Skip to main content

"வாக்கு அரசியல் என்பது அரசியலின் பாலபாடம்... அதைச் செய்ய வேண்டாம் என்பது எந்த வகையில் நியாயம்.." - மருத்துவர் காந்தராஜ் கேள்வி!

Published on 28/10/2021 | Edited on 28/10/2021

 

hk

 

தமிழக முதல்வர் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களுக்குச் சென்று திட்டப் பணிகளை ஆய்வு செய்தல், புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார். அப்போது திடீரென பள்ளிக்குச் சென்று ஆய்வு மேற்கொள்ளுதல், மாநகர பேருந்துகளில் ஏறி பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிதல் உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதற்கு பல்வேறு தரப்பிலும் இருந்து வரவேற்பு தெரிவிக்கப்பட்டாலும், சிலர் இதனை வாக்கு அரசியல் என்ற வளையத்திற்குள் கொண்டு செல்கிறார்கள், முதலமைச்சரின் ஆய்வு தொடர்பாகச் சிலரிடம் கருத்துக்களைக் கேட்டுள்ளோம், அந்த கருத்துக்கள் வருமாறு...

 

இது தொடர்பாக மருத்துவர் காந்தராஜ் கூறும்போது, " அரசியலே வாக்குக்காகச் செய்யப்படுவது தானே, நல்லது ஒருவர் எதற்காகச் செய்கிறார், இதைக் காட்டி திரும்பவும் மக்கள் மனதில் இடம்பெற வேண்டும், வெற்றிபெற வேண்டும் என்பதற்காகத்தானே! நீங்கள் நல்லா இருக்க வேண்டும் என்பதைத் தாண்டி உங்களுக்கு நல்லது செய்தால் 50 பேர் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்பதுதானே அரசியலின் தார்மீகப்பாடம். அதைச் செய்ய வேண்டாம் என்பது, அதைக் குறை சொல்வது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. மக்கள் எல்லாம் ஆட்சியாளர்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறார்கள், வாக்குகள் மூலம் தானே, அப்புறம் வாக்கு அரசியல் செய்கிறீர்கள் என்றால் என்ன அர்த்தம். வாக்கு வாங்க என்ன செய்ய வேண்டுமோ அதனை அரசியல் தலைவர்கள் செய்வார்கள், அதைக் குறை சொல்ல ஒன்றுமில்லை. நல்லது செய்தால் அதை ஏன் ஆராய வேண்டும், ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே, அதில் ஏன் தயக்கம். இவரின் திடீர் ஆய்வு அடுத்தவர்களையும் நேர்மையாக நடக்க வேண்டும் என்ற பயத்தை ஏற்படுத்துகிறது. இதைப் பாராட்ட வேண்டும். என்று கூறினார்..

 

இது தொடர்பாக திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கூறும்போது, " வாக்கு அரசியலைச் செய்துதான் ஆக வேண்டும், பாஜக போன்ற மதவாதிகள் தமிழகத்தில் ஊடுருவாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமெனில் அதை நாம் செய்துதான் ஆகவேண்டும். நாங்கள் வாக்கு அரசியல் செய்வோம், அவர்கள் நாக்கு அரசியல் மட்டும் தான் செய்வார்கள். அவர்களால் நல்லது செய்வதை எப்போதும் பொறுத்துக்கொள்ள முடியாது. எனவே எதையாவது பேசிக்கொண்டே தான் இருப்பார்கள், அதை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. நாங்கள் எல்லாம் வாக்கு வாங்க அரசியல் செய்கிறோம், வெற்றி பெறுகிறோம், இவர்களால் அதையும் செய்ய முடியாது, வேறு ஏதாவது செய்ய முடியுமா என்றால் அதுவும் கூட முடியாது. வெற்று கூச்சலைத் தவிர அவர்களிடம் எதுவும் இல்லை" என்றார்.

 

 

 

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.