Skip to main content

மேக்கப் போட்டு டான்ஸ் ஆடத்தான் வேல் யாத்திரையா..? -மருத்துவர் ஷாலினி கேள்வி!

Published on 26/11/2020 | Edited on 26/11/2020
jk

 

 

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினர் தேர்தல் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். அதிமுக, பாஜக கூட்டணி தற்போது உறுதியாகியுள்ளது. தமிழகம் வந்த அமித்ஷா இதனை உறுதி செய்துள்ளார். இதற்கிடையே தமிழக பாஜகவினரும் மாநிலம் முழுவதும் வேல் யாத்திரை செய்கிறார்கள். இதற்கு தமிழக அரசு தரப்பில் தடை விதிக்கப்பட்டாலும் வேல் யாத்திரை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இது பற்றி நாம் பல்வேறு கேள்விகளை மனநல மருத்துவர் ஷாலினி அவர்களிடம் முன் வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

தமிழகத்தில் பாஜக நடத்தும் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்தாலும் தொடர்ந்து எல்லா மாவட்டங்களிலும் வேல் யாத்திரை நடத்துகிறார்கள். அதில் அதிகப்படியான மக்கள் கலந்துகொள்வதாக பாஜகவினர் தொடர்ந்து கூறி வருகிறார்கள். அதையும் தாண்டி தற்போது அமித்ஷா தமிழகம் வந்து அதிமுக கூட்டணியை உறுதி செய்துவிட்டு போய் இருக்கிறார். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? 

 

எனக்கு இவர்கள் செய்வதை பார்த்தால் ஒன்றுதான் நினைக்க தோன்றுகிறது. இங்கிருப்பவர்கள் அமித்ஷா மற்றும் பாஜகவினரை மிஸ் லீட் செய்வதாகத்தான் தோன்றுகிறது. அவர்கள் இந்த வேல் யாத்திரை என்பதை எப்படி செயல்படுத்துகிறார் என்பதை பார்க்க வேண்டும். அவர்கள் காரின் மேல் பகுதியை மட்டும் திறந்துவிட்டு தங்களுடைய தரிசனத்தை மக்களுக்கு காட்டிகொண்டு ஆரம்பத்தில் சென்றனர். அதுவே தவறாகத்தான் இருந்தது. கொற்றவையின் மகனான நிஜ முருகன் தான் வேலை கையில் வைத்திருக்க வேண்டும். முருகன் என்று பெயர் இருப்பதால் மட்டும் வேலை கையில் வைத்திருக்கக்கூடாது. யாராவது சாமியின் ஆயுதத்தை கையில் வைத்துக்கொண்டு சுத்துவதை பார்த்துள்ளீர்களா? நான் சங்கு சக்கரத்தை கையில் வைத்து சுத்தினால் என்னை பற்றி என்ன நினைப்பீர்கள். எனவே அவரை ஒரு ஆயுதமாக வைத்து இதை பாஜகவினர் செய்கிறார்கள். இது மக்கள் மனதில் எடுபடவில்லை என்பதையே நிஜ சூழ்நிலை நமக்கு காட்டுகிறது. 

 

பாஜகவின் வேல் யாத்திரையில் பெருவாரியான மக்கள் கூடுகிறார்கள், கைது செய்யப்படுகிறார்கள் என்று பாஜகவினர் கூறுகிறார்களே? 

 

இதெல்லாம் தமிழக பாஜக டெல்லி பாஜகவுக்கு சொல்ல விரும்புகின்ற செய்தி. அதற்காகத்தான் தமிழக பாஜகவினர் இதனை தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். ஆனால் உண்மையில் நடப்பது என்ன. பொதுமக்கள் அந்த போராட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. ஏன் கலந்து கொள்ளவில்லை என்றால், இப்படி செல்வதனால் ஏழாவதாக முருகனுக்கு வீடா கட்டப்போகிறார்கள் என்ற தெளிவு அனைத்து மக்களுக்கும் இருக்கிறது. எதாவது பயன் இருந்தால் தானே மக்கள் அதனை நோக்கி செல்வார்கள். கடவுளிடம் செல்வதே நாம் நினைப்பதை பெற வேண்டி வேண்டுதல் செய்யத்தானே? அப்படி இருக்கையில் தேவையில்லாத வேலைகளுக்கு சென்று அவர்கள் நேரத்தை எப்படி விரயமாக்க விரும்புவார்கள். 

 

அதையும் தாண்டி வேல் யாத்திரை செல்ல வேண்டும் என்றால் அலகு குத்த வேண்டும், அல்லது காவடி எடுக்க வேண்டும், செருப்பு போடாதவாறு செல்ல வேண்டும். இது எதையுமே அவர்கள் கடைபிடிக்கவில்லை. அதனால் அது பொதுமக்கள் மத்தியில் செல்லுபடியாகவில்லை. எனவே பெண்களை அழைத்துவந்து இடுப்பு தெரிய டான்ஸ் ஆடவிட்டு கூட்டம் சேர்க்கிறார்கள். முருகனுக்கு காவடி எடுக்கிறார்கள் என்றால் பக்தி ஆட்டம் வேண்டுமானால் ஆடுவார்கள், இந்த மாதிரி குத்தாட்டம் எல்லாமா ஆடுவார்கள். இதை பொதுமக்கள் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறார்கள். எதற்காக இவர்கள் இந்த நாடகத்தை போடுகிறார்கள் என்று அவர்கள் அனைவருக்கும் தெரியும். 

 

பக்தியில் இருக்கும் பெண்களை நீங்கள் கொச்சைபடுத்துவது போல் இருக்கிறதே?

பக்தியில் பெண்கள் எப்படி நடனமாடுவார்கள் என்று நீங்கள் பார்த்ததே இல்லையா? தூரமாக உடுக்கை சத்தம் கேட்டதும் தலைமுடியை விரித்து போட்டுக்கொண்டு ஆடுவார்கள். ஆனால் இவர்கள் செய்வது என்ன. வரிசையாக நின்று கொண்டு நடன பயிற்சி எடுத்துக்கொண்டு ஆடுவது போல் குத்துப்பாடலுக்கு டான்ஸ் ஆடுகிறார்கள். இதை எப்படி பக்தியில் ஆடுகிறார்கள் என்று நாம் சொல்ல முடியும். 

 

அவர்கள் அவர்களுக்கு தெரிந்த வழிமுறையில் பக்தியை வெளிப்படுத்துகிறார்கள். இதை நீங்கள் எப்படி தவறு என்று சொல்ல முடியும்?

 

அவர்களுக்கு தெரிந்த வழிமுறையில் வெளிப்படுத்தட்டும். ஆனால் இது நிஜ பக்தி இல்லை. எந்த ஊரில் மேக்கப் போட்டு சாமியாடுகிறார்கள். இவர்கள் செய்வது எங்களுக்கு பிடிக்கவில்லை. எங்களை ஏமாற்றாதீர்கள், நாங்கள் ஏமாளிகள் இல்லை என்று கூறுகிறோம். ஆனால் அவர்கள் தொடர்ந்து உண்மையான பக்தி உள்ளவர்களை அவமானப்படுத்துகிறார்கள். அதைத்தான் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்கிறோம். பக்தி என்ற போர்வையில் செருப்புடன் சென்று பக்தி உடையவர்களின் மனதினை காயப்படுத்தாதீர்கள் என்று வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

 

 

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.

Next Story

மோடியின் சர்ச்சை பேச்சு; பரப்படும் மன்மோகன் சிங்கின் விடியோ - தகிக்கும் தேர்தல் களம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Congress accuses BJP of misrepresenting Manmohan Singh's video and spreading it

ராஜஸ்தானில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தேசத்தின் செல்வத்தை இந்துக்களிடமிருந்து முஸ்லீம்களுக்கு கொடுத்துவிடுவார்கள் எனக் கூறி வெறுப்பு பிரச்சாரம் செய்தார். அதற்கு நாடு முழுவதம் கடும் கண்டனம் எழுந்து வருகிறது. சர்வாதிகாரியின் உண்மை முகம் வெளிவந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பகுதியில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, '‘காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது,​ ​தேசத்தின் செல்வத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்கு கொடுக்கப் போகிறீர்களா?’ என்றார். இதில், இஸ்லாமியர்களைப் பிரதமர் மோடி ஊடுருவல்காரர்கள் என்றும், அதிக குழந்தைகளைப் பெற்றவர்கள் எனவும் சித்தரித்து பேசியிருந்தார்.

தொடர்ந்து பேசிய மோடி, ''பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, இஸ்லாமியர்களுக்கே செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள், சகோதரிகளின் தாலியைக்கூட விட்டுவைக்காது. எனக் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார். இந்திய அரசியல் வரலாற்றில் எந்தவொரு பிரதமரும், இவ்வளவு தரம் தாழ்ந்து பேசியது கிடையாது என்றும், முதல் பிரதமாராக மோடி வெறுப்பு பிரச்சாரம் செய்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் எனக் கடும் கண்டனங்கள் எழுந்து வந்தது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நேரத்தில் நாட்டின் பிரதமர் வெறுப்பு பிரச்சாரம் செய்து இருப்பதால் மோடியைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. இதனிடையே, காங்கிரஸ் சார்பில் பிரதமர் மோடி வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், தன்னாட்சியாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையம் பிரதமர் வெறுப்பு பேச்சு தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது. இதற்கு முன்பு உத்தரப் பிரதேசத்தின் சஹரன்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் என்று முத்திரை குத்தி வெறுப்பு பிரச்சாரம் செய்தார். ஆனால், இந்திய தேர்தல் ஆணையம் அதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் நீட்சியாக பிரதமர் மோடி தொடர்ந்து இஸ்லாமியர்களை குறிவைத்து வெறுப்பு பிரச்சாரம் செய்து வரும் நிலையல், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமரின் அப்பட்டமான வெறுப்புப் பேச்சுக்கு காது கேளாத வகையில், இந்திய தேர்தல் ஆணையம் வெட்கமின்றி நடுநிலைமையைக் கூட கைவிட்டுள்ளதாக குற்றம் சாற்றியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சர்வாதிகாரியின் உண்மை முகம் மீண்டும் நாட்டின் முன் வெளிவந்துள்ளதாக சாடியுள்ளார். 

ஆனால், பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சை நியாப்படுத்தும் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், பிரதமர் மன்மோகன் சிங் பேசும் பழைய வீடியோவை கட் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இதனால், மன்மோகன் சிங் உண்மையில் பேசியது குறித்து காங்கிரஸ் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. அதில்,  கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், தேசத்தின் பல்வேறு வளர்ச்சிகள் சார்ந்த முன்னுரிமைகளை விளக்குகிறார். “பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினர், ஓபிசி பிரிவினர், சிறுபான்மையினர், பெண்கள், குழந்தைகள், குறிப்பாக, முஸ்லிம் சிறுபான்மையினர் வளர்ச்சியின் பலன்களில் சமமாகப் பங்குபெறும் வகையில், புதுமையான திட்டங்களை வகுக்க வேண்டும். வளங்கள் மீதான முதல் உரிமையை அவர்கள் பெற்றிருக்க வேண்டும். நாட்டின் வளங்களில் மத்திய அரசுக்கு எண்ணற்ற பிற பொறுப்புகள் உள்ளன. அது நாட்டு மக்கள் அனைவருக்கும் சென்று சேரவேண்டும். என மன்மோகன் சிங் பேசியுள்ளார்.

அப்போதே அவரது பேச்சு பொதுவெளியில் வேறாக புரிந்துகொள்ளப்பட்டதால் பிரதமர் அலுவலகத்தில் இருந்து விளக்கமும் கொடுத்ததாக சொல்லப்படுப்படுகிறது. ஆனால், பாஜகவினர், 'குறிப்பாக முஸ்லிம் மக்கள்' என  மன்மோகன் சிங் பேசுவதை மட்டும் கட் செய்து சமூக வலைத்தளங்களில் வெறுப்பு பிரச்சாரம் செய்து வருவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டுகின்றனர். நாட்டில் 10 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் பாஜக ஆட்சிகால சாதனைகளைக் கூற முடியாமல் 18 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவத்தை திரித்து வெறுப்பு பிரச்சாரம் செய்வதாக கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடி உண்மைக்கு மாறான தகவலைத் தந்துள்ளார் எனவும், காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் மோடி பேசியது எதையும் கூறவில்லை என்றும் அக்கட்சித் தலைவர்கள் விளக்கம் அளித்துவருகின்றனர். ஆனால், இதனிடையே உத்திரபிரதேசத்திற்கு தேர்தல் பரப்புரைக்கு சென்ற மோடி இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார். முன்னதாக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இடத்திற்கு இடம் பிரதமர் மோடி மாற்றி பேசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது