Skip to main content

"இந்த ரவி போனால் வேற ஒரு குருவி வரும்; ஆளுநர் பதவியை அடியோடு தூக்கணும்..." - காந்தராஜ் தடாலடி

Published on 07/11/2022 | Edited on 07/11/2022

 

தக

 

தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக எழுந்துள்ளது. சனாதனம், மத்திய அரசின் இந்தித் திணிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் மத்திய அரசின் குரலாக அவர் தொடர்ந்து செயல்பட்டு வருவதால் திமுக மட்டும் அல்லாமல் திமுக தோழமைக் கட்சிகள் உட்பட பல்வேறு கட்சிகள் ஆளுநரின் பேச்சுக்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

 

இதன் உச்சக்கட்டமாக ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திமுக அதற்கான முன் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து பெற்று ஆளுநரைத் திரும்பப்பெற வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் திமுக மனு கொடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இதுதொடர்பாக மருத்துவரும் அரசியல் விமர்சகருமான காந்தராஜிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு: 

 


தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடு மத்திய அரசுக்கு ஆதரவாகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் தொடர்ந்து இருந்து வருகிறது. தமிழக அரசோடு தொடர்ந்து மோதல் போக்கைக் கடைப்பிடித்து வரும் ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் எனக் கோரி தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் திமுக கையெழுத்துக்களைப் பெற்று குடியரசுத்தலைவரிடம் கொடுக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

 

ஆளுநரைத் திரும்பப் பெறுவதால் என்ன நடந்துவிடப் போகிறது. இந்த ரவி போனால் வேறு ஒரு குருவி வரப் போகிறது. அதனால் என்ன பயன் ஏற்படப்போகிறது. ஆளுநர் பதவியை அடியோடு மாற்ற வேண்டும். பன்வாரி லால் போனாரு, ரவி வந்தாரு. எப்படி இருந்தாலும் ஆர்எஸ்எஸ் கூட்டத்திலிருந்து ஒருவர்தானே ஆளுநராக வரப் போகிறார்கள். இந்தப் பதவியையே தூக்க வேண்டும். தமிழிசை தெலுங்கானா ஆளுநராக இருக்கிறார், கூடுதலாகப் பாண்டிச்சேரிக்கும் ஆளுநராக இருக்கிறார். தமிழிசையால் தெலுங்கானாவிற்குப் போக முடிகிறதா? அதனால்தான் அவர் பாண்டிச்சேரி, தமிழகத்திலேயே இருக்கிறார். சாப்பாட்டுக்குக் கூட பணம் தரமாட்டேன் என்கிறார் அம்மாநில முதல்வர். அதைத் தமிழகத்தில் ஆளுநருக்குச் செய்ய முடியாதா? தெலுங்கானா முதல்வரால் முடிகின்றபோது தமிழக முதல்வர் ஏன் செய்ய முடியாது. 

 

ஒழுங்கா இருந்தா இருங்க, இல்லைனா சோறு தண்ணீ தர மாட்டோம்ன்னு ஏன் சொல்ல முடியல, நம்முடைய பணத்தைத்தானே அவருக்கு செலவு செய்கிறோம். அதனால் தமிழகத்திற்கு எதிராக அவர் செயல்படுகிறார் என்றால் அவருக்கு எதற்கு நாம் பணம் போட்டு சோறு போட வேண்டும். தமிழிசையால் தெலுங்கானா செல்ல முடியவில்லை பாருங்கள். அதைப்போல் செய்தால்தான் இவரும் திருந்துவார். இவர் அரசியல் கட்சித் தலைவர்கள் போல் பேசுவதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. 

 

ஆனால் தமிழிசை, ஆளுநர்கள் அவர்களுக்குத் தோன்றியதைப் பேசுவார்கள். அதை யாரும் தடுக்க முடியாது. அதைத் தடுக்க முயன்றாலும் ஆளுநர்கள் அதை முறியடிப்பார்கள் என்று கூறியுள்ளார். தமிழிசையின் இந்தக் கருத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

 

தமிழிசை சொல்வதுபோல ஓப்பனாக சொல்லிவிட வேண்டியது தானே? நாங்கள் கட்சிக்காரர்கள் தான், மத்திய அரசின் குரலாக நாங்கள் செயல்படுவோம் என்று சொல்லிவிட்டால் நாம் அதற்குத் தகுந்த மாதிரி நடந்துகொள்ளப் போகிறோம். ஆளுநர் நடுநிலை தவறாமல் இருக்க வேண்டும். அதுவே அந்தப் பதவிக்கு அழகு, ஆளுநர் பொறுப்பு வகிப்பவருக்கும் அழகு. அதை அவர் மீறும்போதும் அதற்குரிய எதிர் நடவடிக்கையை எடுத்தாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.  என்னைக்கு நீ அரசியல் பேச ஆரம்பித்தாயோ, அப்போது நீ அரசியல்வாதி ஆகிவிட்டாய். உங்க கட்சில செலவுக்குப் பணம் வாங்கிக் கொள்ள வேண்டியதுதானே? 


உங்கள் கருத்துக்களை எங்கள் மீது திணிக்க நீங்கள் இருக்கத் தேவையில்லை. நல்ல முறையில் நடந்தால் இங்கு இருக்கலாம், நாங்கள் நல்ல முறையில் செயல்படுவோம். எங்களிடம் அத்துமீறவோ, அவமதிக்கவோ ஆரம்பித்தால் அதற்கு நாங்களும் பதில் தருவோம். எனவே நல்ல முறையில் இருந்தால் சந்தோஷமாக போகலாம் என்பதை ஆளுநர் தற்போதாவது உணர வேண்டும். இல்லை, தமிழிசை போல நான் பேசுவேன் என்று எதிர்ப்பு அரசியலைக் கையிலெடுத்தால் அதற்குரிய பலனை ஆளுநர் விரைவில் அனுபவிப்பார். 

 

 

Next Story

'திமுக காங்கிரஸ் ஆட்சிக்கால சாதனை பட்டியலைச் சொல்லவா?'-தீவிர  பரப்புரையில் மு.க.ஸ்டாலின் 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'kalaingar himself calls him Balam Balu'- M.K.Stalin in intense lobbying

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத்  தீவிரபடுத்தியுள்ளன.

இந்நிலையில் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ''பாஜக எதிர்ப்பில் இபிஎஸ் உறுதியாக இல்லை. எடப்பாடி பழனிச்சமியால் பாஜகவை ஒருபோதும் எதிர்க்க முடியாது. இந்தியா கூட்டணிக்கான ஆதரவு அலை இந்தியா முழுவதும் வீசுகிறது. மக்களோடு இருந்து மக்களுக்காக பணியாற்றக் கூடியவர்கள் என்ற நம்பிக்கை எழந்துள்ளது. திமுக காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒன்றியத்தில் எத்தனை சாதனைகளை செய்திருக்கிறோம் பெரிய பட்டியலே இருக்கிறது.

உதாரணத்திற்கு நம்ம டி.ஆர்.பாலு, மூன்று துறைகளில் ஒன்றியத்தில் அமைச்சராக இருந்த பொழுது செஞ்ச சாதனைகளை மட்டும் சொல்லவா? ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த பொழுது தமிழ்நாட்டுக்கு மட்டும் 22,78 கோடி ரூபாய் மதிப்பிலான 15 பெரிய திட்டங்களைக் கொண்டு வந்தார். சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சராக தேசிய பல்கலைக்கழக உயிரின வளங்கள் ஆணையத்தை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தார். கப்பல் தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறையில் இருந்த பொழுது 56,644 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் தமிழகத்திற்கு கொண்டு வந்தார். இது மட்டுமா கிண்டி கத்திப்பாரா  மேம்பாலம், மாடி பாலம், தமிழ்நாட்டு தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டுமே 335 பாலங்களைக் கட்டி சாதனை பண்ணி இருக்கிறார். அதனால்தான் கலைஞரே பாலம் பாலு என்று அழைத்தார். இதேபோன்ற சாதனைகளை செய்வதற்காகவே ஒன்றியத்தில் நமது கூட்டணி ஆட்சியில் இருக்கும். அதற்காகத்தான் இந்த எலக்சனின் ஹீரோவாக தேர்தல் அறிக்கையை திமுகவும் காங்கிசும் வெளியிட்டு இருக்கிறோம். திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள சமூக நீதி அம்சங்கள் காங்கிரஸ் கட்சியினுடைய தேர்தல் அறிக்கையில் எதிரொலித்திருக்கிறது'' என்றார்.

Next Story

“ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசு வழிப்பறிக் கொள்ளையடிக்கிறது” - உதயநிதி குற்றச்சாட்டு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Udhayanidhi alleges Central govt is looting through GST

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட ஒத்தக்கடை பகுதியில், ஈரோடு மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து இன்று (ஏப்.16) காலை பிரச்சாரம் செய்தார் அமைச்சர் உதயநிதி. அப்போது அவர் பேசியதாவது, “கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்தவர்கள் மற்றும் வாக்களிக்கத் தவறிய மக்களும் பெருமைப்படும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பணிபுரிந்து வருகிறார்.

உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வர் ஆனார் ஸ்டாலின். ஆனால், பழனிசாமியை நீங்கள் முதல்வராக தேர்ந்தெடுக்கவில்லை. பாஜகவுடன் நான்கு ஆண்டுகள் கூட்டணியில் இருந்து, தமிழகத்தின் உரிமைகள், மொழி, நிதி, கல்வி உரிமைகளை பழனிசாமி விட்டுக் கொடுத்து விட்டார். நீட் தேர்வுக்கு போராட்டம் பாஜகவுக்கு பயந்து நீட் தேர்வினை தமிழகத்தில் அனுமதித்து விட்டார். நீட் தேர்வினால், இதுவரை 21 மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். திமுக ஆட்சி அமைந்த பிறகு, நீட் தேர்வினை ரத்து செய்ய சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திமுக ஆட்சிக்கு வந்ததும் பால் விலை, பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது. கரோனா காலத்தில், பி.எம்.கேர் என்ற பெயரில், வசூலிக்கப்பட்ட ரூ.32 ஆயிரம் கோடிக்கு இதுவரை கணக்கு காட்டவில்லை. ஆனால், தமிழகத்தில் கரோனா காலத்தில் உதவித்தொகை வழங்கப்பட்டது. இலவச பேருந்து பயண சலுகையை, ஈரோடு மாவட்டத்தில் 21 கோடி முறை பெண்கள் பயன்படுத்தி உள்ளனர். புதுமைப்பெண் திட்டம் மூலம் 11 ஆயிரம் மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள். காலை உணவுத் திட்டத்தில், 56 ஆயிரம் மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள். 4 லட்சம் மகளிர் உரிமைத் தொகை பெற்று வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை, மொடக்குறிச்சியில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை, ரூ.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சோலார் புறநகர் பேருந்து நிலையம், சோலார் பகுதியில் விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை, 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காய்கறிகள் சந்தை, சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லான் நினைவிடம் அமைக்க இடம் தேர்வு, அறச்சலூர் மலை கோயிலுக்கு செல்ல பாதை வசதி போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரவுள்ளன. முதலமைச்சர் காலை உணவு திட்டம் இந்தியாவில் சிறப்பு வாய்ந்த திட்டமாக உள்ளது. இத்திட்டம் மூலம், 18 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் காலை உணவு திட்டம் செயல்படுத்த இருப்பது தான் திராவிட மாடல் அரசு சாதனை. கடந்த 10 ஆண்டுகள் நாட்டை ஆண்ட பாஜக தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை. சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் வெள்ள பேரிடர் போது மத்திய அரசு உதவி செய்யவில்லை. ஜிஎஸ்டி மூலம் வசூல் செய்யப்படும் தொகையை மத்திய அரசு முறையாக, சரிசமமாக, மாநிலத்துக்கு நிதியை பகிர்ந்து வழங்குவதில்லை. தமிழகத்தில் இருந்து ஒரு ரூபாய் வரி வசூலித்தால், 29 பைசா மட்டும் திரும்ப வருகிறது.

தமிழகத்தில் இருந்து ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசு வழிப்பறிக் கொள்ளை அடித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக, தமிழகத்துக்கு வராத பிரதமர் மோடி, தேர்தலுக்காக தற்போது அடிக்கடி வருகிறார். பாஜக – அதிமுக கூட்டணி இல்லை என்று இப்போது நாடகம் போடுகின்றனர். தேர்தலுக்கு பிறகு, இருவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள். கடந்த தேர்தலில் அடிமை அதிமுக வை விரட்டி அடித்தது போல, இந்த முறை அதிமுக எஜமானர்களான பாஜகவையும் விரட்டி அடிக்க வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் உதயநிதி தனது பிரச்சாரத்தில் பிரதமர் மோடி- அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியுடன் இருக்கும் படம், செங்கல், 29 பைசா பதாகை போன்றவற்றை காட்டி அதுகுறித்து விளக்கம் அளித்தார்.