Skip to main content

தி.மு.க.வுக்கு எதிராக தலைமைச் செயலாளரிடம் கடிதம் வாங்கும் டெல்லி! 

Published on 21/05/2020 | Edited on 21/05/2020

 

dmk party vs bjp delhi tamilnadu  chief secretary


தலைமைச் செயலாளர் சண்முகத்திற்கு எதிராக உரிமை மீறல் பிரச்சனையை நாடாளுமன்றக் கூட்டத்தில் எழுப்ப தீர்மானித்து அதற்கான கடிதத்தை நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் டி.ஆர்.பாலுவும் தயாநிதியும் கொடுத்துள்ளனர். விரைவில் துவங்கவிருக்கும் மழைக்கால கூட்டத் தொடரில் இந்தப் பிரச்சனை வெடிக்கவிருக்கிறது.
 


தி.மு.க. எம்.பி.க்கள் கொடுத்துள்ள உரிமை மீறல் விவகாரம், மத்திய அமைச்சரவை செயலர் மூலம் பிரதமர் மோடியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தைத் தொடர்புகொண்டு பிரதமர் அலுவலக அதிகாரிகள் விசாரித்திருக்கிறார்கள். 

அப்போது, தி.மு.க. எம்.பி.க்கள் நடந்துகொண்ட விதத்தையும், ஒரு கட்டத்தில் தன்னை மிரட்டுவது போல நடந்து கொண்டனர் என்றும் நடந்ததை விரிவாக பிரதமர் அலுவலக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார் சண்முகம். விபரங்களைக் கேட்டுக்கொண்ட அதிகாரிகள், இதனைக் கடிதமாக அனுப்பி வைக்குமாறு சண்முகத்துக்கு அறிவுறுத்தியுள்ளனர். அவர் அனுப்பும் கடிதத்தில் தி.மு.க.வை கார்னர் செய்யும் அரசியல்ரீதியான தாக்குதல்களும் இருக்கும் எனக் கோட்டை வட்டாரங்களில் எதிரொலிக்கிறது. சண்முகம் கூறிய தகவல்கள் பிரதமர் மோடியிடம் விவரிக்கப்பட்டுள்ளது. 

 

 


இந்த நிலையில்தான், தயாநிதிக்கு எதிராகப் புகார் கொடுக்க தமிழக பா.ஜ.க.வினருக்கு வலியுறுத்தும் யோசனை தயாரானது என்கின்றன டெல்லி தகவல்கள். தயாநிதிக்கு எதிராக டெல்லியின் கோபத்துக்கு என்ன காரணம் என விசாரித்த போது, "2019 நாடாளுமன்ற தேர்தல் சமயத்திலேயே, தயாநிதி மாறன், ஆ,ராசா, கனிமொழி, கார்த்தி சிதம்பரம், திருமாவளவன் ஆகிய 5 நபர்களும் தோற்கடிக்கப்பட வேண்டும் என விரும்பியது பா.ஜ.க. தலைமை. ஆனால், அந்த ஐவரும் வெற்றிப்பெற்றதை பிரதமர் மோடி அப்போதே ரசிக்கவில்லை. 

மேலும், நாடாளுமன்றத்தில் மோடிக்கு எதிராக மிகவும் ஆவேசமாக ஆக்ரோஷப்படுகிறார் தயாநிதி. அந்த வகையில், தயாநிதிக்கு எதிராகத் தற்போது பிரச்சனை உருவாகவும் அதில் அரசியல்ரீதியாகத் தீவிரம் காட்டுகிறது மத்திய பா.ஜ.க. அரசு" எனச் சுட்டிக்காட்டுகின்றனர் தேசிய பா.ஜ.க.வினரோடு தொடர்புடைய தமிழக பா.ஜ.க.வினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திரம் கொண்டு வருவோம்'-நிர்மலா சீதாராமன் 

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தலுக்கு முன்னதாகவே தேர்தல் பத்திரம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவுகள் இத்தேர்தலில் மிகப்பெரும் பேசு பொருளாக இருந்தது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்ட  நிலையில் பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரத் திட்டம் என்பது அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், நன்கொடை வழங்கியோர், நன்கொடையைப் பெற்ற கட்சிகளின் விவரங்களை ஆணையத்திடம் வழங்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவோம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிப்போம். அனைவரும் ஏற்கத்தக்க வகையில் தேர்தல் பத்திரம் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வோம். தேர்தல் பத்திரம் வெளிப்படை தன்மையானது, கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.