Skip to main content

ஆடு, மாடு இருக்குன்னு சொல்ற அண்ணாமலை பில்லு எங்க இருக்குன்னு சொல்ல மாட்டேங்கிறாரே ஏன்? - இள. புகழேந்தி கேள்வி

Published on 23/12/2022 | Edited on 23/12/2022

 

kl

 

கடந்த சில நாட்களாக திமுக, பாஜகவுக்கு இடையே வார்த்தைப் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக அண்ணாமலையின் வாட்ச் விவகாரம் தொடர்பாக ஏற்படுத்திய சர்ச்சை தற்போது வரை குறைந்தபாடில்லை. தொடர்ந்து இருதரப்பும் அதுபற்றி பேசி வருகிறது. இதற்கிடையே அண்ணாமலையின் வாட்ச் விவகாரம் தொடர்பாகப் பேசும்போது நான் என்ன சட்டை போடுகிறேன், என்ன காரில் வருகிறேன் இதைத்தான் பார்க்கிறார்கள். இவர்களுடைய வேலை என்ன நோட்டமிடுவதுதான் என்ற தொனியில் பேசியிருந்தார். மேலும் அமைச்சர்களின் சொத்துப்பட்டியலை விரைவில் வெளியிடுவேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் அண்ணாமலையின் இந்தக் கருத்து தொடர்பாக திமுகவின் இள.புகழேந்தியிடம் நாம் கேட்டபோது, " அண்ணாமலை தேர்தலில் நின்று மக்களால் படுதோல்வி கொடுக்கப்பட்டுத் துரத்தப்பட்டவர். அவருக்கு வெற்றிபெற்று மக்களின் ஆதரவைப் பெற்றவர்களைப் பற்றிப் பேசுவதற்கு எந்தத் தகுதியும் இல்லை. எங்கள் அமைச்சர்கள் எல்லாம் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யும்போதே எல்லா விதமான தகவல்களையும் தேர்தல் ஆணையத்தில் தெரிவித்துள்ளார்கள். எனவே இவர் எங்களுக்குச் சொத்துப்பட்டியல் வெளியிட வேண்டிய அவசியம் இல்லை. இவர் கையில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாட்ச் கட்டியுள்ளாரே என்று கேட்டால், அடுத்தவர்களை மிரட்டும் நோக்கத்தில் உங்களின் சொத்துப்பட்டியலை வெளியிடட்டுமா என்று கேட்பதெல்லாம் எந்த மாதிரியான அரசியல் அண்ணாமலை செய்து வருகிறார் என்று நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் தெரியும். 

 

தன்னிடம் உண்மை இருக்கு, தேச பக்தன் என்று தொடர்ந்து சொல்லி வரும் அண்ணாமலை பில்லை கேட்டால் கோபப்படுவது ஏன் என்று தெரியவில்லை. தனக்கு இருக்கும் ஆடு, மாடு வரை அனைத்தையும் மக்கள் முன்பு வெளிப்படுத்தியுள்ளேன் என்று தெரிவித்திருக்கும் அண்ணாமலை, வாட்ச் வாங்கிய பில்லை மட்டும் இத்தனை முறை கேட்டும் ஏன் தர மறுக்கிறார். தன்னிடம் இல்லை என்று சொன்னாலும் பரவாயில்லை, தன்னிடம் இருக்கிறது ஆனால் ஏப்ரல் மாதம் தருகிறேன், மே மாதம் தருகிறேன் என்று சொல்வதெல்லாம் யாரை ஏமாற்ற அண்ணாமலை முயல்கிறார் என்ற கேள்வியை எழுப்புகிறது. எனவே சொந்தக் கதை பேசுவதை விட்டுவிட்டுக் கேட்கும் கேள்விக்கு ஒழுங்காக அண்ணாமலை பதில் சொல்ல வேண்டும்" என்றார். 


 

Next Story

'நீங்கள் எல்லோரும் கலைஞரின் பேரன்கள் தான்' - தயாநிதி மாறனை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
'You are all grandsons of the artist'- Udayanidhi campaign supporting Dayanidhi Maran

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி எழும்பூர் டாணா தெரு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ''தயாநிதி மாறனை உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற வாக்கு கேட்பதற்கு இங்கே வந்தேன். ஆனால் இங்கு வந்து பார்த்த பிறகு தான் தெரிகிறது என்னைவிட அதிக ஆர்வத்தோடு, எழுச்சியோடு அவரை வெற்றி பெறச் செய்வதில் நீங்கள் முனைப்போடு இருக்கிறீர்கள் என்பது. நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் போடும் ஓட்டு தான் மோடிக்கு வைக்கும் வேட்டு. கடந்த 2019 தேர்தலில் தயாநிதிமாறனை 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள். அதற்கு நான் பலமுறை  நன்றி தெரிவித்திருக்கிறேன். நான் இந்த பகுதிக்கு வருவது இது முதல் தடவையோ, இரண்டாவது தடவையோ அல்ல. இந்த மூன்று வருடத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட முறை குறையாமல் இங்கே வந்திருக்கிறேன்  கொரோனா காலத்திலும் சரி, மழை வெள்ள காலத்திலும் சரி அனைத்து பிரச்சனையின் போதும் இங்கே வந்திருக்கிறேன்.

அந்த உரிமையோடு கேட்கிறேன் குறைந்தது 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தயாநிதிமாறனை வெற்றி பெற வைக்க வேண்டும். எதிர்த்துப் போட்டியிடுபவர்கள் டெபாசிட் பெறக்கூடாது. நான் கலைஞர் பேரன் சொன்னதை கண்டிப்பாக செய்வேன். நீங்களும் நிறைவேற்ற வேண்டும். வேட்பாளரும் கலைஞர் பேரன் தான். கலைஞர் பேரனுக்கு கலைஞர் பேரன் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். இங்கு இருக்கும் அத்தனை பேரும் கலைஞரின் பேரன்கள் தான். நீங்கள் அத்தனை பேரும் பெரியாரின் பேரன்கள் தான், நீங்கள் அத்தனை பேரும் அண்ணாவின் பேரன்கள் தான். நாம் அனைவரும் கொள்கை பேரன்கள், லட்சிய பேரன்கள்'' என்றார்.

Next Story

''விஜய்யின் மக்கள் பணி சிறக்கட்டும்''- அமைச்சர் உதயநிதி வாழ்த்து!

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
"May his people succeed in their work" - Udayanidhi wishes

விஜய், தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். தமிழக வெற்றி கழகம் என தனது கட்சிக்கு பெயர் வைத்துள்ளதாக அறிவித்த விஜய், அதை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார். கட்சியின் பெயரை அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.

இதனிடையே கட்சியின் சார்பில் அறிக்கை வெளியிட்ட விஜய், ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள ஒரு படத்தில் நடித்துவிட்டு முழுமையாக கட்சிப் பணிகளை கவனிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இது ஒரு புறம் இருக்க, விஜய்க்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றுக்காக வந்த அமைச்சர் உதயநிதியை சூழ்ந்து கொண்ட செய்தியாளர்கள், நடிகர் விஜய் அரசியல் கட்சியை ஆரம்பித்திருப்பது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிளித்த அவர், 'இந்திய ஜனநாயகத்தில் யாரும் அரசியல் கட்சி இயக்கம் தொடங்கலாம். அதற்கான உரிமை இருக்கிறது. நடிகர் விஜய் அந்த முடிவை எடுத்திருக்கிறார். அவருக்கு நாம் அனைவரும் சேர்ந்து பாராட்டுக்கள் தெரிவித்துக் கொள்வோம். அவருடைய மக்கள் பணி சிறக்கட்டும்'' என்றார்.