Skip to main content

பாலில் தங்கம் இருக்கிறதா..? மருத்துவர் ஷாலினி பதில்!

Published on 07/11/2019 | Edited on 08/11/2019

பாலில் தங்கம் இருப்பதாக சில தினங்களுக்கு முன் மேற்கு வங்கத்தை சேர்ந்த பாஜக தலைவர் திலீப் கோஷ் கருத்து தெரிவித்திருந்தார். மேலும் சில சர்ச்சையான கருத்துக்கள் சிலவற்றையும் அவர் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக மனநல மருத்துவர் ஷாலினியிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். இதோ அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

மேற்கு வங்கத்தை சேர்ந்த பாஜக தலைவர் திலீப் கோஷ் என்பவர் மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் ஏன் நாய் கறி சாப்பிட வேண்டிய தானே? என்று சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக நீங்களும் கருத்து தெரிவித்திருந்தீர்கள். அவரின் இந்த கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

நிச்சயமாக அவர்கள் சொல்வதை அறிவியல் ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாது. உயிர்கள் மீது பற்று இருப்பவர்களாக தங்களை வெளிகாட்டி கொள்பவர்கள் எல்லா உயிரினங்களையும் அப்படிதான் நினைக்க வேண்டும். ஆனால், மாட்டை உயர்வாகவும், நாயை தரம் குறைந்ததாக அவர்கள் பிரித்து பார்ப்பதை நாம் எளிதாக அறிந்து கொள்ள முடிகிறது. ஒவ்வொரு உயிருக்கும் ஒரு உணவுப்பழக்க வழக்கங்கள் இருக்கிறது. அதன்படிதான் அவைகளின் செயல்பாடுகள் இருக்கும். வாழ்க்கை முறைகள் அமைந்திருக்கும். புலி, மானை தான் வேட்டையாடி சாப்பிடும். புலி சிங்கத்தை வேட்டையாடி சாப்பிடாது. ஒரு மாமிச பட்சி மற்றொரு மாமிச பட்சியை சாப்பிடுவது மிகக்குறைவு. இதற்கான ஆய்வு கூட செய்திருக்கிறார்கள். ஒருவர் காட்டிற்கு சென்று அங்குள்ள மாமிச பட்சியின் உடலை சாப்பிட்டுள்ளார். சாப்பிட்டுவிட்டு மீண்டும் நகரத்திற்கு வந்துள்ளார். ஆனால், சில நாட்களிலேயே அவர் மரணமடைந்தார். அவர் மரணத்திற்கான காரணம் என்ன என்று ஆராய்ந்த போது, அவர் உடலில் வைட்டமின்கள் அளவு அளவுக்கு மிஞ்சிய நிலையில் இருந்ததே காரணம் என்று கண்டுப்பிடித்துள்ளார்கள். ஆக, மனித இனம் ஏற்றுக்கொள்ளும் வகையில், அவர்களின் உடலை பாதிக்காத உணவு வகைகளையே மனிதன் சாப்பிட வேண்டும்.

 

c



ஆனால், மேலை நாடுகளில் ஒன்றான சீனா போன்ற நாடுகளில் நாய், பூனை, பல்லி போன்ற உணவுகளை சாப்பிடுகிறார்களே?

அதற்கான காரணம் வேறு. அந்த நாடுகளில் அந்த காலகட்டங்களில் பசி பஞ்சம் உச்சத்தில் இருந்தது. ஆகையால் எந்த உணவு கிடைத்தாலும் போது என்ற மனநிலையில் அவர்கள் சாப்பிட்டார்கள். ஆகையால், இதுதான் அவர்களின் உணவு பழக்க வழக்கங்களுக்கான உண்மையான காரணம்.

அதே பாஜக தலைவர் பாலில் தங்கம் இருப்பாதாக கூறியிருப்பதை பற்றி உங்களின் கருத்து என்ன?

பாலில் தங்கம் இருப்பதாக ஒருவர் கூறுகிறார் என்றால் அவர் எவ்வளவு அறிவானவராக இருப்பார் என்பது நமக்கு புரிய வரும். பால் மஞ்சள் நிறமாக இருப்பதற்கு அதில் உள்ள அதிகப்படியான கொழுப்புதான் காரணம். அதைவிட அதிகமாக மனித பால் மஞ்சள் நிறமாக இருக்கும். ஆகையால் இது முட்டாள் தனமான வாதமாகவே இதனை பார்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

 

 

 

 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.