Skip to main content

பயிற்சி பெற்றதென்னவோ கோல்ஃப் பந்தில்தான்... ஆனால், இவரைப்போல இன்னொரு கிரிக்கெட் வீரர் இல்லை!   

Published on 27/08/2018 | Edited on 27/08/2018
bradman

 

 

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் ஜாம்பவான், உலக கிரிக்கெட் வீரர்களின் கனவு வீரர் டான் பிராட்மென்னின் 110வது பிறந்தநாள் இன்று. தான் விளையாடிய 20 வருடங்களில் நடந்த மொத்த டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கை 50 மட்டுமே ஆனால் அதில் அவர் குவித்த ரன்கள் 6,996. அவரது சராசரி 99.94 இன்றுவரை இந்த சராசரியை தொட முயற்சித்தும் யாராலும் முடியவில்லை.

 

 


இந்த ஜாம்பவான் பிராட்மன் ஒரு நாளில் உருவாகவில்லை. கடுமையான பயிற்சி மட்டுமே அவரை உருவாக்கியது. ஒரு கோல்ஃப் பந்து, ஒரு வளைந்த சுவர், பேட், ஸ்டம்ப் இது மட்டுமே அவரின் பயிற்சி களம், சுவற்றில் அடித்து, அடித்துதான் அவர் கற்றுக்கொண்டார். அப்படியே படிப்படியான உயர்வுதான் அவரை உச்சத்திற்கு கொண்டுவந்தது.


தன்னுடைய முதல் சதத்தை பள்ளி அணியில் அவர் விளையாடியபோது படைத்தார், அந்த போட்டியில் அவர் 115 ரன்கள் (நாட் அவுட்) எடுத்தார். அந்த அணியின் மொத்த ரன் 156 மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது. செயின்ட் ஜார்ஜ்-ல் விளையாடுவதற்காக அவர் ஒவ்வொரு போட்டிக்கும் 130 கிலோமீட்டர்கள் செல்ல வேண்டியிருந்தது.


லீட்ஸ், மூன்றாவது டெஸ்ட் போட்டியின் ஒரு நாளில் அவர் எடுத்த ரன்கள் 309. இதுதான் ஒரு குவித்த அதிகபட்ட ரன்களாக இருந்தது. அந்த போட்டியில் அவர் மொத்தல் 334. 1947-48ல் நடந்த இந்திய சுற்றுப்பயண ஆட்டத்தில் பிராட்மன் 172 ரன்களை குவித்தார். முதல் தர நூறு ரன்கள் என்ற வரிசையில் அடித்த நூறாவது சென்சுரி அது.

 

 


அவர் இறந்தபின்பு அவரை கவுரவிக்கும் விதமாக ஆஸ்திரேலிய அரசாங்கம் 20 சென்ட் நாணயத்தில் அவர் முகம் பொறித்து வெளியிட்டது. அதுமட்டுமின்றி அவர் உயிருடன் இருக்கும்போதே அஞ்சல் அட்டையில் அவரது முகத்தை பொறித்து வெளியிட்டது. உயிருடன் இருக்கும்போதே அஞ்சல் தலையில் இடம்பெற்ற முதல் ஆஸ்திரேலியர் இவர்தான்.


பிராட்மென்னிற்கும் சச்சினுக்குமான உறவு குறிப்பிடத்தக்கது. சச்சினின் ஆட்டம் என்னைப்போன்றுள்ளது என்று கூறிய பிராட்மன் தனது கனவு அணியில் ஒருவராக சச்சினை குறிப்பிட்டுள்ளார். அவர்கள் இருவரும் பிராட்மனின் 90வது பிறந்தநாளில் சந்தித்ததுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. சச்சின் தனது குரு பிராட்மென் என்று குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

 

 

 

Next Story

இயக்குநராக அவதாரமெடுக்கும் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
All-rounder Yuvraj Singh will be incarnated as a director!

இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு வீரர் யுவ்ராஜ் சிங். களத்தில் தவிர்க்க முடியாத ஒரு ஆல் ரவுண்டராகவும், மிகச்சிறந்த பீல்டராகவும் மட்டுமல்லாமல், புற்று நோயால் பாதிக்கப்பட்டு, அந்த பாதிப்புடனேயே 2011 உலகக்கோப்பை விளையாடி, தொடர்நாயகன் விருதையும் பெற்று இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். ஒரு கிரிக்கெட் வீரராக சாதனை படைத்த வகையிலும், ஒரு நோயாளியாக கேன்சரை எதிர்த்து வென்று மீண்டும் கிரிக்கெட்டில் களம் கண்ட ஒரு வீரர் என்கிற வகையிலும் சமூகத்திற்கு ஒரு உதாரணமான மனிதர் என்றால் அது மிகையாகாது.

அப்படிப்பட்ட யுவ்ராஜ் சிங் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். கிரிக்கெட் பற்றியும் அவ்வப்போது சினிமா பற்றியும் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில்  அவர் பதிவிடுவது வழக்கம்.

இந்நிலையில், தற்போது ஒரு புதிய அறிவிப்பை தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ,“என் படத்தில் நான். நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்து நானே என்னுடைய வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்கவுள்ளேன். என்னை வாழ்த்துங்கள் நண்பர்களே! இன்னும் ஓரிரு வருடங்களில் என்னை பெரிய திரையில் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலும் பல அறிவிப்புகளுக்கு காத்திருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இது உண்மையா? இந்த பதிவுடன் சேர்த்து ஒரு கிண்டலான ஸ்மைலியையும் பதிவிட்டிருப்பதால் இது ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்துக்கான பதிவாகவும் இருக்கலாம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Next Story

கிரிக்கெட் கதைக்களத்தை கையிலெடுத்த ஜேசன் சஞ்சய்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
jason sanjay movie update

விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இவரது மகனான ஜேசன் சஞ்சய், கனடா பல்கலைக்கழகத்தில் சினிமா துறை சம்பந்தமாகப் படித்து வந்தார். இவர் குறும்படம் இயக்கும் புகைப்படங்கள் முன்னதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இயக்கம் மீது அவருக்கு ஆர்வம் இருப்பதாகச் சொல்லப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.  இப்படத்தை லைகா தயாரிக்கிறது. இப்படத்தில் கவின், துல்கர் சல்மான் உள்ளிட்ட சில நடிகர்களின் பெயர் அடிப்பட்டது. ஆனால் அறிவிப்புக்கு பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. 

பின்பு ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வந்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி கிரிக்கெட் கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. சமீப காலமாக கிரிக்கெட்டை மையப்படுத்தி லால் சலாம், ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்கள் வெளியாகின.

மேலும் டெஸ்ட் என்ற தலைப்பில் சசிகாந்த் இயக்கத்தில் ஒரு படம் உருவாகி வருகிறது.