Skip to main content

ஸ்மார்ட் போனை தள்ளி வையுங்கள்....72 லட்சத்தை எடுத்து செல்லுங்கள்!!!

Published on 15/12/2018 | Edited on 15/12/2018
smart phone

 

“மொபைலில் எண்ணம் அற்ற நிலையில் ஸ்க்ரோல் செய்வதைவிட போரிங்கான விஷயம் வேறு எதுவும் இல்லை என நாங்கள் நினைக்கின்றோம். இந்த வழக்கமான செயலில் இருந்து எதிராக செயல்பட ஒரு வாய்ப்பு அளிக்க இருக்கிறோம். 100,000 டாலரை ஒருவரிடம் தந்து அதன்மூலம் உறுப்படியான ஒரு புதிய விஷயத்தை கண்டுபிடிப்பதற்கு உங்களின் நேரத்தை செலவிட அந்த பணத்தை தர உள்ளோம்” என்று விட்டமின்வாட்டர் நிறுவனத்தின் மேலாளர் நட்டாலியா சுவாரஸ் ஒரு பத்திரிகை நிறுவனத்திடம் பேட்டி கொடுத்தார்.
 

இதனையடுத்து இந்த 100,000 டாலரை எனக்கு தருவார்களா? என்று பலர் யோசிக்கத் தொடங்கியுள்ளார்கள். பலர் எப்படி இது நமக்கு கிடைக்கும் என்று தேட தொடங்கியுள்ளனர். உடனடியாக ஒரு பம்பர் தொகை வேண்டுமா, பின் வருபனவற்றில் சொல்வதை செய்யுங்கள்....
 

கொக்ககோலா நிறுவத்தினால் உருவாக்கப்பட்ட மற்றொரு நிறுவனம் விட்டமின்வாட்டர். இந்த நிறுவனம் புதிதாக ஒரு விஷயத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக ஒரு போட்டியை நடத்த இருக்கிறது. அந்த போட்டியில் வெற்றிபெறுபவருக்கு 100,000 அமெரிக்க டாலர் பரிசாம். இந்திய மதிப்பில் 72 லட்சம் ரூபாய் இருக்கும். இந்த போட்டியில் வெற்றிபெற்று 100,000 டாலரை பெற என்ன வழி இருக்கிறது என்று பார்த்தால், அது பலருக்கு கண்டிப்பாக முடியாத காரியம். வீட்லிருந்து அலுவலகம் வரை, ரோட்டிலிருந்து காடு வரை எல்லா இடத்திலும் தலையை குணிந்த மேனிக்கே செல்கின்றனர் அதற்கு முதல் காரணம் ஸ்மார்ட் மொபைல்கள். ஸ்மார்ட் மொபைல் இல்லாமல் ஒரு நிமிடம் கூட நிம்மதியாக இருக்க முடியாத நிலையில் பலர் இருக்க இந்த போட்டி ஒரு சவாலான போட்டியாகத்தான் இருக்கும். 
 

அப்படி என்ன போட்டி அது என்கிறீர்களா? ஒருவருடம் ஸ்மார்ட் மொபைல் பயன்படுத்தக்கூடாது இதுதான் விட்டமின்வாட்டர் நிறுவனம் போட்டியில் கலந்துகொள்பவர்களுக்கு வைக்கும் சவால். போட்டியில் தேர்வு செய்யப்பட்டவர்கள் தொடர்பிற்காக  விட்டமின்வாட்டர் நிறுவனம் தரும் 1996 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட மொபைலை தருவார்கள் அதைதான் இந்த போட்டியை பின்பற்றுபவர்கள் பயன்படுத்த வேண்டுமாம்.
 

இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக நீங்கள் தற்போது பார்த்துகொண்டிருக்கும் வேலையை விட வேண்டும் என நினைத்தால் அது தவறு. நீங்கள் லேப்டாப் மற்றும் கணினியை பயன்படுத்தலாம், இவ்வளவு ஏன் ஸ்மார்ட் டிவைசஸ் என்று சொல்லப்படும் கூகுள் ஹோம் மற்றும் அமேசான் அலெக்ஸா ஆகியவற்றைகூட பயன்படுத்தலாம். எனினும் வெற்றிபெற்று 100,000 டலரை பெற ஸ்மார்ட் மொபைல்கள், டேப்லட்களை பயன்படுத்தக்கூடாது. மற்றொருவரை தொடர்புகொள்ள வேண்டுமானாலும் 1996 ஆண்டு வெளியான சாதாரண மொபைல்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.
 

விட்டமின்வாட்டர் நிறுவனம், இந்த போட்டியில் பங்கேற்க கொடுத்திருக்கும் காலக்கெடு ஜனவரி மாதம் 8ஆம் தேதி வரை. போட்டியில் பங்குபெற செய்யவேண்டிய வழிமுறை, #nophoneforayear மற்றும் #contest என்ற ஹேஸ்டேகை பயன்படுத்தி எதற்காக ஒருவருடம் ஸ்மார்ட் மொபைல் பயன்படுத்தாமல் இந்த போட்டியில் பங்கேற்க நினைக்கிறீர்கள் என்ற விளக்கத்தை சமூக வலைதளங்களான ட்விட்டர் அல்லது இன்ஸ்டாகிராமில் பதிவிட வேண்டும். விட்டமின்வாட்டர் நிறுவனத்தால் ஜனவரி 22ஆம் தேதிக்குள் மேல் சொல்லப்பட்டதை போன்று சமூக வலைதளங்களில் பதிவு செய்தவர்களை இந்த போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். பிறகு அவர்களிடம் பழைய மொபைல்களை பயன்படுத்த தரும். 
 

உங்களுக்கு ஒருவருடம் ஸ்மார்ட் மொபைல்  பயன்படுத்தாமல் இருப்பது அதிகம் என்று யோசித்தால் அதற்கும் விட்டமின்வாட்டர் நிறுவனம் ஒரு மற்றொரு ஆப்ஷனை தருகிறது. அது என்ன என்றால், ஆறு மாதத்திற்கு ஸ்மார்ட் மொபைல்களை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும், அதற்கு பரிசு தொகையாக 10,000 அமெரிக்க டாலர் தரப்படும். இந்திய மதிப்பில் 7.2 லட்சமாம். ஆனால் ஒன்று, இந்த போட்டியை நடத்தும் நிறுவனத்தை ஏமாற்றி வெற்றிபெற்று விடலாம் என்று தப்பு கணக்கு போட்டுவிடாதீர்கள். இறுதியாக லை-டிடெக்டர்(பொய்யை கண்டுபிடிக்கும் கருவி) வைத்து, நீங்கள் இந்த ஒரு வருடத்தில் ஸ்மார்ட் மொபைல்கள் உபயோகப்படுத்தவில்லை என்பதை உறுதிசெய்துவிட்டுதான் இந்த பரிசு தொகையான 100,000 டாலரை தருவார்களாம்!

 

 

Next Story

விபரீத இன்ஸ்டா ரீல் இளைஞர்கள் கைது; போலீசார் எச்சரிக்கை

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
nn

அண்மைக்காலமாகவே 'மாஸ்' என்ற பெயரில் ஆயுதங்களுடன் இளைஞர்கள், மாணவர்கள் நடந்து வருவது, தாக்குவது, ஆபத்தான முறையில் வாகனங்களில் பயணம் செய்வது போன்ற ரீல்ஸ் வீடியோக்கள் வெளியாகி நடவடிக்கைகளுக்கு உள்ளாகி வருகிறது.

இந்நிலையில் இளைஞர் ஒருவர் நீர் நிலையில் மிகவும் ஆபத்தான முறையில் இன்ஸ்டா வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த இளைஞரையும் அதற்கு உதவியவர்களையும் கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. வைகை ஆற்றில் தண்ணீரில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து அந்த நெருப்புக்குள் குதித்து வீடியோ எடுத்து அதனை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் இளைஞர் ரீல்ஸாக வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரீல்ஸ் மோகத்தால் இது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வரும் நிலையில், இது ரீல்ஸ் எடுப்பவர்களின் உயிருக்கு கேடு விளைவிப்பதோடு மட்டுமல்லாது, நீர்நிலைகளில் பெட்ரோல் போன்ற பொருட்களை ஊற்றுவதால் நீர்நிலைகளும் மாசு அடையும். எனவே இதுபோன்ற நபர்கள் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இந்த வீடியோ போலீசாரின் கவனத்திற்கு சென்ற நிலையில் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர்கள் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வைரவம் தருவைகுளத்தில் விபரீதமாக மண்ணுக்குள் குழிதோண்டி அதனுள் இளைஞரை தலைகீழாக புதைத்து சாகசம் செய்து அதை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாவில் பதிவிட்டது தெரியவந்தது. இது தொடர்பாக தீவிர நடவடிக்கை எடுத்த போலீசார் ரஞ்சித் பாலா அவரது நண்பர்கள் சிவக்குமார், இசக்கி, ராஜா ஆகியோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தற்போது கைது செய்துள்ளனர். மேலும் இதுபோன்ற விபரீத செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story

'பார்ப்பதற்கே அறுவறுப்பாக உள்ளது' - அதிமுக முன்னாள் நிர்வாகி பேச்சுக்கு த்ரிஷா கண்டனம்

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
'It is disgusting to see'-Trisha condemns the speech of ADMK ex-executive

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகியான ஏ.வி. ராஜு அண்மையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘கூவத்தூர் விவகாரத்தில் நடிகை த்ரிஷாவை தொடர்புப்படுத்திப் பேசியிருந்தார். மேலும் தன்னை அதிமுகவிலிருந்து நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதிமுகவின் சட்ட விதிகளை தெரியாமல் எடப்பாடி பழனிசாமி உள்ளார்’ எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.

இந்த நிலையில், கூவத்தூர் விவகாரத்தில் தன்னை தொடர்புப்படுத்தி இழிவாகப் பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜுவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நடிகை த்ரிஷா, இது தொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'கவனம் ஈர்ப்பதற்காக எந்த அளவுக்கும் தரம் தாழ்ந்து பேசுபவர்களை பார்ப்பதற்கே அறுவறுப்பாக உள்ளது. அவதூறு பேச்சுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமது வழக்கறிஞர்கள் தேவையான நடவடிக்கை எடுப்பார்கள்' எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அதிமுக நிர்வாகி ஏ.வி. ராஜுவின் பேச்சுக்கு பல்வேறு சினிமா பிரபலங்களும் கண்டங்கள் தெரிவித்து வந்த நிலையில், தற்போது த்ரிஷா இதை உறுதிப்படுத்தி உள்ளார். இதற்கு முன்பே நடிகர் மன்சூர் அலிகானின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்த, தனது கண்டனத்தை த்ரிஷா தெரிவித்திருந்தார். பின்னர் அது நீதிமன்றம் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.