Skip to main content

திமுக இளைஞரணியும், மாணவரணியும் இனியும் இணைந்து செயல்படுமா?

Published on 04/02/2020 | Edited on 04/02/2020

திமுக இளைஞரணியின் உடனடி போராட்ட நடவடிக்கைகள் திமுகவினரை உற்சாகப்படுத்தத் தொடங்கியிருக்கிறது. குடியுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் அதைக் கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டத்தை இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார்.


அவரும் போராட்டத்தில் கலந்துகொண்டு சட்டநகலைக் கிழித்து கைதானார். மாலையில் விடுவிக்கப்பட்டாலும், இளைஞரணிச் செயலாளராக பொறுப்பேற்றபிறகு சிறைப்பட்ட முதல் அனுபவத்தை பெற்றார்

dmk party youngsters team and students team has merge working

பொதுவாக ஸ்டாலின் இளைஞரணிச் செயலாளர் ஆனபிறகு தமிழகம் முழுவதும் பயணம் செய்து இளைஞரணிக் கிளைகளை தொடங்கினார். ஆனால், 40 வயது வரை மட்டுமே இளைஞரணிப் பொறுப்புக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், திமுக பொருளாளர் ஆன பிறகும் ஸ்டாலின் இளைஞரணிப் பொறுப்பை யாருக்கும் கொடுக்கவில்லை.


ஏனெனில், திமுகவின் அமைப்புக்கு நிகராக இளைஞரணி பலம் பொருந்தியதாக இருந்தது. இளைஞரணி தொடங்கப்பட்ட பிறகுதான் திமுகவில் மாணவரணி பின்னுக்குத் தள்ளப்பட்டது. பொதுவாக, மாணவர்களையும் படித்த இளைஞர்களையும் அடித்தளமாகக் கொண்டே திமுக வளர்ந்தது. கல்லூரிகளில் இருந்தே திமுகவின் பொறுப்பாளர்களில் பலர் உருவானார்கள்.


மாணவர் அணி என்பதை நாற்றங்காலாகவும், இளைஞரணி என்பதை விளைநிலமாகவும் கருதி திமுக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று யோசனைகள் தெரிவிக்கப்பட்ட நிலையில், கடந்த காலங்களில் மாணவர்களை பாதிக்கிற எந்த விஷயத்திற்கும் உடனடியாக களம்கண்டதில்லை.

dmk party youngsters team and students team has merge working

இதற்கு காரணம் இளைஞரணிதான். இளைஞரணிப் பொறுப்பாளராக ஸ்டாலின் இருந்தவரை அவருடைய வயதுக்கு நிகரான இள.புகழேந்தியே மணவர் அணி செயலாளராக நீடித்தார். ஒரு காலத்தில் கல்லூரிகளில் திமுக மாணவர் அமைப்பு பலம் பொருந்தியதாக இருந்தது. மாணவர் பேரவைத் தேர்தல்களில் திமுகவும் அதிமுகவும் போட்டி போட்டுக்கொண்டிருந்தன. பின்னர் ஒரு கட்டத்தில் திமுகவின் ஆதிக்கத்தை தடுக்கும் நோக்கத்துடன் பேரவைத் தேர்தல்களை அதிமுக அரசு தடை செய்தது.


இந்தக் காலகட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எஸ்எப்ஐ அமைப்பு மாணவர்களிடம் ஊடுருவத் தொடங்கியது. பாஜகவின் ஏபிவிபியும் கணிசமான மாணவர்களை ஈர்க்கத் தொடங்கியது. எம்ஜியாருக்கு பிறகு ஆட்சிக்கு வந்த கலைஞர், ஜெயலலிதா ஆகியோரும் மாணவர் பேரவைத் தேர்தல் குறித்து அக்கறை காட்டவில்லை. ஆனால், அதிமுக இளைஞர் இளம்பெண் பாசறை, மாணவர் அணி ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.


என்னதான் இருந்தாலும், திமுக மாணவர் அமைப்பு செயல்படாத வெறும் பெயருக்கான அமைப்பாகவே தொடர்ந்தது. இந்நிலையில்தான் இளைஞரணிக்கு ஸ்டாலின் தனது மகனை உதயநிதியை செயலாளராக நியமித்தார். உடனே அதுவரை இல்லாத முக்கயத்துவம் இளைஞரணிக்கு கிடைத்தது. கலைஞரின் மகன் என்பதால் எப்படி ஸ்டாலின் தலைமையிலான இளைஞரணிக்கு திமுகவில் முக்கியத்துவம் கிடைத்ததோ, அதே அளவுக்கு உதயநிதி தலைமையிலான இளைஞரணிக்கும் புகழ் வெளிச்சம் கிடைக்கத் தொடங்கியது.

dmk party youngsters team and students team has merge working

உதயநிதி செயலாளர் ஆனதாலோ என்னவோ, திமுகவின் மூத்த தலைவர் மறைந்த சிவிஎம் அண்ணாமலையின் பேரன் சிவிஎம்பி எழிலரசன் மாணவர் அணிச் செயலாளராக நியமிக்கப்பட்டார். நியமிக்கப்பட்டதுடன், ஐஐடி மாணவர் பிரச்சனை உள்ளிட்ட விஷயங்களில் உடனுக்குடன் கண்டன அறிக்கைகள் வெளிவந்தன. சில போராட்டங்களையும் முன்னெடுத்தது. ஆனால், இளைஞரணி அளவுக்கு எழுச்சி இல்லை என்ற குறை இருந்தது.


இந்நிலையில்தான் படிக்கிற காலத்திலிருந்தும் படித்து முடித்த பின்னரும் அரசு வேலை வாய்ப்புக்கு இருந்த ஒரு வாய்ப்பான டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் நடந்த முறைகேடு தொடர்பாக மாணவர் அணியும், இளைஞர் அணியும் இணைந்து போராட்டத்தை நடத்தி இருக்கின்றன. வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வலியுறுத்தியே இந்தப் போராட்டம் நடந்திருக்கிறது. இது ஒரு நல்ல முன்னேற்றம் என்று கருதப்படுகிறது.


திமுகவில் இளைஞர்கள் மாணவர்கள் என்பவர்கள், கட்சிக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். கட்சிக்கு அப்பாற்பட்ட இளைஞர்கள் தமிழ்தேசிய அமைப்பைச் சேர்ந்தவர்களே ஈர்த்துவிடுகிறார்கள். மாணவப் பருவத்திலிருந்தே தமிழ்மொழிப் பற்று, மாநிலப் பற்று, தமிழகத்தின் தனித்தன்மை ஆகியவற்றை ஊட்டி வளர்க்க வேண்டிய திமுக இனியேனும் மாணவர்களாக இருக்கும்போதே இளைஞர்களை கவரும் வகையில் மாணவர் அணியையும் இளைஞர் அணியையும் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கும் என்று இளைய தலைமுறையினர் எதிர்பார்க்கிறார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

“இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
India alliance will take action to increase reservation CM MK Stalin

டெல்லியில் சம்ருதா பாரத் அறக்கட்டளை சார்பில் நடைபெற்று வரும் சமாஜிக் நியாயக் சம்மேளன மாநாட்டிற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார். அதில், “இந்தியாவிற்குள் சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு முக்கிய பங்கினை ஆற்றி வருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு, இட ஒதுக்கீடு முறைக்கு அச்சுறுத்தல் வரும்போதெல்லாம் திராவிட இயக்கம் உறுதியான எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி உள்ளிட்டோருக்கு 69% இடஒதுக்கீடு வழங்கி, தன்னிச்சையான 50% இடஒதுக்கீடு வரம்பை விட கூடுதலாக இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு முழு நிதியுதவியுடன், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான தொழில்முறை படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு அண்மையில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பட்டியலினத்தவருக்கும் இட ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் திமுகவின் பல கொள்கைகள் எதிரொலிப்பது என் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஓபிசி மற்றும் எஸ்சி மற்றும் எஸ்டியினரை மேம்படுத்துவதற்கான உறுதிமொழிகளை நமது வரவிருக்கும் அரசாங்கம் ஆர்வத்துடன் நிறைவேற்றும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிப்பது என்பது நீதிக்கட்சி காலத்திலிருந்தே இருக்கும் தமிழ்நாட்டின் மரபு ஆகும். சம்ருத்த பாரத் அறக்கட்டளையின் மாநாட்டில் சமூக நீதி பற்றிய எனது செய்தியை எங்கள் கட்சியின் எம்.பி.யான வில்சன் மூலம் பகிர்ந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் உள்ளடக்கிய இந்தியாவை நோக்கி நமது பயணத்தைத் தொடர்வோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.