Skip to main content

பாத்திமா உயிரிழப்புக்கு நாம் வெட்கப்பட வேண்டும் - மனநல மருத்துவர் ஷாலினி!

Published on 19/11/2019 | Edited on 19/11/2019

சென்னை ஐஐடியில் கேரளாவை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி கடந்த 9ம் தேதி தற்கொலை செய்து கொண்டு இறந்ததாக கூறப்படும் நிலையில், இதுதொடர்பாக பல்வேறு சந்தேகங்களை அவரின் குடும்பத்தினர் எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில், இதுதொடர்பாக மனநல மருத்துவர் ஷாலினியிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் பின்வருமாறு,

சென்னை ஐஐடியில் கேரளாவை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதற்கு அரசியல்வாதிகள் பல்வேறு காரணங்களை கூறுகிறார்கள். தற்கொலைக்கு அதிகப்படியான மன உலைச்சலும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. இதை எதிர்கொள்கிற மனநிலையை அவர்கள் ஏன் பெறவில்லை. இந்த தற்கொலையை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

இது தற்கொலை என்பதால் அது மனநலம் சம்பந்தப்பட்ட ஒன்று. அதை பற்றி நாம் பேசித் தான் ஆக வேண்டும். அதுவும் என் மரணத்துக்கு இவர்கள்தான் காரணம் என்று எழுதி வைத்துவிட்டு இறந்தார் என்றால், அப்போது நாம் சூழ்நிலைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இவர் மட்டுமல்ல எந்த வயது உடையவர்களையும் அதிகப்படியான அளவு அவமானப்படுத்துதலோ அல்லது உதாசீனப்படுத்துதலோ அவர்களுக்கு நேரும்போது இயல்பாகவே அவர்கள் இத்தகைய முடிவுக்கு வருகிறார்கள். இது வயது சம்பந்தபட்டது மட்டும் அல்ல.  60 வயது உள்ளவர்களுக்கும் இத்தகைய அழுத்தங்கள் ஏற்படுவது உண்டு. எல்லோர் முன்னாடியும் என்னை இப்படி பேசிடாங்களே, இப்படி அவமானப்படுத்தி விட்டார்களே என்ற எண்ணம் தான் அவர்களுக்கு மோலோங்கி இருக்கும். இதுவே அவர்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாத நிலைக்கு போவதற்கு மிக முக்கியமான காரணம். 

 

j



இந்த பெண் குறிப்பாக தன் மரணத்துக்கு இதுதான் காரணம் என்று எழுதி இருக்கிறாள். தன்னுடைய பெயர் இங்கு மிக முக்கிய பிரச்சனையாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இது மன நலக்குறைப்பாடு என்று எடுத்துக்கொள்ள முடியாது. அவருக்கு அங்கு கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதனால் ஏற்பட்ட மன அழுத்தம் அவர்களால் தாங்க முடியாமல் அவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்றுதான் நாம் பார்க்க வேண்டும். எவ்வளவு பெரிய வலிமையானவர்களாக இருந்தாலும், அவர்களால் ஒரு குறிப்பிட்ட அழுத்தத்துக்கு மேல் தாங்க முடியாது என்பதுதான் இயற்கை. அந்த பெண் விளக்கமாக காரணத்தை பற்றி சொன்ன பிறகு நாம் அது குறித்து விசாரித்து அவர்களுக்கான நியாயத்தை வழங்கியே ஆக வேண்டும்.  அந்த பெண் என் பெயரே பிரச்சனையா இருக்கு என்று சொல்லியிருக்கிறாள் என்றால், அப்படி அவருக்கு என்ன பெயர் இருக்கிறது. பாத்திமா லத்தீப். இந்த பெயர் அதுவும் சென்னையில் பிரச்சனையாக இருக்கிறது என்றால் நம்முடைய சமூகத்தில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்றுதான் அர்த்தம். 

பாத்திமாவுக்கு முதலில் வட இந்தியாவில் படிக்க இடம் கிடைத்ததாகவும், ஆனால் தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்கும் என்பதால் நாங்கள் தமிழ்நாட்டை தேர்வு செய்தோம் என்று அந்த மாணவியின் அம்மா கூறியிருக்கிறார். மேலும், இயல்பாக இஸ்லாம் சமூகத்தில் அணியும் ஆடைகளையும் பொது சமூகத்தில் இணைவதற்காக நாங்கள் அவளிடம் தவிர்க்க சொன்னோம் என்று அவர்கள் அம்மா கூறியிருப்பதை பற்றி?

இது இஸ்லாமிய சமூக மக்களுக்கு இருக்கும் அச்சத்தின் வெளிப்பாடாகவே இதனை பார்க்க வேண்டும்.இவற்றை அவர்கள் உணர்ந்ததால் தான் வேறு எங்கும் அவரது மகளை சேர்க்காமல் தமிழகத்தில் சேர்ந்ததாக கூறுகிறார்கள். ஏனென்றால் தமிழகத்தில் மட்டும்தான் கோ பேக் மோடி சாத்தியப்படும் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. அப்படி இருந்து நீ முஸ்லிம் என்று சொல்ல தேவையில்லை, ஷால் போட்டுக்க தேவையில்லை என்று அவர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்றால், இதை நினைத்து நாம் அவமானப்பட வேண்டும்.


 

Next Story

“வெளியே சொல்லாததால் தடுக்க முடியவில்லை” - மாணவர்கள் மரணம் குறித்து ஐஐடி விளக்கம்

Published on 14/03/2023 | Edited on 14/03/2023

 

IIT statement on students passed awaIIT statement on students passed awayy

 

சென்னை ஐஐடியில் பி.டெக் மூன்றாம் ஆண்டு படித்து வரும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த புஷ்பக் ஸ்ரீ சாய் என்ற மாணவர் இன்று விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோட்டூர்புரம் போலீசார் மாணவர் புஷ்பக் ஸ்ரீ சாய் உடலைக் கைபற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

கடந்த மாதம் சென்னை ஐஐடியில் எம்.எஸ். எலெக்ட்ரிக்கல் இன்ஜினீரிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த ஸ்டீவன் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்போது அடுத்த மாதமே மீண்டும் ஒரு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில், சென்னை ஐஐடியில் தரப்பில் இருந்து, “பொருளாதாரம், குடும்பப் பிரச்சனை, மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். பிரச்சனைகளை மாணவர்கள் வெளிப்படுத்தாததால் அவர்கள் தற்கொலை செய்துகொள்வதை தடுக்க முடிவதில்லை” என்று விளக்கம் தரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

Next Story

ஐ.ஐ.டி. இயக்குநர் தமிழக முதலமைச்சருடன் சந்திப்பு

Published on 31/01/2022 | Edited on 31/01/2022

 

madras iit director meet tamilnadu chief minister for today

 

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (31/01/2022) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் (சென்னை ஐ.ஐ.டி.) முனைவர் வி.காமகோடி சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் முதல்வர் பேராசிரியர் கோஷி வர்கீஸ், பதிவாளர் முனைவர் ஜேன் பிரசாத், ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் விக்னேஷ் முத்துவிஜயன் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

 

கிராமப்புற மாணவர்களுக்கு சென்னை ஐ.ஐ.டி. உடன் இணைந்து பயிற்சி வழங்குவது குறித்து முதலமைச்சருடன், ஐ.ஐ.டி. இயக்குநர் ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் கூறுகின்றன. 

 

பின்னர் தனியார் செய்தி தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி, "சென்னை ஐ.ஐ.டி.யில் நடக்கும் நிகழ்ச்சிகளில் இனிமேல் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்படும். ஐ.ஐ.டி.யில் நேரடி வகுப்புகள் நடத்துவது பற்றி வரும் பிப்ரவரி 15-ஆம் தேதிக்குப் பிறகு முடிவு செய்யப்படும். வருங்காலங்களில் விண்வெளி ஆய்வு, 6ஜி தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்" என்றார்.