Skip to main content

திமுகவின் மாலை நேரப் பள்ளிக்கூடங்களுக்கு புத்துயிர் வழங்கப்படுமா?

Published on 10/09/2018 | Edited on 10/09/2018

கொள்கை சார்ந்த இயக்கமான திமுக, தனது கொள்கைளை அடுத்தடுத்த தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்க மிகப்பெரிய பேச்சாளர் பட்டாளத்தை உருவாக்கி இருந்தது.

 

arignar anna


 

திமுகவின் பேச்சாளர்கள் என்றால் அவர்களுக்கு தனி மரியாதை இருந்தது. தமிழகம், இந்தியா, உலகம் என்று அவர்கள் புள்ளிவிவரங்களை விரல் நுனியில் வைத்திருப்பார்கள்.

 

திராவிடர் கழகத்தில் பெரியாரின் சீடர்களாய் கொள்கைகளை மேடைகளில் முழங்கிய அண்ணா, கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தில் உலக அரசியலை தமிழர்களுக்கு கற்றுக் கொடுத்தார்கள். திமுக பொதுக்கூட்டங்களை மாலை நேரத்து பள்ளிக்கூடங்கள் என்று அண்ணாவும் கலைஞரும் கூறியிருக்கிறார்கள்.

 

தலைவர்கள் என்று சொல்லிக்கொள்வதைக் காட்டிலும் தங்களை பேச்சாளர்கள் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுவதாக அண்ணா உள்ளிட்ட திமுகவின் முன்னணி தலைவர்கள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

 

திமுகவின் முன்னணி பேச்சாளர்கள் தங்களுடன் இளம் பேச்சாளர்களையும் வளர்த்து விட்டார்கள். திமுகவில் இலக்கிய அணி சார்பில் பேச்சாளர்களை கண்டுபிடித்து ஊக்குவித்தார்கள். தலைமைக்கழகம் சார்பில் பேச்சாளர் பயிற்சி பட்டறைகள் அடிக்கடி நடத்தப்படும்.

 

திமுகவின் உடன்பிறப்புகளுக்காக மட்டுமின்றி, கழகத்தின் பேச்சாளர்களுக்காகவும்தான் கலைஞர் முரசொலியில் கடிதங்களை எழுதினார். அவருடைய கடிதங்கள் எதைக் கோடுகாட்டுகிறதோ அதைக் குறித்தே பேச்சாளர்கள் தமிழகம் முழுவதம் பேசுவார்கள். தொலைக்காட்சி மீடியாவும், மொபைல் போன்களில் அன்றாட செய்திகளும் விமர்சனங்களும் வந்தபிறகு கூட்டம் கேட்கும் ஆர்வம் குறைந்துவிட்டதாக ஒரு தவறான பார்வை உருவாக்கப்படுகிறது.

 

இதையே காரணம்காட்டி திமுக சார்பில் அரசியல் பொதுக்கூட்டங்கள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளன. பொதுக்கூட்டங்களை மட்டுமே நம்பியிருக்கும் பேச்சாளர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கித் தருவது தலைமையின் கடமை. மீட்டிங் இருந்தால்தான் ஈட்டிங் என்று முன்னணி பேச்சாளர்கள் கூறுவது உண்டு.

 

பொதுக்கூட்டத்துக்கு அதிக செலவாகிறது என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. அந்த அளவுக்கு கொண்டு சென்றது யார்? மாவட்டச் செயலாளர்கள்தான். எளிமையான மேடைகள் திமுகவின் அடையாளமாக இருந்தது. ஆனால், மாவட்டச் செயலாளர்கள் ஒன்றியச் செயலாளர்களுக்கு ஆடம்பரச் செலவுகளை அதிகமாக வைக்கிறார்கள். வளைவுகள், பேனர்கள், மாலை மரியாதைகள் என்று செலவு அதிகமாவதால்தான் கூட்டங்களை அடிக்கடி நடத்த முடிவதில்லை என்கிறார்கள்.


 

kalaignar

 

மாவட்டங்களின் பல பகுதிகளிலும் அடிக்கடி கட்சிக் கூட்டங்களை நடத்துவதுதான் கட்சியின் இருப்பைத் தக்கவைக்கவும், கட்சிக்காரர்கள் அடிக்கடி சந்தித்து நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவும் உதவும். திமுகவின் வேறு எந்தத் தலைவர்களைக் காட்டிலும் அண்ணாவுக்கும், கலைஞருக்கும்தான் தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகளுடனும், தொண்டர்களுடனும் நெருக்கம் அதிகமாக இருந்தது. அதிலும் கலைஞர் மிக நெருக்கமாக இருந்திருக்கிறார். அதற்கு அவரே காரணமும் சொல்லியிருக்கிறார்.

 

ஒரு கூட்டத்திற்கு போகும்போது கூட்டம் தொடங்குவதற்கு முன்னும், கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதும் அந்த பகுதியின் நிர்வாகிகளுடன் கலந்து பேசுவாராம் கலைஞர். மேடைக்கு பின்னேயும், மேடையிலும் அவர்களுடன் கலைஞர் பகுதிப் பிரச்சனையை கேட்டுத் தெரிந்துகொண்டு தனது பேச்சில் அந்தப் பிரச்சனையை இணைப்பாராம். அதன்மூலம் அந்தப் பகுதி கட்சிக்காரர்களின் மனதுக்கு நெருக்கமாவார். இதுதான், அண்ணா மறைவுக்குப் பிறகு கட்சியினரின் ஆதரவை அவருக்கு பெற்றுத்தந்தது எனக் கூறப்படுவதுண்டு.

 

கலைஞரின் இந்தச் செல்வாக்கைக் கூட ஏற்க மறுத்து, ஏதோ எம்ஜியார் ஆதரவால்தான் கலைஞருக்கு கட்சியினரின் ஆதரவு கிடைத்ததாக திசைதிருப்பும் பேர்வழிகள் அப்போதும் இப்போதும் இருக்கவே செய்கிறார்கள். எம்ஜியாருக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் எந்தக் காலத்திலும் நேரடித் தொடர்பு இருந்ததில்லை என்பதை அவர்களுக்கு புரிய வைக்க முடியாது.

 

சரி அதுபோகட்டும், இந்தக் கட்டுரையின் நோக்கம் இதுதான். திமுக தனது மாலை நேரத்து பள்ளிகளை புனரமைத்து, தங்களுடைய வாழ்வாதாரத்துக்கு வழி செய்ய வேண்டும் என்ற திமுக பேச்சாளர்களின் குமுறலை பதிவு செய்யத்தான். திமுக தலைவர் ஸ்டாலின் தனது சீர்திருத்த நடவடிக்கைகளில் இதையும் இணைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

 

 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.