Skip to main content

போன் செய்தா எடுக்காதீங்க... எம்.எல்.ஏ.க்களுக்கு உத்தரவு போட்ட எடப்பாடி!

Published on 13/06/2019 | Edited on 13/06/2019

மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி என்று விடாப்பிடியாக நிற்கும் துணை முதல்வர் ஓ.பி.எஸ். நெருக்கடி ஒருபுறம், "எனக்கும் மத்திய அமைச்சர் பதவி வேண்டும்' என வைத்தியலிங்கமும் தம்பிதுரையும் தனித்தனியாக முரண்டுபிடிப்பது மறுபுறமென்றால்..., காலியாகும் மூன்று மாநிலங்களவை எம்.பி. பதவியை குறிவைக்கும் அ.தி.மு.க.வினர். போதாக்குறைக்கு அக்கிரிமென்ட்படி கேட்கும் பா.ம.க., ஆர்டர் போட்டு கேட்கும் பா.ஜ.க. என சுற்றிச் சுற்றி உரலைப்போல் இடிபடும் முதல்வர் எடப்பாடி எது வந்தாலும் வரட்டும் ஆனால் ஆட்சியை மட்டும் விட முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம். டெல்லி கவலையை விட இப்போது பெரிதும் எடப்பாடியை வாட்டுவது தி.மு.க.வின் "பாலாஜி ஆபரேசன்' தானாம்.

 

admk



நமது நக்கீரனில் "தி.மு.க. பேரத்தில் 30 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்' என விரிவாக எழுதியிருந்தோம் அதில் சம்பந்தப்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை உளவுத்துறை மூலம் எடப்பாடி ரகசியமாக கண்காணிப்பதையும் பட்டியல் போட்டுக் கூறியிருந்தோம், அதன் தொடர்ச்சியாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களே வெளியிடும் ரகசிய தகவல்கள்தான் இது.

அது என்ன "பாலாஜி ஆபரேசன்?'

பாலாஜி ட்ரீட்மெண்ட்படி சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை என 10 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அந்த பாலாஜியிடம் பரிசோதனைக்கு உட்பட்டுள்ளார்கள்'' என ரகசிய திட்டத்தை உடைத்து நம்மிடம் பேசினார் கொங்கு மண்டல அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர். அவரை தொடர்ந்து பேச வைத்தோம்...

 

 

dmk



அ.தி.மு.க.விலிருந்து தி.மு.க.வுக்கு வந்த மூத்த தலைவர்களனான சு.முத்துச்சாமி, எ.வ.வேலு, அனிதா ராதாகிருஷ்ணன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். என பல பேர் இருந்தாலும் இப்போதைய அ.தி.மு.க. நிர்வாக அமைப்பின் பலம், பலவீனம் என்ன என்பதை தெரிந்ததோடு யாருக்கு என்னென்ன தேவைகள் என்பதை அவர்களின் ஜாதகத்தோடு லிஸ்ட் எடுத்து தூண்டில் போடமுடியும் என்றால் அது அரவக்குறிச்சியில் வெற்றிபெற்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிதான்.

 

admk



அவர்தான் இப்போது தி.மு.க.வில் தொடர்பில்லாத ஒரு குழுவுடன் வெளிப்படையாக இறங்கியுள்ளார். இது மாநில உளவுத்துறைக்கு தெரிந்துவிட்டது அவர்கள் வைத்த பெயர்தான் "பாலாஜி ஆபரேசன்' என்பது. மேற்கு மற்றும் கொங்கு மண்டல எம்.எல்.ஏ.க்கள் பலருக்கும் செந்தில் பாலாஜி போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது சின்னம்மா சசிகலா உத்திரவுப்படி எங்களுக்கு வேண்டியதை செய்து கொடுத்துள்ளார். ஏன் இப்போது முதல்வராக இருக்கும் எடப்பாடிக்கும் பல பஸ் ரூட் கொடுத்துள்ளார். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பலர் பஸ் ரூட் பெற்றுள்ளோம். அந்த வகையில் செந்தில் பாலாஜியுடன் மிகநெருக்கமான தொடர்பு எங்களில் 95 சதவீதம் பேருக்கு உண்டு. இப்போது எங்க எம்.எல்.ஏ.க்கள் பலர் கேட்பது இந்த ஆட்சியுடன் எங்களின் அரசியல் வாழ்வு முடியக்கூடாது என்பதுதான்.


 

 

admk



சிலருக்கு அமைச்சர் ஆசை, சிலருக்கு கட்சியில் மா.செ. போன்று வெயிட்டான பதவி வேண்டும் என்பது. மேலும் சிலரை பொருளாதார ரீதியாக உயர்வை ஏற்படுத்துவது. இந்த மூன்றுக்குள்தான் எல்லோரின் மொத்த தேவையும் அடங்குகிறது. பாலாஜி ஆபரேசனில் இரண்டுசுற்று பேச்சு முடிந்துவிட்டது. அடுத்தது ஒரே சுற்றுதான். இதுவரை நாங்கள் கட்டியது பழைய வேட்டியாக மாறும். புதிய கரைபுடன் புதிய வேட்டி கட்டும் நிலை வரும்...'' என்ற அவர் ""சார் போன வாரம் கொங்கு மண்டல எம்.எல்.ஏ.க்கள் பலருக்கும் முதல்வர் எடப்பாடி அலுவலகத்திலிருந்து தொடர்ந்து போன் வந்தது. "பாலாஜி போன் செய்தா எடுக்காதீங்க... உங்கள் தேவைகள் நிறைவேறும்'னு சொன்னாங்க. அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் ரெண்டு நாளைக்கு ஒருமுறை போன் செய்து "ஒரே மாதம் பொறுங்க கூவத்தூரில் கிடைத்ததுபோல் அதே மடங்கு உங்களுக்கு கிடைக்கும்'னு சொல்றாங்க. எங்களில் பலர் எதிர்பார்ப்பது பணம், பொருள் அல்ல... அடுத்தடுத்த முறையும் நாங்கள் பதவி உள்ள அரசியல்வாதிகளாக நடமாட வேண்டும் என்பதுதான்'' என அந்த மூத்த எம்.எல்.ஏ. வெளிப்படையாகவே பேசினார்.

கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதே கொங்கு மண்டலம் நெருக்கடியை உருவாக்குகிறது.
 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.