொறியாளரிடம் இந்தி தெரியுமா? என்று கேட்டு அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார் சிஐஎஸ்எப் பாதுகாப்பு வீரர் ஒருவர். 'நான் தமிழ்நாட்டுப் பெண். எனக்கு இந்தி தெரியாது” என்று பெண் பொறியாளர் கூறியதை மதிக்காத மத்தியப் படை வீரர், ’தமிழ்நாடு இந்தியாவில் தானே இருக்கிறது. இந்தி தேசிய மொழி. வேண்டுமானால் கூகுள் செய்து பாருங்கள். இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தி கற்க வேண்டும் என்று உரத்தக் குரலில் கூறி பாடம் எடுக்கும் வகையில் தமிழ் பொறியாளரை அவமதித்திருக்கிறார்.

மத்திய பாதுகாப்புப் படை வீரரின் செயலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், 'இந்தி அலுவல் மொழியே தவிர தேசிய மொழி அல்ல. பல்வேறு மொழி பேசும் மக்களின் கூட்டாட்சி நாடு இந்தியா. கூட்டாட்சி தன்மையை வலியுறுத்தும் வகையில் தான் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் செயல்பட வேண்டும். இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தி கற்க வேண்டும் என பாதுகாப்பு படைவீரர் பாடம் எடுத்துள்ளது கண்டனத்திற்குரியது. விமான நிலையங்களில் அனைத்து மொழிகளுக்கும் உரிய மதிப்பும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.