Skip to main content

திமுகவின் 4 எம்.பி., 8 மா.செ., 10 எம்.எல்.ஏ.க்களை ஸ்கெட்ச் போட்டு பிடியில் வைத்துள்ள பா.ஜ.க.? தடுப்பு வியூகத்தில் ஸ்டாலின்!

Published on 13/08/2020 | Edited on 13/08/2020
mks

 

 

மாநிலத்தில் வலிமையாக உள்ள கட்சிகளை பதம் பார்க்கும் படலத்தில் தமிழகத்தில் தன் ஆட்டத்தை அடித்து ஆட துவங்கியிருக்கிறது பாஜக. தி.மு.க எம்.எல்.ஏ. கு.க.செல்வத்தின் டெல்லி பயணத்தில் மறைந்துள்ள மர்மங்கள் அடேங்கப்பா ரகமாக இருக்கிறது.

 

சென்னை மேற்கு மா.செ.வாக இருந்த ஜெ.அன்பழகன் மறைந்ததையடுத்து அந்த பதவியைப் பிடிக்க கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் கு.க.செல்வம் உட்பட மாவட்டத்திலுள்ள மூத்த பகுதி செயலாளர்கள் பலரும் முயற்சித்தனர். ஆனால், சீனியர்கள் யாரையும் நியமிக்காமல் இளைஞரணியை சேர்ந்த சிற்றரசுவை உதயநிதியின் வற்புறுத்தலில் நியமித்தார் மு.க.ஸ்டாலின். இது அதிருப்தியை உருவாக்கியிருந்தது. இதை ஸ்டாலினின் கவனத்துக்கு மூத்த தலைவர்கள் கொண்டு சென்ற நிலையிலும் அதனை சரிசெய்ய அக்கறை காட்டப்படவில்லை. சிற்றரசு கூட்டிய நிர்வாகிகள் கூட்டத்தை கு.க.செல்வம் உட்பட பலரும் புறக்கணித்திருந்தனர்.

 

இந்த நிலையில்தான், தி.மு.க.வின் சிட்டிங் எம்.எல்.ஏ.வான கு.க.செல்வம் டெல்லியில் தமிழக பாஜக தலைவர் முருகன், தமிழக மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ், தமிழக பாஜக துணைத்தலைவர் ராஜா சகிதம் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் நட்டாவை சந்தித்தார். 40 நிமிடத்துக்கும் அதிகமாக நீடித்த சந்திப்புக்குப் பின் மீடியாக்களிடம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு லிஃப்ட் வேண்டும் என்ற கோரிக்கைக்காக வந்தேன் என்றார்.

 

செல்வத்தின் டெல்லி பயண விவகாரம் தி.மு.க.வில் அதிர்வுகளை ஏற்படுத்தியதுடன், ஸ்டாலின் மீதான விமர்சனத்தையும் உருவாக்கியது. இதனையடுத்து, கட்சியின் உயர்நிலை நிர்வாக குழுவிலுள்ள துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட பலருடனும் ஸ்டாலின் விவாதிக்க, செல்வத்தின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுங்கள் என வலியுறுத்தினர். இதனையடுத்து, கட்சி பொறுப்புகளிலிருந்து செல்வத்தை நீக்கி, விளக்க நோட்டீஸ் அனுப்பினார் மு.க.ஸ்டாலின்.

 

selvam

 

 

இதுகுறித்து தமிழக பா.ஜ.க.வின் உள்வட்டாரங்களில் விசாரித்தபோது, "பாஜகவில் இணைவதற்காக தான் டெல்லிக்கு சென்றார் செல்வம். ஆனால், பிரதமர் அலுவலகத்திலிருந்து நட்டாவுக்கு சில உத்தரவுகள் போனதால் கடைசி நேரத்தில் செல்வம் ஜகா வாங்க வேண்டியதாயிற்று. தி.மு.க.வில் சிலரின் மிதமிஞ்சிய ஆதிக்கத்தால் அப்செட்டில் இருப்பவர்களில் 2 மூத்த தலைவர்கள், 4 எம்.பி.க்கள், 8 மா.செ.க்கள், 10 எம்.எல்.ஏ.க்களுக்கு ஸ்கெட்ச் போடப்பட்டு, பா.ஜ.க. தன் பிடியில் வைத்துள்ளது. தேர்தல் நெருக்கத்தில் டெல்லியின் இலக்கு நிறைவேற்றப்பட விருக்கிறது'' என்கிறார்கள்.

 

sekar babu

 

இதுகுறித்து சென்னை கிழக்கு மா.செ.வும் எம்.எல்.ஏ.வுமான சேகர்பாபுவிடம் பேசியபோது, "செல்வம் போன்றவர்களால் கட்சிக்கு சிறிய சிராய்ப்புக்கூட ஏற்படாது. அதிகார அழுத்தத்தினால் தி.மு.க.வை பலகீனப்படுத்தலாம் என பா.ஜ.க. நினைக்குமானால், முன்பைவிட வீறுகொண்டு தி.மு.க. எழும். நெருக்கடிநிலை காலத்திலிருந்தே இதுதான் வரலாறு. கலைஞர் மறைவுக்கு பிறகு, தி.மு.க.வின் கம்பீரம் எங்கள் தலைவர் ஸ்டாலின். அவரை, பா.ஜ.க. உள்ளிட்ட எந்த அதிகார மையமும் மிரட்டி பணிய வைத்துவிட முடியாது'' என்கிறார் மிக ஆவேசமாக.

 

டெல்லிக்கு செல்வம் பறந்த பின்னணி குறித்து விசாரித்தபோது, "பாஜகவில் இணைந்து சமீபத்தில் மாநில பொறுப்பு வாங்கிய ரியல் எஸ்டேட் பிஸ்னெஸ் நபருக்கும், கு.க. செல்வத்துக்கும் நெருங்கிய நட்பு உண்டு. சென்னையிலுள்ள முக்கியமான மருத்துவமனை விற்பனைக்கு வருவதை அந்த பா.ஜ.க. பிரமுகரிடம் தெரிவித்த செல்வம், இதனை வாங்கும் சக்தி டெல்லியிலுள்ள பா.ஜ.க. தலைவர்களுக்குத்தான் இருக்கிறது என சொல்ல, இதனை முருகனிடம் தெரிவிக்கிறார் அந்த பிரமுகர். மூவரும் அடிக்கடி சந்திக்க, மருத்துவமனை விற்பனை விவகாரத்தை நட்டாவின் பார்வைக்கு எடுத்துச் செல்கிறார் முருகன். நேரம் வரும்போது அழைத்து வாருங்கள் என டெல்லி தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில்தான், மா.செ. பதவி கிடைக்காத அதிருப்தியை செல்வம் பகிர்ந்துகொள்ள, மாற்று கட்சியினரை வளைக்கும் அசைன்மெண்டில் இருக்கும் முருகன், தி.மு.க.வின் சிட்டிங் எம்.எல்.ஏ.வை தூக்கினால் நமக்கு மரியாதை உயரும் என்கிற ரீதியில் தகவல் தெரிவித்து, டெல்லி ப்ரோக்ராம் முடிவு செய்யப்படுகிறது.

 

Nakkheeran AD

 

முரளிதரராவ், முருகன், செல்வம் ஆகியோர் நட்டாவின் வீட்டில் அவரை சந்தித்து விவாதிக்கின்றனர். பரபரப்பான இந்த விவகாரத்தை பிரதமர் மோடியின் கவனத்துக்கு கொண்டு செல்கிறார் அமித்ஷாவின் சிஷ்யரான தேசிய பொதுச் செயலாளர் சந்தோஷ். தனக்கு தெரியாத மூவால் அதிர்ச்சியடைந்துள்ளார் மோடி. அயோத்தி பயணம் இருக்கும் சூழலில், இப்படிப்பட்ட நிகழ்வுகள் சரியல்ல என சந்தோஷ் மூலம் நட்டாவுக்கு சில உத்தரவுகளைப் பிறப்பிக்கிறார் மோடி.

 

அதாவது, எந்த சூழலிலும் பா.ஜ.க.வில் அவர் இணைந்ததாக செய்தி வரக்கூடாது. இணைவதெல்லாம் சென்னையோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்கிற உத்தரவு அது. இதன்பிறகே, பல்டி அடித்தார் செல்வம். அப்செட் மூடில் இருந்த நட்டாவும் மற்றவர்களும் பிஸ்னெஸ் விசயங்களை விவாதித்துவிட்டு செல்வத்தை சென்னைக்கு அனுப்பி வைத்தனர்'' என்று பின்னணிகளை விவரிக்கின்றனர் மத்திய உளவுத்துறையினர்.

 

சீனியர்களின் அதிருப்தியை சரிசெய்யும் தடுப்பு வியூகத்தில் உள்ள மு.க.ஸ்டாலினிடம், உதயநிதியின் தலையீடுகள் பற்றியும் சீனியர்கள் பலரும் தெரிவித்துள்ளனர். பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளில் முறையே துரைமுருகன், கனிமொழியை நியமிக்க ஸ்டாலின் திட்டமிடுவதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.