Skip to main content

கேள்விக்குப் பதில் சொல்ல திராணி இல்லாதவர்கள், தனிப்பட்ட தாக்குதல்களைத் தொடுக்கிறார்கள் - மருத்துவர் ஷாலினி பேச்சு!

Published on 09/06/2020 | Edited on 09/06/2020

 

ஸ


சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய பேராசிரியர் சுந்தரவள்ளிக்கும், இந்து தமிழர் கட்சித் தலைவர் ராம.ரவிக்குமாருக்கு இடையே விவாதத்தில் சச்சரவு ஏற்பட்டு விவாதக் களமே போர்க்களமானது. இருவருக்கும் ஆதரவானவர்கள், எதிரானவர்கள் என அனைவரும் தங்களின் கருத்தைத் தெரிவித்து வருகிறார்கள். இந்தச் சச்சரவு தொடர்பாக மனநல மருத்துவர் ஷாலினியிடம் கேள்வியை முன்வைத்தோம், அவரின் பதில் வருமாறு,
 


தொலைக்காட்சி விவாதங்களில் சமீப காலமாகச் சர்ச்சையான விஷயங்கள் நடைபெற்று வருகின்றது. காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி சில தினங்களுக்கு முன்பு கலந்துகொண்ட விவாதத்தில் ஒரு சர்ச்சையான சம்பவம் நடைபெற்று அவர் அரங்கில் இருந்து வெளியேறினார். அதைத் தொடந்து சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற தொலைக்காட்சி விவாதத்தில் இந்து தமிழர் கட்சித் தலைவர் ராம.ரவிக்குமாரும், பேராசிரியர் சுந்தரவள்ளியும் கலந்துகொண்ட விவாதத்தில் இருவர் பேசியதும் சர்சையானது. இருவரும் அதிகப்படியான வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசியது பார்வையாளர்களுக்கு ஒருபுறம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைப் பற்றிய தங்களின் கருத்து என்ன?

"பேராசிரியர் சுந்தரவள்ளி தொலைக்காட்சி விவாதத்தில் பேசிக்கொண்டு இருந்த போது ராம.ரவிக்குமார் தொடர்ந்து குறுக்கீட்டுக்கொண்டே வந்துள்ளார். இதனால் சுந்தரவள்ளி அவர்கள், அண்ணே! நீங்கள் நோட்ஸ் எடுத்துக்கோங்க, உங்களுக்கான நேரத்தில் நீங்கள் பேசலாம் என்று கூறினார். ஆனால் அவர் அது எதைப் பற்றியும் அவர் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. உங்களைப் பற்றி எனக்குத் தெரியாதா? உங்களை நாம் தமிழர் கட்சியினர் எப்படிப் பேசுகிறார்கள் என்று தெரியாதா? என்று கூறியுள்ளார். இவர் இப்படிப் பேசியதும் அவர்கள் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தார், அதன்பிறகு அவர் பேசிய டோன் பிறகு மாறியது. இதன் பிறகுதான் அவர்களுக்குள் வார்த்தை போர் வந்தது. பொறுத்துப் பார்த்த அவர் கட் பண்ணி விடுவேன் என்று கூறினார் என்றால் இந்த வார்த்தைகளை அவர் எங்கே கற்றுக்கொள்கிறார் ஆண்களிடம் இருந்துதான் கற்றுக்கொள்கிறார்கள்.  
 

 


ஒரு அரசியல் கட்சித் தலைவராக இருக்கும் ஆண் ஒருவர் ஒரு பெண்ணிடம் எப்படிப் பேச வேண்டும் என்று தெரியாமல் இருக்கிறார். இந்தக் கிராமத்தில் பாட்டிகள் எல்லாம் இட்டுக்கட்டி பேசுவதுபோல் அவர் எதையாவது சேர்த்துப் பேசுவதை வாடிக்கையாக வைத்திருப்பதை நாம் அந்தப் பேட்டியை மேலோட்டமாகப் பார்த்தாலே தெரிந்துகொள்ள முடியும். இந்த மாதிரி ஒரு சம்பவம் தான் ஜோதிமணி எம்.பிக்கும் நடைபெற்றது. அவர்கள் இங்கே இப்படி நடக்கின்றது, அங்கே இப்படி நடந்துள்ளது என்று ஆதாரப்பூர்வமாகப் பேசக்கூடியவர்கள். அவர்களின் கேள்விக்கு இவர்களிடம் எப்போதும் பதில் இருக்க போவதில்லை. கேள்விக்குப் பதில் சொல்ல திராணி இல்லாதவர்கள் பெண்கள் மீது தனிப்பட்ட தாக்குதல்களைத் தொடுக்கிறார்கள். தங்கள் வீடுகளில் பெண்கள் இருப்பதைக் கூட இவர்களுக்கு நாம் ஞாபகப்படுத்தினால் தான் உண்டு" என்றார்.



 

 

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; உயரும் பலி எண்ணிக்கை!

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
Increasing Corona Virus; Rising toll

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகையான கொரோனாவான ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில், நேற்று (31-12-23) வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.