Skip to main content

சிறுவனை செருப்பை கழட்ட சொன்ன விவகாரத்தில் சாதி ஆணவம் இருக்கிறது - மருத்துவர் எழிலன் பேச்சு!

Published on 07/02/2020 | Edited on 07/02/2020

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முதுமலையில் நடைபெற்ற விழாவில் கலந்துகொள்ள சென்ற போது அங்கே நின்றுகொண்டிருந்த மலைவாழ் சிறுவர்களை அழைத்து தன்னுடைய செருப்பை கழட்டிவிட சொன்னார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியையும், பரபரப்பை கிளப்பிவரும் நிலையில் இதுதொடர்பாக மருத்துவர் எழிலனிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு, 

 

bn



வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முதுமலையில் நடைபெற்ற யானை முகாமில் கலந்துகொள்வதற்காக நேற்று சென்றபோது பள்ளியில் படிக்கும் மாணவர்களை அழைத்து தன்னுடைய காலணிகளை கழட்ட சொல்லியிருக்கிறார். இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட மாற்று கட்சியினர் அவரின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்கள். சாதியவாதம் இந்த செயலில் அப்பட்டமாக இருப்பதாக கூறி, சில அமைப்புக்கள் அமைச்சருக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பேசிய அமைச்சர், நான் சிறுவர்களை என் பேரன் மாதிரி நினைத்துதான் உதவி கேட்டேன் என்று தெரிவித்துள்ளார். இதைபற்றிய உங்களின் பார்வை என்ன? 

அமைச்சரின் செயலை நாம் அனைவரும் தொலைக்காட்சிகளில் பார்த்தோம். அந்த விழாவுக்கு அவர் நடந்து வருகிறார். அப்போது எதிரே இருந்த சிறுவர்களை பார்த்து தம்பி, எனக்கு இந்த செருப்பை கழட்ட உதவி செய்யுங்கள் என்று கூறினால், அதை யாரும் தவறாக எடுத்துக்கொள்ள போவதில்லை. இதை அவர் அருகில் இருந்தவர்கள் கூட செய்வார்கள். ஏனென்றால் முடியாதவர்களுக்கு உதவி செய்வது என்பது தமிழர்களின் பண்பாடு. ஆனால் அமைச்சர் அந்த சிறுவர்களை எப்படி அழைத்தார். டேய் இங்கே வாங்கடா என்ற அதிகார தொனியில் சிறுவர்களை அழைத்து தன்னுடைய செருப்பை கழட்ட சொல்கிறார். சிறுவர்களும் அவருடைய செருப்பை கழட்டுகிறார்கள். அதில் அவருடைய அதிகார வர்க்கத்தின் திமிரை நம்மால் எளிதாக காண முடிகின்றது. எனக்கு திண்டுக்கல் சீனிவாசனாக இருந்தாலும், சாதாரண நபராக இருந்தாலும் ஒருவர் அந்தமாதிரி சிறுவனை செருப்பை கழட்ட சொல்கின்ற போது, அவருக்கு அருகில் இருந்த யாரும் அதனை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை, எதுவும் கேட்கவில்லை என்பது பெரிய வேதனை தருகின்ற விஷயம். இந்த காட்சிகளை தொலைக்காட்சிகள் எடுக்க வேண்டாம் என்று மறைக்கிறார்கள் என்றால் அதில் ஜாதியை தவிர வேறு என்ன இருக்க முடியும். 

இதற்கு அவர்கள் எந்த சப்பை கட்டு வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், அதற்கு பின்னால் இருப்பது சாதி ஆணவம்தான் என்பது வெளிப்படையாக அனைவருக்கும் புரிகின்ற ஒன்று. அந்த செருப்பை கழட்ட குனிந்த அந்த தம்பியோட மனநிலையை நாம யோசித்து பார்த்தோமா? அந்த தம்பிக்கு சுயமரியாதை பற்றி தெரிகின்ற வயது கூட இல்லை. அதனால் தான் அவர் சொன்னவுடன் அந்த தம்பி உடனடியாக குனிந்து செருப்பை  கழட்டுகிறான். அவனுக்கு செருப்பை கழட்ட கூடாது என்கிற அளவுக்கு புரிந்து கொள்கின்ற வயதும் இல்லை. இந்த செய்தி வைரலானதை அடுத்து அவர் தற்போது அந்த சிறுவனை தன்னுடைய பேரனை போல நினைத்ததாக தெரிவித்துள்ளார். பேரனை போல் நினைத்திருந்தால் அந்த சிறுவனை அவ்வாறு அவர் கூப்பிட்டு இருப்பாரா? ஒரு விலங்கை கூப்பிடுவதை போலதானே அந்த சிறுவனை அமைச்சர் கூப்பிட்டார். இரண்டிற்கும் எந்த ஒரு வேறுபாடும் இல்லை. அங்கே நின்று ஒருவர் கூட அதனை தடுக்க முயலாததுதான் வருத்தமான ஒன்று. 

இந்த சம்பவத்தில் நான் எந்த தவறும் செய்யவில்லை, இதில் தவறு எதுவும் இருப்பதாகவும் நான் நினைக்கவில்லை என்று அமைச்சர் கூறியுள்ளாரே? 

அதுவும் இன்னொரு சாதிய மனப்பான்மை தானே?  நான் செய்ததில் என்ன தவறு இருக்கிறது என்பதே சாதியோட உளவியல்தான். தனக்கு மேலாக இருப்பவர்களிடம் குனிந்து போவதும், தனக்கு கீழாக இருப்பவர்களிடம் அதிகார தோரணையை காட்டுவது என்பது தான் அவரின் இந்த பேச்சு வெளிப்படுத்துகிறது. அவர் நான் அப்படி நினைத்து கூப்பிடவில்லை என்று இப்போது வேண்டுமானால் கூறலாம். அந்த நிகழ்வை பார்த்த யாரும் அமைச்சருக்கு சாதி ரீதியான உள்நோக்கம் இருந்ததை நிச்சயம் உணர்ந்திருப்பார்கள். எனவே அவர் அமைச்சராக பதவிவேற்ற அரசியல் அமைப்பு சட்டத்தையே அவர் மீறிவிட்டதாகவே நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. 

 

 

Next Story

“போன முறை மாம்பழத்தோடு எங்க கூட இருந்தீங்க... இந்த முறை அவங்களோட இருக்குறீங்க” - சீனிவாசன் கிண்டல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Dindigul Srinivasan taunts pmk candidate

திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சச்சிதானந்தமும், அதிமுக கூட்டணியில்  உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவரும் வேட்பாளருமான முகமது  முபாரக்கும், பா.ஜ.க. கூட்டணியில் உள்ள பா.ம.க. வேட்பாளர் திலகபாமா உள்பட சில சுயேட்சைகள் போட்டிப் போடுகிறார்கள்.

Dindigul Srinivasan taunts pmk candidate

இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வந்தது. இதில் பா.ம.க. வேட்பாளர் திலகபாமா தனது வேட்புமனுவை மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான பூங்கொடியிடம் வேட்புமனு தாக்கல் செய்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார். அதேபோல் அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளரான எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் முகமது முபாரக், முன்னாள் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோருடன் தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான பூங்கொடியிடம் வேட்புமனு தாக்கல் செய்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

Dindigul Srinivasan taunts pmk candidate

அதேபோல் ஆளுங்கட்சியான திமுக கூட்டணி வேட்பாளரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சச்சிதானந்தத்துடன் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினரும், கிழக்கு மாவட்டச் செயலாளருமான ஐ.பி. செந்தில்குமார் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரான பாலகிருஷ்ணன் தலைமையில் தேர்தல் அதிகாரியான பூங்கொடியிடம் சி.பி.எம்.  சச்சிதானந்தம் வேட்புமனு தாக்கல் செய்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார். இப்படி மூன்று கட்சிகளும் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Dindigul Srinivasan taunts pmk candidate

இந்த நிலையில், வேட்பாளர்கள் தாக்கல் செய்த மனுக்களை ஒரு பக்கம் சரிபார்ப்பு பணியும் நடந்து கொண்டிருந்தது. அப்போது, முதலில் வேட்புமனு தாக்கல் செய்த பா.ம.க. வேட்பாளர் திலகபாமா ஒரு அறையில் உட்கார்ந்துவிட்டு வெளியே வரும்போது, அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வந்த முன்னாள் அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசன், திலகபாமாவை பார்த்த உடன் நீங்களும் இங்கேயா இருக்கீங்க... நல்லா இருக்கீங்களா... என்று கேட்டவாறே, கடந்த முறை மாம்பழம் சின்னத்தில் எங்களோடு இருந்தீங்க. இந்த முறை அவங்களோட இருக்குறீங்க... என்று கிண்டலடித்தவாறே திலகபாமாவிடம் கேட்டார். அதைத் தொடர்ந்து உடன் வந்த முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் உட்பட கட்சி பொறுப்பாளர்கள் சிலரும் திலகபாமா உட்பட உடன் வந்தவர்களுக்கும் கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story

“தமிழகத்தில் பாஜகவை அழிக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம்” - சீனிவாசன் 

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
AIADMK Srinivasan has said that we will not rest until BJP rules in Tamil Nadu

திண்டுக்கல்லில் அதிமுக சார்பில் ஆளுங்கட்சியைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு முன்னாள் மாநகர மேயர் மருதராஜ் தலைமை தாங்கினார். மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் ராஜ்மோகன், திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் ராஜசேகர், அபிராமி கூட்டுறவு சங்கத் தலைவர் பாரதி முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். அதன் பின் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, “தமிழகத்தில் பிஜேபியை அழிக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம்” எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, ஓபிஎஸ் மற்றும் பிஜேபி ஆதரவு காரணமாகத்தான் நான்கரை ஆண்டு காலம் தமிழகத்தில் எடப்பாடி ஆட்சி செய்தார் என ஓபிஎஸ் கூறியது தொடர்பாக கேட்ட கேள்விக்கு, எடப்பாடி பழனிசாமி ஆதரவு இருந்ததால் தான் அதிமுக வேட்டி கட்டி அதிமுக கொடியை பயன்படுத்தி ஆம்பளையாக ஓபிஎஸ் வெளியே வந்தார். தற்பொழுது தெய்வத்தின் தண்டனையாக அதிமுக வேட்டியை கூட அவரால் கட்ட முடியவில்லை. இது தெய்வம் தந்த தீர்ப்பாகும். ஓ. பன்னீர்செல்வம் பேசுவதெல்லாம் ஒரு பொருட்டு கிடையாது.

தமிழகத்தில் எங்களுக்கு போதுமான அளவு எம்எல்ஏக்கள் இருந்ததால் தான் நான்கரை ஆண்டு காலம் நாங்கள் ஆட்சி செய்தோம். ஓ. பன்னீர்செல்வமோ மற்றவர்களோ யாரும் எங்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. தமிழகத்தை பொறுத்தவரை பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி உரிய நேரத்தில் அறிவிப்பார். தமிழகத்தில் நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். அதன்பின் மத்தியில் தமிழகத்திற்கு யார் நல்லது செய்கிறார்களோ அந்த கட்சியின் பிரதமர் வேட்பாளருக்குத் தான் எங்களது ஆதரவு என்றார்.

மத்தியில் மீண்டும் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் அவர்களுக்கு உங்களுடைய ஆதரவு உண்டா என்ற கேள்விக்கு, பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் எங்களுடைய ஆதரவு  கிடையாது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நாசமா போய்விட்டது. தேர்தலில் மக்களை நம்பி அதிமுக உள்ளது. யாருக்கும் பயப்படும் கட்சி இல்லை என்று கூறினார்.