Skip to main content

"சுய முரண்பாடுகளின் மொத்த உருவமாக தமிழிசை இருக்கிறார்; தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைக்கிறார்.." - இள.புகழேந்தி தடாலடி

Published on 12/12/2022 | Edited on 13/12/2022

 

ரகத

 

சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய புதுவை ஆளுநர் தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி என்று கூறுவதற்குப் பதிலாக தமிழக முதல்வர் வேறு நல்ல பெயரை வைக்க வேண்டும் என்றுகூறியதோடு வேறு சில அரசியல் தொடர்பான பேச்சுக்களைப் பதிவு செய்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாகச் சிலர் சமூக ஊடகங்களின் ஆளுநர் தமிழிசை அவர்களின் பேச்சைக் கண்டித்து கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக திமுகவின் இள.புகழேந்தி அவர்களிடம் கேள்வி எழுப்பினோம்.நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 


புதுவை ஆளுநர் முன்பு கிரண்பேடி போல் நான் செயல்படவில்லை, மற்றவர்களின் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது, மாநில மக்களுக்காகத் தொடர்ந்து பணியாற்றும் என்னிடம் அடுத்தவர்களோடு என் பணியை ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. மாநில மக்களுக்காக எனது செயல்பாடு எப்போதும் சிறப்பாக இருக்கிறது என்று புதுவை ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

 

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு இருக்கிறது. ஆனால் அதன் செயல்பாடு முதல்வரால் நடத்தப்படுகிறதா என்றால் இல்லை. அரசுடைய அனைத்து செயல்பாடுகளிலும் ஆளுநர் தலையிடுகிறார். ஆனால் தமிழிசை தற்போது அரசுக்கு ஒத்துழைக்கிறேன் என்று கூறுகிறேன். நேரத்துக்குத் தகுந்த மாதிரி மாற்றி மாற்றிப் பேசும் போக்கு தமிழிசையிடம் தொடர்ந்து இருந்து வருகிறது. தேவையில்லாத வேலையை அவர் தொடர்ந்து செய்து வருகிறது. கேட்டால் நான் என்னுடைய ஆளுநர் வேலையைப் பார்க்கிறேன் என்று கூறுகிறார், அது உங்களுடைய ஆளுநர் வேலை? நான் அரசியல் பேசுவேன், கை,கால் என அனைத்தையும் வைப்பேன் என்று கூறுவதெல்லாம் ஒரு ஆளுநர் செய்ய வேண்டிய வேலையா?

 

எத்தனையோ ஆளுநர்களைப் பார்த்துள்ளோம், யாராவது ஒருவர் இத்தகைய ஆணவத்தோடு பேசி பார்த்துள்ளீர்களா? தன்னை யாரும் கேள்வி கேட்க முடியாது, மாநில முதலமைச்சர்கள் எல்லாம் ஏதோ இவர்களுடைய வேலை ஆள் போல் தொடர்ந்து அவமரியாதை செய்வது, தேவையில்லாத இடங்களில் மூக்கை நுழைத்து அரசியல் செய்வது என்று தொடர்ந்து மக்கள் விரோத அரசியலை தமிழிசை அவர்கள் தொடர்ந்து செய்து வந்திருக்கிறார். ஆனால் நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எவ்வித தொல்லையையும் எப்போதும் அளிக்க மாட்டேன் என்ற கூறுவார். 

 

ஆனால் அவரின் நடவடிக்கை அதற்கு முற்றிலும் நேர்மாறாக இருக்கும். அதுதான் அவரின் அடாவடித்தனத்தைக் காட்டுகிறது. மாநில முதல்வரை விடத் தான் அதிக அதிகாரம் படைத்தவர் என்ற எண்ணம் அவருக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை. அம்மாநில முதல்வரை ஒரு பொருட்டாகக் கூட அவர் மதிப்பதில்லை. அதனால் இந்த அத்துமீறலை நாம் தொடர்ந்து பொருத்து கொண்டு இருக்க முடியாது. அதனால் அவருக்குத் தார்மீக எதிர்ப்பை தமிழகத்தில் தெரிவிக்க வேண்டியது அவசியமாகிறது. அன்றைக்கு அனைத்து தமிழகத்தில் நுழைப்பேன் என்று தெனாவட்டாக பேசிய அவர், மாண்டஸ் பாதிப்பு குறித்தும், தமிழகத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்துக் கேட்கும் போது அடுத்த மாநிலத்தில் நான் மூக்கை நுழைக்கமாட்டேன் என்று தெரிவிக்கிறார். 

 

ஏனென்றால் இந்த புயலை அரசு சிறப்பாக எதிர்கொண்டுள்ளது. அதனால் இதைப் பற்றிப் பேச விரும்பவில்லை என்று கூறுகிறார். இதுவே அவரின் இரட்டை நிலைப்பாட்டைத் தெரிவிக்க போதுமான ஒன்றாகும். சுய முரண்பாடுகளின் மொத்த உருவமாகத் தமிழிசை இருக்கிறார். மாற்றி மாற்றிப் பேசுவதை, தேவையில்லாத விஷயங்களில் கருத்து தெரிவிப்பது என்று ஆளுநருக்குச் சம்பந்தமில்லாத விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வதில் அதிக அக்கறை காட்டி வருகிறார். இவர்கள் யார் திராவிட மாடல் பெயரை மாற்றச்சொல்வதற்கு, இவர்கள் எங்களுக்கு ஆலோசனை,சொல்லுமளவுக்கு எங்களுக்கு அறிவில்லாமல் இல்லை, தமிழும் ஆங்கிலமும் தமிழகத்தில் எப்போதும் இருக்க வேண்டும் அதுவே அடுத்த கட்டத்துக்கு எதிர்கால மாணவர்களை இட்டுச்செல்லும் என்பது அண்ணாவின் கனவு. எனவே தேவையில்லாமல் எங்களைச் சீண்டாதீர்கள்.அது உங்களுக்கே பிரச்சனையாகப் போகும்.


 

 

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்