Skip to main content

திமுகவின் 4 எம்.பி., 8 மா.செ., 10 எம்.எல்.ஏ.க்களை ஸ்கெட்ச் போட்டு பிடியில் வைத்துள்ள பா.ஜ.க.? தடுப்பு வியூகத்தில் ஸ்டாலின்!

Published on 13/08/2020 | Edited on 13/08/2020
mks

 

 

மாநிலத்தில் வலிமையாக உள்ள கட்சிகளை பதம் பார்க்கும் படலத்தில் தமிழகத்தில் தன் ஆட்டத்தை அடித்து ஆட துவங்கியிருக்கிறது பாஜக. தி.மு.க எம்.எல்.ஏ. கு.க.செல்வத்தின் டெல்லி பயணத்தில் மறைந்துள்ள மர்மங்கள் அடேங்கப்பா ரகமாக இருக்கிறது.

 

சென்னை மேற்கு மா.செ.வாக இருந்த ஜெ.அன்பழகன் மறைந்ததையடுத்து அந்த பதவியைப் பிடிக்க கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் கு.க.செல்வம் உட்பட மாவட்டத்திலுள்ள மூத்த பகுதி செயலாளர்கள் பலரும் முயற்சித்தனர். ஆனால், சீனியர்கள் யாரையும் நியமிக்காமல் இளைஞரணியை சேர்ந்த சிற்றரசுவை உதயநிதியின் வற்புறுத்தலில் நியமித்தார் மு.க.ஸ்டாலின். இது அதிருப்தியை உருவாக்கியிருந்தது. இதை ஸ்டாலினின் கவனத்துக்கு மூத்த தலைவர்கள் கொண்டு சென்ற நிலையிலும் அதனை சரிசெய்ய அக்கறை காட்டப்படவில்லை. சிற்றரசு கூட்டிய நிர்வாகிகள் கூட்டத்தை கு.க.செல்வம் உட்பட பலரும் புறக்கணித்திருந்தனர்.

 

இந்த நிலையில்தான், தி.மு.க.வின் சிட்டிங் எம்.எல்.ஏ.வான கு.க.செல்வம் டெல்லியில் தமிழக பாஜக தலைவர் முருகன், தமிழக மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ், தமிழக பாஜக துணைத்தலைவர் ராஜா சகிதம் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் நட்டாவை சந்தித்தார். 40 நிமிடத்துக்கும் அதிகமாக நீடித்த சந்திப்புக்குப் பின் மீடியாக்களிடம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு லிஃப்ட் வேண்டும் என்ற கோரிக்கைக்காக வந்தேன் என்றார்.

 

செல்வத்தின் டெல்லி பயண விவகாரம் தி.மு.க.வில் அதிர்வுகளை ஏற்படுத்தியதுடன், ஸ்டாலின் மீதான விமர்சனத்தையும் உருவாக்கியது. இதனையடுத்து, கட்சியின் உயர்நிலை நிர்வாக குழுவிலுள்ள துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட பலருடனும் ஸ்டாலின் விவாதிக்க, செல்வத்தின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுங்கள் என வலியுறுத்தினர். இதனையடுத்து, கட்சி பொறுப்புகளிலிருந்து செல்வத்தை நீக்கி, விளக்க நோட்டீஸ் அனுப்பினார் மு.க.ஸ்டாலின்.

 

selvam

 

 

இதுகுறித்து தமிழக பா.ஜ.க.வின் உள்வட்டாரங்களில் விசாரித்தபோது, "பாஜகவில் இணைவதற்காக தான் டெல்லிக்கு சென்றார் செல்வம். ஆனால், பிரதமர் அலுவலகத்திலிருந்து நட்டாவுக்கு சில உத்தரவுகள் போனதால் கடைசி நேரத்தில் செல்வம் ஜகா வாங்க வேண்டியதாயிற்று. தி.மு.க.வில் சிலரின் மிதமிஞ்சிய ஆதிக்கத்தால் அப்செட்டில் இருப்பவர்களில் 2 மூத்த தலைவர்கள், 4 எம்.பி.க்கள், 8 மா.செ.க்கள், 10 எம்.எல்.ஏ.க்களுக்கு ஸ்கெட்ச் போடப்பட்டு, பா.ஜ.க. தன் பிடியில் வைத்துள்ளது. தேர்தல் நெருக்கத்தில் டெல்லியின் இலக்கு நிறைவேற்றப்பட விருக்கிறது'' என்கிறார்கள்.

 

sekar babu

 

இதுகுறித்து சென்னை கிழக்கு மா.செ.வும் எம்.எல்.ஏ.வுமான சேகர்பாபுவிடம் பேசியபோது, "செல்வம் போன்றவர்களால் கட்சிக்கு சிறிய சிராய்ப்புக்கூட ஏற்படாது. அதிகார அழுத்தத்தினால் தி.மு.க.வை பலகீனப்படுத்தலாம் என பா.ஜ.க. நினைக்குமானால், முன்பைவிட வீறுகொண்டு தி.மு.க. எழும். நெருக்கடிநிலை காலத்திலிருந்தே இதுதான் வரலாறு. கலைஞர் மறைவுக்கு பிறகு, தி.மு.க.வின் கம்பீரம் எங்கள் தலைவர் ஸ்டாலின். அவரை, பா.ஜ.க. உள்ளிட்ட எந்த அதிகார மையமும் மிரட்டி பணிய வைத்துவிட முடியாது'' என்கிறார் மிக ஆவேசமாக.

 

டெல்லிக்கு செல்வம் பறந்த பின்னணி குறித்து விசாரித்தபோது, "பாஜகவில் இணைந்து சமீபத்தில் மாநில பொறுப்பு வாங்கிய ரியல் எஸ்டேட் பிஸ்னெஸ் நபருக்கும், கு.க. செல்வத்துக்கும் நெருங்கிய நட்பு உண்டு. சென்னையிலுள்ள முக்கியமான மருத்துவமனை விற்பனைக்கு வருவதை அந்த பா.ஜ.க. பிரமுகரிடம் தெரிவித்த செல்வம், இதனை வாங்கும் சக்தி டெல்லியிலுள்ள பா.ஜ.க. தலைவர்களுக்குத்தான் இருக்கிறது என சொல்ல, இதனை முருகனிடம் தெரிவிக்கிறார் அந்த பிரமுகர். மூவரும் அடிக்கடி சந்திக்க, மருத்துவமனை விற்பனை விவகாரத்தை நட்டாவின் பார்வைக்கு எடுத்துச் செல்கிறார் முருகன். நேரம் வரும்போது அழைத்து வாருங்கள் என டெல்லி தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில்தான், மா.செ. பதவி கிடைக்காத அதிருப்தியை செல்வம் பகிர்ந்துகொள்ள, மாற்று கட்சியினரை வளைக்கும் அசைன்மெண்டில் இருக்கும் முருகன், தி.மு.க.வின் சிட்டிங் எம்.எல்.ஏ.வை தூக்கினால் நமக்கு மரியாதை உயரும் என்கிற ரீதியில் தகவல் தெரிவித்து, டெல்லி ப்ரோக்ராம் முடிவு செய்யப்படுகிறது.

 

Nakkheeran AD

 

முரளிதரராவ், முருகன், செல்வம் ஆகியோர் நட்டாவின் வீட்டில் அவரை சந்தித்து விவாதிக்கின்றனர். பரபரப்பான இந்த விவகாரத்தை பிரதமர் மோடியின் கவனத்துக்கு கொண்டு செல்கிறார் அமித்ஷாவின் சிஷ்யரான தேசிய பொதுச் செயலாளர் சந்தோஷ். தனக்கு தெரியாத மூவால் அதிர்ச்சியடைந்துள்ளார் மோடி. அயோத்தி பயணம் இருக்கும் சூழலில், இப்படிப்பட்ட நிகழ்வுகள் சரியல்ல என சந்தோஷ் மூலம் நட்டாவுக்கு சில உத்தரவுகளைப் பிறப்பிக்கிறார் மோடி.

 

அதாவது, எந்த சூழலிலும் பா.ஜ.க.வில் அவர் இணைந்ததாக செய்தி வரக்கூடாது. இணைவதெல்லாம் சென்னையோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்கிற உத்தரவு அது. இதன்பிறகே, பல்டி அடித்தார் செல்வம். அப்செட் மூடில் இருந்த நட்டாவும் மற்றவர்களும் பிஸ்னெஸ் விசயங்களை விவாதித்துவிட்டு செல்வத்தை சென்னைக்கு அனுப்பி வைத்தனர்'' என்று பின்னணிகளை விவரிக்கின்றனர் மத்திய உளவுத்துறையினர்.

 

சீனியர்களின் அதிருப்தியை சரிசெய்யும் தடுப்பு வியூகத்தில் உள்ள மு.க.ஸ்டாலினிடம், உதயநிதியின் தலையீடுகள் பற்றியும் சீனியர்கள் பலரும் தெரிவித்துள்ளனர். பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளில் முறையே துரைமுருகன், கனிமொழியை நியமிக்க ஸ்டாலின் திட்டமிடுவதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியம்' - தமிமுன் அன்சாரி பேட்டி

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'It is necessary for the India coalition to come to power' - Tamimun Ansari interview

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், இன்று அண்ணா அறிவாலயத்திற்கு வந்து முதல்வரை சந்தித்து விட்டு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிமுன் அன்சாரி பேசுகையில், ''இந்த தேர்தலை பொறுத்தவரை மனிதனை ஜனநாயக கட்சி வெறும் அரசியல் காளமாக இதனைப் பார்க்கவில்லை.

மாறாக ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் இடையேயுமான சித்தாந்த போராட்டமாக பார்க்கிறது. அந்த அடிப்படையில் இந்த முடிவை மனிதநேய ஜனநாயக கட்சி எடுத்திருக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து எங்களுடைய ஆதரவை வழங்கி இருக்கிறோம். இந்தியாவுடைய ஜனநாயகம், பன்முக கலாச்சாரம், அரசியல் சாசன சட்டத்துடைய மாண்புகள், சமூக நல்லிணக்கம் ஆகியவை காப்பாற்றப்பட வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியமாகிறது' என்றார்.

Next Story

'ஒன்றுபட்டு நிற்போம்! வென்றுகாட்டியே தீருவோம்' - திமுக தலைவர் ஸ்டாலின்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'The impossibility situation really saddens me too'-DMK President Stalin

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இந்தநிலையில் 'ஒன்றுபட்டு நிற்போம்! வென்றுகாட்டியே தீருவோம்' என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், 'இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மையை காக்கவும், மதவெறி சக்திகளை வீழ்த்தி மதநல்லிணக்கம் தழைக்கவும், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ஜனநாயகத்தை மீட்கவும் ‘இந்தியா’ கூட்டணியை 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்கிற ஒரே இலக்குடன் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து நிற்கும் தோழமைக் கட்சியினர் அனைவரையும் வரவேற்கிறேன்.

கடந்த 10 ஆண்டுகாலமாக இந்திய ஒன்றியத்தை ஆட்சி செய்த பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத – மாநில உரிமைகளைப் பறித்த ஆட்சியை விரட்டிட, 2024 நாடாளுமன்றத் தேர்தல் களமே சரியான வாய்ப்பாகும் என்கிற உறுதியான நம்பிக்கையுடன் இந்தியா கூட்டணியில் - திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத் தோள் கொடுக்கும் தோழமைக் கட்சிகளுடன் களத்தைச் சந்திக்கிறோம்.

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே தோழமைக் கட்சியினருடன் ஏற்பட்ட கொள்கை உறவு, தேர்தல் கூட்டணியாக இணைந்து 2019நாடாளுமன்றத் தேர்தல் களம், 2021 சட்டமன்றத் தேர்தல் களம், ஊரக உள்ளாட்சித் தேர்தல் களம், மாநகராட்சி - நகராட்சித் தேர்தல் களம் என அனைத்திலும் தொடர் வெற்றியைப் பெற்று வருகிறோம். ஐந்தாவது முறையாகத் தொடரும் இந்த கொள்கை அடிப்படையிலான வெற்றிக் கூட்டணியை அமைத்துள்ள தோழமைக் கட்சியினருக்கு உரிய வகையில் இடங்களை ஒதுக்கி, தொகுதிப் பங்கீடுகளைச் செய்யும் ஜனநாயகப்பூர்வமான நடைமுறையை திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து கடைபிடித்து வருகிறது.

பாசிசத்தை வீழ்த்திட வேண்டும் என்கிற ஒற்றை இலக்குடனான இந்தப் பயணத்தில், ஒரு சில ஜனநாயக இயக்கங்களுக்குத் தொகுதி ஒதுக்க இயலாத சூழல் ஏற்பட்டிருப்பது உண்மையில் எனக்கும் வருத்தத்தைத் தருகிறது.  தொகுதிகளின் மொத்த எண்ணிக்கையையும் கூட்டணியின் வலிமையையும் கருத்தில் கொண்டு, இதுகுறித்து அனைத்துத் தோழமை இயக்கங்களிடமும் என் சார்பிலும் கழகத்தின் சார்பிலும் விளக்கப்பட்டுள்ளது.

நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் யாரை வீழ்த்த வேண்டும், அதற்கு எந்த வகையில் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதைத் தொகுதிப் பங்கீட்டில் வாய்ப்பு பெறாத தோழமைக் கட்சியினரும் உணர்ந்து, உளப்பூர்வமான ஆதரவை நல்கி, தேர்தல் பணியாற்ற முடிவெடுத்திருப்பது ஆக்கப்பூர்வமான ஜனநாயகப் பண்பை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மனிதநேய மக்கள் கட்சிக்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இடம் ஒதுக்க இயலாமல் போன நிலையிலும், மதவெறி பாசிசத்தை வீழ்த்திடத் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்குப் பக்கபலமாக இருப்போம் என அக்கட்சிகளின் நிர்வாகிகள் முடிவெடுத்து ஆதரவைத் தெரிவித்திருப்பதை வரவேற்கிறேன். மனதார நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அதுபோலவே, இந்தியா கூட்டணி வெற்றி பெறக் களப்பணியாற்ற முன்வந்துள்ள அனைத்து ஜனநாயக இயக்கங்களுக்கும், நேரில் வந்து ஆதரவு தெரிவித்து வரும் அமைப்பினருக்கும் நன்றியினை உரித்தாக்குவதோடு, 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில், “நாற்பதும் நமதே! நாடும் நமதே!” என்கிற வகையில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி அடைந்திடவும், இந்திய ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிடவும் தங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன். ஒன்றுபட்டு நிற்போம்! வென்றுகாட்டியே தீருவோம்!' என தெரிவிக்கப்பட்டுள்ளது.