Skip to main content

திமுககாரர்கள் நடத்தும் சிபிஎஸ்சி பள்ளிகளில் மட்டும்தான் இந்தி இருக்கிறதா? - டான் அசோக் கேள்வி!

Published on 12/09/2020 | Edited on 12/09/2020
ரக

 

 

கடந்த சில நாட்களுக்கு முன் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இருந்த ஒரு டேக் "இந்தி தெரியாது போடா" என்ற வாக்கியம். மத்திய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக இளைஞர்களால் இந்த கருத்து ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டது ஒருபுறம் என்றால், அதையே டீ சர்ட்டில் ப்ரிண்ட் செய்து பிரபலங்கள் அணிந்து வந்தது அந்த வாக்கியத்துக்கு மேலும் வலுசேர்த்தது.

 

லட்சக்கணக்கான ஹேஸ்டேக்குகள் ட்விட்டரை அதிர வைத்தன. சினிமா பிரபலங்கள் ஆரம்பித்து பாமரன் வரையில் டீ சர்ட் அணிந்து இந்தி திணிப்புக்கு எதிரான தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிலையில், பாஜகவை சேர்ந்த பல்வேறு நபர்கள் இதற்கு திமுகதான் காரணம் என்றும், அவர்கள் தூண்டுதல் இதில் இருக்கிறது போன்ற கருத்துகளை தெரிவித்தனர். இதில் உண்மை இருக்கிறதா, இல்லை இது வழக்கம் போல் எதிர்தரப்பு மீது செய்யப்படும் அரசியலா என்ற பல்வேறு கேள்விகளை திராவிட இயக்க ஆதரவாளர் டான் அசோக் அவர்களிடம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘இந்தி தெரியாது போடா’ என்று ட்விட்டரில் இளைஞர் ட்ரெண்ட் செய்தனர். பிரபலங்கள் உள்ளிட்ட அனைவரும் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக அவர்களின் எதிர்ப்பு திமுக பக்கம் திரும்பியுள்ளது. திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி சொல்லித் தரப்படவில்லையா என்று அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 

இதற்கு நாம் ஒரு பதில் கேள்வி கேட்க வேண்டியுள்ளது. திமுககாரர்கள் நடத்தும் பள்ளிகளில் மட்டும் இந்தி இருக்கிறதா, இல்லை மற்றவர்கள் நடத்தும் பள்ளிகளிலும் இந்தி இருக்கிறதா அதற்காகத்தான் திமுக அரசு சமச்சீர் கல்வியை கொண்டுவந்தது. அதனை ஜெயலலிதா அரசு பல்வேறு தடங்களை ஏற்படுத்தியது. கல்வி மாநில பட்டியலுக்கு வந்தால் மாநில அரசுகளே அதற்கான முடிவுகளை எடுத்துக்கொள்ள போகிறார்கள். இது மத்தய அரசின் பாடத்திட்டத்தின் கொள்கை. அதற்கு பள்ளி நடத்துபவர்கள் என்ன செய்வார்கள். யார் அதனை மாற்ற வேண்டும். எனவே தனி மனிதர்கள் மீது பழி போட கூடாது. இதை நீ மாற்ற வேண்டும், பள்ளி ஓனர் இதை மாற்றுவானா, இந்த ஒரு அறிவு கூட இல்லை என்றால் நாம் என்ன செய்ய முடியும்.

 

இந்தி சொல்லித்ததரும் பள்ளியை ஏன் நடத்தமாட்டோம் என்று திமுகவினர் ஏன் கூற மாட்டேன் என்கிறார்கள் என பாஜகவினர் கேட்கிறார்களே? 

முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். எனக்கு இந்தி தெரிந்திருந்தாலும் இந்தி திணிப்பை எதிர்க்கின்ற முழு உரிமை எனக்கு இருக்கின்றது. இது பாஜகவினருக்கே உள்ள மேம்போக்கான வாதம் என்ற அளவில்தான் இதனை பார்க்க வேண்டும். 

 

சிபிஎஸ்சி பள்ளிகளில் வசதியான மாணவர்கள் இந்தி கற்கிறார்கள். ஏழை மாணவர்கள் இந்தி படிக்க விரும்பினால் அவர்கள் எவ்வாறு படிப்பார்கள் என்று எதிர்தரப்பினர் கேள்வி எழுப்புகிறார்களே? 

பணக்காரர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவர்கள் காலையில் நீச்சல் பயிற்சிக்கு பிள்ளைகளை அனுப்புகிறார்கள், யோகா வகுப்புக்கு அனுப்புகிறார்கள், பணம் வைத்துள்ளவர்கள் அதை தெண்டமே என்று வீணாக செலவு செய்வார்கள். வேண்டாம் என்றாலும் பிள்ளைகள் மீது அவர்கள் திணிக்க முற்படுவார்கள். ஆனால் ஒரு அரசாங்கம் என்ன செய்ய முடியுமோ அதனை செய்ய வேண்டும். இந்தி படித்தவர்கள் தமிழ்நாட்டை விட முன்னேறிவிட்டார்கள் என்று ஏதேனும் ஆதாரம் வைத்திருக்கிறீர்களா, அப்படி இருந்தால் கொடுங்கள். அனைவரும் விவாதித்து முடிவுக்கு வருவோம். அண்ணா தெளிவாக கூறியிருக்கிறார், பெரிய வழி இருக்கும்போது எதற்காக சின்ன வழியை உருவாக்குகிறீர்கள் என்று, எனவே இந்தி என்பது தேவையில்லாத ஒன்றாகவே நாம் பார்க்க வேண்டும். 

 

 

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.